Sunday 12 July 2020

ஹனிமூன் கொண்டாட்டம் - இரண்டாம் பாகம்

July 12, 2020 0
ஹனிமூன் கொண்டாட்டம்   - முதல் பாகம் 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நான் ராஜ். என் மனைவி தீபாவுடன் ஹனிமூன் வந்து இருக்கிறேன். அப்படியே ஒரு பிஸினஸ் மீட்டும் கோவாவில் இருப்பதால் இரண்டு வேலையையும் ஒன்றாக பார்த்து விடலாம் என்று பிளான் பண்ணினோம். ஏற்கனவே சென்னையில் ஹனிமூனுக்காக நாங்கள் இருவரும் என் ப்ரெண்ட் ரவியின் சலூனில் கொஞ்சமாக எங்களை அழகுபடுத்தி இருந்தோம். 



தீபாவுக்கு ரவியின் அஸிஸ்டெண்ட் லாவண்யா, சுசி இருவரும் சேர்ந்து ஒரு நியூ டிசைன் அண்டர்கட் ஹேர் கட் பண்ணி விட்டு இருந்தார்கள். ஆனால் அது எங்கள் இருவரின் வீட்டிலும் தெரியாமல் மறைத்து விட்டு கோவா கிளம்பினோம். கோவா வந்ததும் என்னுடைய கிளைண்ட் எங்களை ஏர்போர்ட்டில் பிக்கப் செய்து bay 15 resort, ரிசார்ட்டில் தங்க வைத்தனர். அதன் பின் இருவரும் மாலை வரை ரெஸ்ட் எடுத்து விட்டு கிளைண்ட் அரெஞ்ச் செய்து இருந்த பார்ட்டிக்கு சென்றோம். இரவு முழுவதும் பார்ட்டியில் கொண்டாடி விட்டு லேட் நைட் தான் ரூமிற்க்கு தூங்க சென்றோம்.


அடுத்த நாள் மங்குஷி டெம்பிள் போய் விட்டு வந்து மதியம் லஞ்ச் முடித்து விட்டு,கிளம்பி கேத்ட்ரில் சர்ச் பார்த்து விட்டு அப்படியே அன்று இரவு அர்போரா நைட் மார்க்கெட் சுற்றி பார்த்தோம். அங்கு தான் தீபா நிறைய பர்சேஸ் செய்தாள். இரவு மறுபடியும் டிஸ்கோதே சென்று ஆடிப்பாடி களைத்து விட்டு வந்து ரூமில் ஜாலியாக இருவரும் இருந்தோம்.

அடுத்த நாள் காலை எனக்கு ஒரு பிஸினஸ் மீட் இருக்க, தீபாவை ரூமில் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு நான் மீட்டிங் சென்றேன். மதியம் ரூமுக்கு வந்து தீபாவை அழைத்துக் கொண்டு லஞ்ச் முடித்து விட்டு Casino cruise சொகுசு கப்பலுக்கு சென்றோம். ரொம்பவே அழகாக இருந்தது அந்த கப்பல். கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தில் வரும் அந்த பெரிய கப்பல் தான் நாங்கள் போனது.

அடுத்த நாள் காலை ரொம்ப லேட்டாக தான் எழுந்தோம். காலையில் எழுந்து எங்கள் கைட் அருகில் இருந்த ஒரு சின்ன வாட்டர் பால்ஸ் போகலாம் என்று புரோகிராம் சொல்ல நாங்களும் ரெடியாகி கிளம்பினோம். அங்கு சென்றதும் கொஞ்சம் கூட்டம் அதிகமாக தான் இருந்தது. அதனால் பால்ஸில் தீபா குளிக்க வெட்கப்பட, பின் நான் மட்டும் குளித்து விட்டு வந்தேன்.


கோவா வந்து விட்டு, பீச்சில் இன்னும் நாங்கள் குளிக்காமல் இருந்தோம். எங்களுடன் எப்போதும் கைட் ஒருவர் கூடவே இருந்ததால் அது தீபாவுக்கு அசவுகரியமாக இருந்தது. அதனால் நான் அன்று மாலை ஒரு பிரைவேட் பீச்க்கு அழைத்து செல்ல ஆசைப்பட்டு, தனியாக கைடிடம் கேட்க, அவரும் எல்லா ஏற்பாடுகளும் சொல்லி விட்டு கடைசி நேரத்தில் வராமல் கழண்டு கொண்டார்.

