Monday 7 September 2020

சந்தியா சம்மதம் சொல்வாயா?


நான் சந்தியா. நாங்க சென்னை தான். எனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆச்சு. என் அப்பா அம்மாவை எதிர்த்து காதலிச்சு, கல்யாணம் பண்ணிட்டேன். என் கணவர் மணி. ஒரு கம்பெனியில வேலை பாக்குறார். அவங்க வீட்ல அவர் ஒருத்தரே தான். மணிக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்லை. அதனால மணியோட அப்பா அம்மா எங்க காதலை ஏத்துக்கிட்டு எங்களை அவங்க கூடவே இருக்க சொன்னாங்க.. ஹவுசிங் போர்ட்ல தான் மணி பேமிலி இருந்தாங்க. மணிக்கு ஏற்கனவே தனி ரூம் இருந்ததால நாங்க இருக்கிறதுக்கு எந்த பிராப்ளமும் இல்லை.

என் அப்பா தான் ரொம்ப கோவமா இருந்தார் என் மேல. நான் ஒரு பொண்ணு. என் மேல ரொம்ப பாசமா இருப்பார். எனக்கு வேணும்கிறது எல்லாம் வாங்கி தருவார். ஆனால் அவர் பிஸினஸ் தான் அவருக்கு ரொம்ப முக்கியம். என் கூட கொஞ்ச நேரம் கூட இருந்தது இல்லை. அதனால தானோ என்னவோ எனக்கு மணி மேல காதல் வந்தது. எனக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்வான். அவன் ஆபீஸ் வேலை இருந்தாலும் எப்பவும் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மறந்ததே இல்லை. அதே மாதிரி என் மேல சின்ன, சின்ன விஷயத்தில் கூட ரொம்ப அக்கறையாக இருப்பான் மணி. அதான் மணிக்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம். 



நான் காலேஜ் படிக்கும் போதே என் பின்னாடி சுத்துவான். அப்புறம் ஒரு நாள் மணி எங்கிட்ட புரோபோஸ் பண்ண, நான் ரெண்டு நாள் அலைய விட்டு அப்புறம் தான் அவங்கிட்ட ஓகே சொன்னேன். அப்புறம் நிறைய பேசினோம். அவன் என் மேல எவ்ளோ காதலோட இருக்கான்னு அவன் என்னை பத்தி பேசும் போது புரிஞ்சிகிட்டேன். அப்படி பேசும் போது எதுக்காக என்னை லவ் பண்ணின அப்படினு கேட்டேன். அதுக்கு மணி சொன்னான். முதல் முறை உன்னை பார்க்கும் போது உன்னோட நீளமான முடி தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. எனக்கு நீளமான முடியை ரொம்ப பிடிக்கும் அதான் சந்தியா நான் உன்னை லவ் பண்ண காரணம் அப்ப்டின்னு சொன்னான். அதுக்கு அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுட்டு, நாங்க லவ் பண்றது என் அப்பாவுக்கு தெரிஞ்சு, பிரச்சனை ஆகும் போது ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டோம். மணியோட அப்பா எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தார். 

கல்யாணத்துக்கு அப்புறம் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க மணியோட அம்மாவும், அப்பாவும்...
மணியோட அம்மா சரண்யா என் அத்தை ரொம்ப வெகுளி. தனக்கு ஒரு மகள் இல்லங்கிற வருத்தம் இப்போ இல்லைன்னு எங்கிட்ட சொன்னாங்க... அத்தை என்னை அவங்க சொந்த மகளாவே பார்த்துகிட்டாங்க...

அப்படி தான் ஒரு நாள் மணி ஆபீஸ் முடிஞ்சு வரவும், குளிச்சு ரெடியாகி பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வந்தோம் நானும் மணியும். மணி சாப்பிட்டு விட்டு ரூமுக்கு போனதும், நான் அத்தையுடன் கொஞ்ச இருந்த வேலைகளை முடித்து விட்டு என் ரூமுக்கு போனேன்.

