Saturday 27 May 2023

ராமின் அம்மா - மூன்றாம் பாகம்

அடுத்த சில நாட்களில் ஸ்கூல் தொடங்க... ராம் பள்ளிக்கு செல்ல ஆர்ம்பித்தான். ஸ்வேதாவும் நடந்ததை மறந்து இயல்பாக இருக்க ஆரம்பித்தாள். ஸ்வேதாவின் மொட்டை தலையில் முடி வளர, வளர அடிக்கடி தன்னுடைய ஹேர்கட்டை மாற்றிக் கொண்டு இருந்தாள். ஹேர் கட் மாடர்ன்னாக இருப்பதால் உடைகளையும் மாடர்னாக உடுத்த ஆரம்பித்தாள்.


சேலை மட்டும் அணிந்து கொண்டு இருந்த ஸ்வேதா, இப்போது எல்லாம் ஜூன்ஸ், ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டிஷர்ட் என விதவிதமான ஆடைகளை அணிய ஆரம்பித்தாள். ஒரு நாள் ராம் பள்ளி முடிந்து வர, தன் வீட்டின் முன் அரவிந்தின் கார் நிற்பதை பார்த்தான். ராம் வீட்டிற்க்குள் செல்ல, ஸ்வேதா அரவிந்த் இருவரும் வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஸ்வேதா ஒரு மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டாப்பும், ஒயிட் லெக்கின்ஸிம் அணிந்து இருக்க,அவள் எப்போதும் போடும் ஷால் மிஸ்ஸாகி இருந்தது.


அரவிந்த்... நீ ப்ரெஷ் அப் ஆகிட்டு படி... நான் அரவிந்த் கூட வெளியே போய்ட்டு வந்துடறேன்... என்று சொன்ன ஸ்வேதா அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் கிளம்ப, ராம் சோபாவில் உட்கார்ந்தான். 

ராம்... ஒரு சின்ன விஷயம்... தப்பா நினைக்காதே...

சொல்லுங்கம்மா...

நான் அரவிந்த் சார் கூட வெளியே போறது அப்பாவுக்கு தெரிய வேணாம்... சரியா...

சரிம்மா...

சரி... நான் போய்ட்டு சீக்கிரம் வரேன்... என்று சொன்னவள் அரவிந்தின் காரில் கிளம்பினாள். அடுத்த நாள் காலை ராம் ஸ்கூலுக்கு ரெடியாக, அவனுக்கு எல்லாம் பேக் செய்து கொடுத்த ஸ்வேதா... ராமுக்கு ஷீ போட உதவினாள்.



ராம்... உங்க ப்ரின்சி அரவிந்த் வேற யாரும் இல்ல... உங்க அப்பாவோட ப்ரெண்ட் தான்... நானும், உங்க அப்பாவும் காலேஜ்ல ஒண்ணா படிக்கும் போதே லவ் பண்ணி, எங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்னிட்டோம்... அப்ப எங்க கூட அரவிந்தும் படிச்சான்... அவன் என்னை ஒன் சைடா லவ் பண்ணி இருக்கான். நான் உங்க அப்பாவை லவ் பண்றது அவனுக்கு தெரிஞ்சதும், அவன் சூசைட் ட்ரை பண்ணான்... அப்போதான் எங்களுக்கு அவன் என்னை லவ் பண்ணது தெரிஞ்சது... ஆனாலும் அப்போ எப்படியோ பேசி அவனுக்கு புரிய வச்சோம்...
 
-----------------------

இவ்வளவு நாள் கழிச்சு நான் அவனை மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கல... என்ன எல்லாமோ நடந்து போச்சு... ஸ்டில் அவன் இன்னும் சிங்கிளா தான் இருக்கான்... என்னையே நினைச்சுட்டு... ஆனா என் மேல சின்ன கோபமும் அவன் மனசுக்குள்ள இருக்கு... அதோட வெளிப்பாடு தான் அவன் எனக்கு மொட்டை அடிச்சதும்... அதுக்கு அப்புறம் நடந்ததும்...

ஸாரிம்மா... எல்லாம் என்னால தான்...

