Sunday 2 August 2020

அம்மாவின் ஆசை

நான் பிரவீன். வயது 20. என் அத்தை பவித்ரா ஒரு ப்யூட்டி பார்லர் வைத்து இருக்கிறார். என் அம்மா என்னுடைய சிறு வயதில் இருந்து அத்தையுடன் அந்த பார்லரில் வேலை செய்தாள். நான் ஸ்கூல் முடிந்து அந்த பார்லருக்கு சென்று சிறிது நேரம் விளையாடி விட்டு அம்மாவுடன் வீட்டுக்கு வந்துவிடுவேன். மாலை முழுவதும் பியூட்டி பார்லரில் இருந்ததால் எனக்கு பெண்கள் தங்களை அழகு படுத்தி கொள்வதை பார்ப்பது எனக்கு பிடித்தது. சில சமயம் என்னை மறந்து நான் பார்லரில் நடக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டு இருப்பேன். 

அந்த சமயத்தில் ஒரு சமயம் அத்தை என்னை அவர்களுக்கு உதவியாக கூப்பிட, நானும் செய்தேன். பின் அப்படியே சில வேலைகள் செய்து பழக, எனக்கு மேலும் பியூட்டி பார்லரில் வேலை செய்வது பிடித்தது. அத்தையும் என் ஆர்வத்தை பார்த்து சில சின்ன சின்ன வேலைகள் என் அம்மா இல்லாத நேரத்தில் கற்றுக் கொடுத்தாள். பார்லருக்கு வரும் பெண்களும் நான் அவர்களுக்கு மேக்கப் செய்ய எதுவும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு ஹேர் கட் பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அந்த வேலையை மட்டும் அத்தை தரவில்லை.


                          என் அம்மா

என் அம்மாவுக்கு நல்ல நீளமான அடர்த்தியான முடி. ஆனால் எப்போதும் இடுப்பு வரை மட்டுமே வளரவிடுவாள். அதற்க்கு மேல் வளர்ந்தால் பார்லரிலோ அல்லது அருகில் உள்ள கோவிலிலோ சென்று பூ முடி காணிக்கை கொடுத்துவிடுவாள். நான் சில நாட்களில் என் அம்மாவுக்கு தலை சீவி விடுவது உண்டு. ஒரு முறை அம்மாவின் முடி இடுப்புக்கு கீழே 6 இஞ்சுக்கு மேல் வளர்ந்து விட, நான் ஆசையாக அதை வெட்டி விடவா அம்மா என்று கேட்க, வேண்டாம் அது முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டி இருக்கிறேன் என்றாள்.

முடி காணிக்கை கொடுப்பதற்க்கு முந்தைய நாள் மாலை அம்மா குளித்து விட்டு, ஈரத் தலையுடன் வர, நான் அதை துவட்டி விட்டு, இரு பக்கமாக பிரித்து நடு முதுகு வரை தளர்வான கொண்டை போட்டு விட்டேன். அம்மா சமைத்து விட்டு வர நான் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். அம்மா சமைத்து விட்டு வந்து என்னிடம் தலை சீவி விட சொல்ல, நான் கொண்டையை அவிழ்த்து விட்டு, அம்மாவின் முடியை சீவி ஜடை பின்னி விட்டேன்.அம்மா வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் லூசான நைட்டி தான் அணிவாள். அவள் கையை தூக்கி பார்க்கும் போது கை இடுக்கில் இருந்த சில முடிகள் எட்டி பார்க்க, நான் அம்மாவிடம் கேட்க, அதை கோவிலுக்கு போய் விட்டு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றாள்.

அடுத்த நாள் காலை அம்மா எனக்கு முன்பே எழுந்து குளித்து விட்டு வந்து என்னை எழுப்ப நானும் குளித்து விட்டு ரெடியாகி முருகன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். பூ முடிக்காக 3 முழம் பூவை வாங்கிக் கொண்டு மொட்டை அடிக்கும் இடத்திற்கு அம்மாவை கூட்டிச் சென்று ஒரு இடத்தில் நிற்க சொல்லி விட்டு, நான் போய் ஒரு பூ முடி டோக்கன் வாங்கி வந்தேன்.நாங்கள் உள்ளே செல்ல அங்கு நிறைய ஆண்கள் மொட்டை அடித்து கொண்டு இருந்தனர். சில பெண்கள் என் அம்மாவை போல முடி காணிக்கை கொடுக்க, ஒரு இளம்வயது பெண் மொட்டை அடித்து கொண்டு இருந்தாள். நான் அதை பார்த்துக் கொண்டு இருக்க, என் அம்மா என் மனதை புரிந்தவள் போல அந்த பெண் அருகில் போய் நிற்க நானும் ஆர்வமாக பார்த்தேன். 