சந்தியா, வேலை எல்லாம் முடிஞ்சுதா..,?

ம்ம்ம்.. முடிஞ்சுது மணி... அத்தையும் தூங்க போய்ட்டாங்க...

சரி, வா... உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...

என்ன மணி... சொல்லு...

இல்ல, எப்படி சொல்றதுன்னு தெரியல...

என்ன மணி.. இப்படி தயங்குற... சொல்லு.. ஏதாவது பிரச்சனையா?

இல்ல, சந்தியா எங்க வீட்டு வழக்கப்படி கல்யாணம் ஆனதும், வீட்டுக்கு வந்த மருமகள் எங்க குல தெய்வம் கோவில முடி காணிக்கை கொடுத்து சாமி கும்பிடணும்... அதான் அந்த வழக்கத்தை நாம பண்ணிடலாம்னு அப்பாவும், அம்மாவும் சொல்றாங்க....


என்ன மணி சொல்ற... நான் முடி காணிக்கை கொடுக்கணுமா... அப்படின்னா...

அது வந்து... நீ எங்க குல தெய்வம் கோவில மொட்டை அடிச்சு பொங்கல் வச்சு சாமி கும்பிடணும்... இது நம்ம கல்யாணம் ஆகி மூணு மாசத்துலயே பண்ணி இருக்கணும்... ஆனா நாலு மாசம் ஆச்சு... அதான் அம்மா சொன்னாங்க...

என்னோட முடியை மொட்டை அடிக்கணுமா...

ஆமா...

அது உனக்கு ரொம்ப பிடிக்குமே மணி... அப்போ நான் மொட்டை அடிக்கிறது உனக்கு சம்மதமா..?

என்ன பண்றது சந்தியா... பெரியவங்க சொல்றத கேட்டு தானே ஆகணும்...

ஆனா, அத்தை எங்கிட்ட இதை பத்தி பேசவே இல்ல...

அம்மா உங்கிட்ட சொல்ல தயங்குறாங்க...உனக்கு இவ்ளோ நீளமான முடி இருக்கு... அதை எப்படி மொட்டை அடிக்க சொல்றதுன்னு தான்....

சரி மணி... எப்போ கோவிலுக்கு போகணும்...

அப்பா, ஊர்ல கோவில் சாமியார்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கார்... முதல்ல உனக்கு சம்மதமான்னு கேட்க சொன்னார்... 

சரி மணி எனக்கு ஓகே தான்... உனக்காக நான் என் வீட்டை விட்டே வந்து இருக்கேன்.. ஆப்டர் ஆல் இந்த முடி... இத  குடுக்க மாட்டேன்னா...

சரி சந்தியா.. நீ என் மேல எவ்ளோ அன்பு வச்சு இருக்கேன்னு புரியுது. ஐ லவ் யூ சந்தியா... நாளைக்கு அப்பா, அம்மாகிட்ட உனக்கு மொட்டை அடிக்க சம்மதம்னு சொல்லிடறேன்...

ம்ம்ம். சரி... 

அடுத்த நாள் காலை அப்பா வெளியே கிளம்பி கொண்டு இருக்க, நானும் குளித்து விட்டு வந்தேன்...

என்னடா மணி... சந்தியாகிட்ட கோவில் பூஜை விஷயமா பேசினியா...

பேசினேன் பா... அவளுக்கு சம்மதம் தான்... 

நிஜமாவ சொல்ற..? 

ஆமா பா.. வேணுன்னா நீங்களே சந்தியாகிட்ட கேளுங்க.... சந்தியா  இங்க வா.. அப்பா கூப்பிடறாங்க...

சொல்லுங்க மாமா...

என்னம்மா... மணி கோவில் பூஜை விஷயமா ஏதாவது சொன்னானா...

ஆமா. மாமா சொன்னாரு... எனக்கு ஓகே தான் மாமா...

அம்மாடி... ரெண்டு பேரும் வெளிப்படையா பேசுங்க... இது கோவில் காரியம்.... அவன் என்ன சொன்னான்... அதுக்கு நீ என்ன சொன்னே...?

