Thursday 18 August 2022

பெரிய குடும்பம் - இரண்டாம் பாகம்

அடுத்த நாள் காலை பொழுது விடிய... காலேஜ்ல கல்ச்சுரல்ஸ் இருந்ததால காலையில் ஏழு மணிக்கு  ஆர்த்தி ரெடி ஆகி காலேஜ் கிளம்ப மாடியில் இருந்து கீழே வந்தாள். அப்போ அங்கே வந்த ஷாலினி அம்மா ஆர்த்தியை தடுத்து நிறுத்தினாள்.

ஆர்த்தி ஒரு நிமிஷம் நில்லு... எங்க போற காலையிலேயே?

பாட்டி, இன்னிக்கு காலேஜ்ல ஒரு விழா இருக்கு... அதுக்காக தான் சீக்கிரம் கிளம்பி இருக்கேன் இன்னிக்கு... அல்ரெடி டைம் ஆகிட்டு நான் கிளம்பனும் பாட்டி, நான் வரேன்...

நில்லுன்னு சொல்லிட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கே போறேன்னு சொல்ற?

பாட்டி புரிஞ்சிகோங்க... எனக்கு டைம் ஆகிடுச்சு... எனக்காக என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க...



நீ இன்னிக்கு எங்கேயும் போக வேண்டாம்... வீட்டுல பூஜை இருக்கு... அதனால இன்னிக்கு லீவ் போட்டுட்டு வீட்டுலயே இரு.

பூஜை எல்லாம் பெரியவங்க நீங்க பார்த்துக்கோங்க... நான் எதுக்கு பாட்டி? இன்னைக்கு நான் காலேஜ் போயே ஆகணும் பாட்டி...

இருவரும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டு இருக்க... அங்கே ஷாலினி வந்தாள்.

பாருங்க பெரியம்மா... பாட்டி இன்னிக்கு காலேஜ் போக வேண்டாம்...ஏதோ பூஜை இருக்குனு சொல்றாங்க. நான் இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு போன வாரமே உங்ககிட்ட சொன்னனே...

ஆர்த்தி ஷட்அப்... என்ன பெரியவங்களை மரியாதை இல்லாம எதிர்த்து பேசிட்டு இருக்க. இதான் நா. உனக்கு சொல்லி குடுத்து இருக்கேனா? பாட்டி தான் பூஜை இருக்கு... வெளியில போக வேணாம்னு சொல்றாங்க இல்ல... அப்புறம் என்ன அவங்களை எதிர்த்து பேசிகிட்டு இருக்க... மேல போ ஒழுங்கா.

சரி பெரியம்மா....

ஆர்த்தி திரும்பவும் மாடிக்கு போக...

அப்புறம் ஆர்த்தி... ஒரு நிமிஷம். ப்ரீத்தி, ஸ்ருதி ரெண்டு பேருகிட்டயும் சொல்லிடு... இன்னிக்கு வீட்ல பூஜை இருக்கு... அதனால அவங்களும் வெளியே போக கூடாதுன்னு சொல்லிடு...

ஆர்த்தி சரி பெரியம்மா...  சொல்லிவிட்டு மாடிக்கு போனாள்.

பார்த்தியா... உன் செல்ல பொண்ணு ஆர்த்தி... எவ்ளோ அழகா எதிர்த்து பேசினான்னு... என்னமோ பெருசா பேசுன நேத்து. இனிமேலாவது நான் சொல்ற படி கேளு ஷாலினி.

சரிங்கம்மா... அந்த மொட்டை போடுற ஆளு எப்போ வருவான்...

பதினொரு மணிக்கு வருவான் ஷாலினி...

சரிம்மா... ஆர்த்தி ரூம்லயே வச்சி மூணு பேருக்கும் மொட்டை அடிக்க சொல்லிடலாமா?

பைத்தியகாரி... வீட்டுக்குள்ள யாராவது பொண்ணுக முடியை மொட்டை அடிப்பாங்களா?

அப்போ எங்கே வைத்து மொட்டை அடிக்கிறது?

