Saturday 9 July 2022

பிருந்தாவின் அடங்காத ஆசை - முதலாம் பாகம்

பிருந்தா +1 படிக்குற ரொம்ப அழகனா தமிழ் பொண்ணு... அவள் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். ரொம்ப பணக்கார குடும்பம். அப்பா பேரு பழனி முருகனும் அம்மா பேரு செல்வி. அவங்களுக்கு ஒரே பொண்ணு தான்... பிருந்தாவின் குடும்பம் ரொம்ப படித்த, நவ, நாகரிகமான குடும்பம்.. குழந்தையாக இருக்கும் போது மூன்று மொட்டைகள் மட்டுமே அடிப்பார்கள்.

பிருந்தா பிறந்தவுடன் அவளுக்கும் மூன்று முறை மொட்டை அடித்து இருக்கிறார்கள். ஆனால் அவளுடைய இரண்டு வயது முடிவதற்க்குள் மூன்று மொட்டையும் அடித்து முடித்து விட்டார்கள்.


பிருந்தா தன் முடியை அதிக வளர விடமாட்டாள். நடு முதுகு வரை மட்டும் தான் வளர விட்டு, அடிக்கடி ட்ரிம் செய்து விடுவாள். ஆனால் நல்ல அடர்த்தியான முடி. அடர்ந்த கருப்பு நிறம். ரொம்ப ஸ்டைலா அழகா கட் பண்ணி இருப்பாள். அடிக்கடி எண்ணெய் தடவி, எப்போதும் தூக்கி சீவி விட்டு, போனிடெய்ல் போட்டுக் கொள்வாள். மாலை வீட்டுக்கு வந்ததும் எண்ணெய் வைத்து நல்லா மசாஜ் செய்வாள். தன் முடியை அதிக அக்கறை எடுத்து கவனமாக பராமரிப்பாள். அவளுக்கு மொட்டை மேல் துளியும் ஆர்வம் இல்லை. சொல்ல போனால் அதிகமாக மொட்டையை பற்றி கேள்விப் பட்டதும் இல்லை.


                               பிருந்தா

இப்படி மொட்டை பற்றி எதுவும் தெரியாமல் இருந்த பிருந்தாவின் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது, பிருந்தா தான் கதையின் நாயகி, அவளுக்கு தான் மொட்டை, ஆனா எப்படி, குஷி படத்தில் S.J.சூர்யா பேசுவது போல இருக்கோ, சரி வாங்க என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம்.

பிருந்தா +1 முடிச்சுது 3 வாரம் லீவு விட்டு இருந்தார்கள். அடுத்து +2வகுப்புகள் விரைவில் ஆரம்பம் ஆகும். அப்போது பிருந்தாவின் ஸ்கூலில் NSS கேம்ப் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்... பிருந்தாவும் அதில் ஜாயின் பண்ணி இருந்தாள்.

ஆனால் அவளுடைய வீட்டில் வேண்டாம் என்று சொல்ல, ஆனால் பிருந்தா அவர்கள் சொல்வதை கேட்கவில்லை. 

NSS முகாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருக்கும் ஒரு தொலை தூர கிராமத்தில். இரு நாட்கள் கழித்து அந்த கிராமத்திற்க்கு எல்லாரும் போய் சேர்ந்தார்கள்.

NSS ஒர்க் ஸ்டார்ட் பண்ண... மாணவர்கள் தங்க கிராமத்தின் சார்பில் பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். இட பற்றாக்குறையால் அந்த கிராமத்து மக்கள் வீட்டிலும் சில மாணவர்கள் தங்கி இருந்தார்கள்...பிருந்தா தங்கியது கிராமத்து வீட்டில்

அந்த வீட்டுக்கு சொந்தகாரர் பெயர் கருப்பசாமி.. அவரோட பொண்ணு பேரு முத்துமாரி...

முத்துமாரி கிராமத்தில் வளர்ந்த பொண்ணு... ரொம்ப படிக்கல, கிராமத்தில் வயல் வேலைக்கு போவாள். கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் களையான முகம். அவளுக்கு நல்ல கருகருன்னு அடர்த்தியான முடி இடுப்பு வரைக்கும் இருந்துச்சு.



முத்துமாரி எப்போதும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் வைத்து, வழிச்சு சீவி, கனகாம்பரம் பூ வைத்து ஜடை பின்னி இருப்பாள்.

இரண்டே நாட்களில் பிருந்தா முத்துமாரியுடன் பழகிக் கொண்டாள். அன்று இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வாக்கிங் போக, இரவு எல்லா வீடும் சாத்தி இருக்க ஊரே அமைதியாக இருந்தது.

அக்கா, நாளைக்கு கோவில்ல என்ன விஷேஷம்... நிறைய பேர் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க...

அதுவா, நாளை கோவில்ல ஒரு திருவிழா, மூணு மாசத்திற்க்கு ஒரு முறை கோவில்ல பூஜை பண்ணி சாமி கும்பிடுவாங்க...

