Saturday 22 May 2021

காதல் கணவனுக்காக மொட்டை அடித்த நடிகை


காதல் கணவனுக்காக மொட்டை அடித்த நடிகை



90s ல ரொம்ப ஹோம்லியான, பேமஸான நடிகை சீதா. சில படங்கள் நடித்ததுமே பெரிய ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்களில் நடித்தவர். ஹீரோவைக் காதலிக்குக் கேரக்டர்களில் நடித்த நடிகைகளுக்கு மத்தியில், ஹீரோவுக்குச் சமமான, அல்லது ரவுடித்தனம் செய்யும் ஹீரோவைத் திருத்துவது மாதிரியான கேரக்டர்களில் நடித்தவர் நடிகை சீதா.




தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்த பலர் தன்னுடன் நடித்த நடிகைகளைக் காதலிக்கத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்களா என்பது தான் கேள்விக்குறி.

அப்படி நடிகை சீதாவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் பார்த்திபனை, சினிமாவில் நல்ல நிலைமையில் இருக்கும் போதே நடிகர், இயக்குனர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தான் இயக்கிய முதல் படமான புதிய பாதையிலேயே நடிகை சீதாவுடன் ஜோடியாக நடித்த பார்த்திபன், சீதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

ஆனால் பார்த்திபன், சீதா இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலங்களில் நடிகை சீதா, பார்த்திபனுக்காகத் தன் முடியை மொட்டை அடித்துக் கொண்டார் என்ற செய்தியை நடிகர் பார்த்திபனின் குரு இயக்குனர் பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறினார். 






ஒரு முறை நடிகர் பார்த்திபனுக்கு விக்கல் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க, பல மருத்துவ சிகிச்சைகள் எடுத்தும் விக்கல் நிற்கவில்லை. அதனால் பயந்து போன நடிகை சீதா தன் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு தன் முடியை மொட்டை அடித்துக் கொண்டார். 



அதன்பின் ஆன சந்திப்பில் பாக்யராஜ் நடிகை சீதாவை மொட்டைத் தலையுடன் பார்த்து அதிர்ச்சியாகி என்ன என்று விபரம் கேட்க, நடிகர் பார்த்திபன் நடந்ததை சொல்ல, பாக்யராஜ் நடிகை சீதாவின் நல்ல எண்ணத்தைப் பாராட்டியுள்ளார்.

                                                   

இப்படி ஒருவருக்கொருவர் காதலுடன் இருந்த தம்பதிகள் பிரிந்து வாழ்வதை நினைத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.









No comments:

Post a Comment