Saturday 1 June 2024

பார்பர் ரமேஷ் - முதலாம் பாகம்

இன்னும் சூரியன் எட்டிப் பார்க்காத காலை பொழுதாக இருந்தது. குளித்து முடித்து தயாராகிக் கொண்டிருந்த ரமேஷ் மணியை பார்த்தான். கடிகாரம் 6:15 எனக் கூறியது. மெல்ல சத்தம் வராமல் ஜன்னல் கதவை திறந்தான். இன்னும் எதிரில் இருந்த வீட்டின் கதவுகள் திறக்கப்படவில்லை. அவன் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று பரபரப்புடன் அவன் கண்கள் தேடிக் கொண்டிருக்க, எதிர் வீட்டு கதவு திறந்தது. தினமும் நடப்பது தான் என்றாலும் இதயத் துடிப்பு அதிகரித்துக்கொண்டிருந்த ரமேஷின் கண்களுக்கு கூந்தல் தரிசனம் தருவது போல வெளியே வந்தாள் வித்யா.



ஒரு கையில் காப்பி கோப்பையை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் தான் ஜடையை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டே படிக்கட்டில் இறங்கினாள். அவளின் அடுத்த செய்கை என்னவாக இருக்கும் என ரமேஷூக்கு தெரியும். சட்டென ஜன்னலில் இருந்து விலகி மறைந்து கொண்டான். படியிலிருந்து இறங்கிய வித்யா மெல்ல தன் இடது கையால் காதோரத்தில் இருந்த தலைமுடியை சரி செய்து கொண்டே இடதுபுறம் திரும்பினாள். ரமேஷின் அறையில் விளக்கு எறிந்து கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. ஆனால் இன்னும் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கவனித்து விட்டு  அருகில் இருந்த ஒரு சொகுசு சேரில் அமர்ந்தாள். கையில் இருந்த காப்பி கோப்பையை மெல்ல ருசித்து பருகிக்கொண்டிருந்தாள்.


ரமேஷ் மீண்டும் எட்டிப் பார்த்தான். அவள் பார்வை அவன் அறையின் மீது இல்லை. ஆனால் அந்த அறை ஜன்னலின் பார்வை அவள்மீது முழுமையாக இருந்தது. தன்னுடைய வீடியோ காமிராவை எடுத்து ஜன்னலின் ஓரத்தில் வைத்து வித்யாவை ஸூம் செய்து ரெகார்ட் செய்ய ஆரம்பித்தான். நீளமான அவளுடைய ஜடை மடியில் தவழ்ந்து விழுவது போல வந்து அமர்ந்தது. அவள் விரல்கள்  அவளுடைய கேசத்தை கோதி விட ஆரம்பித்தது. தன்னுடய ஜடையை எடுத்து கைகளில் ஏந்தினாள். ஒரு குழந்தையை தடவுவதுபோல மெல்ல தன் ஜடையை தடவிக் கொடுத்தாள். ரமேஷின் மனது அவள் ஜடையை கைகளில் ஏந்திக்கொள்ள ஏங்கியது.  விரல்களால் மெல்ல இறங்கிவந்து அவளுடைய ஜடையை பிரித்து விட துவங்கினாள்.  அவள் பின்னலில் இருந்து கற்றை கற்றையாக அடர்த்தியான அவளுடைய தலைமுடி விடுபட ஆரம்பித்தது. பின்னலை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு விரிந்த கூந்தலுடன் கதிரவனுக்காக காத்திருந்தாள். சுமார் எட்டு நிமிடங்களுக்கு பின் ரமேஷ் வீடியோ எடுப்பதை நிறுத்தினான். காமிராவை தூக்கி வைத்து விட்டு நேரமாவதை உணர்ந்து வெளியே கிளம்பினான். அவன் கதவை திறந்ததும் வித்யாவின் பார்வை அவன் மேல் விழுந்தது. இருவரும் பரஸ்பரம் சிறிய புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