அப்படியா அக்கா...

ஆமா பிருந்தா, நாளைக்கு கோவில்ல மூணு ஊரில் இருக்கும் எல்லா மக்களும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி கும்பிடுவாங்க...

சரி அக்கா...

நாளைக்கு நாமளும் போகலாம், எனக்கும் ஒரு வேண்டுதல் இருக்கு...

அப்படியா, என்ன வேண்டுதல்‌ அக்கா....


என் அப்பாவுக்கு ரொம்ப நாளா உடம்புக்கு முடியாம இருந்துச்சு, நாங்களும் நிறைய டாக்டரை பார்த்தும் சரியாகல... அப்புறம்‌ தான் சாமிக்கு முடியை காணிக்கையா குடுக்குறேன்னு வேண்டிகிட்டேன்... அடுத்த சில வாரங்களிலேயே அப்பா எந்த பிரச்சனையும் இல்லாம குணமாயிட்டார்‌... அதான் நான் வேண்டிகிட்ட மாதிரி நாளைக்கு மொட்டை அடிக்க போறேன்...

என்னக்கா சொல்றீங்க... இவ்ளோ முடியை வச்சுட்டு மொட்டை அடிக்க போறீங்களா?

பிருந்தா நீ சிட்டில வளர்ந்த பொண்ணு... அதான் உனக்கு தெரியல... நீ நாளைக்கு கோவில்ல பாரு... என்ன மாதிரி பொண்ணுக, கல்யாணமானவங்க, ஆம்பளைகன்னு நிறைய பேரு மொட்டை போடுவாங்க...



உங்களுக்கு இவ்ளோ நீளமான முடியை எப்படி தான் இழக்க மனசு வந்ததோ?

எங்களுக்கு அழகை விட, சாமி தான் முக்கியம்... சரி வா போய் தூங்கலாம்... நாளை காலைல நேரமா எழணும்.. முத்துமாரி தூங்க, பிருந்தா தூக்கம் வராமல் ரொம்ப நேரம் விழித்துக் கொண்டு இருந்தாள்.

பிருந்தா இதுவரை ஒரு இளம்பெண் மொட்டை அடித்து பார்த்தது இல்லை. கிளாஸில் ஒரு மாணவன் மொட்டை அடித்து கொண்டு வந்ததை தான் பார்த்து இருக்கிறாள். அதனால் முத்துமாரி மொட்டை அடிப்பதை நாளை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தூங்கினாள்.

அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு ரெடியானார்கள். முத்துமாரி தலைக்கு குளித்து ஜடை பின்னி, கனகாம்பரம்‌ பூ வைத்து கொண்டாள். மஞ்சள் கலரில் சேலைக் கட்டிக் கொண்டு வர, பிருந்தா உடன் சென்றாள். கோவிலில் எல்லா வயதிலும் ஆண்கள் மொட்டை அடித்து கொண்டு இருக்க, சிறு குழந்தைகள், சிறு வயது பெண்கள், கல்யாணமான அம்மாக்கள், பாட்டிகள் என எல்லோரும் மொட்டை அடித்து இருந்ததை பார்த்தாள் பிருந்தா. ஆனால் 15 முதல் 35 வயதுள்ள பெண்கள் யாரும் மொட்டை போட்டு இருந்ததை பிருந்தா பார்க்கவில்லை.

பிருந்தா முத்துமாரியின் தலையில்‌ நிறைய பூ இருப்பதை பார்த்து அதை எடுக்கவா என்று கேட்க, வேண்டாம் என்றாள் முத்துமாரி. 

முத்துமாரி ஒரு நாவிதன் முன் போய் நிற்க, அப்போது ஒரு வயதான தாத்தா மொட்டை அடித்து முடித்து விட்டு எழ, முத்துமாரி அங்கு இருந்த முடியை ஒதுக்கி விட்டு நாவிதன் முன் உட்கார்ந்தாள்.பிருந்தா முதல் முறையாக ஒரு பெண் மொட்டை அடிக்க போவதை பார்க்கும் ஆவலுடன் அருகில் நின்று கொண்டாள்.

நாவிதன் முத்துமாரியின் தலையில் தண்ணீரை அள்ளி தெளித்து முடி முழுவதும் ஈரமாக மசாஜ் செய்ய, அவளுடைய தலையில் இருந்து முடி முழுவதும் முன்‌பக்கமாக விழ, அதில் இருந்து தண்ணீர் சொட்டியதை பார்க்க பிருந்தாவிற்க்கு என்னவோ போல இருந்தது.

நாவிதன் முத்துமாரியின் தலையில் நல்லா மசாஜ் பண்ணிவிட்டு சவரக்கத்தியை வைத்து முன்னால்  இருந்து மழிக்க ஆரம்பித்தார்...

கொஞ்சம் கொஞ்சமா மண்டை தெரிய தெரிய பிருந்தாவுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. வியர்வை அரும்ப...  பெருமூச்சு விட்டுக் கொண்டே முத்துமாரியின் மொட்டையை பார்த்து கொண்டு இருந்தாள் பிருந்தா.