பரவாயில்லை விடு... நீ உன் படிப்புல கவனமா இரு... நீ நல்லா மார்க் வாங்கி நல்ல வேலையில சேரணும்... உன் லைப்ல நீ கஷ்டப்பட கூடாதுன்னு தான் நான் இதெல்லாம் பண்றேன்... சரியா...

சரிம்மா...

ராம், இப்போதெல்லாம் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்கினான். ஆனால் தன் அம்மாவின் மாற்றங்களை அவன் கவனிக்க தவறவில்லை. அதே போல யாருடனும் பழகாமல் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டான். மற்ற மாணவர்களுடன் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தான். அவனுடைய கோபம் மட்டும் இன்னும் குறையாமல் இருந்தது.



ஸ்வேதா ராமின் படிப்பு முன்னேறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். அதற்கு காரணம் அரவிந்த் அவன் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது தான் என்று நம்பினாள் ஸ்வேதா. 

ராம் பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரெண்டாம் வகுப்பு வந்துவிட்டான். ஸ்வேதா அரவிந்த் கையால் மொட்டை அடித்து சரியாக ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. அவளுடைய முடி இப்போது நல்ல அடர்த்தியுடன் இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. 



ஆனால் அந்த அடர்த்தியான முடி மீண்டும் ராம் செய்த தவறால் மொட்டை அடிக்கப்பட்டது.

ராம் ஒருநாள் எப்போதும் போல லஞ்ச் டைமில் சாப்பிட்ட பிறகு, பேக் ஓபன் பண்ணி புக் நடுவில் தன் அம்மா ஸ்வேதா மொட்டை அடித்து போது எடுத்த போட்டோவை பார்த்துக் கொண்டு இருக்க, அதை அவனோட கிளாஸ்மேட் பார்த்து விட்டான். உடனே ராமிடமிருந்து அந்த போட்டோவை பிடுங்கி

"ஹேய்,  இங்கே பாருங்கடா ராம் அம்மா மொட்டை"னு ஸ்கூல் கிரவுண்ட்டில் இருந்த சக மாணவர்களிடம் கேலியாக சொல்லிக் கொண்டே ஓடினான். தன் அம்மாவை கேலி செய்வதை பார்த்த ராமுக்கு சரியான கோபம் வந்ததது. அந்த கோபத்தில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் அந்த மாணவனை கடுமையாக தாக்குகிறான்.

விஷயம் பிரின்சிபால் ரூம் வரை போக அரவிந்த் அவனை கடுமையாக திட்டிவிட்டு, அப்போதே ஸ்வேதாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்கிறான். ராமுடன் வம்பு செய்த மாணவனின் பேரண்ட்ஸையும் அழைத்து திட்டி அனுப்ப, ராம், வினோத் இருவரின் கோபம் இன்னும் அதிகமாகிறது. 

அன்று மாலை ஸ்வேதா ராமுக்கு அட்வைஸ் மழை பொழிய, ராம் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தான்.

சொல்லு ராம், அவன் மேல உனக்கு என்ன கோபம்... அவனை அப்படி துரத்தி, துரத்தி அடிக்க நீ என்ன ரவுடியா?

அம்மா, அவன் நீங்க மொட்டை போட்டு இருந்த போட்டோவை பார்த்து, ஸ்கூல் மொத்தமும் கத்தி சொன்னான்... அதான் அடிச்சேன்...

மொட்டைன்னு தானே சொன்னான்... அதுல என்ன இருக்கு...

அம்மா, நீ என்னால தான் மொட்டை அடிக்க வேண்டியதா போச்சு... எனக்கு அது பிடிக்கல அம்மா...

அதுக்காக நீ அவனை அடிக்க போவியா... இந்த வயசுல உனக்கு எதுக்கு அவ்ளோ ரோசம்... அப்படி ரோசம் இருக்கிறவன் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும்...என்று கோபமாக பேசிய ஸ்வேதா தன் வேலையை பார்க்க கிச்சனுக்குள் புகுந்தாள்.

ஸ்வேதா கிச்சனில் பிஸியாக இருக்க, அந்த சமயம் பார்த்து ராம் விளையாட ஓடிவிட்டான். அவன் திரும்பி வரும் போது ஸ்வேதா தன் நீளமான முடியை எடுத்து முன்னால் போட்டபடி வேலை செய்து கொண்டு இருக்க, ராம் தன் அம்மாவின் அழகான முடியை ரசிக்க தொடங்கினான்.

அடுத்த நாள் காலை ஸ்கூல் கிரவுண்டில் ராம் விளையாடிக் கொண்டு இருக்க, அங்கு வந்த வினோத் மீண்டும் ராமை சீண்டும் விதமாக சேட்டைகள் செய்தான். ராமுக்கு தன் அம்மா பொறுமையாக இருக்க சொன்னது நினைவு வர, வினோத்திடம் இருந்து விலகி போனான். ஆனால் வினோத்  விடாமல் சேட்டை செய்ய, ஒரு கட்டம் வரை பொறுத்து பார்த்த ராம், அங்கு இருந்த ஒரு குச்சியை எடுதது வினோத்தை விளாசினான். வினோத்  வலியில் துடித்துக் கொண்டு ராமிடம் இருந்து தப்பித்து ஓடினான்.



அன்று மாலை பள்ளியில் அந்த சம்பவத்துக்காக ஸ்வேதாவை வினோத்தின் பெற்றோர் எல்லார் முன்னிலையில் வசைபாட, அரவிந்த் ராமிற்க்கு டிசி கொடுக்கும் முடிவுக்கு வந்தான். ஸ்வேதா எல்லோரிடமும் கெஞ்சி மன்னிப்பு கேட்டு, அந்த பிரச்சனையை முடித்துவிட்டு வந்தாள்.

 ஸ்வேதா அவள் வண்டியில் வந்துவிட ராம் சோகத்தில் நடந்தே வீட்டுக்கு வந்தான். ராம் வீட்டிற்க்குள் வர, ஸ்வேதா எங்கோ வெளியே கிளம்பி செல்ல துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு இருக்க, அதில் ராமுக்கு தேவையான துணிகளும் இருந்தது. ராம் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க, ஸ்வேதாவின் போன் ரிங் ஆனது.

 

போனை எடுத்து பேசு ராம்... அப்பா தான் உன் கூட பேசணுமாம்...

ராம் போனை எடுத்து கால் அட்டெண்ட் செய்தான். மறுமுனையில் அவனுடைய அப்பா "என்ன ராம், எப்படி இருக்க, இன்னிக்கு ஸ்கூல் முடிஞ்சுதா?" 

முடிஞ்சுது அப்பா...

சரி ராம்... அம்மா கோவிலுக்கு போகணுமாம்... நீ பத்திரமா அம்மாவை கூட்டிட்டு போய்ட்டு வா... சரியா?"

சரி அப்பா... என்று மேலும் சில விஷயங்களை பேசிவிட்டு போனை வைத்தான் ராம். ராம் ஸ்வேதாவை பார்க்க, அவள் இவனை கண்டு கொள்ளாமல் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.


அம்மா... இப்ப எங்க போக போறோம்... 

ஏன் சொன்னா தான் வருவியா? சொல்லலன்னா என்னையும் வினோத்தை அடிச்சா மாதிரி அடிப்பியா?

அப்படி இல்லம்மா?

என்ன தெரியணும் உனக்கு... இப்போ நாம ரெண்டு பேரும் திருப்பதிக்கு போறோம்... ஒரு வேண்டுதல் இருக்கு... அதனால நாம போய் மொட்டை போட்டு முடி காணிக்கை கொடுத்துட்டு வேண்டுதலை நிறைவேற்றிட்டு வந்துடலாம்...

ஸ்வேதா சொன்னதை கேட்டு ராம் திகைத்தபடியே நின்று இருந்தான். அப்போது ஸ்வேதா ராமை பார்த்து முறைக்க, ராம் அவளை பார்த்து பயந்து போனான். அவள் பார்த்த விதம் "உனக்கு என்ன அவ்ளோ திமிர்" என்று அவனை கேட்பது போல இருந்தது அவளுடைய பார்வை. உனக்கு மொட்டை தலையில் என்னை பார்க்க பிடிக்காதா? அதுக்காக எல்லாரையும் அடிப்பியா? இப்போ உன் கண் முன்னே மொட்டை போட்டுக்குறேன்... நீ என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன் என்று பார்ப்பது போல இருந்தது.



No comments:

Post a Comment