Friday, 8 January 2021

Bridal bald beautiful couples | Bald is Beautiful

January 08, 2021 0
Bridal bald beautiful couples | Bald is Beautiful 



































Pavi Teacher latest photo shoot

January 08, 2021 0
Pavi Teacher latest photo shoot 






















Bob cut with Radiant Blue hair color combo

January 08, 2021 0
Bob cut with Radiant Blue hair color combo 














Long to classical Bob cut hair style | Salon make over

January 08, 2021 0
Long to classical Bob cut hair style | Salon make over

















 
























Telugu college girl long hair style images

January 08, 2021 0
Telugu college girl long hair style images



























Thursday, 7 January 2021

மங்கையின் மொட்டை

January 07, 2021 3

சுரேஷ் மங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டான். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றாலும் சுரேஷின் அம்மாவுக்கு தன் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதில் சிறிது மன வருத்தம் இருந்தது. அதுவும் தான் விரும்பிய படி தன் மகனுக்கு பெண் பார்க்க முடியவில்லை என்று நினைத்து உள்ளுக்குள் வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தாள். 



சுரேஷ், மங்கை இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்து வாழ்ந்தனர். திருமணத்திற்கு பின் தேனிலவுக்கு கொடைக்கானல் கூட்டி சென்று வந்தான். மங்கை பெயர் தான் கொஞ்சம் பழமையான பெயரே தவிர அவள் மிக சிறந்த அழகி. இன்றைய நவநாகரீக பெண்களுக்கு உண்டான அத்தனை மேக்கப் விஷயங்களையும் அறிந்தவள். தன் அழகால் சுரேஷை சில நாட்களிலேயே தன் சொல்படி ஆட்டுவித்தாள்.



சுரேஷின் அம்மா மரகதத்துக்கு தன் மகனின் போக்கு பிடிக்கவில்லை. மரகதம் அந்த காலத்து கிராமத்து பெண். அதனாலேயே மரகதத்துக்கும், மங்கைக்கும் நிறைய விஷயத்தில் ஒத்து போகவில்லை. என்ன தான் சுரேஷை தாஜா செய்து தன் காரியத்தை மங்கை சாதித்துக் கொண்டாலும் எப்போதும் வீட்டில் மரகதத்தின் வார்த்தை தான் ஓங்கி இருக்கும். அவள் சொல்வது தான் நடக்கும். அந்த சமயங்களில் சுரேஷ் தன் அம்மா சொல்படி தான் கேட்பான்.



மங்கை எப்போதும் தன் அழகை பராமரிப்பு செய்வதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வாள். அதிகமாக தன் நீளமான கூந்தலை விதவிதமாக சீவி அலங்கரித்துக் கொள்வள். இதை பார்க்கும் மரகதம் மிகுந்த கோபம் அடைவாள். ஒரு நாள் அலுவலக வேலையாக சுரேஷ் சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டிய வேலை வந்தது. சுரேஷ் கிளம்பியதும், மங்கையும், மரகதமும் மட்டும் வீட்டில் இருந்தனர். சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் மங்கை மீது குற்றம் கண்டுபிடித்து ஏதாவது பேசிக் கொண்டே இருந்தாள் மரகதம். 

இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. மங்கை ஒரு கட்டத்திற்க்கு மேல் பொறுக்க முடியாமல் தன் மாமியார் மரகதத்தை எதிர்த்து பேச ஆரம்பித்தாள். அடுத்த நாள் காலை மங்கை டிபன் செய்து கொண்டு வந்து தன் மாமியார் மரகதத்தை சாப்பிட அழைக்க, அவளும் டைனிங் டேபிளில் அமர்ந்தாள். 

காலையில் உப்புமா தான் செய்து இருந்தாள் மங்கை. மரகதம் ஒரு வாய் சாப்பிட்டதும் அதில் உப்பு அதிகமாக இருக்க, மங்கையை திட்டிக் கொண்டே சாப்பிட, உப்புமாவில் மங்கையின் நீளமான முடி கொத்தாக இருந்தது..


