Monday 22 April 2019

அபிராமியின் ஆசைக்கு வடிகால் - பாகம் 1

April 22, 2019 0
அபிராமியின் ஆசைக்கு வடிகால் - பாகம் 1
அதிகாலை  3 மணி. உறக்கத்தில் இருக்கும் அபிராமியை சுமந்து கொண்டு அந்த பேருந்து திருப்பதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
மார்கழி மாத குளிர் காற்று ஜன்னல் வழியாக வீசியது. ஜன்னல் சீட்டினருகில் அமர்ந்து அபிராமி இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தாள். அபியின் மனம் நாளை காலை நடக்க போகும் ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டு இருந்தது.
திருப்பதிக்கு வரவேண்டும் என்பது அபிராமியின் நீண்ட நாள் ஆசை. அவளின் ஆசையை பற்றி நாம் விலாவாரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் இன்னும் மூன்று வருடங்கள் பின்னால் செல்ல வேண்டும். அவள் பஸ் விட்டு இறங்குவதற்க்குள் நாம் அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

அபிராமி சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள். அவளுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதம் தான் ஆகிறது. அவள் கணவன் வாசு ஒரு சாப்ட்வேர் இன்ஜீனியர்.  அபிராமி நல்ல அழகி. சிவந்த நிறமும், செழுமையான நீண்ட முடியையும் கொண்டவள். அவளுடைய உடல் செழுமையும், அந்த நீளமான கூந்தலும் அவளை மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும்.


