Friday 7 June 2019

சுமதியின் வேண்டுதல் மொட்டை..

June 07, 2019 0
சுமதியின் வேண்டுதல் மொட்டை..
மகேஷ் சென்னையில் வளர்ந்த பணக்கார வீட்டூ பையன். அவன் பெற்றோருக்கு தெய்வ பக்தி அதிகம்.
காரணம் அவர்களுக்கு திருமணம் நடந்து பல வருடங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் ஒரு ஜோசியர் சொன்னபடி மலை மேல் உள்ள ஒரு முருகன் கோவிலில் சென்று அங்குள்ள பூசாரி சொன்னபடி வேண்டியதால் மகேஷ் பிறந்தான். அதனால் வருடம் தவறாமல் அவனுக்கு அந்த முருகன் கோவிலில் மொட்டை போடுவார்கள்.


மகேஷ் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை
அம்மா சொல்வதை கேட்டு மொட்டை அடித்து கொண்டான். ஒரு கட்டத்திற்க்கு மேல் அவனுக்கு மொட்டை அடிப்பது  ரொம்பவும் பிடித்து போய் ஒரு வருடத்தில் பல முறை மொட்டை அடித்து கொண்டான். அதனால் மகேஷின் நண்பர்கள் அவனை மொட்டை என்றே கூப்பிட ஆரம்பித்தனர். அதனால் கோடை விடுமுறையில் மட்டும் மொட்டை அடித்து கொண்டான். மகேஷின் குடும்ப குல தெய்வ கோவில் ஒரு மலை மேல் இருக்கிறது. அங்கு செல்ல வேண்டும் என்றால் முன்பே கோவில் பூசாரியிடம் சொல்லி அனுமதி பெற்று செல்ல வேண்டும். அதனால் அங்கு மொட்டை அடிக்க நாவிதர்கள் யாரும் மேலே செல்ல மாட்டார்கள்.
அதனால் மகேஷூக்கு அவன் அப்பா தான் மொட்டை அடித்து விடுவார். அவன் 12 கோடை விடுமுறையில் இருந்த சமயம் மகேஷூக்கு மொட்டை அடிக்க முடிவு செய்தனர். அவர்கள் சென்று இருந்த நாளில் இன்னொரு குடும்பமும் அந்த கோவிலுக்கு வந்து இருந்தது. அந்த குடும்பத்தில் அப்பா, அம்மா மற்றும் அவர்களின் பெண்ணும் வந்து இருந்தார்கள். அப்போது மகேஷ் அவன் அப்பாவுக்கு மொட்டை அடித்து கொண்டு இருந்தான். அதன் பின் அவன் அம்மாவுக்கும் மூன்று வருடத்திற்கு பிறகு அன்று தான் மொட்டை அடித்தான்.
மகேஷ் மொட்டை அடிப்பதை பார்த்த அந்த குடும்ப தலைவர் மகேஷை நாவிதன் என்று நினைத்து தானும் சட்டையை கழட்டி விட்டு மொட்டை அடிக்க நின்றார்.
தம்பி எங்களுக்கும் மொட்டை அடிக்கணும்...
மகேஷ் பதில் கூறாமல் அவன் தன் அப்பாவை பார்க்க அவர் சைகையில் சரி என்று சொல்ல மகேஷ் அவருக்கும் மொட்டை அடித்தான். மகேஷின் குடும்பம் இந்த கோவிலுக்கு பல வருடமாக வருவதால் தனியாக சவர கத்தியும் பிளேடும் எப்போதும் கொண்டு வருவார்கள். அதனால் எல்லாமே அவனிடம் இருந்தது.
அவருக்கு மொட்டை அடித்து முடித்ததும் அவர் எழுந்து கொண்டு தன் மனைவியை பார்க்க அந்த அம்மாவும் தன் தலை முடியை விரித்து கொண்டை போட்டு கொண்டு மொட்டை அடிக்க தயாராக இருந்தாள். மகேஷ் எதுவும் சொல்லாமல் இருக்க அந்த அம்மாவும் மொட்டை அடிக்க வந்து உட்கார்ந்தாள்.
