Sunday 14 February 2021

காதெலெனும் தேர்வெழுதி


நான் சதிஷ்குமார். கோவையில் உள்ள காலேஜ் ஒன்றில் மூன்றாம் ஆண்டு மாணவன். படிப்பில் ஆர்வமில்லை. அப்பா ஆடிட்டர். அம்மா பேங்கில் மேனேஜராக இருக்கிறார். நான் ஒரே பையன். அதனால் வீட்டில் செல்லம்‌ ஜாஸ்தி. நான் கேட்டது கிடைக்கும். காலேஜ் வருவதே எனக்கான தனி காரில் தான். 

என் காலேஜில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். பெண்களும் அதில் அடக்கம். கோவை இப்போது ரொம்பவே மாறிவிட்டது. அழகான பெண்கள், நவ நாகரீக உடைகள், லெக்கின்ஸ், ஸ்லீவ்லெஸ், பாப் கட் எல்லாம் சர்வ சாதாரணமாக கோவையில் பார்க்கலாம்.


ஆனால் என்னை எந்த பெண்களும் கவரவில்லை. என்னை அடியோடு சாய்த்தவள் சத்யா.. என் காலேஜில் முதல் வருடம் படிக்கிறாள். முதல் நாள் பார்த்த போதே அவள் அழகில் மயங்கிவிட்டேன். சத்யா கொஞ்சம் குள்ளம். நல்ல சிவப்பு நிறம், அடர்த்தியான கூந்தல், சிறிய நெற்றி, சின்ன கண்கள், ஆனால் அதில் கூர்மை அதிகம், அழகான சின்ன உதடுகள், சின்ன மூக்கு, அதில் சின்ன மூக்குத்தி குத்தி இருந்தாள்.

டாப்ஸ், லெக்கின்ஸ் உடுத்தி வந்தவளை, என் நண்பர்கள் ராகிங் செய்ய, நான் அவளை அவர்களிடம் இருந்து காப்பாற்றினேன். அதன் பின் சில வாரங்களில் அவளிடம் என்‌ காதலை சொல்லி, அடுத்த நாள் அவள் சம்மதம் சொல்ல, எங்கள் காதல் இரண்டு வருடங்களாக தொடர்கிறது. இன்று காதலர் தினம். நாங்கள் இருவரும் ஒரு தியேட்டரில் இருக்கிறோம்..

ச்சீய்.. அங்கெல்லாம் கை வைக்காதே சதிஷ்.. எனக்கு கூச்சமா இருக்கு... கையை வச்சுட்டு அமைதியா இரு...

யாரும் தப்பா நினைக்காதீங்க.. நான் அவள் பின் கழுத்தில் வளர்ந்து இருந்த பூனை முடியை தடவிக் கொண்டு இருந்தேன்.

இல்லடி, இந்த முடியை பார்த்தா எனக்கு அதை தடவிகிட்டே இருக்கணும் போல இருக்கு...


கூட்டம் இல்லாத தியேட்டரில் ஒரு மூலையில் இருட்டில் அவளிடம் சில்மிஷம் செய்ய, அந்த படத்தின் சில காட்சிகளில் ஒன்றி போய் இருந்த சத்யா, சதிஷின் சில்மிஷத்தால் கூச்சத்தில் குறுகினாள்.

சத்யா அவன் கையை விலக்கிவிட்ட மறு நிமிடம் மீண்டும் அவன் கை சத்யாவின் பின் கழுத்தில் இருந்தது. 

டேய், சத்யா போதுண்டா, தளபதி படம் ரொம்ப நாள் கழிச்சி ரிலீஸ் ஆகி இருக்குன்னு வந்தா படம் பார்க்க விடாம இப்படி பண்றியே.. இதுக்கு தான் நான் சினிமாக்கு வரலைன்னு சொன்னேன்..

சும்மா பொய் சொல்லாத சத்யா, நான் பண்றது உனக்கு பிடிக்கும், ஆனா வேணுன்னே சலிச்சிக்கிற..

பிடிக்கும் தாண்டா.. அதுக்காக இப்படி தியேட்டர்ல வச்சு பண்ணா கூச்சமா இருக்காதா?

அப்போ படம்‌ முடிஞ்சு வெளியே போய் பார்த்துக்கலாம்..‌



ம்ம்ம்..சரி.. இப்போ என்னை படம் பார்க்க விடு...