அந்த பெண் மொட்டை அடித்து முடிந்ததும் எழ, என் அம்மா அந்த பார்பர் முன்னால் முடி காணிக்கை கொடுக்க ஏதுவாக திரும்பி உட்கார, அவன் என்னிடம் டோக்கனை வாங்கி விட்டு, எந்த அளவுக்கு முடியை கட் பண்ண வேண்டும் என்று கேட்டான். நான் மூன்று இஞ்ச் கட் பண்ணுங்க என்று சொல்ல அவனும் என் அம்மாவின் முடியை சீவி விட்டு கையில் தோராயமாக அளவு எடுத்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு கத்தரியை எடுத்து என் அம்மாவின் முடியை மூன்று இஞ்ச் கட் பண்ணினான். பின் அங்கிருந்து வந்து குளித்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.


என்னம்மா, ஆறு இஞ்ச் வெட்ட வேண்டிய முடியை மூன்று இஞ்ச் மட்டும் கட் பண்ணி இருக்க, அப்பா பார்த்தா திட்ட மாட்டாரா...

மாட்டார்,  அந்த மூன்று இஞ்ச் நீ கட் பண்ணி விடு, நீ தானே கேட்ட, 

ஆமா அம்மா, அப்போ நான் உன் முடியை இப்போவே கட் பண்ணி விடவா?

ம்ம்ம், சரி என்று சொல்ல நான் அம்மாவை சேரில் உட்கார சொல்லி விட்டு ஓடிச் சென்று கத்தரி, சீப்பு, ரப்பர் பேண்ட் எடுத்து வந்தேன். அம்மாவின் முடியை ரெட்டை ஜடையாக பிரித்து இரு காது பக்கமும் வருமாறு தொங்க விட்டு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு, தண்ணீரை தடவி விட்டு நுனியில் இருந்து இன்னும் மூன்று இஞ்ச் மேலே கட் பண்ணிவிட்டேன். இரு பக்கமும் அது போல வெட்டிய பின் அம்மா முடியை சீவி ஜடை பின்னி விட்டேன். அம்மா ஜடை பின்னிய முடியை கண்ணாடியில் பார்த்தாள்.



ரொம்ப நல்லா சைஸ் கரெக்ட் பண்ணி வெட்டி இருக்க பிரவீன்...

தேங்க்ஸ் மா, எல்லாம் அத்தையோட ட்ரெயினிங் தான்...

சொல்லி விட்டு வெட்டி வைத்து இருந்த அம்மாவின் முடியை பத்திரப்படுத்தி வைத்தேன். அடுத்த சில நாட்கள் நான் தான் அம்மாவுக்கு தலை சீவி விட்டேன். பார்லரிலும் சில வேலைகள் கற்றுக் கொண்டேன். இரண்டு மாதங்கள் கழித்து அம்மாவின் முடியை சீவி விட்டு கொண்டு இருக்கும் போது முடியை வெட்ட ஆசை வர, நான் அம்மாவிடம் முடியை வெட்டலாமா என்று கேட்டேன்.

அம்மா, முடியை கொஞ்சம் வெட்டலாமா?

இல்ல பிரவீன், வேண்டாம், நான் இன்னும் சில நாட்களில் மொட்டை அடிக்க இருக்கேன்.. அதனால வேண்டாம்...

எனக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. எவ்ளோ ஆசையாக அம்மாவின் முடியை நான் எண்ணெய் தேய்த்து சீவி விட்டு, ஜடை பின்னி பராமரிக்கிறேன். என்னிடம் கூட சொல்லாமல்‌ மொட்டை அடிக்க போகிறாளா என்று கோபத்துடன் கேட்டேன்.

ஏன்மா மொட்டை அடிக்க போறேன்னு என்கிட்ட சொல்லல..? எந்த கோவிலுக்கு மொட்டை அடிக்க போறீங்க?

இது வேண்டுதல் மொட்டை இல்லை... என்னோட ஆசைக்காக இந்த நீளமான முடியை மொட்டை அடிக்க போறேன்..!

என்னம்மா சொல்றீங்க?