மகேஷ் அவன் வைத்து இருந்த வாட்டர் கேனில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்து நனைத்தான். அதன் பின் ரேசரை நன்றாக துடைத்து விட்டு வேறு ஒரு பிளேடு ஒன்றை மாட்டி கொண்டு அந்த அம்மாவை குனிய வைத்து
அவள் உச்சந்தலையில் கத்தியை வைத்து சிரைத்தான். அவள் தலையில் இருந்து முடி கொத்து கொத்தாய் மடியில் விழுந்தது.
காதை மடக்கி காது ஓரத்தில் சிரைத்தான். அவளின் இடது பக்கமும், வலது பக்கத்திலும் சிரைத்து முடிக்க முக்கால் மொட்டையாக உட்கார்ந்து கொண்டு இருந்தாள். அதன் பின் திரும்பி உட்கார சொல்லி அவளின் பின் பக்க தலையை தடவி பார்க்க ஈரம் குறைவாக இருக்க மறுபடியும் தண்ணீர் எடுத்து தடவி மீண்டும் மொட்டை அடித்தான். அதற்க்குள் அந்த அம்மா ஆர்வத்தில் முன் பக்க மொட்டை மண்டையை தடவி பார்க்க அது வழுவழு  என்று இருந்தது.
அவள் சிரித்துக் கொண்டே தலையை குனிந்து கொண்டாள். மகேஷ் மீண்டும் சிரைக்க ஆரம்பித்தான்.  சிறிது நேரத்தில் முடி முழுவதும் அவள் மடியில் விழுந்தது. அவள் சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டாள். மகேஷூம் முடிந்தது என்று எழுந்து கொண்டு தனக்கு தன் அப்பா மொட்டை அடிக்க வேண்டும் என்று அவன் ரெடியானான்.
ஆனால் அந்த பெண்ணின் அம்மா தம்பி என் பொண்ணுக்கும் மொட்டை அடிக்கணும் என்று சொல்ல மகேஷ் டென்சன் ஆனான்.
என்னை என்ன இந்த கோவில் பார்பர்னு நினைச்சீங்களா... நாங்களும் குடும்பமா கோவிலுக்கு தான் வந்து இருக்கோம்....
அய்யய்யோ, தம்பி அப்படிங்களா... நாங்க வரும் போது நீங்க மொட்டை அடிச்சுட்டு இருந்ததால தான் தவறா நான் அப்படி நினைச்சுட்டேன்..
மன்னிச்சுடுங்க தம்பி...
இத  முதல்லயே  நீங்க கேட்டு இருக்கணும்...
இல்ல தம்பி, இந்த கோவிலுக்கு நாங்க முத தடவை வர்றோம்... அதான் தெரியல...
அதற்க்குள் மகேஷ் அப்பா குறுக்கிட்டு சரி விடு தம்பி, நாம தான் சொல்லி இருக்கணும்... பரவால்லை விடு கண்ணு....
இப்ப இங்க யாரும் மொட்டை அடிக்க வர மாட்டாங்களா...
இல்லங்க... நாங்க பல வருஷமா வர்றோம்.. நாங்களே தான் எங்களுக்கு மாத்தி மாத்தி மொட்டை அடிச்சுப்போம்..
பூசாரிகிட்ட முன் கூட்டியே தகவல் சொல்லிட்டு பூஜைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி தான் நாங்க வருவோம்.. இவ்ளோ பெரிய மலைல ஏறி ஒரு மொட்டை அடிக்க 100 ரூபாய்க்கு யாரும் மேலே வர்றது இல்லங்க... அதனால நாங்களே மொட்டை அடிச்சுபோம்.. இங்க பக்கத்துல ஒரு சின்ன அருவி இருக்கு.. அங்க போய் குளிச்சுட்டு வந்து சாமி தரிசனம் பார்த்துட்டு கிளம்பிடுவோம்.. இதான் நாங்க பல வருஷமா பண்றது...
இப்ப என்னங்க பண்றது... எங்களுக்கு மொட்டை அடிச்சா மாதிரி எங்க பொண்ணுக்கும் மொட்டை அடிச்சு விடுங்க தம்பி... உங்களுக்கு புண்ணியமா போகும்... நாங்க தான் தெரியாம வந்துட்டோம்...
