Tuesday 21 September 2021

திவ்யாவின் மொட்டை - மூன்றாம் பாகம்

பின் முடியை இழந்த சோகம் மறந்து திவ்யா அனைவருடனும் ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்தாள். திவ்யாவின் பெரியம்மா, அவள் பெண் இருவரும் திவ்யாவை கூப்பிட, திவ்யா அவர்கள் அருகில் போனாள். திவ்யாவின் பெரியம்மா ஒரு சின்னக் கிண்ணத்தில் சந்தனத்தை குழைத்து வைத்திருக்க, திவ்யாவின் அக்கா அவள் கை நிறைய சந்தனத்தை எடுத்துத் திவ்யாவின் உச்சியில் வைத்துத் தலை முழுவதும் கையால் பூசி விட்டாள்.



திவ்யாவிற்க்கு மொட்டை அடித்த தலையில் ஏற்கனவே கிராமத்து காற்று பட்டு, சில்லென்று இருக்க, இன்னும் மொட்டைத் தலையில் சந்தனத்தை பூசியதும், இன்னும் குளிர திவ்யா, தன் பெரியம்மாவை செல்லமாகக் கட்டிக் கொண்டாள். அவளுடைய அக்கா மொட்டைத் தலைக்குச் சந்தனத்தை தடவும்போது, அக்காவின் கூந்தலை பார்த்தாள் திவ்யா. தன் அக்காவைவிடத் திவ்யாவுக்கு தான் நீளமான முடி இருந்தது. அதை நினைத்து மீண்டும் திவ்யாவின் முகம் வாட, அந்த சமயத்தில் சந்தனத்தை முழுவதும் பூசிவிட்டு அக்கா கிண்ணத்தை கழுவ செல்ல, திவ்யா தன் சந்தனம் தடவிய மொட்டைத் தலையைத் தடவி பார்க்க, அவளுக்கு அது ஒரு புதுவித உணர்வாக இருந்தது.

பின் திவ்யாவின் உறவினர்கள், மாமன் மகன் என எல்லோரும் வேண்டுமென்றே திவ்யாவின் மொட்டைத் தலையைத் தடவி பார்த்து விட்டு மொட்டை மொட்டை என்று கிண்டல் பண்ணினார்கள். திவ்யாவும் இந்த முறை கோபப் படாமல் அவர்களுடன் விளையாடினாள். அப்போது குமார் திவ்யாவின் அப்பாவிடம் கிளம்புவதாகச் சொல்ல, அவர் குமாரை சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று வற்புறுத்த, அவனும் அருகில் இருந்த மர நிழலில் போய் உட்கார்ந்து கொண்டான்.


பின் எல்லோரும் சாமி கும்பிட்டு விட்டுச் சாப்பிட, பெண்கள் வேலை செய்த அசதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்ல, எல்லோரும் அன்று மாலை ஊருக்குக் கிளம்பலாம் என்று முடிவு செய்தனர். அப்போது குமார் திவ்யாவின் அருகில் வந்து உட்கார்ந்தான்.

என்னம்மா? நான் உங்க முடியை மொட்டை அடிச்சு விட்டேன்னு கோவமா?

அதெல்லாம் இல்லை, உங்க மேல ஏன் கோப படப் போறேன்...

அப்புறம் ஏன் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்தீங்க?

அது நான் ஆசையா வளர்த்த முடி போகுதேன்னு அழுதேன்... அப்புறம் கொஞ்ச நேரத்தில் மொட்டை அடிச்ச இடத்தில் காத்து படும்போது ஜில்லுனு இருந்துச்சா, அதுக்கபுறம் அந்த ஃபீல் ரொம்ப பிடிச்சு போச்சு... இந்த எக்ஸ்பிரியன்ஸ் என் லைப்ல மறக்கவே முடியாது...

இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, திவ்யாவின் குடும்பம் கிளம்ப திவ்யா குமாரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள். எல்லோருக்கும் ரொம்ப அசதியாக இருந்ததால் பஸ்ஸில் தூங்க, திவ்யா தன் அக்காவின் செல்போனை எடுத்து அதிலிருந்த மொட்டை அடிக்கிற வீடியோவை இவளுடைய செல்போனுக்கு அனுப்பி விட்டு, அவள் அக்காவின் போனில் அந்த வீடியோவை டெலிட் செய்தாள். அந்த வீடியோவை வீட்டுக்குப் போன பின்னும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள் திவ்யா. அந்த வீடியோவை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவளுக்குப் புதியதாகவே இருந்தது.