அடியே... மங்கை இங்க வாடி... நீ சமைக்கிற லட்சணம் இதானா...?

என்ன அத்தை.. எதுக்கு இப்படி கத்துறீங்க? என்னாச்சு?

என்னாச்சா? உப்புமாவா இது.... பாருடி... உன் மயிரை இப்படி போட்டு வச்சு இருக்க... 

அத்தை, ஏதோ தெரியாம விழுந்து இருக்கும்... அதை தூக்கி வீசிட்டு சாப்பிடுங்க...

ஏண்டி.. நீ கவனமா சமைக்க மாட்ட... நான் உன் மயிரை தூக்கி போட்டுட்டு சாப்பிடனுமா? என்ன கொழுப்புடி உனக்கு? இதுக்கு இன்னிக்கே ஒரு வழி பண்றேன்....

பக்கத்து வீட்டு சிறுவனை கூப்பிட்டு தெரு முக்கில் இருக்கும் சலூன் பார்பரை வீட்டுக்கு கூட்டி வர சொன்னாள் மரகதம்... 



அத்தை இப்போ எதுக்கு அவனை வர சொல்றீங்க?

ம்ம்ம்ம்... இனிமே சாப்பாட்டுல முடி விழாம இருக்க உனக்கு மொட்டை அடிக்க சொல்ல போறேன்... போ போய் ரெடி ஆகு... இப்போவே உனக்கு மொட்டை அடிக்க போறோம்... அப்போ தான் உன் திமிரும் அடங்கும்...

அதெல்லாம் முடியாது... நீங்க சொல்ற மாதிரி நான் மொட்டை அடிக்க மாட்டேன்....

நான் சொல்ற மாதிரி நீ மட்டும் இப்போ மொட்டை அடிக்கல... இப்பவே என் வீட்டை விட்டு வெளியே போ... சுரேஷ்க்கு நான் என் அண்ணன் மகளை கட்டி வச்சுக்கிறேன்... 

என்ன அத்தை சின்ன விஷயத்தை இப்படி பெரிசு பண்ணுறீங்க? 

எதுடி சின்ன விஷயம்? என்னை நிம்மதியா சாப்பிட கூட விடமாட்ட? இப்படியே உன்னை விட்டா நான் நடுத்தெருல தான் நிக்கணும்...

இவர்கள் பேசிக் கொண்டே இருக்க பார்பர் வீட்டு முன் வந்து நின்றான்..


என்ன மரகதம்மா? வர சொன்னீங்களா?

ஆமாடா.. வீட்டு பின் பக்கம் வா... 

சரிம்மா.. என்று பார்பர் வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு வர, மரகதம் மங்கையை வலுக்கட்டாயமாக தள்ளிக் கொண்டு சென்றாள்..

டேய்... என் மருமகளுக்கு மொட்டை அடிக்கணும்... ஆக வேண்டிய வேலையை பாரு...

சரிம்மா... என்ன தீடிர்ன்னு மொட்டை..

அதெல்லாம் உனக்கு எதுக்கு... வேலையை முடிச்சுட்டு காசை வாங்கிட்டு போ...

சரி மரகதம்மா கோச்சுக்காதீங்க... அம்மா வாம்மா... இந்த கல்லுல உட்காருங்க... மரதம்மா நீங்க போய் கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க....

மரகதம் தண்ணீர் கொண்டு வந்து தர, அதை வாங்கிய பார்பர் மங்கையின் தலையில் ஊற்றி உச்சி மண்டையில் சொதசொதவென தண்ணீர் படுமாறு ஊற்றி நனைத்து விட்டான்.

மங்கை உடுத்தி இருந்த பிங்க் கலர் சேலை முழுவதும் நனைந்து ஈரமானது. பார்பர் தான் கொண்டு வந்து இருந்த சிறு பெட்டியில் இருந்து சவரக்கத்தியை எடுத்து மீதம் இருந்த தண்ணீரில் சுத்தம் செய்தான். பின் ஒரு புதிய பிளேடை பாதியாக உடைத்து சவரக் கத்தியில் சொருகி லாக் பண்ணி விட்டு மரகதத்தை பார்த்தான்..

என்ன மரகதம்மா, உங்க மருமகளை மொட்டை அடிச்சிடவா?

அதுக்கு தாண்டா உன்னை வர சொன்னது? இப்போ என்ன கேள்வி கேட்க்குற?

சரி, சரி கோவபடதம்மா... 

சொல்லி விட்டு மங்கையின் தலையை மொட்டை அடிக்க வசதியாக அட்ஜஸ்ட் செய்து விட்டு, சவரகத்தியால் முன் நெற்றியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி சிரைக்க, மங்கையின் நீளமான முடி கொத்தாக அவள் மடி மேலேயே விழ ஆரம்பித்தது. 

மங்கையின் பிங்க் நிற சேலையின் மேல் கருத்த முடிகள் விழுந்தது. மரகதம் தன் மருமகள் மங்கையின் மொட்டை தலையை கொஞ்சம் திமிருடன் ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். மங்கை தன் மாமியாரை மீறி எதுவும் செய்ய முடியாத வருத்ததில், தான் ஆசையாக வளர்த்த முடி மொத்தமாக மொட்டை அடிக்கபடுவதை தடுக்க முடியாமல் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள். 


ஆனாலும் தன் மாமியார் மரகதத்தை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தாள் மங்கை. சில நிமிடங்களில் மங்கையின் நீளமான அடர்த்தியான கூந்தலை மொழுமொழுவென மொட்டை அடித்து முடித்து இருந்தான் பார்பர்.

என்ன மரகதம்மா, போதுமா?

என்ன சிரைச்சு இருக்க, நீ சிரைச்ச லட்சணம் நல்லாவே இல்ல? இன்னும் நல்லா மழுங்க சிரைச்சு விடு... அவளுக்கு மயிர் முளைக்கவே பத்து நாளுக்கு மேல ஆகணும்... அது மாதிரி மழிச்சு விடு...

சரி மரகதம்மா.. அப்படின்னா வீட்ல கொஞ்சம் நல்லெண்ணெய் இருந்தா கொண்டு வாங்க...

அது எதுக்குடா..?

அதை இந்த மொட்டை மண்டையில் தடவி விட்டு சிரைச்சா நீங்க சொன்ன மாதிரி பண்ணிரலாம்...

அப்படியா? அப்போ கொஞ்சம் இரு நான் போய் நல்லெண்ணெய் எடுத்துட்டு வர்றேன்... 

மரகதம் நல்லெண்ணெய் எடுத்து வ்ர வீட்டுக்குள் சென்று விட, மங்கை பார்பரை திட்டினாள்.

ஏய்யா, அந்த கிழவி சொல்றான்னு நீயும் இப்படியொரு காரியத்தை பண்றியே நல்லா இருப்பியா? என் புருஷன் வரட்டும், உங்க ரெண்டு பேரு மேலயும் போலீஸ்ல கேஸ் கொடுக்குறேன்னா இல்லையா பாரு?

அம்மா... நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ... ஆனா நான் உன் மாமியார் சொன்னதை கேட்க்கலன்னா என் பரம்பரையை கேவலமா பேசிடுவா? எனக்கு எதுக்கு அந்த வார்த்தை எல்லாம் கேட்கணும்னு தலை எழுத்தா?  


அதுக்கு இப்படி மொட்டை அடிக்கணுமா? ஏதாவது வேலை இருக்குன்னு போக வேண்டியது தான?

என்னடி அவனை மிரட்டிட்டி இருக்க?

ஒண்ணும் இல்லை அத்தை... 

ம்ம்ம்ம்.. இந்தாடா நீ கேட்ட நல்லெண்ணெய்... என்று ஒரு சில்வர் கிண்ணத்தில் நல்லெண்ணெயை கொடுத்தாள் மரகதம். 

பார்பர் அந்த கிண்ணத்தில் இருந்த நல்லெண்ணெயை வாங்கி தன் கைகளில் ஊற்றி மங்கையின் மொட்டை அடித்த சொரசொரப்பாக இருந்த தலையில் ஊற்றி தேய்த்து விட்டான். மங்கையின் மொட்டை தலை முழுவதும் நல்லெண்ணெய் பரவி பளபளவென மின்னியது..

அதன் பின் பார்பர் சவர கத்தியில் மீதம் இருந்த பாதி ப்ளேடை பொருத்தி விட்டு மங்கையின் மொட்டை தலையை நல்லெண்ணெய் மீது சவரம் செய்ய ஆரம்பித்தான். நல்லெண்ணெய் தலையில் ஒட்டி இருந்ததால் பிசிறுபிசிறாக இருந்த சிறு சிறு முடிகள் கூட பிளேடில் மழித்து எடுக்கப்பட்டு வந்தது.. மங்கையின் தலை முழுவதும் அதே போல பொறுமையாக சிரைத்து முடித்தான் பார்பர். இப்போது மங்கையின் தலை முடி இருந்த அடையாளம் கூட தெரியாமல் மொழு மொழுவென இருந்தது...

மரகதம் தன் மருமகள் மங்கையின் மொட்டை தலையை தடவி பார்த்து திருப்தியாக உணர்ந்தாள். பின் பார்பர் கேட்டதை விட அதிகமாக பணம் கொடுத்து அனுப்பினாள் மரகதம்.. 



என்னடி... இனிமேல் சொன்ன பேச்சு கேட்க்கலன்னா மாசமாசம் இப்படி தான் மொட்டை அடிச்சு விட்டுடுவேன்.. என் மகனை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்... இனிமேலாவது உன் வாலை சுருட்டிகிட்டு ஒழுங்கா இரு....

சரிங்க அத்தை... நான் போய் குளிக்கட்டுமா?

போ.. போ.. போய் குளி...

மங்கை மொட்டை தலையுடன் தன் பெட் ரூமில் இருந்த பாத் ரூமுக்கு சென்று அங்கு இருந்த கண்ணாடியில் தன் கோலத்தை பார்த்தாள். மங்கை தன் நீளமான கூந்தலை இழந்ததை நினைத்து வருந்தினாலும், முன்பு இருந்ததை விட தன் அழகும், கவர்ச்சியும் மொட்டை தலையில் இன்னும் அதிகமாகி விட்டதாக உணர்ந்தாள்..


பின் தான் உடுத்தி இருந்த உடைகளை கழட்டி விட்டு தன் அழகை ஆளுயர கண்ணாடியில் ரசித்தாள். கழுத்துக்கு கீழே மிக அழகான வளைவு நெளிவுகளும், மேடு பள்ளங்களும் மங்கைக்கு அமைந்து இருந்தது. தன் மொட்டை தலைக்கு மேட்ச்சாக தன் உடம்பில் இருந்த முடிகளையும் மழுங்க க்ரீம் பூசி எடுத்து விட்டு, பின் குளித்து முடித்தாள். 

அடுத்த நாள் சுரேஷ் அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான். மங்கையின் மொட்டை தலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், மங்கையின் கவர்ச்சி இன்னும் கூடி இருப்பதை கண்டான். அன்று இரவு சுரேஷ்க்கு தன் மொழு மொழு அழகை மொத்தமாக காண்பிக்க, சுரேஷ் ஆனந்தமாக அனுபவித்தான். 







Telugu college girl long hair style images

January 07, 2021 0
Telugu college girl long hair style images