மகேஷின் அப்பா அவனிடம் அந்த பெண்ணுக்கும் மொட்டை அடிக்க சொல்ல அவன் சரி என்றான். அப்போது தான் மகேஷ் அந்த பெண்ணை பார்த்தான். அவள் அவனை விட இரண்டு வயது பெரியவளாக தான் இருப்பாள். அவளின் முடி நல்ல அடர்த்தியாக இடுப்பு வரை இருந்தது. கூந்தலை பின்னாமல் தலைக்கு குளித்து நன்றாக சீவி விரித்து விட்டு இருந்தாள். ஒரு மயிலின் அழகான விரிந்த இறகை போல இருந்தது அவள் முடி...
இதுவரை மகேஷ் தான் மட்டுமே மொட்டை அடித்து அந்த இன்பத்தை அனுபவித்து வந்து இருந்தான். ஆனால் முதல் முறையாக ஒரு இளம் வயது பெண்ணுக்கு அதுவுன் நீண்ட அடர்ந்த முடியை மொட்டை அடிப்பது இத்தனை வருடத்தில் அவனுக்கு புதியதாக இருந்தது. அவன் இதுவரை பார்த்த பெண்களின் மொட்டை எல்லாம் 10 வயதுக்கு கீழும், 40 வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் தான் மொட்டை அடிப்பதை பார்த்து இருந்தான். ஆனால் முதல் முறையாக ஒரு காலேஜ் பெண் மொட்டை அடிக்க, அதுவும் தன் கையாலேயே மொட்டை அடிப்பதை நினைத்து கொஞ்சம் உள்ளுக்குள் பதட்டமாகவே இருந்தான்..
அந்த பெண் ஒரு ஏக்கத்துடன், கண்ணில் கண்ணீருடன் மகேஷின் முன் உட்கார்ந்தாள். அவள் போட்டு இருந்த கருப்பு பேண்டை அவள் முடியில் இருந்து உருவினாள். அதன் பின் சொருகி இருந்த ஹேர் பின்னை கழட்டி விட்டு தலையை விரித்து விட்டு குனிந்து கொண்டாள். மகேஷ் அவள் முடியை பார்த்ததும் கொஞ்சம் விளையாட நினைத்து அவள் முடிக்குள் கை விட்டு நன்றாக கோதி விட்டான்.
இரு குடும்பத்தாரும் பேசிக் கொண்டு இருக்க அது மகேஷூக்கு வசதியாக போனது. அவள் ஒரு பிங்க் நிற டாப்ஸூம், வெள்ளை நிற லெக்கின்ஸூம் அணிந்து இருந்தாள்.
அதை சுற்றி மறைக்கும் அளவுக்கு அவள் முடி தரையில் படர்ந்து இருந்தது.
மகேஷ் அவள் தலையில் சிறிது சிறிதாக தண்ணீரை ஊற்றி மசாஜ் செய்தான். தன் இரண்டு கையாலும் அவள் தலையை அழுத்தி நன்றாக அரக்கி தேய்த்தான்.
மகேஷ் ஒரு புதிய பிளேடு போட்டுக் கொண்டு இருக்க அந்த சவர கத்தியில் உச்சி வெயில் பட்டு அந்த பெண்ணின் முகத்தில் மின்னியது.அவள் கண்களை மூடி கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது. மகேஷூக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் அவளை குனிய வைத்து அவள் உச்சந்தலையில் இருந்து இடது பக்கமாக சிரைக்க ஆரம்பித்தான். சரக், சரக், என்று கத்தி சத்தம் கேட்க, அவள் முடி கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து அவள் மண்டையில் வெயில் பட ஆரம்பித்தது.
அவன் தொடர்ந்து சிரைக்க சிரைக்க அவளின் வெள்ளை தோல் வெளியே தெரிந்தது. அவள் இடது பக்கம் முழுவதும் சிரைத்து முடித்ததும் வேறு ஒரு பிளேடு போட்டுக் கொண்டு வலது பக்கத்தில் சிரைக்க ஆரம்பித்தான்.


வலது பக்கத்துக்கு சிரைக்க அவள் அழுவது மகேஷூக்கு தெரிந்தது.
என்னங்க உங்க சம்மதம் இல்லயா மொட்டை அடிக்க?
அவள் எதுவும் பேசாமல் இருக்க...