அன்று மாலை நானும், தீபாவும் மட்டும் பைக்கில் அந்த பீச்சுக்கு சென்றோம். கைட் சொன்னது போல பிரைவேட் பீச் தான் என்றாலும் ஒரு சில ஹனிமூன் தம்பதிகள் அங்கு எங்களுக்கு முன்பாக விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆனால் எல்லோருமே வெளி நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் எங்களை வித்தியாசமாக பார்க்காதது தீபாவுக்கு நிம்மதியாக இருந்தது.

தீபாவும் கூச்சபடாமல், நம்ம ஊர்க்காரர்கள் யாரும் இல்லாத தைரியத்தில் பிகினியில் முதல் முறையாக பீச்சில் குளித்தாள். இருவரும் ஜாலியாக கடலில் விளையாடினோம்.நான் தீபாவை கடலின் ஆழமான பகுதிக்குள் கூட்டி போய் அவளிடம் சில்மிஷங்கள் செய்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாடி கொண்டு கடலில் இருந்து வெளியே வந்தோம்.

சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு அந்த இடத்தை சுற்றி பார்க்கலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். அடுத்த சில நிமிடங்களில் ஒரு சின்ன ரிசார்ட் தென்பட்டது. அந்த ரிசார்ட்க்கு சொந்தமான பிரைவேட் பீச் தான் இது. அப்போது அங்கு ஒரு டிவி புரோகிராம் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அதில் ஆங்கர் சொல்லும் செயலை சரியாக செய்தால் காஸ்ட்லியான கிப்ட் தந்து கொண்டு இருந்தனர்.

சில பெண்கள் ஆங்கர் சொன்ன  விஷயத்தை சரியாக செய்து பரிசுகள் வாங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது தீபாவை பார்த்த ஆங்கர் அவளை கூப்பிட, தீபா என்னை பார்க்க, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போக சொன்னேன். 

ஆங்கர் தீபாவிடம் சில பொதுவான கேள்விகள் கேட்க, தீபா சரியாக பதில் சொன்னாள். அதன் பின் தீபாவிற்கான போட்டிகள் ஆரம்பம் ஆனது. ஏற்கனவே போட்டியில் வெற்றி பெற்ற ஒரு வெளி நாட்டை சேர்ந்த பெண்ணையும், தீபாவையும் போட்டியிட வைத்தான். 

ஒரு சின்ன ஓட்ட பந்தயம் தான் அது. வெளி நாட்டு பெண் ஒருத்தி தீபாவுடன் போட்டியிட, பந்தயம் தொடங்கியது. தீபா தான் அந்த பெண்ணை விட வேகமாக ஓடினாள். ஒரு எல்லையை தொட்டுக் கொண்டு திரும்பி வரும் போது புதை மணலில் கால் இடறி, தலை குப்புற தீபா விழ, அந்த பெண் தீபாவை முந்திக் கொண்டு முதலாவதாக வந்தாள்.
தீபா துரதிர்ஷ்டவசமாக போட்டியில் தோற்றுவிட்டாள். பின் தீபாவிற்கான பனிஷ்மெண்ட் என்ன என்று ஒரு பவுலில் போட்டு இருந்த சீட்டை எடுக்க சொல்ல, தீபாவே அதை எடுத்து படித்தாள்.

"போட்டியில் தோற்ற நீங்கள் உங்கள் தலை முடியை மொட்டை அடித்து வெற்றி பெற்றவருக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டும்" என்று இருந்தது. அதை சத்தமாக எல்லோருக்கும் கேட்குமாறு படித்த தீபாவும், அதை கேட்ட நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். 

நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், ஆங்கர் ரிசார்ட்டின் வெளியே ஒரு ஸ்டூலை போட்டு விட்டு அதில் தீபாவை உட்கார சொல்ல, தீபாவும் அழுது கொண்டே அந்த ஸ்டூலில் உட்கார, அங்கு இருந்த ஒரு நபர் தான் வைத்து இருந்த ஒரு க்ளிப்பரை எடுத்து கொண்டு வந்தான்.