இதோ இந்த திண்ணை தான் இவ்ளோ பெருசா கட்டி போட்டு வச்சு இருக்கியே... அங்க வச்சு மொட்டை அடிக்க சொல்லுவோம்.



சரிம்மா... அப்போ நான் வாட்ச்மேன் வர சொல்லி... மொட்டை அடிச்சி முடிக்கிற வரைக்கும் யாரையும் உள்ள விடக் கூடாதுன்னு சொல்லி வைக்கிறேன்...

அதுவும் நல்லது தான்... இப்பவே சொல்லிடு...

அம்மா எனக்கு இன்னொரு விஷயம் தோணுது அம்மா...

சொல்லு ஷாலினி என்ன?

நம்ம வினய் பொண்டாட்டி ஜீவிதா இருக்கா... அவளுக்கும் சேர்த்து மொட்டை போட்டு விட்டுடலாம். அவள் ஜாதகத்தை ஒரு ஜோஷியர் கிட்ட பார்க்கும் போது ஜீவிதாக்கு போன ஜென்மம் சாபம் ஏதோ இருக்கு... அதனால அவளுக்கு மொட்டை அடிச்சி அவளோட ஜடையை ஆத்துல விட்டால்  தான், அந்த சாபம் போய் குழந்தை பிறக்கும்னு சொன்னார். இந்த பரிகாரத்தை செய்ய இவ்ளோ நாள் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிடுச்சு. இன்னிக்கு தான் நாசுவனே வீட்டுக்கு வரான்... அவனை வச்சு ஜீவிதாக்கும் மொட்டை அடிச்சு... இந்த பரிகாரத்தை இன்னிக்கே முடிச்சிடலாம்னு பார்க்குறேன்.

நல்லதா போச்சு ஷாலினி... இன்னிக்கே முடிச்சு விடு... அப்புறம் இதுக்காக தனியா ஒரு நாள் மெனக்கெடணும். ஜீவிதாவை கூப்பிட்டு அவள்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடு... தலைக்கு குளிச்சு ரெடியா இருக்க சொல்லு... ஆறுமுகம் வந்தவுடனே முதல் மொட்டையா அவளை மொட்டை போட்டுக்க சொல்லி விடு...

இப்போ ஷாலினி ஜீவிதாவின் ரூமுக்கு போய் கதவை தட்ட ஜீவிதா திறக்கிறாள்.

வாங்க அத்தை...

ஜீவிதா உனக்கு ஒரு இடத்துல குழந்தைக்காக ஜோசியம் பார்த்தோம் நியாபகம் இருக்கா?

ஆமா அத்தை... அவர் கூட என்ன மொட்டை போடணும்னு சொன்னாரே. எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை அத்தை. வினய் கூட அந்த விஷயத்தை அப்படியே விட சொல்லிட்டாரே.

அப்படி சொல்லாதே ஜீவிதா. அவங்க அப்படி சொன்னாங்கனா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். மொட்டை போட ஆளை வர சொல்லி இருக்கேன்.. தலைக்கு குளிச்சிட்டு மேஜை மேலே பூ வச்சிருக்கேன்... தலை நிறைய பூவை எடுத்து வச்சு ரெடியா இரு... பதினொரு மணிக்கு எல்லாம் பார்பர் வந்துடுவான். இன்னிக்கே மொட்டை அடிச்சு அந்த பரிகாரத்தை இன்னிக்கே முடிச்சிடலாம்.

ஆனா அத்தை... எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல... எனக்கு இருபத்தி நாலு வயசு தானே ஆகுது... குழந்தை பெத்துக்கலாம்... இன்னும் நிறையா நேரம் இருக்கே... இந்த பரிகாரம் மொட்டை எல்லாம் வேணாம் அத்தை.

ஜீவிதா நீ பணக்காரி இல்லேனாலும், எங்க ஸ்டேட்டஸ்க்கு உன் குடும்பம் இல்லேனாலும், உன்னை இவ்ளோ பெரிய மாளிகைக்கு மருமகளா ஆக்குனது நான். நான் சொல்றதை மட்டும் நீ கேட்டு நடந்தா போதும்... எனக்கு அறிவுரை சொல்லாதே.  சீக்கிரம் போய் குளிச்சிட்டு ரெடியா இரு.