அந்த உணர்வைப் பற்றி அறிந்து கொள்ள கூகுளில் சர்ச் செய்ய அந்த உணர்வின் பெயர் ஹேர் பெடிஷ் என்று இருக்க,  அதைப் பற்றி நிறைய வீடியோக்கள், கதைகள் இருந்தன. தமிழில் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க, அதில் வில்லேஜ் பார்பர் என்ற வெப்சைட் திவ்யாவை கவர, அவள் அதைத் திறந்து பார்க்க, அதில் பெண்களின் வித்தியாசமான ஹேர் கட், லாங்க் ஹேர், மொட்டைப் போட்டோஸ் என நிறைய இருக்க, அதில் ஏராளமான விதவிதமான கதைகளும் இருந்தது. அன்று இரவு முழுவதும் வில்லேஜ் பார்பர் வெப்சைட்டில் இருந்த கதைகள் அத்தனையையும் படித்து முடித்தாள் திவ்யா. (நிஜமா தாங்க)



அவள் தன் வீட்டில் அடம்பிடித்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி தினமும் மொட்டைப் பற்றிய கதைகள், வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தாள். திவ்யாவுக்கு ஒவ்வொரு மொட்டை வீடியோவைப் பார்க்கும் போதும் அவளுக்கு ஒரு புதுவித இன்பம் தோன்ற, அது அவளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. திவ்யா இதுவரை அது போன்ற உணர்வை உணர்ந்தது இல்லை. திவ்யாவை போல உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர்  இருப்பதை தெரிந்து கொண்டாள்.

பின் திவ்யா ஸ்கூல் போக, அவளைச் சக மாணவ, மாணவிகள் மொட்டச்சி என்று கிண்டல் செய்து கூப்பிட, உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், வெளியே கோபமாக அவர்களை அடிக்கப் போனாள். உள்ளுக்குள் நிறைய பெடிஷ் ஆசை இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். முடி வளர, வளரப் பார்லர் சென்று வித விதமாக ஹேர் கட் பண்ணிக் கொண்டாள். நேப் ஷேவிங் பண்ணிக் கொண்டாள். இப்படியே நாட்கள் போகப் போக, திவ்யா இப்போது காலேஜ் செகண்ட் இயர் போனாள். அவளுடைய மீண்டும் அக்கறையாகப் பராமரிப்பு செய்ததில் அவளுடைய முழங்காலை தொட்டு கொண்டு இருந்தது. திவ்யாவின் அம்மா குல தெய்வ கோவிலில் மொட்டை அடித்ததால் தான் இப்போது இவ்ளொ நீளமாக முடி வளர்ந்து இருக்கு என்று சொல்வாள்.இப்போதும் இவ்வளவு நீண்ட அடர்த்தியான முடியை மொட்டை அடிக்க ஆசையாக இருந்தாள் திவ்யா. ஆனால் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது.

அதற்க்கு காரணம் என்ன சொல்வது, கேலி, முகம் எப்படி இருக்கும் என்ற கவலை எல்லாம் இருந்தது திவ்யாவுக்கு. இந்த தயக்கத்தில் நாட்கள் ஓட, திவ்யா காலேஜ் முடித்து டிகிரி வாங்கி வேலைக்குப் போகவும் ஆரம்பித்தாள். திவ்யாவுக்கு அவள் பெற்றோர் வரன் பார்க்க ஆரம்பிக்க, எல்லாம் தடங்கல்களாகவே இருக்க, திவ்யாவின் அம்மா அவள் ஜாதகத்தை மீண்டும் ஜோசியரிடம் கொண்டு சென்றாள்.

ஜோசியர்  ஜாதகத்தை பார்த்து விட்டு, திவ்யாவுக்கு தோஷம் இருப்பதாகவும், அதை நிவர்த்தி செய்ய, மீண்டும் குல தெய்வ கோவிலில் மொட்டை அடிக்க வேண்டும் என்றும், திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் மீண்டும் ஒரு முறை தம்பதியராக இருவரும் மொட்டை அடிக்க வேண்டும் என்றும் ஜோசியர் சொன்னார். அதே போலத் திவ்யா மொட்டை அடிக்கும்போது பெற்றவர்கள் இருவரும் அவளுடன் இருக்க கூடாது என்றும் ஜோசியர் சொன்னார்.


வீட்டிற்கு வந்து திவ்யாவிடம் மெதுவாக விஷயத்தைச் சொல்ல, அவள் உள்ளுக்குள் தன்னுடைய நீண்ட நாள் ஆசை மறுபடியும் நிறைவேறப் போகிறது என்று மகிழ்ந்தாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், ஷாக் ஆவது போல நடித்தாள். திவ்யாவுக்கு தன்னை அறியாமல் அவள் கண்ணில் கண்ணீர் வர, அவள் அழுகிறாள் என்று அவளுடைய அம்மா அவளைச் சமாதானப் படுத்த முயன்றனர்.

திவ்யா, என்னடாம்மா, நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உனக்குக் கல்யாணம் பண்ணி பாக்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? அப்பாக்காக இந்த ஒரு முறை மட்டும் முடி எடுத்துக்கலாம்டா என்று கெஞ்ச, கொஞ்ச நேரத்தில் திவ்யா வேண்டா வெறுப்பாகச் சம்மதம் சொல்வது போலச் சொன்னாள்.

