Tuesday 8 November 2022

சித்ரா - ஐந்தாம் பாகம்

சித்ரா மேலே சென்று பார்க்க... திவ்யா அங்கு தரையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க... திவ்யாவை பார்த்த சித்ராஅதிர்ச்சி அடைந்தாள். திவ்யாவின் நீளமான முடி... முழுவதுமாக மொட்டை அடிக்கப்பட்டு மொழுமொழுவென இருந்தது.


என் முடி போச்சும்மா... மொத்தமா போச்சு... 


என்னடி ஆச்சு... அழமா என்ன நடந்ததுன்னு சொல்லு... 


அந்த பிராடு ஹேர் ஸ்டைலிஸ்ட் தான் இப்படி பண்ணிட்டான்...


என்னடி சொல்ற... அவனா... இவ்ளோ நேரம் கீழ என் கூட பேசிட்டு இருந்தானே... 


திவ்யா சொன்னதை கேட்ட சித்ராவுக்கு குப்பென்று வியர்த்து விட...என் முடியை தொட்டு தடவி பார்த்து அழகா இருக்குன்னு சொன்ன அவனா இப்படி மொட்டை அடித்தது என்று நினைத்தாள் சித்ரா. அந்த சமயத்தில் லட்சுமி திவ்யாவின் சத்தம் கேட்டு மேலே வந்தாள். லட்சுமியை பார்த்த சித்ரா கோவமாக முறைத்தாள்.


 என்ன லட்சுமி அக்கா... இப்படி பண்ணிட்டீங்க... திவ்யாவும் உங்க பொண்ணு மாதிரி தானே... அவளுக்கு போய் இப்படி பண்ணீட்டிங்களே...

என்ன சொல்றே சித்ரா... நீ சொல்ற எதுவும் எனக்கு புரியல...

நாங்க என்னக்கா பண்ணோம் உங்களுக்கு... என் பொண்ணு என்ன பாவம் பண்ணா உங்களுக்கு... அவளை இப்படி மொட்டை அடிச்சு மூலைல உட்கார வச்சுட்டீங்களே...


என்ன சித்ரா... நான் என்ன பண்ணேன்... திவ்யாவுக்கு மொட்டை அடிக்க நான் காரணமா?


ஆமா... நீங்க தான்... உங்களுக்கு தெரிஞ்ச ஹேர் ஸ்டைலிஸ்ட் தான் இப்படி பண்ணி இருக்கான்... 


யாரு அருண்ணா... அவன் அம்மாக்கு உடம்பு சரியில்லை... அதனால அவன் இன்னைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டான்... அதை கூட நான் உனக்கு மெசேஜ் பண்ணேனே பார்க்கல...


லட்சுமி தான் பிளான் பண்ணியது போல பொய் சொல்ல... சித்ரா குழப்பம் அடைந்தாள். ஆனால் இதற்கு காரணம் லட்சுமி தான் என்று அவள் நம்பினாள். பின் சித்ரா தன் போன் எடுத்து செக் பண்ண லட்சுமி சொன்னதை போல வாட்ஸப் வந்து இருந்தது.

என்ன சித்ரா... இப்போ நம்பறியா... திவ்யா என் பொண்ணு மாதிரி... நான் அவ முடியை மொட்டை அடிக்கணுன்னு நினைப்பேன்னா...

இல்ல... அக்கா நான் ஏதோ ஒரு கோபத்தில் சொல்லிட்டேன்...

சித்ரா அப்படி சொன்னாலும், உள்ளுக்குள் லட்சுமியின் மேல் சந்தேகம் இன்னும் அதிகமானது. ஆனால் அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. லட்சுமி திவ்யாவின் அருகில் சென்று, கட்டிலுக்கு கீழ் அழுத திவ்யாவை ஆறுதல் சொல்லி தேற்ற... திவ்யா கொஞ்சம் அழுகையை குறைத்தாள்.

என்ன செல்லம் ஆச்சு... என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு திவ்யா... அப்போ தான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண முடியும்...


திவ்யா லட்சுமியை கட்டிக் கொண்டு இன்னும் அழ...


திவ்யா... உனக்கு அந்த பார்பர் மொட்டை அடிக்க காரணம் நான் தான்னு உன் அம்மா சொல்றா... நான் அப்படி பண்ணுவேனா... நீ அதை நம்புறியா...