மன்னிச்சிடுங்க அத்தை. நான் போய் ரெடி ஆகிட்டு வரேன்...

குட்... நான் சொல்லுவது நம்ம குடும்ப விருத்திக்கு தான்... புரிஞ்சுக்கோ ஜீவிதா... ஷாலினி சொல்லி விட்டு அங்கிருந்து ஹாலுக்கு வந்தாள்.

என்ன சொல்றா உன் மருமகள்?

அவள் என்ன சொல்லுவா... ரெடி ஆக சொல்லிட்டு வந்துருக்கேன்...

அந்த நேரம் பார்த்து ஷாலினி அம்மாவின் போன் அடிக்க... எடுத்து பேசுறாங்க.


ஹலோ யாரு?

அம்மா நான் தான் ஆறுமுகம் பேசுறேன். மொட்டை அடிக்க வர சொல்லி இருந்திங்களே.

ஆமாம் பா. மணி ஆக போகுது... இன்னும் என்ன நீ வரலையே...

அம்மா உங்க தெருவுல தான் அம்மா இருக்கேன். வள்ளுவர் தெரு முனைல தான் இருக்கேன்மா. எங்கம்மா இருக்கு உங்க வீடு.

அப்படியே நேரா வா தெரு முனையில இருந்து ஏழாவதாக இருக்கிற பங்களா வீடு. வீட்டுக்கு வெளிய பெரிய கார் ஒண்ணு நிக்கும் அந்த வீடு தான்.

சரிமா நான் வந்துடறேன்.

போன் வச்சிட்டாங்க...

ஆறுமுகம் ஒரு வழியா வீட்டை கண்டுபிடித்து அங்கே வந்து சேர்ந்தான். அங்கே இருந்த வாட்ச்மேன் அவனை பார்த்து யாருயா நீ என்ன வேணும் உனக்கு? இங்கெல்லாம் நிற்க கூடாது கிளம்பு கிளம்புனு சொல்ல...

யோவ், போய் இந்த வீட்டு அம்மாகிட்ட ஆறுமுகம் வந்துருக்கேன்னு சொல்லு.

ஆறுமுகமா நீ!... பொண்ணுங்களுக்கு மொட்டை அடிக்க வர சொன்னாங்களே. சரி உள்ள வா... போய் அங்க வாசல்ல நில்லு... நான் போன் பண்ணி அவங்களை வர சொல்லுறேன்... வருவாங்க...

ஆறுமுகம் உள்ள போறான். வாட்ச்மேன் போன் பண்ணி தகவல் சொல்ல உள்ளெருந்து ஷாலினியும் ஷாலினி அம்மாவும் வராங்க.

வாப்பா ஆறுமுகம்  இவ்ளோ லேட்டாவா வருவ...

ஷாலினி வீட்டு வேலைக்காரி சுமதியை கூப்பிட்டு ஆறுமுகத்துக்கு காபி எடுத்துட்டு வர சொல்றாங்க. ஷாலினி அதை பார்த்துட்டு என்னம்மா மொட்டை அடிக்க வந்தவனுக்கு எல்லாம் காபி குடுக்க சொல்றிங்க...

இப்படி எல்லாம் கவனிச்சா தான் நம்ப விஷயம் வெளியில போகாமல் இருக்கும். சரி நீ போய் ஜீவிதாவை வர சொல்லு. அவளுக்கு முதலில் மொட்டை போட்டு விடலாம்.

ஷாலினி சரின்னு சொல்லிட்டு ஜீவிதாவை கூப்பிட்டு வர போறாங்க. அதே சமயம் சுமதி காபி கொண்டு வந்து கொடுக்க, ஆறுமுகம் அதை வாங்கி குடிக்கிறான். அந்த சமயம் அங்கே ஜீவிதா வர. ஷாலினி அம்மா ஆறுமுகத்தை பார்த்து,

இந்த பொண்ணுக்கு முதல்ல மொட்டை போட்டுடுப்பா. ஜீவிதா அப்படி போய் திண்ணை ஓரமா உட்காரு... காப்பியை குடிச்சிட்டு வருவான்.