அபியின் நீண்ட முடியை கொண்டை போட்டால் அவள் பின் கழுத்தில் இருக்கும் பூனை முடியும், அவளது
கன்னத்திலிருக்கும் நீண்ட கிருதாவும் எந்த ஹேர் பேடிஷ் ஆணையும் சொக்க வைக்கும்.
அபிராமி கல்லூரியில் படிக்கும் போது
அவளது இந்த அழகினால் இன்னமும் திமிராக இருந்தவள். மருந்துக்கூட கத்தரி பார்க்காத முடி. வாழ்க்கையில் ஒருமுறை கூட தன் முடி மேல் கத்தரி படகூடாது என்று நினைத்தவள் ஏன் திருப்பதியை நோக்கி போகிறாள்.
அபிராமி தன் திருமணத்திற்கு முன் தன்  குலதெய்வ கோவிலுக்கு போக நேர்ந்தது. அபியின் சிறு வயதில் அந்த கோவிலில் தான் அவளுக்கு மொட்டை போட்டார்கள். ஆனால் அவளுக்கு அது ஞாபகமில்லை. அன்று கோவில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. எங்கே பார்த்தாலும் ஒரே கூட்டம். மேள சத்தம். அபியின் குடும்பம் ஒரு மர நிழலில் அமர்ந்தார்கள்.
அபி அவளுடைய தோழியுடன் சேர்ந்து கோவிலை சுற்றி பார்க்க கிளம்பினாள்.
கிடா வெட்டுவதை பார்த்து பயந்து அடுத்த இடத்திற்கு செல்ல அங்கு ஒரு கூட்டம் இருந்தது. என்ன நடக்கிறது என்று ஆர்வத்துடன் அபிராமி எட்டி பார்க்க அங்கு ஒரு சின்ன பெண்ணுக்கு  மொட்டை அடித்து கொண்டு இருந்தான் பார்பர். மொட்டை அடிப்பது அவளுடன் படித்த பெண்தான்.
நாசுவன் அந்த பெண்ணின் பாதியை முடியை மொட்டை அடித்து இருந்தான்.
கீழே தரை முழுவதும் மயிராக கிடந்தது.
அதை வெறும் காலில் அபிராமி மிதிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தது. அதே போல அந்த பகுதியில் ஒரு லைனாக அமர்ந்து நாசுவங்கள் மொட்டை அடித்து கொண்டு இருந்தனர்.
அபிராமிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று தோன்றியது. அந்த பெண்ணிற்க்கு ஒரு சைடு மட்டும் மொட்டை அடித்து முடி தொங்கி கொண்டு இருந்தது. பார்பர் அவளை குனிய வைத்து அவள் கழுத்தில் உள்ள பூனை முடியை சிரைத்துக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்த அபிராமி தன்னுடைய முடியை தன்னிச்சையாக தடவி பார்த்து கொண்டு இருந்தாள். பக்கத்தில் ஒரு வயசு பையனுக்கு மொட்டை அடித்த நாசுவன் அந்த பையனின் கையை தூக்க சொல்ல அவன் அபிராமி பார்ப்பதை கண்டு வெட்கபட அந்த பையனின் அம்மா அவனை திட்ட அவன்  வெட்கத்துடன் கையை தூக்க நாசுவன் அந்த பையனின் அக்குளில் சிரைத்து விட்டான். அதை பார்த்த அபிக்கு என்னவோ போல் ஆனது. பெண்களுக்கும் அது போல செய்வார்களா என்று அபிக்கு சந்தேகம் வந்தது. இன்னும் மூன்று நாள் இங்கே தான் இருப்போம் என்பதால் இங்கே வந்து மொட்டை அடிப்பதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள்.
அபியின் மொட்டை ஆசை அங்கு தான் ஆரம்பமானது. அடுத்த நாள் எல்லோரும் கோவிலுக்கு செல்ல, அபி அவர்களுடன் செல்லாமல், சிறிது நேரம் கழித்து சென்றாள். அபி நேராக மொட்டை அடிக்கும் இடத்திற்கு சென்றாள். நல்ல கூட்டம். மெதுவாக அங்கு எட்டி பார்த்தாள். பல பேர் தலையை மொட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
அபிராமி அங்கு நிற்பதை பார்த்த ஒருவன் தலையை பிரிச்சு தண்ணில நனைச்சுட்டு வாம்மா என்றார். அபி அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று யோசித்து இல்ல நான் மொட்டை போடல..சும்மா பாக்குறேன் என்றாள் வெட்கத்துடன். அதற்க்குள் ஒரு பெண் வந்து ஜடையை பிரித்துக் கொண்டு உட்கார நாசுவன் அவளை கவனிக்க அபிராமி சந்தோஷமாக நின்று மொட்டை அடிப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
அந்த பெண்ணுக்கு மொட்டை அடிப்பது அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும். ரொம்பவும் வெட்கப்பட்டாள்.
அந்த பெண்ணின் கணவன் மொட்டை அடிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். நாவிதன் மொட்டையா? பூ முடியா? என்று கேட்க அவள் வெட்கத்துடன் மொட்டை என்றாள்.
அவள் தன் சேலையை சரி செய்து கொண்டு, முடிக்கு போட்டு இருந்த ரப்பர் பேண்டை கைக்கு வளையல் போல மாட்டிக் கொண்டு அவள் கொண்டு வந்து இருந்த ஒரு துண்டை போர்த்திக் கொண்டு இருந்தாள். நாவிதன் பக்கதில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி அவள் முடியை மசாஜ் செய்தான். அந்த பெண்ணின் கணவன் அவளை கேலி செய்தான். இன்னும் பத்து நிமிடத்தில் உன் முடி மொத்தமும் உன் மடியில் இருக்க போகுது என்றான். அவள் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.
