Saturday 18 September 2021

திவ்யாவின் மொட்டை - இரண்டாம் பாகம்

September 18, 2021 2

திவ்யாவின் அப்பா அவள்மேல் ரொம்பவே அன்பாக இருப்பார். அவருக்காகத் தன்னுடைய நீளமான முடியை தியாகம் செய்யலாம் என்று யோசித்தாள். திவ்யாவின் பெற்றோர் இருவரும் அவளைத் தனியாக விட்டு விட்டுப் போக, திவ்யா தன்னுடைய முடியை மொட்டை அடிப்பதை நினைத்து அழுதாள்.அப்போது குமார் அங்கு வர, திவ்யா அழுவதை பார்த்தான்.

என்னம்மா? ஏன் அழற?

இல்ல, நான் என்னுடைய முடியை மொட்டை அடிக்கணும்னு அப்பா சொன்னார், ஏதோ வேண்டுதலாம், அதான் அழுகையா வருது...



குமார் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆனான். இந்த அழகான பெண்ணுக்கா மொட்டை அடிக்க வந்தோம் என்று நினைத்தான்.

என்னை மொட்டை அடிக்கத் தான் வரச் சொன்னாங்க, ஆனா யாருக்கு மொட்டை அடிக்கனும்னு சொல்ல, இப்போ நீ சொல்லித் தான் எனக்கே தெரியும், உன்னோட நீளமான முடியை மொட்டை அடிக்கக் கஷ்டமா தான் இருக்கும், ஆனா உன்னோட முக அமைப்புக்கு மொட்டை அடிச்சாலும் நல்லா தான் இருக்கும்...

--------------

சரிம்மா, நீ என்ன முடிவு பண்ணி இருக்க என்று குமார் கேட்க, 

எனக்கு என்ன பண்ணனு ஒரே குழப்பமா இருக்கு, ஒரு பக்கம் நான் ரொம்ப ஆசையா வளர்த்த முடி, இன்னொரு பக்கம் என் மேல உயிரையே வச்சு இருக்க என் அப்பா, என்று சொல்ல, 



உன் அப்பாக்காக யோசிச்சு பாரு, நீ அவர் சொன்னா கேட்டுக்குவேன்னு நம்பி உங்க சொந்தங்களை எல்லாம் கூட்டி வந்துருக்கார், இப்போ நீ முடியாதுன்னு சொன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க, 

நிஜமா நான் மொட்டை அடிச்சா நல்லா இருப்பேன்னா? 

நிஜமா நீ இப்போ இருக்கிறதை விட இன்னும் அழகா இருப்ப?

இதுக்கு முன்னாடி என் வயசு பொண்ணுகளுக்கு மொட்டை அடிச்சு இருக்கீங்களா?

நிறைய தடவை அடிச்சு இருக்கேன்... வீடியோ வேணா என் செல்போன்ல இருக்கு... பாக்குறியா?

குமார் தன் செல்போனில் இருந்த வீடியோவைக் காண்பிக்க, அதில் நிறைய காலேஜ் பெண்கள் திவ்யாவின் முடியைவிட இன்னும் நீளமான முடியை மொட்டை அடிக்க, அவள் அதை ஆச்சர்யமாகப் பார்த்தாள். அதன்பின் திவ்யா தன்னுடைய முடியை மொட்டை அடிக்க, சம்மதம் சொல்ல அவளுடைய அப்பா எல்லோருக்கும் திவ்யா மொட்டை அடிக்கச் சம்மதிச்சிட்டா என்று சொல்ல, எல்லோரும் மகிழ்ச்சியில் ஓ வென்று கத்தினர்.

மொட்டைத் திவ்யா, மொட்டைத் திவ்யா என்று அவளுடைய மாமன் மகன் கிண்டல் செய்ய, அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அவளது பெரியப்பா மகன் வந்து தன்னுடைய பாக்கெட் சீப்பை கொடுத்து கடைசியா ஒரு தடவை உன் முடியை ஆசை தீர சீவிக்கோ என்று சொல்ல, திவ்யா அவள் அண்ணனைச் செல்லமாக அடிக்கப் போனாள். இப்படியே எல்லோரும் கிண்டல் செய்ய, ஒரு கட்டத்தில் திவ்யா கண்ணில் கண்ணீர் வந்ததும், உடனே எல்லோரும் அவளைக் கட்டி பிடித்து ஆறுதல் சொன்னனர்.

