Thursday 25 February 2021

பிரகதியின் மாற்றம் - ஆறாம் பாகம்

February 25, 2021 2

  பிரகதியின் மாற்றம் - முதல் பாகம் 

பிரகதியின் மாற்றம் - இரண்டாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - மூன்றாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் -  நான்காம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - ஐந்தாம் பாகம் 


 



நான் உடனே சென்னை கிளம்பி, அந்த கம்பெனியில் ஜாயினிங் லெட்டரை கொடுத்து விட்டு, கடைசி செமஸ்டர் ரிசல்ட் வந்ததும், வேலையில் ஜாயின் பண்ண சொல்லிவிட்டார்கள். உடன் ஆபீஸ் அருகிலேயே ஒரு நல்ல வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்து விட்டு, அட்வான்ஸ் கொடுத்து விட்டு நான் கிளம்பி வீடு வந்தேன். அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்ல அவளும் சரி என்று சொன்னாள்.

அடுத்த சில நாட்கள் ஜாலியாக என் நண்பர்களோடு ஊர் சுற்றி விட்டு, அம்மாவின் கையால் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு, அவ்வப்போது அம்மாவின் நீளமான முடியை சீவி ரசித்துக் கொண்டு இருந்தேன். அன்று செமஸ்டர் ரிசல்ட் வரும் நாள். ஆன்லைனில் ரிசல்ட்டை பார்க்க நானும் என் அம்மாவும் எஸ்டேட்டில் இருந்து டவுனுக்கு சென்றோம். ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் ரிசல்ட்டை பார்க்க நான் 90% மார்க் வாங்கி காலேஜில் முதல் மாணவனாக பாஸ் ஆகி இருந்தேன். 

அம்மா என்னை அங்கேயே கட்டி பிடித்துக் கொண்டு முத்தங்கள் கொடுத்து கொண்டே மகிழ்ச்சியில் அழுதாள். அவளின் இத்தனை வருட எனக்கான உழைப்பு வீண் போகாமல் போனதை எண்ணி அழ, நான் அவளை ஆறுதல் படுத்தி வீட்டுக்கு கூட்டி வந்தேன். வரும் வழியில் எங்கள் ஊர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, கோவில் பூசாரியிடம் மதன் நல்லபடியாக படிப்பை முடித்து விட்டதால், தான் தன்னுடைய வேண்டுதலை நிறைவேறுவதாக சொல்லி விட்டு வந்தாள். அதற்க்கு பூசாரியும் வரும் சித்ரா பவுர்ணமி அன்று நல்ல நாள் என்றும், அன்று விஷேஷ பூஜைகள் இருப்பதால் அன்றே உங்கள் வேண்டுதலை சாமிக்கு செலுத்தி விடுங்கள் என்று பூசாரி சொல்ல, அம்மாவும் சம்மதம் சொல்ல நாங்கள் கிளம்பினோம்..



அடுத்த இரு நாட்கள் என்னுடையை செமஸ்டர் ரிசல்ட்டை நான் வேலைக்கு சேரும் நிறுவனத்துக்கு அனுப்பி ஜாயின் லெட்டரை வாங்கினேன்.ஒரு மாலை நேரம் நானும் அம்மாவும் டிவி பார்த்துக் கொண்டு இருந்த போது, அம்மாவிடம் என்ன வேண்டுதல் என்று கேட்டேன்.

ஒண்ணும் இல்ல மதன், நீ நல்ல படியா படிப்பு முடிச்சிட்டா, சாமிக்கு வேண்டுதல் நிறைவேற்ற, கும்பிட்டு இருந்தேன்.

அதான்மா, என்ன வேண்டுதல்?


நாளைக்கு தான் சித்ரா பவுர்ணமி, அப்போ தெரிஞ்சுக்கோ... இப்போ நான் போய் உனக்கு டீ போட்டு வர்றேன்.. அம்மா எழுந்து போக நான் அவள் சொல்வது புரியாமல், வேண்டுதல் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.

அடுத்த நாள் காலையில் அம்மா குளித்து முடித்து விட்டு ஒரு அழகான மஞ்சள் சேலை அணிந்து கொண்டு கோவிலுக்கு போக தயாராக இருந்தாள். பூஜைக்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு , என்னையும் ரெடி ஆகி வர சொல்ல, நானும் ரெடி ஆனேன். நானும் அம்மாவும் கோவிலுக்கு போக, கோவிலில் பெரிய கூட்டம் இருந்தது.



பூசாரியிடம் சென்று பூஜைக்குரிய பொருட்களை அம்மா கொடுக்க, சரிம்மா நீங்க போய் வேண்டுதலை சாமிக்கு செலுத்திட்டு வாங்க.. நான் பூஜைக்கு ஏற்பாடு பண்றேன் என்றார். பின் அம்மா என்னைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வெளியே வர, நான் எதுவும் புரியாமல் அம்மாவுடன் நடந்து வந்தேன்.

******************************************************************************

சில பர்சனல் வேலைகள் காரணமாக நினைத்தபடி கதையை முடிக்க முடியவில்லை. அலுவலக வேலை, தொடர்ந்து சில பங்க்ஷன்ஸ் போக வேண்டிய நெருக்கடியான நேரத்திலும் இந்த பதிவை எழுதி முடித்தேன். கதை அடுத்த பகுதியில் முடியும் என்று நினைக்கிறேன். நன்றி!!!


Punjabi model long to bob cut

February 25, 2021 0

 Punjabi model long to bob cut | Sunny hair stylist

























Fabulous indian bald beauties in fb

February 25, 2021 0

 Fabulous Indian bald beauties in FB






































Indian girl's Silky long hair style photoshoot

February 25, 2021 0

 Indian girl's Silky long hair style photoshoot 



























































Telugu actress the latest white saree photoshoot

February 25, 2021 0

 

Telugu actress the latest white saree photoshoot


































Chennai girl's very thigh silky pony tail hair

February 25, 2021 0

  Chennai girl's very thigh silky pony tail hair