ஜீவிதா சரின்னு சொல்லிட்டு அந்த பெரிய திண்ணை ஓரமா போய் உட்கார... நல்லா புது புடவை கட்டி தலை நிறையா பூ வச்சு இருந்தாள் ஜீவிதா. ஒரு ரெண்டு நிமிஷத்துல ஆறுமுகம் காப்பியை குடித்து விட்டு ஜீவிதாவின் எதிரில் போய் உட்கார்ந்தான்.

ஆறுமுகம் இப்போ அவன் பையில் இருந்து கத்திரி, சீப்பு, சவரகத்தி எல்லாத்தையும் எடுத்து வெளில வைக்க...

ஆறுமுகம் ஷாலினியை பாஎத்து,

அம்மா கொஞ்சம் ஒரு மக்குல தண்ணி கொண்டு வாங்கம்மா.

ஷாலினி கொண்டு வந்து கொடுக்க...

ஆறுமுகம் ஜீவிதாவை பார்த்து,

அம்மாடி கொஞ்சம் பின்னாடி திரும்பி உட்காரும்மா... ஜடையை அவிழ்க்கனும்.

ஆறுமுகம்... ஜடையை அவிழ்க்க வேண்டாம்... ஜடையோடையே மொட்டை போடுங்க. இது ஒரு பரிகார மொட்டை. மொட்டை போட்டு ஜடையை ஆத்துல விட சொல்லி இருக்காங்க.

அப்போ சரிமா பிரச்சனை இல்ல... ஜடையோடவே மழிச்சிடலாம்னு சொல்லி விட்டு ஆறுமுகம் அந்த மக்குல இருந்த தண்ணிய கையில் எடுத்து நல்லா ஜீவிதா தலையில் ஊற்றி விட்டு தலையில் நல்லா ரெண்டு தட்டு தட்டி முடியை ஈரமாக்கினான். இதே மாதிரி ஒரு ரெண்டு நிமிஷம் தண்ணியை நல்லா போட்டு முடி முழுக்க ஈரம் ஆக்கிவிட்டான். இப்போ அவளுடைய மண்டையை மழிக்க ரெடியாக சவரகக்த்தியை எடுத்து அதில் புது பிளேடு உடைத்து சொருகி விட்டு ஜீவிதாவை பார்த்து ஆரம்பிக்கலாமானு கேட்க அவள் பதில் சொல்வதிற்க்குள் ஷாலினி ஜீவிதாவை பார்த்து நல்லா கண்ணை முடி சாமியை கும்பிடு ஜீவிதானு சொல்லி விட்டு ஆறுமுகத்தை பாத்து நீங்க ஆரம்பிங்கன்னு சொல்றாங்க.


ஆறுமுகம் கத்தியை நெத்தியில் இருந்து பின்னோக்கி ஒரு மழி, மழிக்க கொஞ்சம் முடி மண்டையில் இருந்து பிரிஞ்சு... முன்னாடி தொங்க... தாமதிக்காமல் திரும்ப நெத்தியில்  இருந்து பின்னோக்கி சர சரனு மழிச்சு முன் மண்டை முடியெல்லாம் பின்னாடி சிரைத்து தள்ளினான். ஜீவிதாவோட முன் மண்டை முழுசா மழிக்க பட்டு.. முன் மண்டை முடியெல்லாம் பின் பக்கம் பூ மேலே போய் விழுந்து தொங்கி இருந்தது. 

இப்போது ஜீவிதா மண்டையை வலது பக்கம் திருப்பி... அவளது இடது பக்க நெத்தியில் கத்தியை வைத்து கீழ் நோக்கி ஒரு இழு இழுக்க, கத்தி அப்படியே ஸ்மூத்தாக கிருதாவை சிரைத்து தள்ளினான்.

இன்னும் ஒரு இரண்டு தடவை அந்த கிருதா இருந்த பகுதியையும் கூடவே கன்னத்தில் இருந்த குட்டி முடியையும் மழித்து விட்டு... பின்னர் அவளுடைய காதை மடக்கி... காதுக்கு பின்னால் இருந்த முடியையும் ஒட்ட மழித்தான். இதே மாதிரி ஜீவிதாவின் தலையை இடது பக்கம் திருப்பி வலது பக்க கிருதா முடி, காது மடல் முடினு அதையும் நல்லா மழித்து விட்டார் ஆறுமுகம்.