சும்மா விளையாட்டுக்குத் தானே கிண்டல் பண்ணோம், அதுக்கு போய் யாரும் அழுவாங்களா என்று அவளுடைய அக்கா ஆறுதல் சொல்ல, குமார் அருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் போய் ஒரு கவரை விரித்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான்.

எல்லோரும் திவ்யாவை அந்த மர நிழலுக்குக் கூட்டி வர, குமார் தான் வைத்து இருந்த ஒரு பெட்டியிலிருந்து ஒரு சவரக் கத்தியை எடுத்தான். அருகில் இருந்த ஒரு மண் சட்டியில் இருந்த நீரில் சவர கத்தியைச் சுத்தம் செய்தான். திவ்யாவிற்க்கு அந்த சவரக் கத்தியைப் பார்த்ததும், அவளுடைய முதுகு தண்டில் சில்லென்று சிலிர்த்துக் கொண்டது. 



வாம்மா, உன்னோட் ஜடைய பிரிச்சு விட்டுட்டு வந்து இந்த பலகையில் உட்காரு என்று குமார் சொல்ல, திவ்யாவின் அம்மா வந்து அவள் தலையில் இருந்த பின்னை கழட்டி விட்டு, அதிலிருந்த மல்லிகை பூவை எடுத்ததும், அவள் முடியைப் பிரித்து விட்டு, அம்மா பலகையில் உட்கார சொல்ல, திவ்யா அருகில் நின்று இருந்த தன் அப்பாவைப் பார்த்தாள். அவர் கெஞ்சுதலாக உட்காரு என்று தலை அசைக்க, திவ்யா தன் கண்ணீரை துடைத்து விட்டுப் பலகையில் உட்கார்ந்தாள்.

குமார் திவ்யாவின் தலையை பிடித்துக் குனிய வைத்து, அவளுடைய முடியை நன்றாக உதறிவிட்டு, எல்லா முடியையும் எடுத்து முன்புறமாக போட்டு விட்டான். திவ்யாவின் முகம் தெரியாமல் முடி மொத்தமும் மூடிக் கொண்டது. பின் மண் சட்டியில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்துத் தெளிக்க, அந்த குளிர்ந்த நீர் பட்டதும், அவள் தலையில் ஐஸ் கட்டி பட்டது போலச் சுகமாக இருந்தது. குமார் அவள் தலை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்த தெளித்து அடர்ந்த முடிகளை இரு கைகளால் அழுத்தி மசாஜ் செய்தான்.

அப்போது திவ்யாவின் அம்மா அவளுடைய நுனி முடியில் கொஞ்சம்  பூவை வைத்துப் பின்னினாள். அப்போது திவ்யாவின் அக்கா கடைசியா கொஞ்சம் பூவை வச்சுக்கோ திவ்யா என்று கிண்டல் பண்ணினாள். திவ்யாவின் அடர்த்தியான முடியிலிருந்து தண்ணீர் சொட்டி, சொட்டி அவளுடைய தாவணி முழுவதும் நனைந்தது. அதே போல அவளுடைய கண்ணில் இருந்தும் கண்ணீர் வர, அது யாருக்கும் தெரியாமல் அவளுடைய முடி மறைத்து விட்டது.



இதை எல்லாம் அவளுடைய தம்பி ஒருவன் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்க, கூட்டத்தில் இருந்த வாண்டு ஒருவன் திவ்யா அக்காவுக்கு என்ன பண்ண போறாங்க என்று கேட்க, அதற்குத் திவ்யாவின் சித்தி அக்காவுக்கு மொட்டை அடிக்கப் போறாங்க என்று சொல்ல, எல்லோரும் சிரித்தனர். தன்னை எல்லோரும் கிண்டல் செய்வதில் கோபமான திவ்யா அவள் அம்மாவைப் பார்த்து மொட்டை வேண்டாம் என்று சொல்ல, அவளுடைய அம்மா இனிமேல் மொட்டை அடிக்காமல் எழக் கூடாது, அப்படி பண்ணா சாமி குத்தம் ஆயிடும் என்று சொல்ல, திவ்யாவின் அப்பா குமாரை பார்த்து, நேரமாகுது சீக்கிரம் அடிச்சு விடுப்பா என்று சொல்ல, குமார் தன்னுடைய புத்தம் புது சவரக் கத்தியை எடுத்தான். அந்த சவரக் கத்தி பளபளவென வெயில் பட்டு மின்ன, திவ்யாவின் கண் கூசியது.

