Wednesday 25 March 2020

தலையில் முடி வளர சித்த வைத்திய முறை...

தலையில் முடி வளர சித்த வைத்திய முறை...

வழுக்கை தலையில் முடி வளர

 சுத்தமாக முடியே இல்லாமல் வழுக்கையாக இல்லாமல் இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதை சின்ன துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தொடர்ந்து தலையில் தடவி வர வழுக்கை மறையும்.

வேப்பிலை ஒரு கை அளவு எடுத்து அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து விட்டு, மறுநாள் அதனை சாறாக பிழிந்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.



வெந்தயம், மற்றும் குன்றின்மணியை பொடி  செய்து அதை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதை தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை முடி தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு சிறுவயதிலேயே முழுவதும் நரைமுடி ஆகிவிடும். இவர்கள் சித்த வைத்திய முறைப்படி தாமரை பூவை கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை குடித்து வரவேண்டும். மேலும் முளைக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாக குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய் உடன் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். அதனுடன் காரட், எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது தடுக்க பட்டு நன்றாக வளரும்.












No comments:

Post a Comment