நாவிதன் முத்துமாரியின் முன் தலை முழுவதும் மழித்து விட்டு, இடது பக்க முடியை மழிக்க, அது அவளுடைய காதுபக்கமாக தொங்கிக் கொண்டு இருக்க, ஜடையில் பின்னி இருந்த பூ மடியின் மேல் விழுந்தது. முத்துமாரி சைடு வழியாக பிருந்தாவை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.


ஐந்து நிமிடம் கழித்து முத்துமாரியின் தலை மொழுமொழுவென மழித்து எடுக்கப்பட்டது. பின் முத்துமாரி அவளுடைய மொட்டை தலையை தடவிக் கொண்டே எழுந்தாள்.

பிருந்தா ஓடி போய் முத்துமாரியின் மொட்டை தலையை தொட்டு பார்த்தாள்... அப்போது அவளுக்கு ஒரு ஃபீல் வந்தது. அதை வார்த்தைகளால் பிருந்தாவால் விளக்க முடியவில்லை.

பிருந்தாவின் மனது படபடனு அடிக்க... இவ்ளோ நல்லா ஃபீல் குடுக்குற இந்த மொட்டையை நம்ம இவ்ளோ நாள் பார்க்கவே இல்லையேனு நினைத்தாள் பிருந்தா.

அடுத்த இரு நாட்கள் பிருந்தா அடிக்கடி முத்துமாரியின் மொட்டை தலையை தடவி கொண்டே இருந்தாள். மொட்டை போடும் போது முத்துமாரியின் மனநிலை, அவளுடைய உணர்வுகளை பற்றி பேசினாள் பிருந்தா. 2 நாள் கழித்து NSS கேம்ப் முடிந்து பிருந்தாவின் டீம் அந்த கிராமத்தில் இருந்து கிளம்பியது.

பிருந்தாவுக்கு மொட்டை தலை ரொம்ப பிடித்தது. எந்த பெண்ணாவதுமொட்டை போடுவதை பார்க்க வேண்டும், யாருக்காச்சும் முடி வெட்டுவதை பார்க்கணும், மொட்டை பத்தி பேசணும், மொட்டை அடிக்கணும் என்று இத்தனை நாள் இல்லாத அளவிற்க்கு ரொம்ப அடங்காத ஆசை பிருந்தா மனதில் வந்தது.

ஆனால் பிருந்தா ரொம்ப மாடர்ன் பொண்ணு.. அதனால அவளுக்கே மொட்டை அடிச்சுக்கணும் என்று அவள் நினைக்கவில்லை... பிருந்தாவிற்க்கு அவளுடைய முடி ரொம்ப பிடிக்கும்.. அதனால் மத்தவங்களுக்கு மொட்டை போடணும்னு என்று  ஆசைபட்டாலே தவிர தன்னுடைய முடியை மொட்டை அடித்து பாக்கணும்னு அவள் நினைக்கவே இல்லை.


NSS கேம்ப் முடிந்து வீட்டுக்கு வந்து அடுத்த நாள் அவங்க அம்மா கிட்ட மொட்டை பத்தி பேசினாள் பிருந்தா...

அம்மா , உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்


என்ன சொல்லு பிருந்தா?


நீங்க எப்போயாச்சும் மொட்டை அடிச்சுருக்கீங்களா ? 


இல்லையே... ஏன் திடீர்னு இப்படி கேக்குற?


இல்லம்மா, நாங்க கேம்ப் போனப்போ அந்த கிராமத்தில ஒரு கோவில்ல நிறைய கேர்ள்ஸ் மொட்டை போட்டதைட பார்த்தேன்.. நான் இதுவரை அப்படி வயசு பொண்ணுகள்ல இருந்து பாட்டி வரை எல்லோரும் மொட்டை அடிச்சு பார்த்ததே இல்லை.. நம்ம ஃபேமிலில கூட அப்படி பெண்கள் யாரும் மொட்டை அடிச்சது இல்ல.. அதான் கேட்டேன்.


நாம சிட்டில இருக்கோம்.. இப்ப எல்லாம் மாடர்ன் ஆயிருச்சு.. அதான் இப்ப யாரும் அடிக்குறது இல்லை.. என் காலத்துல நா 7வது படிக்குறப்போ குடும்பத்தோட திருப்பதில மொட்டை அடிச்சோம்.. நான், உன் தாத்தா, உன் பாட்டி, உன் அப்பா, எல்லாரும்.. அது அப்றம் யாரும் இல்லை. .. உன் அப்பா கூட எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மொட்டை போட்டதே இல்லை...


அப்படியா.. ம்ம் சரி அம்மா..


அடுத்த சில வருடங்களில் பிருந்தா +2 சேர்ந்து நல்லா படிச்சு ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ண... வீட்டுல இருந்து படிச்சா சரி வராதுன்னு சொல்லி ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சுட்டு இருந்தாள்.






No comments:

Post a Comment