வித்யாவின் கணவன் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறான். தற்போது வீட்டில் வித்யா தன் மகன் விக்கியுடன் இருக்கிறாள். வீட்டின் வாடகைக்கு விட்டிருந்த பகுதியில் ரமேஷ் குடியிருக்கிறான். தனிமையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பிரம்மசாரியை வாடகைக்கு குடியமர்த்தலாமா என மிகவும் யோசனை செய்தாள் வித்யா. மேலும் கணவரின் சொந்த ஊரை சேர்ந்தவன் மற்றும் அவள் மாமியார் அவனையும் அவன் குடும்பத்தையும் பற்றி நல்ல விதமாக கூறி அவனுக்கே வாடகைக்கு விட அறிவுரை செய்திருந்தாள். முதலில் சற்று தயங்கினாலும் அவள் கணவரிடம் கூறிவிட்டு அங்கே வாடகைக்கு அனுமதித்தாள். அவனுடைய நடவடிக்கையை கண்காணித்தவளுக்கு சற்றே அதிசயமாக பட்டது. அவன் அதிகம் பேசுவதில்லை. இதுவரை எந்த கெட்ட பழக்கங்களையும் அவனிடம் கண்டதில்லை. அவனுடைய அம்மா சமீபத்தில் காலமானதால், கிராமத்தில் தங்கியிருக்க மனமில்லாமல் அவன் சலூன் நடத்தும் இந்த ஊரிலேயே இருக்கலாம் என முடிவெடுத்து வந்திருந்தான். அவனுடைய நிலைமை அவளை சற்று அவனிடம் கனிவுடன் நடந்துகொள்ள வைத்தது. மேலும் அவள் கணவன் அவனை சிறுவயது முதல் பழக்கம் என்றதும் அவனை ஒரு உறவினன் போல உணறவைத்தது. நாட்கள் செல்ல செல்ல ரமேஷ் சற்று முகம் கொடுத்து பேச ஆரம்பித்தான். 



வித்யாவின் மகன் விக்கி அவன் மாலையில் வீடு வந்ததுமே மாமா என்று விளையாட வந்து விடுவான். அவனுடன் விளையாடினால் வித்யா எதுவும் தவறாக நினைப்பளோ என தயங்கியவன் நாட்கள் செல்ல செல்ல அந்த சிறுவனுடன் ஐக்கியமாகி விட்டான். நாட்கள் செல்ல செல்ல அவன் மிகவும் இயல்பாகவே பழகினான். வார‌ இறுதி நாட்களில் சில நேரங்களில் அவனுக்கும் சேர்த்து சமைத்து விட்டு வீட்டிற்க்கு அழைப்பாள். அவ்வப்போது அவள் கணவனுடன் வீடியோ சாட்-ல் பேசும்போது அவனையும் அழைத்து பேச வைப்பாள். அவளுடைய மாமியார் வந்தாலும் அவனுடன் கனிவாக நடந்துகொள்வார். ஆனால் வித்யாவிற்கு தெரியாதே ஒரு விஷயம் அவன் ஒரு Hair Fetish என்பது.

இந்த வீட்டிற்கு குடிவந்த புதிதில் ரமேஷ் வித்யாவின் தலைமுடியை அதிகம் கவனிக்கவில்லை. ஓரிரு வாரங்கள் கழித்துதான் அவளுடைய கூந்தலை கவனித்து சற்று மிரண்டு போனான். நல்ல அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி. மேலும் அது குளிர்காலம் என்பதால் அவள் பொதுவாக காலை நேரத்தில் அவன் கிளம்பும் போது அவன் கண்ணில் படுவது இல்லை. கோடை காலம் வந்தால் காலையிலேயே எழுந்து வெளியே வந்து காற்றோட்டமாக அமர்ந்து விடுவாள். அவளுடைய அழகிய தலை முடியை பார்த்து தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஒருநாள் ஜன்னல் வழியாக அவளுக்கு தெரியாமல் அவள் தலை முடியை வீடியோவாக எடுத்து பார்த்து ரசித்தான்.பின்னர் தினமும் அது அவனுக்கு வாடிக்கையாகி விட்டது. இன்றும் அது போலதான் ஒரு வீடியோவை எடுத்திருந்தான். அவள் வீசிய ஒரு சிநேக புன்னகைக்கு பதிலளித்து விட்டு நகர்ந்தான்.  இந்நேரம் அவள் அவனை அழைத்து ஒரு விஷயத்தை கேட்க வேண்டும் என்று நினைத்தான். அவன் நினைத்தது போலவே வித்யா அவனை அழைத்தாள்.