ஆமா, அன்னிக்கு கோவில்ல பூ முடி கொடுத்தப்போ ஒரு பொண்ணு மொட்டை அடிச்சிட்டு இருந்தா, நீ கூட பார்த்தியே... அதை பார்த்ததும் எனக்கும் மொட்டை அடிக்க ஆசை வந்துடுச்சு!

ஓ..சரி அப்பா கேட்டா என்னம்மா சொல்றது?

அவரை நான் சமாளிச்சுப்பேன்.. 

சரிம்மா, எப்போ மொட்டை அடிக்க போற..?

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சஷ்டி வருது.. அந்த நாள் நானும், உன் அத்தையும் பழனிக்கு போய் மொட்டை அடிக்கலாம்னு இருக்கோம்..

அப்போ அத்தையும் மொட்டை அடிக்க போறாங்களா?

இல்லை, அத்தை என் கூட வர்றாங்க, மே பீ அத்தை பூ முடி கொடுக்கலாம்!

அப்போ நான்?

நீ அந்த அன்னிக்கு பார்லரை பார்த்துக்கோ..! அதுக்கு ஆள் வேணும்ல.. 


என்னம்மா இப்படி பண்றீங்க?

ஆனால் விதி விளையாட கடைசி நேரத்தில் அத்தையின் உறவினர் ஒருவர் இறந்ததால் அத்தையால் வர முடியாமல் போக, அத்தைக்காக அம்மாவும் மொட்டை அடிக்காமல் காத்து இருக்க, சில மாதங்களில் அம்மாவின் முடி தொடையை தாண்டி வளர்ந்துவிட்டது. ரொம்ப நாள் கழித்து மொட்டை அடிக்க போகும் முன் மூவருக்கும் புது துணி எடுத்து வந்தோம். அடுத்த நாள் காலை நான் தூங்கி எழும் போது அம்மா தலை சீவி கொண்டு இருக்க, நான் அன்றைய நியூஸ் பேப்பரில் இருந்த ஒரு நடிகையின் ரெட்டை ஜடை பின்னி இருந்த போஸ்டரை பார்த்துவிட்டு அதே போல அம்மாவுக்கும் சீவி விட்டேன்.

ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு அம்மா என்னுடன் பைக்கில் அத்தையின் பார்லருக்கு வந்தாள். பார்லரில் அத்தை அம்மாவுக்கு விதவிதமாக பல ஹேர் ஸ்டைல் பண்ணி விட்டாள். போனி‌ டெய்ல், உச்சி கொண்டை, சில லேட்டஸ்ட் பிரைடல் மணப்பெண் அலங்காரம் போல மேக்கப் பண்ண, நான் அனைத்தையும் விடாமல் போட்டோ எடுத்து வைத்து கொண்டேன்.பின் அடுத்த நாள் காலை அம்மா வேண்டிக் கொண்டது போல பழனிக்கு போய், சண்முக நதி மொட்டை அடித்து கொண்டு இருக்கும் இடத்திற்கு சென்று அம்மாவுக்கும், அத்தைக்கும் பூ வாங்கிக் கொடுக்க, இருவரும் வைத்துக் கொள்ள, பின் நான் சென்று டோக்கன் வாங்கி வந்தேன்.

முதலில் அத்தை பூ முடி கொடுக்க, நாவிதன் முன்னால் உட்கார, நான் செல்போன் கேமராவை ஆன் செய்து கொண்டு நாவிதன் அத்தையின் முடியை கட் பண்ணுவதை ரெகார்ட் செய்தேன். பார்பர் அத்தை தன் முடியில் பூ சுற்றி இருந்த இடத்திற்கு சற்று மேல் முடியை கட் பண்ணி விட்டான். அதை அத்தையிடம் கொடுத்து விட்டு, அத்தையின்‌ முடியை ஒரே நேராக சைஸ் பண்ணி வெட்டி விட்டார். அத்தை முடியை கொண்டு போய் உண்டியலில் போட்டு விட்டு வர, நானும் என் முடியை அந்த பார்பரிடமே மொட்டை அடித்து கொண்டேன். பின் அம்மாவின் மொட்டைக்காக கொஞ்சம் கூட்டம் இல்லாத இடத்தை தேடினேன்.