நாசுவன் அவள் தலையில் நிறைய நீர் விட்டு அது அவள் கன்னம் ஜாக்கெட் என எங்கும் வழிய மசாஜ் செய்தான். அதன்பின் அந்த முடியை இரண்டாக கொண்டை போட அவள் கணவன் " கொண்டை போடாமல் லூசாக விட்டே மொட்டை அடிங்க" என்றான். சரிங்க சார் என்ற நாவிதன் அந்த பூவை எடுத்து அவள் பின்னலில் சொருகி விட்டு, பெட்டியில் இருந்து சவர கத்தியை எடுத்து பிளேடு ஒன்றை மாட்டி மொட்டை அடிக்க ரெடி ஆனான்.
நாசுவன் அவள் உச்சந்தலையில் கத்தியை வைத்து ஒரு இழு இழுத்தான்.
வெள்ளை சொட்டை ஒன்று தெரிந்தது. நாசுவன் அதில் கை வைக்க அந்த பெண்ணுக்கு கூச்சமாக இருந்தது. நாசுவனின் கத்தி அவள் தலையில் விளையாட ஆரம்பித்தது. அவனின் ஒவ்வொரு இழுப்புக்கும் கொத்து கொத்தாக மயிர் மழை போல மடியில் விழுந்தது. அந்த பெண்ணின் உடம்பில் உள்ள மயிர்கால்கள் குத்திட்டு நின்றது தெரிந்தது. அந்த பெண்ணின் கணவன் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். அபிராமியும் பார்த்து கொண்டு இருந்தாள்.
சிரைத்த முடிகள் அவளின் பின்னாலும், ஜாக்கெட் இடுக்கிலும் விழுந்தது. பூனை முடியை சவரம் செய்யும் போது அவள் கூச்சத்தில் நெளிய, அழுத்தி பிடித்த நாசுவன் நகராதேம்மா.. கத்தி பட்டுரும் என்றான். அவள் கூசுதுங்க என்றாள். கொஞ்சம் நேரம் பொறுத்துக்க.. முடிஞ்சிரும் என்றான். அவள் நகை, தாலியை பின்னால் தள்ளிவிட்டு பூனை முடியை சிரைத்து விட்டான்.
பின் அவளை நிமிர்த்தி நடு மண்டையில் இருந்து சிரைக்க ஆரம்பத்தான். அவள் முடி மண்டையில் இருந்து மழமழவென்று இறங்கியது. அவளின் பின் மண்டை பச்சை கலந்த வெள்ளையாக இருந்தது. அதற்க்குள் அவளின் கிருதாவை சிரைத்து கொண்டு இருந்தான் பார்பர். அவள் கன்னம் வரை கத்தியை வைத்து இழுக்க அந்த பெண் "ரொம்ப எடுக்க வேண்டாம், அப்புறம் தாடி மாதிரி வளரும்" என்றாள்
உங்களுக்கு ரொம்ப அடர்த்தியான முடியா இருக்கு, எடுக்காம விட்டா அது மட்டும் தனியா தெரியும்" என்றான்
அவள் சரி என்று சொல்ல அடுத்த இரண்டு நிமிடத்தில் மொத்த முடியையும் வழித்து விட்டு இரண்டாம் முறை ஷேவிங் செய்து கொண்டு இருந்தான் பார்பர். உங்களுக்கு பொடுகு அதிகமாக இருக்குமா, அதனால இன்னொரு மூணு மாசம் கழிச்சு ஒரு மொட்டை போடுங்க என்றான். சரி என்றாள் அந்த பெண்.
பார்பர் சிரைத்து முடிந்ததும் அந்த பெண் எழ அவள் மடியில் இருந்த அத்தனை முடியும் கீழே விழுந்தது.
அவள் வெட்கத்துடன் தலையை தடவி கொண்டே நல்லா இருக்குங்க இந்த பீல் என்றாள். அவள் கணவன் ஆசையுடனும் மோகத்துடனும் அவளை பார்த்து கொண்டு இருந்தான். அவர்களின் பேச்சு அபிராமிக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அவள் இதுவரை அப்படி உணர்ந்தது இல்லை.
தானும் ஒரு நாள் இப்படி எல்லோரும் இருக்கும் போது மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.



அதன்பின் தினமும் மொட்டை அடிப்பதை பற்றியே நினைத்து கொண்டே இருந்தாள். தன் கணவனாக வர போகிறவனுக்கும் இப்படிப்பட்ட மொட்டை ஆசை இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாள். இந்த ஆசையை அவளின் குளியல் அறையில் மட்டுமே நிறைவேறியது. தலையில் முடி இல்லாமல் மொட்டையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து கொண்டாள். தினமும் குளிப்பதற்க்கு முன் தலையை நன்றாக நனைத்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட இன்பம் அனுபவித்தாள். அவளின் அக்குள் முடியை ரெகுலராக சிரைத்தாள். அந்த வழுவழுப்பு அவளுக்கு பிடித்தது. ஸ்லீவ் இல்லாத ஆடைகளையே அணிந்தாள்..

அவளுக்கு இன்னொரு ஆசையும் இருந்தது. ஒரு முறையாவது வேறு ஒருவருக்கு சவர கத்தியை வைத்து மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். கனவாகவே நாட்கள் கழிந்தன. காலேஜ் முடித்தாள். வேலைக்கு சேர்ந்தாள். உடன் வேலை செய்யும் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அதற்க்கு காரணமும் இருந்தது.