Saturday 13 June 2020

பாலிவுட் ஆக்ட்ரஸ் ப்ரீத்தி ஜிந்தா தன் கணவருக்கு முடிவெட்டி விட்டார்.

பாலிவுட் ஆக்ட்ரஸ்  ப்ரீத்தி ஜிந்தா தன் கணவருக்கு முடிவெட்டி விட்டார்.

கொரோனா வைரஸ் காரணாமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் உலகம் முழுவதும் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைகின்றனர்.குறிப்பாக இந்த ஊரடங்கால் சலூன் கடைகள் திறக்க படாமல் உள்ளதால் பலர் முடி வெட்டாமல், முகச்சவரம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.



தற்போதைய நிலைமையில் ஊரடங்கு தளர்த்தப் பட்ட போதும் வைரஸ் பயம் காரணாமாக பலர் சலூன் கடைகளுக்கு போக பயப்படுகின்றனர். 
சிலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொள்கின்றனர். சில தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முடி வெட்டி விடுகின்றனர். சில இளம்பெண்கள் கோடை வெய்யிலை சமாளிக்க மொட்டை கூட அடித்துக் கொண்டு, அதை வீடியோ எடுத்து யூட்யூப் மற்றும் இணையத்தளத்தில் வெளியிட்டனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட தனக்கு தானே முடியை வெட்டிக் கொண்டும், தங்கள் துணைக்கு முடி வெட்டிக் கொள்ளும் போட்டோக்களும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அப்படி தான் இந்த வாரமும், நடிகை ஒருவர் தன் கணவருக்கு வீட்டிலேயே முடி வெட்டி விட்ட போட்டோ வைரல் ஆகி இருக்கிரது.


பிரபல பாலிவுட் நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தன் கணவருக்கு தானே ஆர்வமாக முடி வெட்டி உள்ளார். ஒரு ஸ்லீவ்லெஸ் ரெட் கலர் டாப்ஸ், கருப்பு கலர் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு தன் கணவருக்கு வீட்டிலேயே முடி வெட்டி உள்ளார். ப்ரீத்தி ஜிந்தா. 


மிகவும் பொறுமையாகவும், அழகாகவும் தன் கணவருக்கு முடியை வெட்டி விட்டதாகவும், தற்போது அவரை பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்து உள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அந்த அனுபவம் தனக்கு புதுமையாக இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.




தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரல் ஆகிவிட்டது.





No comments:

Post a Comment