Tuesday 10 January 2023

திருமலையில் லீலா

லீலா தன் வாழ்க்கையில் முதன்முறையாக திருப்பதி வந்து இருந்தாள்... லீலாவின் குடும்பம் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சில வருடங்களுக்கு ஒரு முறை திருமலைக்கு செல்வது வழக்கம்... சில மாதங்களுக்கு முன் திருமணமாகி லீலா தனது கணவருடன் முதல் முறையாக திருப்பதிக்கு வந்து இருந்தாள்...  அதிகாலையில் மலை உச்சியில்... முன் பதிவு செய்த காட்டேஜ்க்கு சென்று குளித்து ரெடியானார்கள்.

லீலாவின் கணவன் கோபி, “நான் கல்யாண கட்டாவுக்குப் போகிறேன்... நீ ரெடியாகி வா" என்றான்.

"ஐயோ... கல்யாண் கட்டாவா? அங்கே நீண்ட நேரம் கியூவில் நிற்க வேண்டும்..’ என்று லீலா சலிப்பாக சொன்னாள் ...


லீலாவின் கணவன் கோபி அவளை செல்லமாக முறைக்க... லீலா  "பரவாயில்லை..நான் மட்டும் இருந்தாலே போரிங்" என்று சொல்லி சமாளித்தாள் லீலா.



இருவரும் கல்யாண் கட்டா சென்று க்யூவில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்... அவர்கள் இருவருக்கும் முன்னால் நிறைய பேர் நின்று இருக்க வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து வயதுடையவர்களும் வரிசையில் இருந்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து அவர்கள் கல்யாண் கட்டாவிற்குள் நுழைந்தனர். ஒவ்வொரு முடிதிருத்தும் தொழிலாளியின் முன்பும் பலர் வரிசையில் நின்று தங்கள் முறைக்காக காத்திருக்கிறார்கள்...

லீலாவுக்கு இதை பார்க்க ரொம்ப வினோதமாக இருந்தது. அங்கே கொத்து கொத்தாக முடிகள் சிதறிக் கிடக்கிறது. அங்கே பல பெண்களும் தங்களது வேண்டுதலுக்காக முடியை காணிக்கையாக மொட்டை அடிக்கிறார்கள். சிலர் பார்பர் முன் குனிந்து கொஞ்சம் முடியை மட்டும் வெட்டிக்கொண்டு நேர்த்திக் கடன் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் லீலாவின் கவனம் ஒரு பெண் மீது விழுகிறது.

அவளுடைய ஜடை  அவளுடைய இடுப்பை தாண்டி  மிகவும் அடர்த்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது..."அவளும் தன்னுடைய அடர்த்தியான முடியை இங்கே காணிக்கையாக தருவாளா.." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு லீலா அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கோபியும் அந்த பெண்ணை  பார்த்தான். அந்த பெண்ணின் ஜடை மிக அற்புதமாக இருந்தது. அவனும் தன்னை மறந்து தன் புத்தம் புதிய மனைவி அவனை கவனிப்பதை கூட கண்டு கொள்ளாமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.

இதற்கிடையில் முடிதிருத்தும் ஒருவரின் முன் வரிசை சற்று குறைந்துவிட்டது..கோபி அங்கு சென்று நிற்கிறார்.. லீலா கதவுக்கு அருகில் நின்று உள்ளே பார்க்கிறாள்.


அவளுக்கு முன்னால் வரிசையில் நின்ற ஒரு பெண் முடிதிருத்துபவனின் முன்னால் சென்று உட்காருகிறாள். அவளுடைய தலைமுடி இடுப்பிற்கு சற்று மேலே. ஆனால் அடர்த்தியாக இல்லை. லீலா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். முடிதிருத்தும் நபர் அவளது தலைமுடியை கைகளால் நன்றாகப் பிரித்தான். அப்போது அருகில் இருந்த பக்கெட்டில்  இருந்து தண்ணீரை எடுத்து அவள் தலைமுடியை நனைத்து விட ஆரம்பித்தான். லீலா இப்படி ஒரு காட்சியை பார்த்ததே இல்லை...அப்படியே நின்று பார்த்தாள்.

