Tuesday 12 November 2019

மொட்டை அடித்துக் கொண்ட சென்னை மாணவிகள்!!

புற்றுநோயாளிகளுக்கு விக் வழங்குவதற்கான தலை முடி தான  இயக்கம், சென்னை கிறிஸ்த்துவ மகளிர்  தொடங்கியது. இதற்காக தங்கள் முடியை மொட்டை அடித்துக் கொண்ட மாணவிகளை அனைவரும் பாராட்டினர்.

கேன்சர் சிகிச்சையின் போது ஏற்படும்  கடுமையான பக்க விளைவுகளில் ஒன்று தலைமுடி இழப்பு. புற்றுநோய் வலியை விடவும் தலைமுடி இழப்பு என்பது மோசமானது. இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் புற்றுநோயாளிகளுக்கு விக் வழங்குவதற்கான                  "டேங்கில்ட் " என்ற விழுப்புணர்வு மற்றும் தலைமுடி தான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் க்ரீன் ட்ரெண்ட்ஸ் யுனிசெக்ஸ்  சலூன் இணைந்து இந்த இயக்கத்தை நடத்துகின்றன.



இந்த முடி தான இயக்கத்தில் 50க்கும் மேற்பட்ட சென்னை கிறிஸ்த்துவ கல்லூரி மாணவியர் பங்கேற்று தங்கள் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டு புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக தானமாக அளித்தனர்.

இதில் கல்லூரியின் ரோட்ராக்ட் க்ளப் தலைவரான மாணவி ரென்னி சாரதா மற்றவர்களுக்கு முன் மாதிரியாக தன்னுடைய தலைமுடியை தானமாக அளித்தார். அவரை தொடர்ந்து பல மாணவிகள் மொட்டை அடித்து தங்கள் தலை முடியை கேன்சர் நோயாளிக்கு தானமாக அளித்தனர்.

தமிழகம் முழுவதும் தலைமுடி தான இயக்கம் செயல்படுகிறது. தங்கள் முடியை தானமாக தர விரும்புபவர்கள் 1800 420 2020  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது தங்கள் பகுதியில் இருக்கும் க்ரீன் ட்ரெண்ட்ஸ் யுனிசெக்ஸ்  சலூன் சென்று தலை முடியை மொட்டை அடித்து தானமாக கொடுக்கலாம்.








No comments:

Post a Comment