Thursday 22 April 2021

பதிலுக்கு பதில் - முதலாம் பாகம்


நான் அனுபமா. வயது 19. அக்மார்க் கேரளா பொண்ணு. என் அப்பா பரமேஸ்வரன் கேரள அரசில் வேலை செய்கிறார். அம்மா ஹவுஸ் வைப். எனக்கு உடன்பிறந்த தம்பி ஒருவன். அவனுக்கும் எனக்கும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம். நாங்கள் இருவரும் இரட்டை பிறவிகள். ஒரே மாதிரித் தோற்றமுள்ள ஐடெண்டிகிள் ட்வின்ஸ். 


நானும் என் தம்பி சரணும் ஒரே மாதிரி உடை தான் அணிவோம். இது என் அப்பாவின் கடுமையான விதி. அதே போலச் சரணும் என்னைப் போலத் தோள் பட்டைவரை முடி வைத்து இருப்பான். அவனுக்கும் என் ட்ரஸைப் போட்டால் அவனும் என்னைப் போலவே ஒரு  முழுமையான பெண்ணைப் போல இருப்பான்.

சரண் என் தம்பிதான் என்றாலும் அவன் என்னை எப்போதும் ஏதாவது ஒருவகையில் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே தான் இருப்பான். ஒரு சில சமயங்களில் நானும் அவனுக்குப் பதிலடி கொடுப்பேன். அதனால் அவன் கோபப்பட்டு என்னை அடிப்பான். அதனால் வலி தாங்க முடியாமல் நானும் அவனைத் திருப்பி அடிப்பேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை நடக்கும். அதன்பின் அம்மா வந்து தான் எங்களைப் பிரித்து விடுவார்கள். அதுவரை என்னை ஓயாமல் சரண் அடித்துக் கொண்டேன் இருப்பான்.

சரண் என்னை அடித்து நான் அழுதால் என் அம்மாவும், அப்பாவும் சரணை திட்டுவார்கள். ஆனால் அவன் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டான்.

சரண் மேல் நான் அதிக பாசமாக இருந்தாலும், அவன் என்னை அடிப்பதால், திட்டுவதால் நானும் அவன்மேல் சில சமயம் கோபப்படுவேன். அதனால் அவனுக்கு ஏதாவது ஒரு சமயத்தில் நல்ல பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.


அந்தச் சமயத்தில்தான் எங்கள் ஊரில் ஒரு கோவில் திருவிழா வந்தது. அந்தத் திருவிழா கேரளாவில் ரொம்பவே பிரபலம். திருவிழாவின்போது ஆண்கள் பெண்களின் உடை அணிந்து, பெண்களைப் போலவே முக அலங்காரம், முடி அலங்காரம் செய்துகொண்டு அம்மனை தரிசிக்க வேண்டும். அதனால் அந்தத் திருவிழாவில் சரண் என்னுடைய ஆடையை அணிந்துகொண்டு பெண்ணைப் போல உடை அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று என் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்ல, அவர்கள் இருவரும் அதற்குச் சம்மதம் சொன்னார்கள்.


திருவிழா அன்று சரணை அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுப்பி, குளிக்க வைத்து, என்னுடைய ஆரஞ்சு கலர் சுடிதார் எடுத்து அவனைப் போட்டு வரச் சொன்னேன். சரண் வேறு வழியில்லாமல் நான் கொடுத்த ஆரஞ்சு கலர் சுடிதாரை அணிந்துகொண்டு என் ரூமுக்கு வந்தான். அதன்பின் அவனுக்கு தலை சீவி, சவுரி முடி வைத்து அவனது இடுப்பு வரை முடியை ஜடையாக பின்னி , அதில் இரண்டு மூலம் மல்லிகை பூவை வைத்து, முகத்தில் க்ரீம், பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுவிட்டு அவனை பெண்ணை போல மாற்றினேன். பின் நானும் ரெடியாகி, சரணுடன் கோவிலுக்குச் சென்றேன். அம்மன் கோவிலில் பெரிய கூட்டமாக இருந்தது. சரண் அந்தக் கூட்டத்தில் பெண் உடையில் இருப்பதற்கு மிகவும் கூச்சப்பட, நான் அவனை வலுக்கட்டாயமாக அவன் கையை பிடித்து கூட்டிக்கொண்டு கோவிலை சுற்றி வந்தேன். அப்படி சுற்றி வரும் போது மொட்டை அடிக்கும் இடத்தை பார்த்தேன்.


அதைப் பார்த்ததும் எனக்கு திடீரென்று ஒரு ஐடியா வந்தது. ஒரு அழகான பெண்ணின் தோற்றத்தில் இருக்கும் சரணை இப்பொழுது அந்த இடத்தில் அத்தனை மக்கள் முன்னிலையில் மொட்டை அடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்றும் யோசித்தேன். உடனே சரணை அந்த மொட்டை அடிக்கும் கொட்டகைக்குள் கூட்டிச் சென்றேன். சரண் எதுவும் புரியாமல் நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் என்னுடன் வேகமாக வந்தான்.




எங்கள் ஊர் திருவிழா என்பதால் மொட்டையடிக்க டோக்கன் வாங்குவது எல்லாம் கிடையாது. மொட்டை அடிக்கும் நாவிதர் க்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.

நாவிதர்கள் முன் ஆண்கள் உட்கார்ந்து மொட்டை அடித்துக்கொண்டு இருக்க, நானும் சரணின் கையைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். அவனும் தான் பெண் உடையில் இருப்பதை மறந்து மொட்டை அடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்பொழுது ஒரு ஆண் மொட்டை அடித்து கொண்டு எழுந்திருக்க, நான் சரணை பிடித்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்றேன். அந்த பார்பர் முன் மொட்டை அடிக்க யாரும் வராமல் இருக்க, நான் பெண் உடையில் இருக்கும் சரணை அந்த பார்பர் முன் மொட்டை அடிக்க உட்கார சொன்னேன்.


அக்கா, என்ன விளையாடுறியா? நீ சொன்னதுக்காக உன் டிரஸ் போட்டுட்டு வந்தேன். ஆனா மொட்டை எல்லாம் அடிக்க முடியாது.. என் காதருகில் மெதுவாக சொன்னான்.


அதெல்லாம் முடியாது... இன்னிக்கு புல்லா நான் சொல்றதை கேட்கணும்.. இல்ல அப்பாகிட்ட சொல்லுவேன்... பனிஷ்மெண்ட் இன்னும் அதிகமாகும்... என்று நான் சொல்ல,


நாங்கள் இருவரும் பேசுவதை பார்த்த பார்பர் அண்ணா, என்னம்மா உன் தங்கச்சி வெட்கபடுதா? சாமிக்கு மொட்டை அடிக்க வெட்கப்பட கூடாது... வாம்மா..உட்காரு...


நான் சரணை பிடித்து உட்கார வைக்க, அவன் வேறு வழியில்லாமல் பார்பர் முன் உட்கார்ந்தான்.பார்பர் பெண் உடையில் இருந்த சரணின் தலையில் தண்ணீர் விட்டு தோள் பட்டை வரை இருந்த முடியை மொட்டை அடிக்க, சரண் எதுவும் செய்ய முடியாமல் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டான். அங்கு இருந்த மக்கள் எல்லோரும் ஒரு இளம்வயது பெண் தன் முடியை மொட்டை அடித்து காணிக்கையாக கொடுக்கிறாள் என்றே நினைத்து பார்த்தார்கள்.

பார்பர் மொட்டை அடித்து முடித்ததும், சரண் பெண் உடையில் இருந்ததால் அவனை குளிக்க பெண்கள் பகுதிக்கு குளிக்க கூட்டிச் சென்றேன். ஒரு பாத்ரூமில் சரண் குளிக்க, நான் வெளியில் காத்து இருந்தேன். அவன் குளித்ததும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரை கொடுத்து, அதை போட்டு வர சொல்ல, அவன் என்னை முறைத்துக் கொண்டே அதை வாங்கி போட்டுக் கொண்டு வர, நாங்கள் சாமி தரிசனம் பார்க்க சென்றோம்.





அப்போது வழியில் ஒரு பாட்டி எங்கள் இருவரையும் பார்த்து கூப்பிட, நாங்கள் அருகில் சென்றதும், தான் வைத்திருந்த சந்தனத்தை அவனுடைய மொட்டை தலையில் பூசிவிட்டு, ஒரு சின்ன பூமாலையை சரணின் கழுத்தில் போட்டு விட, நான் அதற்க்கு காசு எவ்வளவு என்று கேட்க, ஒண்ணும் வேண்டாம், சீக்கிரமா சாமிக்கிட்ட போங்க என்று மட்டும் அந்த பாட்டி சொல்ல நாங்கள் வேகமாக கோவிலுக்கு முன் பக்கம் போனோம்.


அங்கு சாமியை ஊர்வலமாக கொண்டு செல்ல பூசாரிகளுடன் நிறைய மக்கள் எதற்க்கோ காத்திருக்க, சாமியின் முன் 6 பெண்கள் சரணை போல மஞ்சள் உடையில் ஈரத்துடன் நின்று இருக்க, சரணும் அதே போல உடை அணிந்து இருந்ததால், தவறுதலாக பெரியவர் அவனையும் அந்த பெண்களோடு கூட்டிக் கொண்டு போய்

நிறுத்திவிட்டார். என்னாலும் அந்த பெரியவரிடமும் அவன் ஆண், பெண் இல்லை என்று சொல்ல முடியவில்லை. காரணம் அதனால் சாமி குத்தம் என்று ஏதாவது எங்களை பண்ணிவிட்டால் என்ன பண்ணுவது, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நான் இருக்க, சரண் அத்தனை பெண்கள், மக்கள் மத்தியில் தான் ஒரு பெண் உடையில் இருக்கும் ஆண் என்று அவனாலும் சொல்ல முடியாமல் பூசாரிகள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் நேரம் அவனுடன் இருந்த என்னை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தான். அவன் மொட்டை தலையில் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு உள்ளுக்குள் சிரிப்பகத்தான் இருந்தது.





கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கோவிலை சுற்றி சாமி ஊர்வலம் வர, பெண்களோடு பெண்களாக சரணும் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அதே போல செய்து வந்தான். நிறைய பெண்கள், ஆண்கள் என எல்லோரும் அந்த குட்டி பெண்களை தெய்வமாக நினைத்து கால்களில் விழுந்து வணங்கினர். அவ்வளவு கூட்டத்திலும் யாரும் சரணை ஒரு ஆண் பையன் என்று கண்டுபிடிக்கவில்லை.


பின் சிறப்பு பூஜைகள் முடியும் வரை நானும் அவனுடன் துணைக்கு இருந்தேன். சிறப்பு பூஜைகள் முடிந்து தான் நானும் சரணும், வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். அப்போது இரவு ரொம்ப நேரமாகிவிட்டதால் நாங்கள் இருவரும் அவரவர் ரூமுக்கு சென்று தூங்கினோம். எங்கள் அப்பாவும், அம்மாவும் எங்களுக்காக காத்திருக்காமல் தூங்கி விட்டனர், ஆனால் சரண் என் மேல் நிறைய கோபத்துடன் இருப்பான் ,அதற்காக ஏதாவது பண்ணி எப்படியாவது பதிலுக்கு பதில் பழி வாங்குவான் என்று எதிர்பார்த்தேன்.


===============================================================


நண்பர்களே, நான் என் மனதில் நினைத்து இருந்ததை விட நன்றாகவே எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்த கதையில் கிராஸ் ட்ரெஸ்ஸிங், பீமேல் டாமினேஷன், என கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கிறேன். இதன் இரண்டாம் பாகம் விரைவில் கொடுக்க முயற்சிக்கிறேன்.!!! கதைகள் பிடித்து இருந்தால் பேஸ்புக் பக்கங்களில் ஷேர் செய்து உதவுங்கள். உங்களை போன்ற நண்பர்களும் படிக்கட்டும்.நன்றி!!!









1 comment:

  1. அருமையான கதை நண்பா இதன் அடுத்த பாகத்தை நான் விரைவாக எதிர்பார்க்கிறேன் அவ்ளோ அழகாக இருந்தது உங்களின் பழைய கதைகளின் தொடர்ச்சியில் விட்டுவிட வேண்டாம்

    ReplyDelete