நீங்க பண்ணலன்னு எனக்கு தெரியும் ஆண்டி... ஆனா யாரு பண்ணி இருப்பாங்கன்னு கெஸ் பண்ண முடியும்... ஆனா அதை நம்ப முடியலை... அவங்க தான் எனக்கு மொட்டை அடிக்க ஏற்பாடு பண்ணி இருப்பாங்களான்னு...


நீ யாரை சொல்ற திவ்யா...?


என் அம்மா தான் எனக்கு மொட்டை அடிக்க சொல்லி இருக்காங்கன்னு தோணுது...


உனக்கு என்ன பைத்தியமா... அவ உன் அம்மா... பெத்த பொண்ணுக்கு மொட்டை அடிக்க சொல்வாளா எந்த அம்மாவாது...


என் அம்மாவை பத்தி உங்களுக்கு சரியா தெரியல ஆண்டி... அவங்க ஒரு செல்பிஷ்... இன்னிக்கு காலைல கூட எனக்கு ஜடை பின்னி விடும் போது... உன் முடியை உன்னால சீவ முடியல்லன்னா எதுக்கு உனக்கு நீளமான முடி... இன்னிக்கே உனக்கு மொட்டை அடிச்சு விடுறேன்னு சொன்னாங்க...

அது ஏதோ கோபத்தில சொல்லி இருப்பா... அதெல்லாம் ஒண்ணும் இல்லை... 

எனக்கும் பரஸ்ட் அப்படி தான் தோணுச்சு ஆண்டி... அப்புறம் அந்த பார்பர் சொன்னதை பார்த்தா நம்பாமல் இருக்க முடியலை... அவன் சித்ரா தானே உங்கம்மா... அவங்க தான் உங்களுக்கு ஹேர்கட் பண்ண வர சொன்னாங்கன்னு சொன்னான்...


சரி... அப்போ உன் அம்மாகிட்டயே நேரடியா கேட்கலாம்... அப்படி உனக்கு சித்ரா மேல சந்தேகம் இருந்தா... 


எனக்கு கொஞ்சம் கூட டவுட் இல்ல... என் அம்மா தான் காரணம்னு என்னால தெளிவா சொல்ல முடியும்...


நீ இவ்ளோ சொல்லும் போது தான் எனக்கு ஒரு விஷயம் நியாபகம் வருது... உன் அம்மா என் வீட்டுல இருந்து போகும் போது ஒரு பையங்கிட்ட பேசிட்டு இருந்தா... அவன் தான் அந்த பார்பரா இருக்குமோ?


அவன் எப்படி இருந்தான் ஆண்டி... 


பிளாக் சர்ட்... கைல ஒரு சின்ன பேக்... வச்சுட்டு நின்னு பேசிட்டு இருந்தான்... 

ஆனா அவன் கொஞ்சம் டென்ஷன்ல இருந்த மாதிரி இருந்தது...


அப்போது சித்ரா வந்தாள். இருவரும் அவளை சந்தேகமாக பார்க்க, சித்ரா அது புரியாமல் திவ்யாவின் முடியை மொட்டை அடித்ததை எண்ணி வருத்தமாக இருந்தாள்.


திவ்யா... இனி எப்படிடி மொட்டை தலையோட காலேஜ் போக போற...


இனிமேல் நான் காலேஜ் போக மாட்டேன்... என்னால இப்படியே வெளியே போக முடியாது...


போன மயிரு போயிட்டு போகுது... வருத்தப்பட்டு ஒண்ணும் பண்ண முடியாது... எப்படியும் வளர்ந்துடும்... கவலைப்படாதே என்று சித்ரா சொல்ல... திவ்யா அவளை முறைத்து விட்டு... எதுவும் பேசாமல் இருக்க... லட்சுமி திவ்யாவை அவளுடையை வீட்டிற்க்கு அழைத்து சென்றாள்.


அடுத்த நாள் சித்ரா வேலைக்கு செல்ல... திவ்யா வீட்டிலேயே இருந்தாள். லட்சுமி திவ்யாவின் முடியை இனிமேல் வீட்டில் வைத்து இருந்தால் தான் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து அதை விற்க வெளியே சென்றாள்.


