Wednesday 18 January 2023

பிரக்யாவின் நீண்ட நாள் கனவு - முதலாம் பாகம்

பிரக்யா தன்னுடைய கம்ப்யூட்டர்ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பிரக்யா தன்னை மறந்து அந்த கணினி திரையை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் எதைப் பார்க்கிறாள் என்று யாருக்கும் தெரியாது.... ஆனால் அந்த கணினி திரையில் என்ன இருக்கிறது. அந்த கணினி திரையில் என்ன நடக்கிறது என்பதை நான் உங்களுக்குக் காட்ட வேண்டும் ... இல்லை, இல்லை, நான் உங்களுக்கு சொல்கிறேன்.



 அங்கே எல்லாரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். அத்தனை சலசலப்புகளுக்கிடையில், நீல நிற புடவை அணிந்த 34 வயது பெண் ஒருவர் வெட்கித் தலை குனிந்தபடி தன் கணவனுக்குப் பின்னால் போக, பிரக்யாவுக்குப் புரியவில்லை. ஆனால் அந்த புன்னகையின் அர்த்தம் என்னவென்று அங்கு சுற்றி இருந்த எல்லோருக்கும் புரிந்தது.

 அவள் தன் கணவனின் கையிலிருந்து ஒரு சிறு சீட்டை எடுத்தாள். அவன் கண்களில் இருந்த சந்தோஷம் அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அதை தன் கணினி திரையில் பார்த்துக் கொண்டு இருந்த பிரக்யா அவன் பார்வையை புரிந்து கொண்டாள். அது பிரக்யா போன்றவர்களுக்கு புரியும். அவன் பக்கத்தில் அவளும் வெட்கத்துடன் தன் கையை ஒரு சிறு குழந்தை தன் அம்மாவின் கையை பிடித்து இருப்பது போல பிடித்தாள்.


வரிசையில் ஏற்கனவே சிலர் தங்களின் முறைக்காக காத்திருந்தனர். அந்த இரண்டு நிமிடங்களில் அந்த பெண்ணின் கணவன் இப்படி ஒரு தருணத்திற்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தார் என்று பிரக்யா உணர்ந்தாள்.  ஆனால் அந்த கண்களில் எவ்வளவு தவிப்பு இருந்தது என்பது பிரக்யாவுக்கு மட்டுமே தெரியும். வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்த பிரக்யா சட்டென்று கையை உயர்த்தி தன்னுடைய தலையை தொட்டு பார்த்தாள். அதுவரை எதிர்பார்ப்புடன் காத்திருந்த இதயம் அந்த சின்ன ஸ்பரிசத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சியில் மிதந்தது.

 அந்த தம்பதிக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கிடையே காதல் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் குறையவில்லை என்று தெரிகிறது. அதைப் பார்த்த பிரக்யா.... அந்த இளைஞனைப் பார்த்து சிரித்தாள். தன் வாழ்வில் இப்படி ஒரு தருணம் எப்போது வரும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பிரக்யா. அந்த பெண்ணின் கணவன் தன் மனைவியின் கண்களை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். பொதுவாக அவன் அந்த இடத்திற்கு வரும்போதெல்லாம் அவன் பார்வை சுற்றி இருப்பவர்களின் மீதே இருக்கும். ஆனால் முதன்முறையாக, அவன் வாழ்க்கையில், தன் பார்வையை ஒருபுறம் திருப்பாமல், தன் மனைவியின் தலைமுடியின் மேலே வைத்து இருந்தான்.

அந்த தம்பதியர் எங்கே இருக்கிறார்கள், பிரக்யா அவர்களை எப்படி பார்க்கிறாள் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும். அப்படி புரியவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கும் தெரியும்.



அந்த கணவன் ஸ்ரீனிவாஸ் ஆந்திராவை சேர்ந்தவன். அவனது மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வந்து இருந்தான். அவன் ஒரு MNC கம்பெனியில் மேலாளராக வேலை செய்கிறான். தன்னுடைய சீனியர் பிரக்யா என்ற பஞ்சாபி பெண்ணிற்கு தங்களின் திருப்பதி டூர் சென்ற போது எடுத்த வீடியோவை கொடுத்து இருந்தான்  ஸ்ரீனிவாஸ்.

பிரக்யா தன்னுடைய கேபினில் தான்  ஸ்ரீனிவாஸ், மற்றும் அவனது மனைவி இருவரும் முடி காணிக்கை கொடுப்பதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.



அந்த இடம் முழுவதும் மக்கள் கூட்டம். கோவிலை சேர்ந்த முடி திருத்துபவர்கள் எல்லாம் தங்கள் முன் அமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்களை முழு நிலவு போல அழகுடன், அனுப்பி வைக்கிறார்கள். ஸ்ரீனிவாஸ் அதை எல்லாம் ரசித்து பார்ப்பவன், ஆனால் இன்று மட்டும் ஏனோ அவன் பார்வை அவனருகில் இருந்த தன் மனைவியின் மேல் மட்டுமே இருந்தது.

தங்களை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க, அந்த சமயத்தில் ஒரு சிறு சத்தம் அவர்கள் இருவரையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வர, உடனே அந்த இருவரும் இந்த உலகிற்கு வந்தனர். ஒருமுறை தங்களை  சுற்றும் முற்றும் பார்த்தார்கள். குழப்பமாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள்,

மொட்டை தலை பெண்களை  பார்க்கும் போது பிரக்யாவிற்கு மனதிற்குள் ஏதோ தெரியாத உணர்வு தோன்ற ஆரம்பித்தது முந்தைய வீடியோவில் நம் நீல நிற புடவை அணிந்த நாயகி, அவள் கணவன் ஸ்ரீனிவாஸ் தங்களின் முறைக்காக காத்திருந்தார்கள். தன் கையிலிருந்த சீட்டை ஸ்ரீநிவாஸ் கையில் திணித்து விட்டு, நயாகரா அருவி போல் தொங்கிக் கொண்டிருந்த தன் நீண்ட முடிகளை தண்ணீரில் நனைத்தாள் அந்த நீல நிற நாயகி.

இதற்குள் இருவருக்கும் மு ன் இருந்த பெண் மொட்டை அடிக்க  உட்கார, அப்படிப்பட்ட அழகான பெண் கடைசியாக தன் முடியை மொட்டை அடிக்க அவள் குனிந்தாள். அவள் முடி அனைத்தும்  அவள் முகத்தை கருப்பு திரை போல் மூடி விட, ஸ்ரீனிவாஸ் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.  நீல நிற நாயகியும் ஒரு கணம் அதை பார்த்தாள்.

பார்பர் சட்டென்று தன் கூரிய ரேஸரில் பிளேடை போட்டு விட்டு, அவள் உச்சந்தலையில் தண்ணீரை ஊற்றினான்... அவள் தலை நனைய ஆரம்பித்தது. அவள் தலையில் இருந்து நீர் சொட்ட சொட்ட, "என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய்" என்ற பாடலில் மூழ்கி இருந்தான்.

அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை போலும் அவன் மனதில். அவனது முகபாவங்கள் மற்றும் அவனது உணர்வுகள் அவனது முகத்தில் தெளிவாக தெரிந்தது. ஸ்ரீனிவாஸ் இந்த கணத்திற்காக எதனை வருடங்கள் காத்திருந்தான் என்பது அவன் கண்களில் தெரிய பிரக்யா அவனைப் பார்த்து சிரிக்கிறாள். கணினி திரையில் பார்க்கும் பிரக்யாவிற்கே அவனது உணர்வுகள் புரிந்து இருந்தால், தன் மனைவி மொட்டையை நேரில் பார்த்து அனுபவிக்கும் ஸ்ரீனிவாஸ் உணர்வுகளை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். ஸ்ரீநிவாஸ் தனது விரல்களால் ஏதோ ஒரு இடத்தை மசாஜ் செய்யத் தொடங்கினான்.


ஸ்ரீனிவாஸின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.... அந்த காட்சி பிரக்யாவுக்கு பார்க்க நன்றாக இருக்கிறது.   ஸ்ரீனிவாஸின் மனைவி இப்போது ஒரு முக்கியமான நிகழ்வுக்கு ஆயத்தமானாள்.  28 வயது பெண் சுத்தமாக மொட்டையடித்த தலையுடன் எழுந்தாள். ஸ்ரீனிவாஸ் உடனடியாக அவளின் தலையை பார்த்தான். அவனது கண்கள் அந்த பெண்ணின் மொட்டை தலையை பார்ப்பதில் இருக்க, அவனது கைகள் அந்த பெண்ணின் மொட்டை தலையை தொட்டு பார்த்து அதன் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை அறிய அவனுக்கு ஆசையாக இருந்தது.



அங்கிருந்த முடிதிருத்தும் பெண் ஸ்ரீனிவாஸ் மனைவியைப் பார்த்து அவளை உட்காரச் சைகை செய்தான். அவள் மிகவும் வெட்கப்பட்டு ஸ்ரீனிவாஸின் முகத்தைப் பார்த்து கொண்டே அமர்ந்தாள். ஸ்ரீநிவாஸ் கையில் இருந்த சீட்டை முடிதிருத்தும் பெண்ணிடம் கொடுத்தான்.

சீட்டைக் கிழித்து பக்கத்திலிருந்த ஒரு சிறிய பெட்டியில் எறிந்தாள் அந்த பெண். அப்போது ஸ்ரீநிவாஸ் மனைவி அவள் தலைமுடியில் கைவைக்க, முடிதிருத்தும் பெண்ணின் இடது கை அவளது தலையைக் கீழே குனிய வைக்க, என்ன நடக்கப் போகிறது என்று 4 கண்களும் காத்திருந்தன. ஒருவர் திரையில் ஸ்ரீநிவாஸ், மற்றவர் திரையின் முன் அமர்ந்து ஒவ்வொரு காட்சியையும் ரசித்து கொண்டிருந்த பிரக்யா.

முடிதிருத்தும் பெண் தன் அருகில் இருந்த வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்தாள். பின் முழுக்க நனைந்திருந்த தலைமுடியை கையால் இரண்டாகப் பிரித்தாள்.  பல மொட்டைகளை  கண்ட ஸ்ரீநிவாஸுக்கு இப்போது இப்படித்தான் நடக்க போகிறது என்று தெரியும். ஸ்ரீநிவாஸ்  கால்களுக்கு முன்னால் அவனது இத்தனை வருட காத்திருப்பு நடக்கிறதே என்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த மனநிலை ஸ்ரீநிவாஸுக்கு காற்றில் மிதப்பது போல் இருக்கிறது.

முடிதிருத்தும் பெண் அவளின் வலது பக்கத்தில் தொங்கிய முடிகளை எல்லாம் பிடித்து முடிச்சு போல் கட்டினாள். அது கிரிக்கெட் பந்து அளவில் அவளது வலது பக்கத்தில் தொங்கியது. அவளின் இடது பக்க முடியை அதே போல முடிச்சு போட்டு விட்டு

அதை இருபுறமும் ரப்பர் பேண்ட் போட்டு கட்டி விட, இதை வீடியோவில் பதிவு செய்யும் ஸ்ரீனிவாஸ், தன் மனைவியின்  கண்களில் மகிழ்ச்சியை பார்க்க, அவள் வெட்கத்துடன் ஸ்ரீனிவாஸை பார்க்கிறாள் .



முடிதிருத்தும் பெண் அருகிலிருந்த டவலால் கையைத் துடைத்து விட்டு, கவரில் இருந்து  ஸ்ரீனிவாஸ் கொடுத்த பிளேடு துண்டை எடுத்து பக்கத்தில் இருந்த ரேஸரில் போட்டாள். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது பிரக்யாவின் கைகள் நடுங்குகின்றன. ஆனால் ஸ்ரீனிவாஸின்  மனைவி சிங்கம் ஒரு மான் குட்டியை வேட்டையாடுவது போல் காத்து நிற்கிறாள் சவர கத்தியின் முதல் ஸ்பரிசம் தன் மீது விழுவதற்காக.

முடிதிருத்தும் பெண்ணுக்கு இதெல்லாம் தெரியாது. அவள் தன் வேலையைத் தொடங்குகிறாள். "சவர கத்தியை அப்படியே எடுத்து மேலே கொண்டு வந்து வகிட்டில் உச்சந்தலையில் வைத்து  "ஷ்ரிக் ஷ்ரிக் ஷ்ரிக் ஷ்ரிக் ஷ்ரிக்" என்ற சத்தம் மட்டும் திரையில் கேட்க, பிரக்யா திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பிரக்யா அந்த சத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

ஒரு துளி மழைக்காகக் காத்திருப்பதைப் போல ஸ்ரீநிவாஸ் அந்த இனிய காட்சிக்காகப் பல வருடங்களாகக் காத்திருந்தான். பிரக்யாவும் தன் நெற்றியில் சவர கத்தியின் ஸ்பரிசத்தை உணர்கிறாள். சவர கத்தி திரையில் மொட்டை அடிக்க  தொடங்கும் இடத்தில் தன்னுடைய இடது கையை வைத்தாள் பிரக்யா.


பிரக்யா அப்படியே தலையை குனிந்து கீழே பார்க்க, அங்கே ஒரு நீண்ட மெல்லிய பாம்பு. போல அவள் தலைமுடி சுருண்டு விழ பிரக்யாவின் புருவம் குழப்பத்தில் சுருங்கியது...

"ஐயோ, நான் என்ன செய்தேன்"



அவள் கையில் இருந்த கத்தியை கைவிட்டு தலைமுடியைக் கையில் எடுத்துக்கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

பிரக்யா எங்கே, என்ன செய்கிறாள் என்று பல கேள்விகள் உங்கள் மனதில் ஓடுகிறது. இப்போது சரியாக என்ன என்று பார்ப்போம்.


No comments:

Post a Comment