Sunday 12 May 2019

யாரடி நீ மோகினி - வெண்ணிலா மொட்டை

ஜீ தமிழ் டிவியில் யாரடி நீ மோகினி நாடகத்தில் வெண்ணிலாவாக நடிப்பவர் நட்சத்திரா என்ற மலையாள நடிகை. அவர் மலையாளத்தில் சில படங்களும், தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்தார். அந்த படத்தில் கிளைமேக்ஸில் தன் நீளமான முடியை முழுவதுமாக மொட்டை அடித்து நடித்தார்.
அத்தை, இந்த வெண்ணிலா இருக்க வரை நான் முத்து மாமாவை நினைச்சு ஏங்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
கொஞ்சம் பொறுமையா இரு ஸ்வேதா.. அத்தை நான் உனக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்பேன்.
எவ்ளோ நாள் அத்தை... இன்னும் எவ்ளோ நாள் பொறுமையா இருக்கணும்...
ஸ்வேதா, இப்போ வெண்ணிலா முத்து மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு இருக்கா.. அதனால நாம முதல்ல வெண்ணிலாவை முத்து மனசுல இருந்து தூக்கி எரியனும்.
அதுக்கு என்ன அத்தை பண்றது...
கொஞ்சம் பொறுமையா இரு ஸ்வேதா.. நமக்கான வாய்ப்பு வரும் வரை கொஞ்சம் காத்துட்டு தான் இருக்கணும்..
அவளை பார்த்தாலே என் உடம்பு எல்லாம் பத்திட்டு எரியுது அத்தை... நான் அவளுக்கு எந்த விதத்துல குறைஞ்சவ... என் அழகு, அறிவு, படிப்பு, அந்தஸ்து இப்படி எதுல நான் அவளை விட கம்மியா இருக்கேன்..