முடிதிருத்துபவன்  அவள் தலைமுடியை நன்றாக கோதிவிட்டு, தன் பக்கத்தில் இருந்த கத்தியை கையில் எடுத்து, அவள் தலையில் வைத்து மெதுவாக முன்பக்கம் நோக்கி நகர்த்தினான். அவள் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்பட்டு அவள் முன் விழுந்து கொண்டிருந்தது. லீலா ஆச்சர்யத்துடன் கீழே விழும் தலைமுடியை பார்த்துக் கொண்டிருந்தாள். நிமிடங்களில் அவள்

 தலைமுடி முழுவதுமாக தலையில் இருந்து பிரிந்து கீழே விழ, அவளுடைய தலை முடி இருந்த அடையாளமே இல்லாமல் மழுங்க சிரைக்கப்பட்டு இருந்தது.  இதற்கிடையில் கோபி தன் தலையை ஷேவ் செய்து கொண்டு வருகிறான்... இருவரும் ஒன்றாக தங்கள் அறைக்கு கிளம்பினர்.

கோபியின் மொட்டைக்கு பிறகு இருவரும் தங்கள் காட்டேஜ்க்கு புறப்பட்டனர். தலைமுடியை ஸ்வாமிக்கு காணிக்கையாக உண்டியலில் போட்டு விடுவார்கள்" என்றான் கோபி.. பின் இருவரும் கோவிலை பற்றி பேசிக்கொண்டே நடந்தார்கள்.. கோபி அறைக்கு வந்ததும் குளித்துவிட்டு வர, லீலா நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள்.



"என்ன.. லீலா.. .இவ்வளவு நேரம் யோசிக்கிற?" தன் மொட்டை தலையை டவலால் துடைத்துக் கொண்டே கேட்டான் கோபி...

"என்னங்க... ரொம்ப நீளமான முடி உள்ள பெண்கள் கூட அவ்வளவு சுலபமா அவங்க முடியை மொட்டை அடிச்சிங்கறாங்க" என்றாள் லீலா.



கோபி சொன்னான் "ஆமாம் லீலா..இங்கே பல பெண்களும் தலையை மொட்டை அடிச்சிங்கறாங்க, சிலர் பூ முடியாகவும்  முடியை கொஞ்சம் கொடுக்கிறார்கள்" என்றான் கோபி...

லீலா "அப்படியா" என்று அவனிடம் ஆச்சர்யமாக கேட்டு விட்டு குளிக்க சென்றாள். இருவரும்புது ஆடைகள்  உடுத்தி கோவிலுக்கு புறப்பட்டு சென்று, நான்கு மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்கள்.

"அங்கே பாரு..." லீலா வெளியே வந்தவுடன்  அவர்கள் எதிரில் ஒரு இளம் ஜோடி நிற்பதைக் காட்டினாள்... கோபி அங்கே பார்க்க, அவர்களும் கோபி, லீலாவை போல புது மண தம்பதிகள். ஆனால் இருவரும் தங்களின் தலையை க்ளீன் ஷேவ் செய்திருந்தனர். கோபி ஆச்சரியத்துடன் கேட்டான்.

"ஆமா... அவங்களும் நம்மை போல புதுசா கல்யாணம் ஆனவங்க தான்" என்றான்.

"அது இல்லை. நீ மொட்டை அடிக்கும் போது தான் அவளும் அங்கே மொட்டை அடித்துக் கொண்டாள். மொட்டையிலும் மிக அழகாக இருக்கிறாள்.." என்று லீலா ஏதோ ஒரு மயக்கத்தில் இருப்பவள் போல் சொன்னாள். கோபி இப்போது தான்  அவளை கவனமாக பார்த்தான். அவளுக்கு வயது 25 வயதுக்குள் இருக்கலாம். மொட்டையடித்த தலையில் அவள் முகம் மிகவும் அழகாக இருக்கிறது.



"ஆமாம் உண்மை.." என்றான் கோபி. அதன் பின் இருவரும் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தங்கள் அறைக்கு வந்தனர். லீலாவிற்கு முன்பு அவர்கள் பார்த்த மொட்டையடித்த பெண்ணின் முகம் அவள் கண்களுக்கு முன்னால் நகர்வது போல இருந்தது.

"என்ன ஆச்சு லீலா, நீ இப்படி ஊமையா இருக்காதே. ஏதாவது பேசு" எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த லீலாவை பார்த்து கோபி சொன்னான்.

என்னங்க, நான் ஒண்ணு கேக்கலாமா.” கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டாள் லீலா.