அது மாமா.. எங்க கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துக்குள்ள குல தெய்வம் கோவில மொட்டை அடிச்சு பொங்கல் வச்சு பூஜை செய்யணும்... அதான் வழக்கம்னு சொன்னாரு... நானும் அதுக்கு சரின்னு சொன்னேன்...

அப்போ உனக்கு மொட்டை அடிக்க சம்மதம் தானே சந்தியா...?

ஆமா... சம்மதம் தான்... ஏன் மாமா சந்தேகமா கேட்குறீங்க?

இதுல பிரச்சனை என்னன்னா இந்த காலத்துல சில பொண்ணுக மொட்ட அடிக்க ஒத்துக்க மாட்டாங்க... போன மாசம் ஒரு வீட்ல மருமககிட்ட மொட்டை அடிக்கிற விஷயத்தை சரியா சொல்லாம, கோவிலுக்கு கூட்டி போய் சொல்லி இருக்காங்க.. அந்த பொண்ணு கோவில்ல போய் என்னால மொட்டை எல்லாம் அடிக்க முடியாதுன்னு சண்டை பிடிக்க, எல்லோருக்கும் அவமானமா போச்சு.... அதான் கேட்டேன்....

இல்ல மாமா... எனக்கு மொட்டை அடிக்க சம்மதம் தான்... நான் என் முழு மனசோட தான் மொட்டை அடிக்க சம்மதிக்கிறேன்.

சரிம்மா.. ரொம்ப சந்தோஷம்... டேய் மணி... ரொம்ப நல்ல பொண்ண தான் செலக்ட் பண்ணி இருக்க... அப்போ நான் கோவில் பூசாரிகிட்ட பேசிட்டு எப்போ கோவிலுக்கு போறதுன்னு சொல்றேன்....

சரி..பா...

அப்பா கோவில் பூசாரியிடம் கேட்டு விட்டு வரும் புதன் கிழமை நல்ல நாள் என்றும்... அன்றே பூஜையை வைத்துக் கொள்ளலாம் என்றும் பூசாரி சொல்ல அப்பாவும் பூஜை, மொட்டை அடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். 

செவ்வாய்க்கிழமை இரவு எல்லோரும் ஒரு கேப் புக் செய்து கிராமத்தில் இருக்கும் எங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்றோம்.. புதன்கிழமை காலை எங்கள் கிராமத்து வீட்டில் எல்லோரும் குளித்து ரெடி ஆனோம். 

சந்தியா... இங்க வாடிம்மா...

சொல்லுங்க அத்தை....

இன்னிக்கு தான் இந்த முடிக்கு கடைசி நாள்...அதனால இந்த அரப்பு போட்டு தலைக்கு குளிச்சிட்டு வா


சரிங்க அத்தை என்று சொல்லி விட்டு சந்தியா குளித்து விட்டு வரவும், அம்மா அவளுக்கு பார்த்து பார்த்து அலங்காரம் செய்தாள்.. பின் எங்கள் தோட்டத்து வீட்டில் பூத்து இருந்த மல்லிகை பூவை எடுத்து சந்தியாவின் நீளமான முடி முழுவதும் படருமாறு தொங்க விட்டாள்...

சந்தியா... நீ உன் நீண்ட முடியை மொட்டை அடிக்கிறது நம்ம குடும்ப வழக்கம்.. நம்ம குடும்பம் வம்சம் வளர இந்த மாதிரியான சில சம்பிரதாயங்களை செய்ய சொல்லி இருக்காங்க நம் முன்னோர்கள்... ஆனா நீ பண்ற இந்த விஷயம் ரொம்ப பெரிய காரியம்...பணக்கார வீட்ல பொறந்த நீ என் மகனுக்காகவும், இந்த குடும்பத்துகாகவும் மொட்டை அடிக்கிறதுக்கு நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும்...