அடுத்த வாரமே மொட்டை அடிக்க நல்ல நாள் பார்த்து அப்பா ஏற்பாடு செய்ய, பெரியவர்கள் யாரும் திவ்யாவுடன் போகக் கூடாது என்றும், திவ்யாவின் சித்தப்பா பெண் நந்தினியும் மட்டும் கோவிலுக்குப் போய் வர ஏற்பாடு செய்தார். நந்தினி திவ்யாவை விட மூன்று வயது சிறியவள். பியூட்டிஷியன் கோர்ஸ் படித்துக் கொண்டு இருக்கிறாள். வியாழன் அன்றே அவளுடைய அப்பா பொங்கல் சாமான், திவ்யாவுக்கு புது ட்ரஸ் எல்லாம் பேக் செய்து வைக்க, அன்று மாலை திவ்யாவும், நந்தினியும் மட்டும் காரில் கிளம்பினார்கள்.

திவ்யா அன்று மாலை தலைக்குக் குளித்து விட்டு, ஃப்ரீ ஹேர் விட்டு, ரெட் டீ-சர்ட், ஜீன்ஸ், ஜெர்கின் அணிந்து செம மாடர்னாக இருக்க, கடைசி நேரத்தில் திவ்யாவின் அக்கா ஒருத்தியும் கோவிலுக்கு வர, மூவராகக் கிராமத்துக்குக் காரில் கிளம்பினர்.

இந்த முறை திவ்யா மொட்டை என்பதை இருவரும் அறிந்திருந்தால் வந்ததிலிருந்து நந்தினி மொட்டை அக்கா,  திவ்யா அக்கான்னு கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்க, அவளுக்கு அது பிடித்திருந்தது. 

(மஞ்சள் கலர் ட்ரஸ் மட்டும் தான் கிடைத்தது. பாவாடை, சட்டை இல்லை அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்)



அடுத்த நாள் மூவரும் கிராமத்தில் குல தெய்வ கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தனர். திவ்யாவின் அக்கா முதலில் குளித்து விட்டுப் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்ய, திவ்யாவும், நந்தினியும் குளத்தில் போய்க் குளித்தனர். திவ்யா மஞ்சள் கலரில் பட்டுப் பாவாடை, சட்டை போட்டுக் கொண்டு, முழங்கால் நீள முடியை ஃபீரி ஹேர் விட்டு மல்லிகை பூவைத் தழைய, தழைய தொங்கவிட்டு கோவிலுக்கு நடந்து வர, வயலுக்குச் சென்ற கிராமத்து ஆட்கள் எல்லோரும் அவளையே ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டு நடந்தனர். ஆமாம் இந்த காலத்தில் கிராமத்து பெண் கூட நீளமான முடியை வைப்பதில்லை. எல்லோரும் பார்லர் போய்ப் பழகிவிட்டார்கள்.

நந்தினியும் கூட வந்தாலும், அன்றைக்கு திவ்யா தான் அழகாகத் தெரிந்தாள். திவ்யாவின் அப்பா கால் செய்து, 10.00 டூ 11.30 க்குள் பொங்கல் வைத்து மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்ல, இருவரும் பார்பரை தேடி கிராமத்திற்க்குள் சென்றனர்.


=======================================================================



நண்பர் ரசிகன் மட்டும் கதையைப் படித்து விட்டு அவரது கருத்தைத் தவறாமல் எழுதுகிறார். மற்றவர்களுக்குக் கதை பிடிக்கவில்லையா? என்று தெரியவில்லை. தயவு செய்து நிறை குறைகளைக் கமெண்ட்டில் தெரிவியுங்கள். நண்பர்களே அதுவே தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கும் ஒரு இண்ட்ரஸ்டை கொடுக்கும். கதை இல்லாமல் இருக்கும் கதை எப்போ வரும் என்ற உரிமையாகக் கேட்ட நண்பர் கதையைப் படித்து இருப்பார் என்று நினைக்கிறேன். நன்றி.



3 comments:

  1. நண்பா உங்களின் இந்த கதையில் எந்த குறையும் இல்லை மிக அழகாக அற்புதமாக நான் ரசிக்கும் தன்மையில் இருந்தது இதை நான் கேட்பது தவறு என்று எனக்கே தெரியும் இருந்தாலும் கேட்கிறேன் தயவு செய்து எனக்காகவது உங்களின் கதைகளை தொடருங்கள்

    ReplyDelete
  2. Mudinja 2 part la mudikura mari post panunga too much wait intrest eh poiruthu unga kathai mela and pazhaya mari nenga story ezhuturathu ila bro.... Requested one boy friend girlfriend ku convince pani sexual headshave story onu post panunga single part la requested one bro pls reply to my comment

    ReplyDelete
  3. Bro Enna bro ennoda comments la thyrirathu illaya

    ReplyDelete