கேள். எதுக்கு யோசிக்கிறே..." என்று வற்புறுத்தினான் கோபி.

"நானும் என்னுடைய முடியை மொட்டை அடிச்சிக்கட்டுமா'' என்று லீலா தயங்கிய குரலில் சொன்னாள்.

உனக்கு பயமில்லையா லீலா...அவ்வளவு முடி கொடுக்கதயக்கமா இருந்தா, பூ முடி மட்டும் கொடு...” என்றான் கோபி.

இல்லைங்க... நான் முழுசாவே மொட்டை அடிச்சிக்கணும்னு நினைக்கிறேன். என் முடியெல்லாம்...” என்று உறுதியாகச் சொன்னாள் லீலா. கோபி யோசித்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

“சரி உன் விருப்பம் போல மொட்டை அடிச்சிக்கோ... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலம் கல்யாண் கட்டாக்கு போகலாம் என்றான் கோபி. இருவரும் சிறிது நேரம் படுத்து எழுந்தனர்.. லீலா தன் நீண்ட தலைமுடியை நன்றாக கோதிவிட்டு ரப்பர் பேண்ட் போட்டாள். அவனைக் கட்டியணைத்து அவள் முத்தமிட்டாள். பின்  இருவரும் மீண்டும் கல்யாண் கட்டா நோக்கி நடந்தனர்.

இப்போது வரிசை நீண்டதாக இல்லை..அரை மணி நேரத்தில் இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த ஒரு பெண்  முடிதிருத்தும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு வழி காட்டினாள். கோபி லீலா இருவரும் தங்கள் முறைக்காக காத்திருந்தார்கள். லீலா ஒரு முடிதிருத்தும் ஒரு பெண்ணின் முன் நிற்க, ஒரு இளம் பெண் லீலாவுக்கு முன் நிற்கிறாள். இளம் பெண் தன் தலைமுடியில் பாதியை பூ முடியாக கொடுக்கிறாள்.



பிறகு லீலாவின் முறை, கோபி லீலாவின் அருகிலேயே நின்றான்..  லீலா ஹேர் பேண்டைக் கழற்றி ஓரமாக வைத்தாள். பின் தன் தலைமுடியை முழுவதுமாக தன் விரல்களால் பிரித்தாள். அருகில் இருந்த ஒரு பைப்பில் தண்ணிர் எடுத்து தன் முடியை நனைக்க ஆரம்பித்தாள். லீலாவின் தலைமுடி  முழுவதுமாக நீர் சொட்ட நிற்க, லீலாவிற்கு அந்த ஸ்பரிசம் புதிது. மூன்று நிமிடத்தில் அவள் கூந்தல் முழுவதுமாக ஈரமாகிவிட்டது.அப்போது முடிதிருத்தும் பெண் அவளின் தலைமுடியை இரண்டாகப் பிரித்து இருபுறமும் இரண்டு முடிச்சுகள் போட்டாள். கத்தியை கையில் எடுத்தாள். லீலாவிற்கு பதற்றமாக இருந்தது.

முடிதிருத்தும் பெண் லீலாவின் தலையில் கத்தியை வைத்தாள். "சர்...சர்..சர்..." என்று கத்தி லீலாவின் தலைமுடியை மழித்து கொண்டிருந்தது.  லீலாவின் தலையில் கூரிய கத்தி நகர்வதை தெளிவாக உணர்ந்து கொண்டு இருந்தாள். சில நிமிடங்களில் லீலாவின் வலது பக்க முடிச்சு அவள் தலையில் இருந்து பிரிந்து அவள் மடியில் விழுந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இடது பக்க முடிச்சு...



லீலா இப்போது முழுவதுமாக  மொட்டை அடிக்கப்பட்டு மொழுமொழுவென இருந்தால். லீலா மொட்டை தலையில் தன் பாரம் குறைந்தது போல சுகமாக உணர்ந்தாள். கோபி அவளைப் பார்த்து சிரித்தான்.


"நீ மொட்டை தலையில் ரொம்ப அழகா இருக்க"..என்று கையால் சைகை செய்தான் கோபி. பின் இருவரும் தங்கள் காட்டேஜ்க்கு செல்லும் வழியில் லீலாவின் மொட்டை தலையை எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்க, லீலாவிற்கு வெட்கமாக இருந்தது. அவள் தலையை குனிந்து கொண்டே நடந்தாள்.



No comments:

Post a Comment