தீபா தொடை வரை இருந்த ஒரு சின்ன ஸ்கர்ட்டும், மேலே ப்ரா போன்ற ஒரு டாப்ஸூம் அணிந்து கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்து இருந்தாள். க்ளிப்பர் கொண்டு வந்தவன் தீபாவின் அடர்ந்த பின்னல் போட்டு இருந்த முடியை பிரித்து விட்டு கைகளால் கோதிவிட்டான். அதன் பின் க்ளிப்பர் கொண்டு தீபாவின் முன் நெற்றியில் இருந்து பின்னோக்கி கோடு போல இழுக்க, தீபாவின் அடர்த்தியான முடி கொத்தாக தீபாவின் பின்னால் விழுந்தது.


பின் வேகமாக தீபாவின் மொத்த முடியையும் க்ளிப்பர் கொண்டு கொத்து கொத்தாக சிரைத்து விட்டான். அதை பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாள் போட்டியில் வெற்றி பெற்றவள்.  மொட்டை அடித்த பகுதி முழுவதும் கருத்த நிறமாக சொரசொரன்னு இருந்தது. அதை தன் கையால் தடவி பார்த்த அந்த பெண் ஆசையாக தடவிக் கொண்டே இருந்தாள்.

ஹாரி, ப்ளீஸ் ஷேவ் மோர் ஸ்மூத்...ஐ வாண்ட் ஸ்மூத்தி பால்ட் ஹெட் என்று ஆங்கிலத்தில் சொல்ல, அவனும் தன் பேக்கில் வைத்து இருந்த ஒரு இம்போர்ட்டட் ஷேவிங் க்ரீம் எடுத்து தீபாவின் தலையில் தடவினான். அதன்பின் ரேசரால் மிகவும் பொறுமையாக தீபாவின் முடியை மொட்டை அடித்தான். 

தீபாவின் மொட்டை மண்டையை பக்கத்தில் நின்று ஆசையாக பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்த பெண். சில நிமிடங்களில் தீபா மொட்டை தமிழச்சி ஆனாள். தீபாவின் முடி மொத்தமும் எடுத்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு ஒரு கவரில் வைத்துக் கொண்டாள்.

தீபா தன்  முடியை இழந்த சோகத்தில் அழுது கொண்டு இருக்க, அங்கு சுற்றி இருந்த அனைவரும் தீபாவுக்கு ஆறுதல் சொல்லி, அவளுடைய முடி கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு விக் செய்ய தானமாக தான் கொடுக்க போவதாக கூறினார்கள்.

அதன் பின் அந்த  போட்டியை நடத்திய ஆங்கர் தன்னுடைய முடியை மொட்டை அடித்து தானமாக கொடுத்து உதவிய தீபாவுக்கு தான் உண்மையாக முதல் பரிசு என்று அறிவிக்க, எல்லோரும் உற்சாகத்துடன் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீபாவுக்கு முதல் பரிசாக 10 லட்ச ரூபாய் செக் கொடுக்க, நாங்கள் இருவருமே ஆனந்த அதிர்ச்சியுடன் அதை பெற்றுக் கொண்டு ஹனிமூன் டூர் முடித்து விட்டு வந்து சேர்ந்தோம்.


எங்கள் இருவரின் வீட்டிலும் தீபாவின் முடி இல்லாத மொட்டை தலையை பார்த்ததும், கண்டபடி திட்டினர். ஆனால் நடந்ததை சொன்னதும் எல்லோரும் புரிந்து கொண்டனர். அதன் பின் மூன்று மாதங்கள் வரை தீபா முடியை எதுவும் பண்ணவில்லை. 



மூன்று மாதங்கள் கழித்து தீபாவே பார்லருக்கு சென்று தன் முடியை வெட்டிக் கொள்வாள்கள். அதன் பின் தீபா தன்னுடைய முடியை நீளமான அடர்ந்த முடியாக வளர்க்கவே இல்லை.