அந்த சமயம் தனியாக இருந்த திவ்யாவிற்க்கு தன் காலேஜில் அவளுடன் படிக்கும் கோபியின் நினைவு வந்தது. பின் அவனுடன் போனில் சாட் செய்து கொண்டு இருந்தாள். திவ்யாவின் மனதில் எப்படியாவது தன் அம்மாவின் முடியையும் மொட்டை அடித்து விட வேண்டும் என்று ஒரு வைராக்கியம் உருவானது. அதற்கு என்ன செய்வது என்று திட்டம் போட்டாள்.


ஆனால் சித்ரா தன் மகளின் முடியை யாரோ ஒருவன் மொட்டை அடித்து விட்டானே என்று அவளுடைய ரூமில் அழுது கொண்டு இருந்தாள். திவ்யாவும் அவளுடைய ரூமில் சோகமாக இருக்க, அன்று இரவு இருவரும் சாப்பிடாமலே தூங்கிவிட்டனர். 


அடுத்த நாள் சித்ரா வேலைக்கு செல்ல, திவ்யா மொட்டை தலையில் காலேஜ் போக பிடிக்காமல் இருந்து விட, லட்சுமி தான் ஏற்பாடு செய்த பார்பர் ராமிடம் போய் திவ்யாவின் முடியை வாங்கினாள். அவனுக்கு ஒரு சிறு தொகையை கொடுத்து விட்டு, அப்படியே திவ்யாவின் அடர்த்தியான முடியை ஒரு நல்ல விலைக்கு விற்றுவிட்டாள்.




அடுத்த சில நாட்கள் இப்படியே கழிய, திவ்யாவை பார்க்க, அவளுடைய வீட்டிற்க்கு கோபி வந்தான். இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது, சித்ரா வேலை முடிந்து வந்தாள். திவ்யா கோபியை சித்ராவுக்கு அறிமுகபடுத்த, பின் கோபி சில நோட்ஸ்களை திவ்யாவுக்கு கொடுத்து விட்டு சென்றான். திவ்யா அதை வைத்து கொண்டு தான் மிஸ் செய்த பாடங்களை படித்தாள். அடுத்த சில நாட்கள் இப்படியே போக, கோபி சித்ராவிடமும் நன்றாக பழகிவிட்டான்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு லட்சுமி கடைக்கு போய் மளிகை பொருள் வாங்கிக் கொண்டு வரும் போது, அடுத்து சித்ராவின் முடி பற்றி ராம் சொன்னது நினைவு வர, அவள் சித்ராவின் முடியை எப்படி மொட்டை அடிப்பது என்று யோசித்தாள். சித்ராவுக்கு ஏற்கனவே லட்சுமி தான் திவ்யாவின் முடியை மொட்டை அடித்தால் என்ற சந்தேகம் இருக்க, அதனால் சித்ரா அவளுடைய முடியை தொடக் கூட விடமாட்டாள் என்று நினைத்தாள் லட்சுமி.


அப்போது லட்சுமி ஒரு பூக்கடையை பார்க்க, உடனே மல்லிகை பூவை இரண்டு முழம் வாங்கிக் கொண்டு சென்றாள். இந்த மல்லிகை பூவை வைத்து விடும் சாக்கில் சித்ராவின் முடியை, அதன் அடர்த்தியை பார்த்து விடலாம் என்று நினைத்தாள் லட்சுமி.


சித்ரா அன்று வேலைக்கு போகாமல் இருந்ததால் காலையில் ரொம்ப நேரம் தூங்கிக் கொண்டு இருக்க, தூக்கத்தில் ஒரு கனவு வர, அதில் சித்ரா தன் முடியை முழுவதும் விரித்து போட்டு இருக்க, அவள் ஒரு சின்ன சேரில் உட்கார்ந்து இருக்க, அவளுடைய முடியை கட் பண்ண ஒரு கை, கத்தரியுடன் வருவது தெளிவில்லாமல், கனவாக தெரிய... சித்ரா திடுக்கிட்டு எழுந்தாள். 



2 comments:

  1. Super 👌 waiting for சித்ரா 6

    ReplyDelete
  2. Wow apdiye laxshmikuim potu vita vera levala irukum

    ReplyDelete