வித்யா: ரமேஷ்… என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமா கிளம்பியாச்சு.

ரமேஷ்: ஒண்ணும் இல்லங்க… ஒரு சின்ன வேலை இருக்கு. ஒரு நண்பன் ஊரில இருந்து வாரான். அவனை கூட்டிட்டு போய் இன்னொரு இடத்துல விடனும்.

வித்யா: சரி..சரி… இன்னைக்கு எப்போ உன்னோட சலூன்க்கு நான் வரலாம்?

ரமேஷ்: உங்க இஷ்டம் எப்போ வேணும்னாலும் வாங்க.


வித்யா: இப்படித்தான் ஒரு ரொம்பநாளா சொல்ற…. இன்னைக்கு விக்கிக்கு பண்ற Haircut-ல அப்படியே உன்னோட சலூன் எப்படி இருக்கும்னு பார்க்கப் போறேன்.

ரமேஷ்: தாராளமா வாங்க. ஆனா பொதுவா குழந்தைகளுக்கு முடி வெட்ட கூட்டிட்டு வர்ற லேடீஸ்கிட்ட பொதுவா சாயங்காலம் தான் வர சொல்லுவேன். அப்போதான் கூட்டம் கொஞ்சம் கம்மியா இருக்கும்.

வித்யா: பொதுவா நான் இவனை சலூன்க்கு கூட்டிட்டு போக மாட்டேன். நான் போகிற பார்லர்லயே அவனுக்கும் முடி வெட்டி விட சொல்லுவேன்.

ரமேஷ்: ஓ.. சரி..சரி… இப்போ விக்கி அங்க முடி வெட்ட மாட்டேன்னு சொல்றானா?

வித்யா: அதெல்லாம் இல்ல…. ஒரு வருஷமா இங்கதான இருக்க…. அவனும் உன்கிட்ட நல்லா பழகுறான். எவ்ளோ நாள் தான் அவனுக்கு லேடீஸ் பார்லர்ல முடி வெட்டுறது.

ரமேஷ்: அதுவும் சரிதான். சரி என்கிட்ட சொன்னா நானே அவனை கூட்டிட்டு போவேன்ல….

வித்யா: ஏன் ரமேஷ்.. உன்னோட சலூன்க்கு நான் வரக்கூடாதா?

ரமேஷ்: அய்யோ… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.. நீங்க தாராளமா வாங்க… ஒரு மணிக்கு மேல வாங்க… ரொம்ப கூட்டம் இருக்காது.

வித்யா: அதுனால மட்டும் இல்ல…. எனக்கும் அங்க கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு. அதை முடிச்சிட்டு வரணும்…. எவ்ளோ நேரம் ஆகும்னு சரிய தெரியலை

ரமேஷ்: சரி… பரவாயில்ல… எப்போ முடியுமோ வாங்க. நான் இப்போ கிளம்புறேன்… நேரமாச்சு.

மனத்திற்குள் திருப்தி பட்டுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். 

அவனுடைய நண்பனை வரவேற்று வேறு ஒரு இடத்தில் இறக்கி விட்டு வந்து தன்னுடைய வேலையை ஆரம்பித்தான். வழக்கம் போல இன்றும் காலை நேரம் சற்று கூட்டமாக இருந்தது. மதியத்திற்கு மேலே சற்று ஓய்வு கிடைத்தது. அங்கிருந்த தினசரியை எடுத்து படிக்க துவங்கினான். அப்போது யாரோ வருவது போல இருந்தது. கடையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் வித்யா. அவளை இவ்வளவு விரைவாக அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை. உள்ளே நுழைந்தவள் அவனை பார்த்து சிரித்து விட்டு கடையை சுற்றி நோட்டமிட்டாள்.

அவள் மனதில் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாகவும், விசாலமாகவும் இருந்தது. மூன்று பார்பர் சேர் இருந்தது. ரமேஷ் மட்டும் அமர்ந்து இருந்தான். அவளுடன் விக்கி வரவில்லை. 



வழக்கமாக வரும் கஷ்டமர்களிடம் கேட்பது போல அவளிடம் “உள்ள வாங்க… என்ன பண்ணனும்.. கட்டிங்கா…இல்ல ஷேவீங்கா..” என்று சற்று நக்கலுடன் கேட்டான். வித்யா ஒரு நிமிடம் யோசித்தாலும் அவன் குறும்பாக கேட்கிறான் என புரிந்துகொண்டாள். மேலும் நக்கலாக அவனிடம் “கட்டிங்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அவனும் விடுவதாக இல்லை. பதிலுக்கு “அப்போ வாங்க ஜடையை பின்னால் எடுத்துப்போட்டு இங்க உட்காருங்க” என்று சொல்லி நடுவில் இருந்த பார்பர் சேரை காட்டினான். 

“போதும் ரமேஷ் உன்னோட விளையாட்டு” என்றாள்.

ரமேஷ்: என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க… விக்கி வரலையா?

வித்யா: என் வீட்டுக்காரரோட தங்கை வந்தனா வந்திருந்தாள்.
 பக்கத்து டெய்லர் கடை வரைக்கும் வந்தோம். அவளோட இப்போ பக்கத்து கடையில ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டு இருக்கான்.  இப்போ அப்படியே எவ்ளோ கூட்டம் இருக்குனு பார்க்க வந்தேன்.

ரமேஷ்: ஓ…சரி..சரி….

வித்யா: முடி வெட்ட எவ்ளோ வாங்குறிங்க?

ரமேஷ்: நம்ம விக்கி தான.. எதுக்கு காசெல்லம்….

வித்யா: பொதுவா சொல்லுங்க….

ரமேஷ்:  கட்டிங் மட்டும்னா 60 ரூபாய்… கட்டிங் & ஷேவீங் னா 85 ரூபாய்.

வித்யா: லேடீஸ்க்கு எவ்ளோ வாங்குறிங்க?

ரமேஷ்: ஹாஹா… இங்க பொதுவா ஆம்பளைங்க மட்டும் தான் வருவாங்க… லேடீஸ் எதுக்கு இங்க வரப் போறாங்க… ஊரெல்லாம் நிறைய பார்லர் இருக்கே.

வித்யா: ஓ… அப்போ நீங்க இதுவரைக்கும் லேடீஸ்க்கு முடி வெட்டுனது இல்லயா?

ரமேஷ்: அப்படினு சொல்ல முடியாது…. சில நேரங்கள்ல குழந்தைகளை கூட்டிட்டு வர பெண்கள் கொஞ்சமா அவங்க முடியை ட்ரிம் பண்ண சொல்லுவாங்க…..

வித்யா: சூப்பர்….அவங்களுக்கும் இதே சேர் தானா?

ரமேஷ்: ஆமா.. இங்க வேற என்ன சேர் இருக்கு…. ஒரு சிலர்க்கு மட்டும் லேயர் ஸ்டைல் பண்ணி இருக்கேன்… அவங்க மட்டும் இந்த சேர்ல உட்கார்ந்து முடி வெட்டி இருக்காங்க… மத்த படி வெறும் ட்ரிம் மட்டும்னா ஜஸ்ட் நின்னு கிட்டே  அவங்களோட ஜடையை அவிழ்த்து விட சொல்லி கொஞ்சம் சீவி விட்டு கட் பண்ணி விடுவேன். அவ்ளோதான்.

வித்யா: சரி..சரி….

ரமேஷ்: என்ன திடீர்னு… லேடீஸ் கட்டிங் பத்தி கேட்குறீங்க?

வித்யா: நீ ஒரு ட்யூப்லைட்…. நீ லேடீஸ்க்கு முடி கட் பண்ணி விட்டா உன்கிட்ட  பண்ண சொல்லலாம்னு தான்.

ரமேஷ்: ஹாஹா…இதுக்கு எதுக்கு இவ்ளோ பீடிகை…. எப்படி கட் பண்ணனும்னு சொல்லுங்க… என்னால முடியும்னா கட் பண்ணி விடுறேன்.

வித்யா: சரி சொல்றேன்… கொஞ்சம் இரு…

ரமேஷ்: ஏன் நீக்குறீங்க… வந்து உட்காருங்க….

வித்யா: எனக்கு இந்த பார்பர் சேர்ல உட்காரனும்னு ரொம்ப ஆசை. இங்கயே உட்காரலாமா?

ரமேஷ்: தாராளமா…

வித்யா விளையாட்டாக நினைத்து ஆர்வமாக சென்று நடுவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவள் ரமேஷை கடந்து சென்ற போது அவளுடைய ஜடையை கவனித்தான். அவன் தூரத்தில் இருந்து தினமும் ரசித்த கூந்தல் அவன் அருகிலேயே அவனைக் கடந்து சென்றது. அவனை தாண்டி செல்லும்போது அவனையும் வா என்று கூப்பிடுவது போல இருந்தது. 


அவள் சென்று அந்த நாற்காலியில் அமரும் போது பின்னாலேயே சென்ற ரமேஷ் அவள் அமர்ந்ததும் ஒரு சைடில் வந்த ஜடையை தன் கையால் எடுத்து சேரின் பின்பக்கம் போட்டான். வழக்கமாக வித்யா பார்லர் போகும் போதும் இது போலவே அவள் அமர்ந்ததும் அவளுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு தான் மேற்கொண்டு எதையும் கேட்பார்கள். 

இப்போதும்  அது போலவே ரமேஷும் அவளை கேட்காமல் அவளுடைய ஜடையை எடுத்து சேரின் பின்னால் போட்டு விட்டு அவள் பின்னால் நின்றான். ஆனால் அவள் உணராதது இன்னும் அவன் அவளுடைய ஜடையை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறான்.

பார்லரில்  மட்டுமே பெண்கள் அவள் தலை முடியை எடுத்து கையில் பிடித்து கொள்வது உண்டு. முதல் தடவையாக ஒரு ஆடவன் கையில் அவள் கூந்தல் அகப்பட்டு இருக்கிறது.  கூச்சமாக இருந்தாலும் ரமேஷ் பழகிய முகம் என்பதால் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனும் அவளிடம் என்ன மாதிரி கட் பண்ண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டே அவளுடைய ஜடையை தடவிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

அவன் அவளுடைய ஜடையை தடவிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது மெல்ல வித்யாவிற்கு புரிந்தது.   என்னதான் வீட்டில் அமைதியாக இருந்தாலும் இங்கு அவன் வேலையில் அவன் குறியாக இருக்கிறான் எனப் புரிந்தது. ஒருவேளை பார்லரில் உள்ள பெண்கள் சொல்லுவது போல இவனுக்கும் அவளுடைய தலைமுடி மிகவும் பிடித்துவிட்டது போல…. அதனால்தான் அவள் ஜடையை விடாமல் கையிலேயே வைத்திருக்கிறான் போல என நினைத்துக் கொண்டாள். மற்றவர்கள் அவள் கூந்தலை பற்றி நினைப்பது அவளுக்கு பெருமையே. எனவே அவள் அவனிடம் எதுவும் பேசாமல் அவன் என்ன செய்கிறான் எனப் பார்த்தாள்.