குமார் புதிய ப்ளேடு ஒன்றை போட, எல்லோருடைய பார்வையும் அந்த சவரக் கத்தியின் மேல் தான் இருந்தது. குமார் திவ்யாவின் உச்சந்தலையில் தன் கையை வலுவாகப் பிடித்து அவளைக் குனிய வைத்து மேல் மண்டையிலிருந்து கீழ் நோக்கிச் சிரைத்து விட்டான். அவளுடைய மண்டையில் வெள்ளை தோள் வெளியே தெரிய, ஈரமான முடி சிறு கொத்தாக அவள் மடியிலேயே விழுந்தது. ஆள் ஆளுக்குத் திவ்யாவை கிண்டல் செய்ய, திவ்யா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். குமார் திவ்யாவின் வகிடு வழியாக இடது பக்கம் சிரைக்க, அவளுக்கு மொட்டை அடித்த இடம் முதலில் கொஞ்சம் எரிச்சலை கொடுத்தாலும், பின் தென்றல் காற்று பட்டுக் குளிர்ந்த உணர்வைத் தந்தது. திவ்யா தன்னை மறந்து மொட்டை அடிப்பதையும், அடிக்கும்போது வரும், ச்சரக், ச்சரக் என்ற சத்தத்தையும் ரசிக்க ஆரம்பித்தாள். 


குமார் மெதுவாக அவள் முடியை மொட்டை அடிக்க, காயம் படாமல் மிகுந்த சிரத்தையுடன் கவனமாக அடித்தான். திவ்யாவின் முடி கொஞ்சம் கொஞ்சமாக அவள் மடியிலேயே விழ, திவ்யாவுக்கு மொட்டை அடிக்க விருப்பமில்லை என்றாலும் இப்போது ஜாலியாக இருக்க, குமார் இப்போது திவ்யாவின் காதை மடக்கி, காதின் ஒரங்களில் இருந்த முடியை எடுத்து விட்டு, அவளுடைய கிருதா வரை கீழ் நோக்கிச் சவரக் கத்தியை இழுக்க, திவ்யாவுக்கு என்னவென்று புரியாத ஒரு உணர்வு ஏற்பட, அவள் உடல் முழுவதும் கூசியது...

குமார் திவ்யாவின் இடது பக்க முடியை மொத்தமாக வழித்து எடுத்து இருந்தான். திவ்யாவுக்கு வலது பக்கம் கொஞ்சம் வெயிட் இருப்பது போல இருக்க, இன்னும் சில நிமிடங்களில் அதுவும் இருக்காது என்று நினைத்தாள். ஒரு சமயம் தன் முடியை இழப்பதை எண்ணி வருந்தினாலும், மொட்டை அடிக்கும்போது வரும் ஒரு த்ரில்லான உணர்வையும், சுகத்தையும் அனுபவித்தாள். 

குமார் சவரக் கத்தியில் பிளேடு மாற்றி விட்டு, திவ்யாவின் வலது பக்கம் உச்சி மண்டையிலிருந்து மழிக்க, திவ்யாவுக்கு இப்போது அவளுடைய தலை கூசுவது போல இருக்க, குமார் திவ்யாவின் தலையை ஆட்டக் கூடாது என்றான். குமார் திவ்யாவின் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு மழிக்க, அவளது வலது பக்க முடியும் கொத்தாக விழுந்தது. இப்பொழுது திவ்யாவின் பின் மண்டையில் மட்டும் முடி இருக்க, அவன் அவளைத் திரும்பி உட்கார சொல்ல, அவள் திரும்பி உட்கார, திவ்யாவின் மொத்த குடும்பமும் அவள் பின்னால் அவள் யாரையும் பார்க்காமல் இரு கைகளால் கண்களை மூடிக் கொள்ள, அனைவரும் அவளைப் பார்த்துச் சிரிக்க, குமார் திவ்யாவின் பின் மண்டையில் இன்னும் கொஞ்சம் நீர் விட்டு மழிக்க, அவள் பின்னலில் சொருகி இருந்த மல்லிகை பூ கீழே விழுந்தது.