ஸ்வேதா,
என்னடி அக்‌ஷயா, நீ என்ன சொல்லி என்னை கடுப்பேத்த போற..
உன்னை ஹர்ட் பண்ண சொல்லல ஸ்வேதா... வெண்ணிலா கிட்ட இருக்கிற சில விஷயங்கள் உன் கிட்ட இல்ல தான் ஸ்வேதா...
ஏய், என்னடி சொல்ற... எங்குட இருந்துட்டு அவளுக்கு சப்போர்ட் பண்றியா... சொல்லுடி நான் எதுல குறைச்சல்...
இல்லை ஸ்வேதா நீ கோவபடுவ...
இல்லை கோவபடமாட்டேன்..... சொல்லுடி நானும் தெரிஞ்சுக்குறேன்.
ஸ்வேதா...வெண்ணிலா வெள்ளந்தியான மனசுக்காரிடி... அவளுக்கு என்ன கெடுதல் நாம செஞ்சாலும் அவ  நமக்கு துரோகம் செய்யமாட்டா.. அவகிட்ட அன்பு, பாசம், கருணை, தெய்வபக்தி இப்படி நிறைய இருக்கு ஸ்வேதா.. ஆனா உங்கிட்ட அப்படி எதுவும் இல்லை.. அது உனக்கே தெரியுமே...
ஏய் அக்‌ஷயா, என்னடி ரொம்ப பேசற... விட்டா நான் வெண்ணிலா மயிருக்கு கூட சமமில்ல நு சொல்லுவ போல....
ஆமா ஸ்வேதா... அப்படிதான்...
ஏய் என்னடி பேசற.. கொழுப்பா உனக்கு...
ஸ்வேதா, அங்க பாரு... வெண்ணிலா மாடிக்கு போறா... அவளோட ஜடைய பாரு... எப்படி அழகா ஆடுது... நிஜமாலுமே வெண்ணிலா மயிருக்கு கூட நீ சமமில்ல ஸ்வேதா...!
ஏய்... அவ ஜடை தான் அவளுக்கு பெருசு... அதை ஒரு நிமிஷத்துல நான் இல்லாம பண்ணிடுவேன்...அதுக்கும் ஒரு சமயம் வரும்.. அப்போ இந்த ஸ்வேதா யாருன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்...
இந்த சண்டை நடந்து கொஞ்ச நாளில் முத்துவுக்கு வைரஸ் காய்ச்சல் வர பல நாட்களாக படுக்கையில் கிடந்தான் முத்தரசன். பல டாக்டர்கள் வைத்தியம் செய்தும், வெண்ணிலா சித்த வைத்தியம் செய்தும் முத்தரசனின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.  இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஸ்வேதா நினைத்தாள்.
வெண்ணிலா கோவிலுக்கு செல்லும் போது அங்கு ஸ்வேதா ஏற்பாடு செய்த பெண்கள் வெண்ணிலாவின் காதில் படும் படி பேசி வெண்ணிலாவின் மனதில் ஒரு விஷயத்தை நினைத்து வேண்டி கொண்டு அதற்க்கு பதிலாக பெண்கள் தங்களின் முடியை காணிக்கையாக கொடுப்பதாக வேண்டி கொண்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பேசிக் கொள்ள வெண்ணிலா அதை நம்பினாள்.
அதனால் முத்தரசனுக்கு சீக்கிரமே காய்ச்சலில் இருந்து குணமாகி வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அதற்க்கு தன் முடியை மொட்டை அடித்து காணிக்கையாக கொடுப்பதாக வேண்டி கொண்டாள்.
வெண்ணிலா அப்படி வேண்டி கொண்டதை பார்த்த பெண்கள் அதை ஸ்வேதாவிடம் சொல்ல தான் எதிர்பார்த்தது நடக்க போவதை எண்ணி ஸ்வேதா மகிழ்ச்சி அடைந்தாள். வெண்ணிலா சாமிக்கு வேண்டுதலை வைத்ததும் முத்தரசனும் எந்த பாதிப்பும் இல்லாமல் குணமாக வெண்ணிலா வேண்டுதலை நிறைவேற்ற நல்ல நாள் பார்த்து கோவிலுக்கு சென்றாள்.
வெண்ணிலா முத்தரசன் குடும்பத்துடன்  கோவிலுக்கு செல்ல கூடவே ஸ்வேதாவும் சென்றாள். வெண்ணிலா மொட்டை அடிப்பதை பார்த்து ரசிக்க ஆசையுடன் இருந்தாள். வெண்ணிலா மொட்டை அடிக்க டோக்கன் வாங்க செல்ல உடன் ஸ்வேதாவும் சென்றாள்.
என்ன வெண்ணிலா நீ முத்தரசன் மாமா மேல இவ்வளவு காதலோட இருக்கியா.. அவருக்காக மொட்டை அடிக்கணுமா..
ஆமாக்கா... இந்த கோவிலுக்கு வந்தப்போ சில பேர் பேசிட்டு இருந்தாங்க.. மொட்டை அடிக்கிறேன்னு வேண்டிகிட்டா எப்படிப்பட்ட வேண்டுதலா இருந்தாலும் நிறைவேறும்னு வேண்டிகிட்டேன்.
ம்ம்ம் நீ வேண்டிக்கிட்டது எல்லாம் சரி... ஆனா இது எல்லாம் என்னோட பிளான் படிதான் நடக்குது உனக்கு தெரியுமா வெண்ணிலா... உனக்கு தெரியுற மாதிரி பேசினாங்களே அவங்க நான் ஏற்பாடு செய்த பெண்கள் தான்...
வெண்ணிலா அதிர்ச்சியுடன் நிற்க
நான் உன்னை மொட்டை அடிக்கணும்னு நினைச்சேன்.. அது தான் இப்போ நடக்குது... நான் நினைக்கிற மாதிரி தான் நீ நடக்கணும்... நடக்க வைப்பா இந்த ஸ்வேதா.. போ போய் மொட்டை அடிச்சுக்கோ...