இப்போது ஜீவிதா பின் மண்டைய வழிக்க அவளை பின்னாடி திரும்பி உட்கார சொன்னார். அவளும் பின்னாடி திரும்பி உட்கார்ந்தாள். இப்போ அவளுடைய பின்மண்டை முடி கொஞ்சம் ஈரம் காய்ந்து போய் இருக்க... ஒரு கை தண்ணியை எடுத்து பின் மண்டையில உள்ள முடி மேலே போட்டு ஈரமாக்கினார். இப்போது திரும்ப கத்தியை எடுத்து பின்னாடி உள்ள முடியை சர சர சரனு மழிக்க ஆரம்பித்தார். முடி அப்படியே வெண்ணை மாதிரி நொடி நேரத்துல மண்டையில் இருந்து பிரிந்து வந்தது.


கொஞ்ச நேரத்தில் ஜீவிதாவின் ஜடை பூவுடன் தொப்புனு தரையில் விழுந்தது. இப்போ ஆறுமுகம் அவளுடைய கழுத்தில் இருந்த பூனை முடியை எல்லாம் நல்லா ஒட்ட மழித்து விட்டார். மொட்டையை பார்த்து திருப்தி இல்லாதவராக திரும்ப ஜீவிதா மொட்டை மண்டையில தண்ணி போட்டு திரும்ப கத்தியை போட்டு நல்லா மழிச்சி விட்டு அவளுடைய மண்டையை மொழு மொழுனு செம ஸ்மூத்தா ஆக்கி விட்டு அப்புறம் அவள் மேலே கிடந்த முடியெல்லாம் எடுத்து கீழ போட்டுட்டு முடிஞ்சது அம்மா... எழுந்திருச்சுகோனு சொல்ல ஜீவிதா நல்லா மழுமழு மொட்டையோட எழுந்தாள். ஆறுமுகம் அவளுடைய மழிக்க பட்டு கீழே கிடந்த ஜடையை எடுத்து ஜீவிதா கையில் கொடுத்தார். அந்த டைம் விஷ்வாவும் அங்கே வர ஜீவிதாவை மொட்டை மண்டையோடு பார்த்த விஷ்வா ஷாலினிய பார்த்து,

என்ன பெரியம்மா அண்ணிக்கு எதுக்கு மொட்டைனு கேட்க.

கையில் மொட்டை அடிக்கப்பட்ட ஜடையோட நின்ற ஜீவிதா விஷ்வாவை பார்த்ததும் தர்மசங்கடம் ஆக இருந்தது அவளுக்கு.


அது ஒரு பரிகாரத்துக்காக உன் அண்ணி மொட்டை போட்டு இருக்கா. சரி அந்த ஜடைய ஆத்துல விடணும் போய் டிரைவரை கார் எடுக்க சொல்லுனு சொல்ல... விஷ்வா அங்க டிரைவரை அழைச்சிட்டு வர ஜடையை ஆத்துல போட ஜீவிதா கார்ல ஏறி போய் விட்டாள்.

ஷாலினி இப்போ விஷ்வாவை போய் ப்ரீத்தியை கூப்பிட்டு வர சொன்னாங்க. விஷ்வாவும் ப்ரீத்தியை கூப்பிட மாடிக்கு போனான். மாடில மூணு தங்கைகளும் ஒண்ணா உர்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க...

ப்ரீத்தி கீழ வா... பெரியம்மா கூப்புடுறாங்க...

பூஜை ஆரம்பிச்சாச்சா அண்ணா சரி அப்போ நாங்களும் வர்றோம். ஆர்த்தி வா போகலாம்...

இல்ல நீங்க எல்லாம் வேணாம். ப்ரீத்தி நீ மட்டும் வானு சொல்லி ப்ரீத்தியை கீழே கூட்டி வந்தான் விஷ்வா.




1 comment: