Tuesday 21 July 2020

அகிலாவின் நினைவுகள்...! - முதல் பாகம்

July 21, 2020 2


அகிலா அதிகாலை தூக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்தாள். தன் அருகில் படுத்து இருந்த கணவன் சிவாவை பார்த்தாள். அவன் அயர்ந்த தூக்கத்தில் இருந்தான். அதிகாலை நான்கு மணிக்கு மூன்றாவது தடவையாக ஆடை களைந்து ஆடி விட்டு களைப்பில் அப்படியே இருவரும் தூங்கிவிட்டனர். அந்த களைப்பில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த சிவாவை வெட்க்கத்துடன் பார்த்தவள் சத்தமில்லாமல் எழுந்து பாத்ரூம் சென்று குளித்து விட்டு வந்தாள்.


சிவா, அகிலா இருவரும் புதுமண தம்பதிகள். திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆகி இருந்தது. தன் சொந்த மாமாவின் மகளை தான் கட்டி இருந்தான் சிவா. இருவரும் சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொண்டவர்கள். பின்னாளில் அது காதலாக மாற இரு வீட்டினரும் மனப்பூர்வமாக சம்மதித்தனர்.

சிவாவிற்க்கு ஒரு தங்கை இருந்தாள். அகிலாவும் சிவாவின் தங்கை அமுதாவும் நெருங்கிய தோழிகள் போல பழகினர். ஆனால் அமுதா தீடிரென நோய்வாய்ப்பட்டு இறந்து போக, சிவா மிகுந்த மன வேதனைப்பட்டான். அந்த மன வேதனையில் இருந்து அவனை காக்க அமுதா இறந்த மூன்றே மாதங்களில் அவனை வற்புறுத்தி, அகிலாவை மணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்தாலும் அகிலா சிவாவின் மனதை புரிந்து கொண்டு அவனுக்காக காத்திருந்து ஒரு மாதம் கழித்து தான் தங்கள் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கினர். 



அன்று காலை சிவா வேலை விஷயமாக பெங்களூரு செல்ல வேண்டிய நிலையில் வேகமாக ரெடி ஆனான். சிவா ரெடி ஆனதும் அகிலா அவனை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்வதாக சொல்லி அவளே காரை எடுத்தாள். இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு காரில் போய் கொண்டு இருக்க, அப்போது சிக்னலில் நிறுத்தி இருந்த காரை சிக்னல் முடிய 5 செகண்ட் முன்னமே காரை எடுத்தாள் அகிலா. அந்த 5 செகண்டில் சிக்னலை தாண்டி விடலாம் என்று வேகமாக வந்த ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்து காரில் அகிலாவின் பக்கம் மோத கார் தூக்கி எறியப்பட்டது. ஒரு நொடியில் சிக்னலில் நிலைமை மாறியது. எல்லோரும் பயத்தில் ஓட, சில பேர் மட்டும் காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.

கசக்கி போட்ட காகிதமாய் கார் குப்புற கிடந்தது. காரை சுற்றி ஒரே கரும்புகை. கார் குப்புற விழுந்து ஓய்ந்து போய் இருக்க, காரின் நான்கு சக்கரங்களும் நிற்காமல் சுற்றிக் கொண்டு இருந்தது. அகிலா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்க, சிவா முகத்தில் சின்ன சின்ன கீறல்களுடன் வெளியே வர போராடிக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் மருத்துவமனையில் மயக்கத்தில் இருந்து நினைவு திரும்பியது அகிலாவுக்கு. ஐசியூவில் அகிலா இருக்க ஒரு நர்ஸ் அகிலாவை கண்காணித்துக் கொண்டு இருந்தாள். அகிலா கண் விழித்ததை பார்த்தவள் டாக்டரை கூப்பிட அவர் வேகமாக வந்து அகிலாவை பரிசோதித்தார். அகிலா அவள் அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் என்று கேட்க அவள் அப்பாவும் அம்மாவும் உள்ளே வந்து பேசினர்.


என்னம்மா ஆச்சு எனக்கு...

ஒண்ணும் இல்லடா.. சீக்கிரம் சரியாய்டும்..

எப்படி அடிபட்டுச்சு..?

ஒரு சின்ன ஆக்சிடெண்ட் தான்... நீயும் சிவாவும் கார்ல போறப்போ... ஒரு சின்ன விபத்து.. டாக்டர் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்... நாளைக்கே நாம வீட்டுக்கு போய்டலாம்...

அப்போ சிவா மாமாக்கு என்னாச்சு?

எனக்கு ஒண்ணும் இல்லடா அகிலா.. ஒரு சின்ன காயம் தான்.. உனக்கு தான் லைட்டா தலைல அடி... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்னு டாக்டர் சொன்னார்...

சரி மாமா.. அமுதா எங்கே..? நீங்க எல்லோரும் என் கூட இருக்கும் போது அவ மட்டும் என்னை விட்டு எங்க போனா? 

அகிலா இந்த  கேள்வியை கேட்டதும் மூவரும் அகிலாவை மிகுந்த அதிர்ச்சியுடன் பார்த்தனர். மூவருக்குள்ளும் ஒரு வித பயம் மனதை கவ்வ, அகிலாவை பார்த்தனர்.மகளின் கேள்விக்கு பதில் சொல்லவும் முடியாமல், அகிலாவின் முகத்தை திகைப்பாக பார்த்தாலும், பார்வையை மாற்றிக் கொள்ளாமல் சிவாவை கூப்பிட்டார் அகிலாவின் அப்பா.

சிவா, டாக்டரை வர சொல்லுப்பா..!

********************************************

அடுத்த சில நாட்களில் ஒரு நரம்பியல் டாக்டரை பார்த்து அகிலாவின் நிலையை விளக்கி, அவளது மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டினான். அவர் அதை சில நிமிடங்கள் பார்த்து விட்டு சிவாவிடம் பேசினார்.

மிஸ்டர் சிவா, நியாபக மறதிங்கிறது எல்லாருக்கும் இருக்கிறது தான். எல்லா விஷயங்களையும் ஒருத்தர் நியாபகம் வச்சி இருந்தா சீக்கிரம் பைத்தியம் ஆய்டுவாங்க... உங்க மனைவிக்கு இருக்கிற பிரச்சனையும் அந்த மாதிரி தான்... என்ன ஒண்ணு.. நேச்சுரலா ஏற்பட வேண்டிய மறதி, ஒரு விபத்துனால ஏற்பட்டு இருக்கு... தட்ஸ் ஆல்.. கடந்த ஒரு வருஷமா நடந்த நிகழ்வுகள் மட்டும் அவங்களுக்கு நினைவு இல்லை... ஆனா எல்லாமே அவங்க ஆழ்மனதுல இருக்கும்.. அதை மருந்து மூலமா கொண்டு வர முடியும்.. ஆனா அது இப்போ தேவை இல்லை... அவங்களுக்கு நல்ல ரெஸ்ட் கொடுங்க, சில மாதங்களில் மாற்றம் தெரியலாம்.. அப்படி இல்லைன்னா நாம ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்...


ஓகே டாக்டர்...

அப்புறம் உங்களுக்கு மேரேஜ் முடிஞ்சு எவ்வளவு நாள் ஆச்சு...

ரெண்டு மாசம் தான் டாக்டர் ஆச்சி...

ஓ.. அப்போ ஹனிமூன் எங்கயும் போகலயா...?

இல்ல டாக்டர்...

அப்ப இது தான் சரியான நேரம்... அவங்களை 
எங்கயாவது வெளியே கூட்டிட்டு போங்க.. நல்ல பசுமையான, இயற்கையான ஒரு சூழல்... ஒரு பூ மலர்ற மாதிரி அவங்க நினைவுகள் திரும்ப வரணும்...அவங்களுக்கு நியாபக படுத்தறேன்னு ஸ்ட்ரெஸ் கொடுக்காதீங்க... அது போதும்... என்று டாக்டர் சொல்ல, சரி என்று கேட்டு விட்டு சிவா கிளம்பினான்.

வீட்டுக்கு வந்த சிவா அகிலாவின் பெற்றோரிடம் டாக்டர் சொன்னதை சொல்ல எல்லோரும் அவர்களின் ஏற்காடு பண்ணை வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். சிவா அகிலாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இதை சொல்லி விட்டு ஆறுதலாக அவள் தோளின் மீது கை வைத்து தன்னோடு அணைத்துக் கொள்ள, அகிலாவுக்கு கூச்சமாக இருந்தது. சிவா அவள் மனதை புரிந்து கொண்டு கையை எடுத்து விட்டான்.