என்ன அத்தை பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு... எனக்கு என் முடியை மொட்டை அடிக்கிறது கஷ்டமா தான் இருக்கு... ஆனா அது நம்ம குடும்பத்துக்கு நல்லதுன்னு சொல்லும் போது பண்ணி தானே ஆகணும்... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை அத்தை... முடி தானே கொஞ்ச நாள்ல வளர்ந்துரும்...

சந்தியா என்ன பண்ற... ரெடியா.. 

நாங்க ரெடி மணி.... போலாம்...

சந்தியா... இனிமே நாம கிராமதுல இருக்க வரை மணிய பேர் சொல்லி கூப்பிடாதே... இங்க இருக்கவங்க  புருஷனை பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க... வாங்க போங்க ந்னு மணியை மரியாதையா கூப்பிடு.. சரியா....

சரிங்க அத்தை.... மணி மாமா... நான் ரெடி... நீங்க ரெடியா மாமா... கோவிலுக்கு போலாமா மாமா...

கேட்க நல்லா தாண்டி இருக்கு... இரு..உன்னை இந்த நீளமான முடியோட ஒரு செல்பி எடுக்கலாம்...

இருவரும் செல்பி எடுக்க, சரண்யாவும் ரவியும் நின்று பார்த்துக் கொண்டு இருக்க, பின் அவர்களையும் கூப்பிட்டு ஒன்றாக நின்று செல்பி எடுத்தனர்...

சந்தியா, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் உன்னை இந்த நீளமான முடியோட பார்க்க முடியும்...

ஆமா மாமா.. 

உனக்கு மொட்டை அடிக்கிறதை பார்க்க ரொம்ப ஆசையா இருக்குடி... நான் உனக்கு மொட்டை அடிக்கும் போது வீடியோ எடுக்கட்டா...


ம்ம்ம் எடுத்துக்க மாமா... உனக்கு இல்லாததா....

சரி..சரி பேசிட்டே இருக்காம ரெண்டு பேரும் கிளம்புங்க... மொட்டை அடிச்சு முடிச்சதும் தான் பொங்கல் வச்சு சாமிக்கு பூஜை செய்யணும்....

கோவில் ஒரு சின்ன கிராமத்துல இருந்தாலும், அன்னிக்கு கோவில்ல சிறப்பு பூஜை இருந்ததால் கூட்டம் அதிகமாவே இருந்தது. நாங்கள் மொட்டை அடிக்கும் இடத்திற்கு போக அங்கும் கூட்டம் இருந்தது... சரண்யா அத்தை பொங்கல் வைக்கும் இடத்திற்க்கு போக, நான், மணி, ரவி மாமா மூவரும் மொட்டை அடிக்கும் இடத்திற்கு வந்தோம். அங்கு நிறைய பேர் ரவி மாமாவை நலம் விசாரித்தனர். மொட்டை அடிக்கும் இடத்தில் சிறு பையன் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடித்துக் கொண்டு இருக்க, அங்கு நான் மட்டுமே ஒரு பெண்ணாக தனியாக நின்றேன்...

என்ன, ரவி உன்னோட மருமகளா... படுகின்றன

ஆமாய்யா... இன்னிக்கு நாங்க தான் பூஜை வச்சு இருக்கோம்...

அப்படியா... ரொம்ப சந்தோஷம்பா... பொண்ணுக்கு நல்ல மனசு... போன மாசம் நடந்த கதையை கேள்வி பட்டு இருப்பியே....

மம்ம்ம்.. கேள்விபட்டேன்.. சரி போய் வேலையை பாரு.. நாங்க சீக்கிரம் சென்னைக்கு போகணும் என்று சொல்லி விட்டு ரவி மாமா வந்து ஒரு நாசுவனை கூப்பிட்டு ஒரு  இடத்தை சுத்தம் செய்ய சொன்னார். சுத்தம் செய்த இடத்தில் என்னை உட்கார சொல்லி, எனக்கு மொட்டை அடிக்க நாசுவனிடம் சொல்ல நான்  கூச்சத்துடன் உட்கார்ந்தேன்...