ரமேஷ் அவள் ஜடையை நன்றாக கவனித்தான். அவள் சிறிது நேரத்திற்க்கு முன்பாகவே தலை சீவியிருக்க வேண்டும் எனப் புரிந்தது. அவள் தலைமுடியை உச்சந் தலையிலிருந்து நோட்டமிட்டான். அவனையும் அறியாமல் அவள் விரல்கள் அவள் தலைமுடியை தடவிப்பார்த்தது. வித்யா கண்ணாடி வழியாக ரமேஷை கவனித்தாள். 

அவள் தினமும் வழக்கமாக பார்க்கும் ரமேஷ் போல அல்லாமல் அவன் கண்களில் ஒரு ஆர்வம் தெரிந்தது. அவன் கைகள் அவள் கூந்தல் கற்றைகளை தடவிப் பார்த்தன. மெல்ல அவன் விரல்கள் இறங்கி அவள் ஜடையை பிடித்தது. வித்யா சற்று கூச்சமாக உணர்ந்தாள். அவன் விரல்கள் மெல்ல கீழிறங்கி அவள் ஜடையின் அடிப்பகுதியை பிடித்தது. அவள் முடியை வெறும் ட்ரிம் மட்டும் செய்யப் போகிறாளா இல்லை வேறு எதுவும் ஸ்டைலில் கட் பண்ண வேண்டும் என சொல்லப் போகிறாளா என அவனுக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இப்படியே ஜடையோடு கட் பண்ண முடியாது என்பதால் துணிந்து அவள் ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். 

முதலில் அவள் ஜடையில் இருந்த ரப்பர் பாண்டை கழட்டினான். பின்னர் மெல்ல அவள் பின்னலை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். ரமேஷ் அவள் ஜடையை அவிழ்த்து விடுவது வித்யாவிற்கு தெரிந்தது. அவன் என்ன செய்யப் போகிறான் எனப் பார்க்கலாம் என அமைதியாக இருந்தாள்.

அவள் ஜடையை அவிழ்த்து விட அவளுடைய அடர்த்தியான தலைமுடி அவனை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. சில நொடிகளில் அவள் பின்னலை முழுவதுமாக அவிழ்த்து விட்டிருந்தான். 


தன் விரல்களால் மெல்ல அவள் முடியை கோதி விட்டான். பின்னர் அவள் முன்னால் வந்து அவளைக்கடந்து சென்று அவள் முன் இருந்த டீராயரை திறந்து உள்ளிருந்து ஒரு சீப்பு மற்றும் ஒரு கத்தரிக் கோலை எடுத்து வெளியே வைத்தான். அவன் பின்னால் சென்று நின்றாவுடன் கையிலிருந்த கத்தரிக் கோலை வேட்டுவது போல பாவனை செய்தான். அந்த கத்தரிக் கோலின் சத்தம் வித்யாவின் மனதில் ஒரு வித உணர்ச்சியை கிளப்பியது. 



கத்தரிக்கோலை பார்த்ததும் அவளுடைய கண்கள் விரிந்து இதயத் துடிப்பு சற்று அதிகமாகியது. சீப்பை மட்டும் எடுத்து வந்து அவள் தலை முடியை சீவி விட ஆரம்பித்தான். அவள் தலைமுடி இப்போது தான் பின்னலில் இருந்து விடுபட்டதால் அலை அலையாக இருந்தது. அதை சரி செய்வது போல அவள் தலை முடியை சீவினான் ரமேஷ். உதட்டில் புன்னகையுடன் அவனை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா. ரமேஷ் தன்னுடைய தலை முடியை சீவும் வரை அமைதியாக இருந்து விட்டு பின்னர் மௌனம் கலைத்தாள்.






No comments:

Post a Comment