Saturday 7 March 2020

பட்ஜெட் மொட்டை

சுரேஷீம் தேவியும் கணவன் மனைவி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இருவரும் தங்கள் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து விட்டு ஊரை விட்டு ஓடி வந்து சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி கொண்டு இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் சென்னையின் வாழ்க்கை முறைக்கு இருவரின் சம்பளமும் போதவில்லை. மாதக் கடைசியில் மிகவும் சிரமப்பட்டனர்.இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் அதிகம் ஆனது.



ஒரு ஞாயிற்று கிழமை இருவரும் இதற்க்கு ஒரு முடிவு செய்வது என்று பேசினார்கள். தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டு பணத்தை கொஞ்சமாவது தங்களது எதிர்கால தேவைக்கு சேமிக்க வேண்டும் என்று நினைத்தனர்.


சுரேஷ் இப்படியே நம்ம வாழ்க்கை இருந்தா நம்ம எதிர்காலம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

அம்மா தேவி, நானும் தான் அதை யோசனை பண்ணிட்டு இருக்கேன்...

நீங்க உங்க சிகரெட், தண்ணி செலவுகளை குறைக்கலாமே..

ஏய், என்னடி நம்ம பட்ஜெட்டை குறைக்குறேன்னு சொல்லிட்டு தமிழ் நாட்டோட பட்ஜெட்ல கை வைக்குற... நாங்க தான் தமிழ் நாட்டோட வருவாய் ஆதாரமே... நான் கடைக்கு போய் செலவு பண்ணலைன்னா அரசாங்கம் என்னாகும் தெரியுமா...

சும்மா வெட்டி பேச்சு பேசாதீங்க... அதை மொத்தமா விடுங்கன்னு சொல்லல.. குறைச்சுக்கன்னு தான் சொல்றேன்.

ம்ம்ம்..சரி சரி,

அப்புறம் நீ வாராவாரம் பார்லர் போறதை நிறுத்தினா நிறைய காசு மிச்சம் பண்ணலாம். அப்படியே நீ வாங்குற கண்ட கண்டா க்ரீம், ஷாம்பு இதெல்லாம் வாங்கலைன்னா கிட்டத்தட்ட மாசம் 3000 மிச்சம் ஆகும்... அதை நீ பண்ணுவியா...

என்னங்க சொல்றீங்க... இவ்ளோ நீளமான முடியை பார்த்து தான என்னை லவ் பண்ணீங்க... நைட் என்னோட விளையாடுறதை விட இந்த முடியை தடவி குடுக்குறதுலயே முடிஞ்சுடுது .எல்லாமே.. அப்போ அந்த முடியை நல்லா பராமரிக்க வேண்டாமா..

இனிமேல் அதெல்லாம் வேண்டாம்....

சரி நான் நாளைக்கே பார்லர் போய் முடியை ஓட்ட வெட்டிட்டு வந்துறேன்...

எதுக்கு பார்லர்ல மயிரை வெட்ட 2000 பில் போடவா...அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...

அப்போ என்ன பண்ண சொல்றீங்க...

நீ முடி வெட்டிக்க தானே போற...

ஆமாங்க...


அதுக்கு எதுக்கு பார்லர்...நானே வெட்டி விடுறேன்....

அடப்பாவி மனுஷா...நீ பண்ணா நல்லா இருக்காது.. அங்கங்க பிசிறுபிசிறா இருக்கும்... வேண்டாங்க.... நான் பார்லர்லயே ஹேர்கட் பண்ணிக்கிறேன்...

தேவி நான் தான் சொல்றேன்ல... நான் ஷேவ் பண்ற மெஷின்ல பண்ணா போதும்... போய் பின்னாடி தோட்டத்துல ஒரு சேரை போடு நான் வரேன்....

தேவியும் அழுத்துக் கொண்டே நடக்க போவதை நினைத்தபடி தோட்டத்திற்கு ஒரு ஸ்டூலை எடுத்துக் கொண்டு சென்றாள். தேவி சென்றதும் சுரேஷ் அவன் வைத்து இருந்த ஷேவிங் கிட்டை எடுத்துக் கொண்டு, கூடவே ஒரு தவளையும் எடுத்து சென்றான்.

தேவி தோட்டத்தில் ஸ் டூலை போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருக்க, அங்கு சுரேஷ் சென்றதும் தேவியின் பின்பக்கம் சென்று அவள் மேல் அவன் கொண்டு வந்து இருந்த டவலை போர்த்தி விட்டான். தேவி அவளது நீளமான முடியை கொண்டை போட்டு இருந்தாள். அதை மெதுவாக அவிழ்த்து விட்ட சுரேஷ், தேவியின் நீளமான முடியை அளந்து பார்த்தான். அப்படியே அதை சீப்பால் நன்றாக சீவி விட்டு ஜடையாக பின்னினான். சுரேஷ் செய்வதை ரசித்துக் கொண்டு இருந்தால் தேவி.

                             

பின் அவன் வைத்து இருந்த கிளிப்பரை 0 பாயிண்ட்டில் வைத்து தேவியின் முன் நெற்றியில் இருந்து பின்னோக்கி இழுக்க தேவியின் அடர்ந்த முடி கொத்தாக விழுந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர் என்ற சத்தத்துடன் மெஷின் தேவியின் முடியை ஓட்ட சிரைத்து விட்டது. தேவியின் அழகுக்கு கீரிடம் போல இருந்த முடி சில நிமிடங்களில் மொத்தமாக தரையில் விழுந்தது.



தேவி  சிரைத்த தலையுடன் அவளது தலையில் இருந்த முடிகளை கொதி விட துகள்களாக அவளது முடிகள் கீழே விழுந்தது. தேவி முன்பு இருந்ததை விட தற்போது அழகாக இருந்தாள். அவள் வேலைக்கு செல்லும் போது மேக்கப் செய்ய சில நிமிடங்களே தேவைப்பட்டது. ஆனாலும் அடுத்த இரு வாரங்களுக்கு பின் சுரேஷுக்கு தெரியாமல் பார்லரில் சென்று மீண்டும்
தன் முடியை இன்னும் ஷார்ட்டாக வெட்டிக் கொண்டாள் தேவி. மறுபடியும் பட்ஜெட்டில் துண்டு விழுந்தது. எப்படி என்று தெரியாமல் சுரேஷ் தலையை பிய்த்துக் கொண்டான்.







No comments:

Post a Comment