இனி மேல் பூ வைக்க ஆறு மாதங்கள் ஆகும் என்று நினைத்தாள். மல்லிகை பூ விழுந்த சில நிமிடங்களில் திவ்யாவின் முடியை மொத்தமாக மழித்து எடுத்தான்.

பின் மண் சட்டியில் இருந்த கொஞ்ச நீரையும் எடுத்துத் திவ்யாவின் மொட்டைத் தலையில் தேய்த்து விட்டு, சவரக் கத்தியில் ரிவர்ஸ் ஷேவ் செய்தான். இப்போது திவ்யாவின் மண்டையில் ஒரு முடி கூட இல்லை. பின் கழுத்து, கன்னம், கிருதா, காது ஓரங்கள் என அனைத்து இடங்களிலும் இருந்த பூனை முடிகளை மழித்து விட, திவ்யாவின் முகமும், மொட்டை அடித்த தலையும் ஒரே கலராக இருந்தது.

திவ்யா அதுவரை தன் கையை வைத்துக் கண்களை மூடிக் கொண்டு இருக்க, குமார் திவ்யாவின் கையை எடுக்கச் சொல்லி விட்டு, நெற்றியிலிருந்து கீழ் நோக்கிப் புருவம்வரை மழித்து விட, அவள் முகம் பளிச் என்று இருந்தது. 


முடிஞ்சதுமா என்று குமார் சொல்ல, திவ்யா தன் மேல் இருந்த முடியை உதறி விட்டு வேகமாக எழ, அவள் மடியில் இருந்த முடி எல்லாம் கீழே விழுந்தது. எல்லோரும் ஓ வென்று கத்த, திவ்யா அழுது கொண்டே அவள் அம்மாவைப் போய்க் கட்டி பிடித்துக் கொண்டாள். திவ்யாவின் அம்மா ஆறுதல் சொல்ல, திவ்யாவின் தாய் மாமன் குமாருக்கு பணம் கொடுத்து விட்டு, எல்லோரையும் அதட்டினார். திவ்யாவின் மாமா திட்டியதும் எல்லோரும் அமைதியாக, திவ்யா அவள் அம்மாவுடம் குளிக்கப் போனாள். திவ்யா குளித்து விட்டு மஞ்சள் கலரில் சேலை ஜாக்கெட் அணிந்து வர, மொட்டைத் தலையில் சேலை கட்டிக் கொண்டு வரும் திவ்யாவை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அவள் முன்பை விட மொட்டைத் தலையில் தான் அழகாக இருப்பதாக எல்லோரும் நினைக்க, திவ்யா வந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பயந்து கொண்டே பார்க்க, அவள் முகத்தைப் பார்க்க, அவளுக்கே புதியதாக இருந்தது. அவளும் குமார் சொன்னது போலத் திவ்யா மொட்டைத் தலையில் தான் இன்னும் அழகாக இருந்தாள்.

=====================================================================



கதை இன்னும் முடியவில்லை நண்பா... கதையில் இன்னும் நிறைய டிவிஸ்ட் இருக்கு... இந்த கதையை முன்பு படித்தவர்கள் இருந்தால் கதையை நான் மாற்றித் தெளிவாக  எழுதி இருக்கிறேன் என்று புரியும்.  கண்டிப்பாக நான் சொல்வதெல்லாம் இந்த கதை "நானும் காயத்ரியும்" கதையைப் போலப் பத்து பாகங்கள்வரை போக வாய்ப்பு இருக்கிறது. நன்றி.





Actress Madhumitha Sarcar latest hair style photoshoot

September 18, 2021 0
Actress Madhumitha Sarcar latest hair style photoshoot




































Actress Madhumitha Sarcar latest hair style photoshoot

September 18, 2021 0

Actress Madhumitha Sarcar latest hair style photoshoot





































Long to Mid back length layer hair cut

September 18, 2021 0
Long to Mid back length layer hair cut









North Indian girl's jet black thigh hair images

September 18, 2021 0
North Indian girl's jet black thigh hair images

































Young girl goes to Brownie hair coloring transformation

September 18, 2021 0
Young girl goes to Brownie hair coloring transformation




















Low back length long hair to shoulder length Bob cut | Toni Guy

September 18, 2021 0
Low back length long hair to shoulder length Bob cut | Toni Guy