ஸாரிங்க... நானும் ஏதோ ஒரு வேகத்தில உங்கள கேட்காம மொட்டை அடிச்சுட்டேன்... என்ன மன்னிச்சுருங்க...
பரவால்லை... நீ மட்டும் என்ன பண்ண முடியும்...
ஏங்க உங்களுக்கு மொட்டை அடிக்க பிடிக்கல்லயா...
ஆமா, என் காலேஜ்ல நான் தான் லாங் ஹேர் ஸ்டைல் வச்சு இருக்கேன்.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அதுல பொறாமை... இப்போ என்னை எல்லாரும் மொட்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க...
ம்ம்ம்.. ஆமாம்.. என் ஸ்கூல்லயும் என்ன அப்படி தான் கிண்டல் பண்ணாங்க... ஆனா நான் பையன் கிறதால எனக்கு பிரச்சனை இல்ல...
ஏய், நீ வேற என்ன வெறுப்பு ஏத்தாதே.. நானே டென்சன்ல இருக்கேன்... பேசாம உன் வேலையை பாரு...
கோவபடாதீங்க... நீங்க இப்போ இருக்கிறதை விட மொட்டை அடிச்ச அப்புறம் இன்னும் அழகா இருப்பீங்க... என்னை நம்புங்க...
ம்ம் சரி...
சற்று நேரத்தில் அவளை பின் பக்கம் திரும்பி உட்கார சொல்லி, சிரைக்க சிறிது நேரத்தில் அவள் மொட்டை ஆனாள். அன்னிச்சையாக அவள் எழ முயல மகேஷ் அவள் தோளை பிடித்து உட்கார வைத்து, மீண்டும் அவள் மொட்டை தலையில் நீர் தடவி மீண்டும் ஒரு முறை நன்றாக சவரம் செய்தான்.
காதோரங்களில் நன்றாக நனைத்து விட்டு கொண்டு சவரம் செய்தான்.
ஒரு வழியாக நல்ல அடர்த்தியான முடியை மொட்டை அடித்து மகேஷ் சாதனை படைத்தான்.
அவளின் முகத்தின் நிறமும், மொட்டை மண்டையின் நிறமும், ஒன்று போல இருந்தது. இந்த முறை கத்திக்கு பதிலாக அவள் மொட்டை மண்டை பளபளப்பாக இருந்தது. அவள் தலையை தடவி கொண்டே எழுந்து தன் துப்பட்டாவால் தலையை மூடிக் கொண்டாள். அதன் பின் மகேஷுன் அப்பா அவனுக்கு மொட்டை அடித்து முடித்ததும், அனைவரும் ஒன்றாக அருவிக்கு சென்று குளித்து விட்டு புதிய ஆடை அணிந்து வந்தனர். மகேஷ் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து செல்பி எடுக்க, பின் அந்த பெண்ணும் அவனும் மொட்டை தலையுடன் செல்பி எடுத்தனர்.


அவள் தன் செல்போனில் அவளை மொட்டை தலையுடன் போட்டோ எடுக்க சொல்ல மகேஷ் அவளை விதவிதமாக போட்டோ எடுத்தான். அந்த போட்டோவை வாங்கி பார்த்த அவள் அதை வாங்கி பார்க்க மகேஷ் சொன்னதை போல அவள் முன்பை விட மொட்டை தலையில் மிக அழகாக இருந்தாள்.
மகேஷின் அம்மா ஒரு குவளையில் சந்தனத்தை குழைத்து கொண்டு வந்து மகேஷின் தலையில் தடவி விட்டாள். பின் அந்த பெண்ணுக்கும் தடவ, அவள் வேண்டாம் என்று மறுக்க தடவி பாரு நல்லா இருக்கும் என்று மகேஷ் சொன்னதும் சரி என்றாள். அவள் தலையில் சந்தனம் தடவியதும் அந்த சில்ல்னெஸ்ஸை உணர்ந்தாள். அதன் பின் சாமி தரிசனம் செய்ய அனைவரும் சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு கோவிலை சுற்றி வர இருவரும் ஒரு இடத்தில் உட்கார அவரவரர் மொட்டையை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அதன் பின் இருவரும் மொபைல் நம்பர் பரிமாறிக் கொண்டு வாட்ஸப்பில் சாட் செய்து கொண்டு நண்பர்களாக இருந்தனர்.