அப்போது அங்கு இருந்த ஒருவரிடம் வேறு இடம்‌  மொட்டை அடிக்க இருக்கிறதா என்று கேட்க, கொஞ்சம் உள்ளே செல்ல சொல்ல, நான் இருவரையும் கூட்டிக் கொண்டு உள்ளே செல்ல, அங்கு ஒரு சின்ன அறையில் நான்கு ஐந்து பார்பர்கள் மட்டும் இருக்க, அதில் ஒருவர் மட்டும் ஒரு நடுத்தர வயது ஆளுக்கு மொட்டை அடித்து கொண்டு இருக்க, நான் பக்கத்தில் இருந்த ஒரு  பார்பரிடம் டோக்கனை கொடுத்து விட்டு,  அம்மாவை மொட்டை அடிக்க அந்த பார்பர் முன் உட்கார சொல்ல, அம்மாவும் உட்கார்ந்து கொண்டு தன் ஜடையை அவிழ்க்க, நான் வேகமாக அம்மாவின் ஜடையை பிரித்து விட்டேன்.அப்போது அடித்துக் கொண்டு இருந்த ஒரு மொட்டையும் முடிய, எல்லா பார்பரும் எழுந்து வெளியே போக, நாங்கள் மட்டும் இருந்தோம்.


இப்போது அம்மாவின் முடியை இரு பக்கமும் முடிச்சு போட்டு விட்டு, பார்பர் அம்மாவின் முடியை நனைக்க, தண்ணீரை அள்ளி எடுக்க, அம்மா தண்ணீர் இல்லாமல் மொட்டை அடிக்க சொல்ல, அவனும் அப்படியே  அடிக்க, தன் சவரக் கத்தியை எடுத்து கொண்டு ரெடி ஆனான். அப்போது பார்பர் அம்மாவின் உச்சி மண்டையில் இருந்து மழிக்க ஆரம்பிக்க, நான் செல்போனில் விடியோவாக ரெகார்ட் செய்தேன். நான் பார்பரிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக மொட்டை அடிக்க சொல்ல, அவன் ஏன் என்று கேட்க, காயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.


அம்மாவின் முடி இல்லாத மழிக்கப்பட்ட  மொட்டை மண்டை வெளிப்பட்டது. அம்மாவோ கூச்சமாக இருக்கிறது என்று சொல்லி விட்டு, தன் கையால் மழிக்கப்பட்ட இடத்தை தொட்டு பார்த்தாள். பின் பார்பர் மெதுவாக முதலில் இடது பக்கமும், பின் வலது பக்கமும் முடியை மழித்து விட்டு, அதன் பின் காதோரம் இருந்த சில பூனை முடிகளையும் சிரைத்து விட்டான். பின் அம்மாவை திரும்பி உட்கார சொல்லி விட்டு, அம்மாவின் பின்பக்கம்‌ இருந்த முடியை மொட்டை அடிக்க, சில நிமிடங்களில் மொத்த முடியும் அம்மாவின் மடியிலேயே விழ, பின் கொஞ்சமாக தண்ணீரை தடவி விட்டு, அம்மாவின் மொட்டை தலையில் ரிவர்ஸ் ஷேவ் பண்ணி விட, அம்மாவின் தலை மொழுமொழு என்று இருந்தது.

பின் அங்கேயே குளித்து விட்டு, புது ஆடை உடுத்திக் கொண்டு மலையேறி முருகனை தரிசித்து விட்டு, கீழே வந்து  சித்தனாதன் கடையில் பிரசாதம் வாங்கி விட்டு, அதன் பின் எனக்கு மொட்டை தலையில் போட ஒரு தொப்பி அங்கிருந்த கடையில் வாங்கினேன். அம்மாவும், அத்தையும் தங்கள் இருவருக்கும் தொப்பி வேண்டாம் என்று சொல்ல, நான் மட்டும் தொப்பி போட வேண்டுமா என்று வாங்காமல் வந்து விட்டேன். 


பின்‌ அடுத்த நாள் அத்தையும், அம்மாவும் மொட்டை தலையுடன் பார்லரில் வேலை செய்ய, அங்கு வந்த ரெகுலர் கஷ்டமர்கள் அனைவரும் இருவரின் மொட்டையையும் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். ஆனால் கூடவே மொட்டை தலையுடன் நின்று கொண்டு இருந்த என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. பின் அம்மா தன் முடியை ரொம்ப நீளமாக வளர்க்கவே இல்லை.அத்தையும், நானும் பல ஹேர் ஸ்டைல் அம்மாவுக்கு பண்ணி விட்டோம்.




2 comments:

  1. அத்தை பூ முடி dhne bro kuduthanga avanga mottai adichadha sollala

    ReplyDelete
  2. This story copy from Facebook lh Priya story

    ReplyDelete