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. ஆனால் அம்னீஷியாவால் அந்த நிகழ்வே அகிலாவின் மனதில் இருந்து தொலைந்து போய் இருந்தது. அகிலாவின் அம்மா அவளுடைய தாலியை காட்டி, சிவாவுக்கும், அகிலாவுக்கும் திருமணம் முடிந்து விட்டதை கூற அவளால் நம்பமுடியவில்லை. ஆனாலும் தான் சிறு வயதில் இருந்து காதலித்த சிவா தான் தன் கணவன் என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.


அடுத்த சில நாட்களில் ஏற்காட்டில் இருக்கும் தங்கள் பண்ணை வீட்டுக்கு போனார்கள் அனைவரும். அகிலாவுக்கு அந்த சூழல் ஒரு வித சந்தோஷத்தை கொடுத்தது. அங்கு தான் அகிலா சிறு வயதில் வளர்ந்தாள். அவர்களுக்கு சொந்தமான டீ எஸ்ட்டேட்டில் நிறைய பேர் வேலை செய்தனர். அது ஒரு சின்ன மலை கிராமம். அந்த கிராமத்தில் அவர்களது உறவினர்களும் இருந்தனர். அகிலாவின் அப்பாவுடையை தம்பியும், அவள்  அம்மாவுடைய அண்ணன் குடும்பமும் அந்த கிராமத்தில் இருந்தது. அகிலாவுக்கு தன்னுடைய மொத்த சொந்தங்களையும் பார்த்ததும் தன் நிலைமையை மறந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

எஸ்ட்டேட்டில் அவளது தோழிகளும் நிறைய பேரை பார்த்து பேசி மகிழ்ந்தாள் அகிலா. பகல் முழுவதும் அவர்களுடன் விளையாடி மகிழ, இரவு சிவாவின் அணைப்பில் புது மனைவிக்கு உண்டான இன்பத்தில் திளைத்தாள். சிவா தான் ஒரு பொறுப்புள்ள ஒரு கணவனாக அவளது மன நிலை புரிந்து நடப்பதை பார்த்து அவன் மேல் இன்னும் அதிகமாக காதல் கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அகிலாவின் மன நிலையில் மாற்றம் தெரிந்தது.

ஆனாலும் சில சமயங்களில் தன்னை மறந்து ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் அகிலா. அகிலாவின் நிலையை மூவரும் கண்காணித்து வந்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் அவளுடன் இருந்து கொண்டே இருந்தனர். அகிலாவின் அத்தை தான் அகிலாவிடம் இருந்த மாற்றத்தை கண்டு பிடித்து தன் அண்ணனிடம் கேட்க, அவர் கண்ணீர் மல்க தன் அன்பு மகளின்  நிலைமையை தன் தங்கையிடம் சொன்னார்.


தான் ஆசையாக கொஞ்சிய தன் அண்ணன் மகளின் நிலைமையை நினைத்து உள்ளுக்குள் வருந்தினாலும், மேலுக்கு தன் அண்ணனுக்கு தைரியம் சொன்னாள் அகிலாவின் அத்தை.. 



இன்னும் சில நாட்களில் தங்கள் கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் தன் அண்ணன் மகளுக்காக பூச்சட்டி எடுத்து, விரதமிருந்து பூ மிதித்து, முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக் கொண்டாள் அகிலாவின் அத்தை. அதை கேட்ட அவர் தன் தங்கை தன் மகள் மேல் வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்தார். அன்று இரவு வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அகிலாவின் அப்பா தன்  தங்கை அகிலாவுக்காக  நேர்த்திக் கடன் கொடுப்பதை சொல்ல அகிலாவின் அம்மாவும், அகிலாவும் தன் அத்தையின் பாசத்தைக் கண்டு வியந்தாள். அதன் பின் தன் மகளுக்காக தானும் அதே போல வேண்டுதல் நிறைவேற்றுவதாக சொன்னாள்.

தன் அம்மாவும், அத்தையும் தனக்காக இவ்வளவு செய்யும் போது தான் குணமாக வேண்டி அகிலாவும் தன்னுடைய முடியை மொட்டை அடித்து காணிக்கையாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டாள்...!





Gorgeous Megha shave her long hair

July 21, 2020 0
Gorgeous Megha shave her long hair and donated for cancer patients








Will you shave your head completely bald just yo support your friend who is suffering from cancer and is under going chemotherapy.



Megha from Georgia who went completely bald to support her friend during such hard times. She had such a beautiful hair because her friend needed her support, and guess what, she looks even more beautiful after shaving her head.








Beauty of a girl doesn't need hair, the character and personality of a being defines the beauty and her deeds tell us that she is beautiful inside out.