அக்கா நீங்க சொன்ன மாதிரி தான் நான் மொட்டை அடிக்கிறேன்.. இருக்கலாம்.. ஆனா நான் வேண்டியதால என் முத்து மாமா குணமாகி வந்தாரே அது போதும்க்கா...
என்று சொல்லியவாறு வெண்ணிலா மொட்டை அடிக்க சென்றாள்.
வெண்ணிலாவுக்காக அண்ணாமலை அங்கு ஒரு நாசுவனை கூட்டிக் கொண்டு வந்து இருந்தான். அவன் முன் வெண்ணிலா உட்கார நாசுவன் வெண்ணிலாவின் தலையில் தண்ணீரை நனைத்து விட்டு ஒரு பழைய ரேசரில் பிளேடு ஒன்றை பொருத்திக் கொண்டு வெண்ணிலா நெற்றியில் இருந்து மேல் நோக்கி சிரைத்தான்.
இருபக்கமும் கொண்டை போட்டு இருந்த முடி சிறிது கூட கீழே விழாமல் தொங்க நாசுவன் முடியை சிரைத்து கொண்டு இருந்தான். முத்தரசனும், அண்ணாமலையும் ஒன்றாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர். ஸ்வேதா முகம் எல்லாம் பல்லாக வெண்ணிலா மொட்டை மண்டையாவதை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளின் தோழிகளும் சந்தோஷமாக இருந்தனர்.
தாங்கள் நினைத்த மாதிரி வெண்ணிலா மொட்டை அடித்து கொண்டு பழிவாங்கியதை எண்ணி சந்தோஷமாக இருந்தனர்.
நாசுவன் வெண்ணிலாவின் பின் பக்க முடியை மொட்டை அடித்தான். குனிந்து உட்கார்ந்து இருந்த வெண்ணிலாவின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவள் மடியில் விழுந்தது. நாசுவன் வெண்ணிலாவின் தலையை மொத்தமாக மொட்டை அடித்தான். அதன் பின் அவள் தலையில் அங்கங்கே பிசிறாக இருந்த முடியை சிரைத்து  விட்டான்.
வெண்ணிலா மொட்டை தலையுடன் எழுந்தாள். அவள் எழுந்து ஸ்வேதாவை பார்க்க அவள் நக்கலாக சிரித்தாள். வெண்ணிலா தலையை குனிந்து கொண்டு குளிக்க செல்ல மற்றவர்கள் அனைவரும் அவள் வரும் வரை காத்து இருந்தனர்.
அரை மணி நேரத்தில் வெண்ணிலா குளித்து விட்டு புதிய தாவணி அணிந்து  மொட்டை தலையுடன் வர அனைவரும் அவளை பார்த்தனர். முத்தரசன் வெண்ணிலாவை பார்த்தவுடன் ஓடிச் சென்று அவள் கைகளை பிடித்து கொண்டு நன்றி சொன்னான்.
வெண்ணிலா, நீ எனக்காக இந்த கடுமையான வேண்டுதலை பண்ணுவேன்னு நான் நினைக்கல வெண்ணிலா.. நீ என் மனசுல ரொம்ப உயர்ந்த இடத்தில் இருக்க... என்ன பண்ணி நான் இதுக்கு மரியாதை செய்றதுன்னு தெரியல...
என் உயிரை காப்பாத்த நீ இவ்ளோ கஷ்டபடும் போது நான் உனக்கு சொந்தமா இருந்தா என்னை நீ எப்பிடி பார்த்துப்ப...
என்ன மாமா.. இப்படி பேசுற.. நீ இல்லைன்னா நான் என்ன மாமா பண்ணுவேன். எனக்கு இருக்க ஒரே சொந்தம் நீதான்.. அதனால உனக்காக நான் என்ன வேணுன்னாலும் நான் பண்ணுவியா...


நிஜமாவா... நான் என்ன சொன்னாலும் கேப்பியா...
ம்ம் சொல்லு மாமா...
என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..
என்ன மாமா சொல்ற...
நிஜமா தான் சொல்றே...இனிமே நான் யாரு சொல்லியும் கேக்க போறதில்ல... உனக்கு சம்மதம்னா சொல்லு.. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்...
இல்ல மாமா வேண்டாம்...
முத்தரசன் அதிர்ச்சியுடன் பார்க்க
வெண்ணிலா சிரித்துக் கொண்டே
இல்ல.. மாமா நான் இப்பதான் மொட்டை அடிச்சு இருக்கேன்.. கொஞ்சம் தலையில் முடி வளரட்டும் மாமா... அப்ப கல்யாணம் பண்ணிக்கலா...
ம்ம்ம்.. சரி.. என்று சிரித்துக் கொண்டே முத்தரசன் வெண்ணிலாவை இழுத்து தன் நெஞ்சோடு அணைக்க.. வெண்ணிலா வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு ஸ்வேதாவை பார்க்க அவள் முகம் முழுவதும் தீ பற்றி எரிவது போல் இருக்க அண்ணாமலை வாய் எல்லாம் பல்லாக இவர்கள் இருவரையும் பார்க்க மற்றவர்கள் அதிர்ச்சியுடன் வெண்ணிலாவையும், முத்தரசனையும் பார்த்தனர்.
அடுத்த மூன்று மாதத்தில் முத்தரசன், வெண்ணிலா திருமணம் நடந்தது. அன்று முதலிரவு அறையில் இருவரும் தனிமையில் இருக்க வெண்ணிலா மறுபடியும் மொட்டை அடிக்க வேண்டி இருப்பதாக முத்தரசனிடம் சொன்னாள்.

No comments:

Post a Comment