நாசுவன் தலையில் தண்ணீரை தெளிக்க, அது நான் கட்டி இருந்த சேலை மேல் விழ... மணி தான் வைத்து இருந்த ஒரு துண்டை எடுத்து என்னை போர்த்திக் கொள்ள சொன்னார். போர்த்தியதும் நாசுவன் என் தலையில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை தடவி விட்டு ரேசரில் இருந்த பிளேடை மாற்றி விட்டு என் முன் மண்டையில் இருந்த முடியை வழிக்க ஆரம்பிக்க, மொட்டை அடித்த இடத்தில் கிராமத்து தென்றல் காற்று பட்டு சில்லென்று இருந்தது... நான் என்னை மறந்து அந்த உணர்ச்சியை அனுபவிக்க ஆரம்பித்தேன்... நாசுவன் வேகமாக என் முடியை மொட்டை அடித்தான்...

அண்ணா ப்ளீஸ் அண்ணா... என் முடியை மெதுவா மொட்டை அடிங்க அண்ணா... எனக்கு இந்த மொட்டையை நல்லா அனுபவிச்சு மொட்டை அடிக்கணும்... இது என்ன நான் பேசுறது யாருக்கும் கேட்கலையே... அய்யோ அது என் மைண்ட் வாய்ஸ் அஹ்... 



நான் எனக்கு தெரிஞ்சு இப்படி ஒரு பீலிங் அனுபவிச்சதே இல்ல..நல்லாவே இருக்கு...என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டு இருக்க நாசுவன் பாதி முடியை மழித்து எடுத்து இருந்தான். மணி தன் செல்போனில் நாசுவன் எனக்கு மொட்டை அடிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்.. இந்த அனுபவம் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது. அதனால் மீண்டும் ஒரு முறை முடியை வளர்த்து கொண்டு வந்து  மொட்டை அடிக்க வேண்டும் இங்கேயே என்று நினைத்துக் கொண்டேன்...


பார்பர் மொட்டை அடித்து முடித்ததும் நான் போய் குளித்து விட்டு புதிய சேலையை உடுத்தி வர, என் அத்தையும் பொங்கல் வைத்து ரெடியாக இருக்க, நால்வரும் சாமி கும்பிட்டு விட்டு வந்தோம்... வெளியே வந்ததும் நாலு பேரும் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம். பின் வீட்டுக்கு வந்து  என்னை நான் கண்ணாடியில் பார்க்க மொட்டை தலையில் ரொம்ப அழகாக க்யூட்டாக இருந்த என்னை பார்த்துக் கொண்டே இருந்தேன்.. பார்பர் ரொம்ப நல்லாவே என் முடியை மழிச்சு எடுத்து இருக்கான். அதான் இவ்ளோ பளபளப்பா என் தலை இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

மணிக்கு என்னை மொட்டை தலையில் பார்ப்பது ரொம்ப பிடித்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்... அன்று இரவு எல்லோரும் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்... அத்தை அடுத்த நாள் பர்சேஸ்க்காக வெளியே கூட்டி செல்ல, நான் மொட்டை தலையுடன் வெளியே செல்ல கூச்சமாக இருந்தாலும் அத்தையுடேன் சென்றேன்... அங்கு துணி கடையில் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.


அன்று இரவு மணி வந்ததும் நான் மொட்டை தலையில் வெளியே சென்றதை சொன்னேன். அன்று இரவு மணி ரொம்பவும் ஆசையாக என் முடி இல்லாத மொட்டை தலையை தடவிக் கொண்டே இருந்தான். மணிக்கு என் முடியை பிடித்துக் கொண்டு என் பின்னால் நின்று கொண்டு குதிரை ஓட்டுவது என்றால் பிடிக்கும்... ஆனால் இப்போது மொட்டை தலையாக இருப்பதால் அவனால் குதிரை ஓட்ட முடியாமல் என்னை தேங்காய் உரிக்க சொன்னான். என் மொட்டை மணிக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.. அதே போல இது இத்துடன் முடிய போவதில்லை என்றும் புரிந்து கொண்டேன்.




.

No comments:

Post a Comment