படம் முடியவும் வெளியே வந்து ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு விட்டு, ஒரு மாலுக்கு சென்றோம். அவளுக்கு தேவையான சில பேன்சி ஐட்டங்களை வாங்கி கொடுத்தேன். இடையில் எனக்கும் சில பொருட்களை வாங்கிக் கொண்டேன்..

பின் காரில் பேரூர் தாண்டி கோவை புதூர் ரோட்டில் செல்ல ஒரு தனிமையான இடத்தில் வண்டியை நிறுத்தினேன். இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு வந்தோம். இப்போது அவள் பேசுவதை நான் கேட்டுக் கொண்டு அவள் அழகை ரசித்துக் கொண்டு இருக்க, சத்யா என்னிடம் கதை பேசிக் கொண்டு இருந்தாள்.



சத்யா... எனக்கு ஒண்ணு தருவியா.. 

ச்சீய்.. எப்போவும்‌ கேட்டு தான் வாங்குற மாதிரி... 

ஏய்.. இது அது இல்லடி..‌

அப்போ வேறென்ன.. ரொம்ப ஓவரா போன பிச்சுடுவேன்.. லிமிட் தெரியும்ல... 

அது தெரியும்டி.. இது வேற... ஆனா எப்படி சொல்றதுன்னு தெர்லடி... 

சொல்லி தொலை நாயே... 

நீ என்னை பத்தி தப்பா நினைக்க மாட்டியே...

என்னடா உளர்ற...

இல்லடி சத்யா, எனக்கு உன் முடியை ரொம்ப பிடிக்கும்... அதை கொஞ்சம் தடவி பார்க்கவா?

ச்சீய்..லூசாடா நீ.. தியேட்டர்ல அதான்ன பண்ணிட்டு இருந்த... 

இப்போ கொஞ்சம் நேரம் தடவிக்கவா... 

ம்ம்ம் சரி...‌ என்று சத்யா வெட்கப்பட... நான் போனி டெய்ல் போட்டு இருந்த சத்யாவின் முடியை தடவி, என் விரல்களை நுழைத்து அவள் முடியில் கோர்த்து கோதினேன். நான் செய்வதை ஆசையாக பார்த்துக் கொண்டு இருந்தாள் சத்யா.

ரப்பர் பேண்ட் போட்டு கட்டி இருந்த முடியை பிரித்து விரித்து விட்டு, என் முகத்தில் பரப்பி விட்டு அதன் மென்மையை ரசித்தேன். சத்யாவின் முடியை அணுஅணுவாக ரசிக்க, அவளின் நீண்ட அழகிய முடியின்‌ வாசத்தை முகர்ன்து பார்த்தேன்.

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு என்பது போல அவள் தலை முடிக்கும் தனிப்பட்ட வாசம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தேன். அப்படியே நான் அவள் பின்னங்கழுத்து பகுதியில் என் முகத்தை வைத்து இருக்க, அங்கு இருந்த பூனை முடிகள் நான் தொட்டதால் சிலிர்த்துக் கொள்ள, சத்யா கூச்சத்தில் நெளிந்தாள்.


சத்யா, ரொம்ப அழகா இருக்குடி.. உன்னோட முடி...

ம்ம்ம்... இது என்னடா புது பழக்கம்... என்னோட முடியை போய் ரசிச்சுட்டு...

என்னமோ தெரியல... இதை பார்க்கும் போது.. அதை விட உன் முடியை தொடும் போது செம கிக்கா இருக்கு...

என்னது கிக் ஆ?

ம்ம்ம்ம்... சரி நீ ஹேர் கட் பண்ணுவியா?

ம்ம்ம்ம்.. எப்போவாது ஜஸ்ட் ட்ரிம் மட்டும் பண்ணுவேன்... அதுவும் அம்மா தான் கட் பண்ணி விடுவாங்க...

அப்போ நீ பார்லர் போனதே இல்லயா?

இல்லடா... அதெல்லாம் வீட்ல அலோவ் பண்ண மாட்டாங்க...

சூப்பர்டி... ஆனா உனக்கு இந்த பின் கழுத்து பக்கம் இருக்க பூனை முடி ரொம்ப வளர்ந்து இருக்கு... அதை மட்டும் எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்...


போடா, அதெல்லாம் பண்ண முடியாது... அம்மா திட்டுவாங்க...

என் மாமியார்கிட்ட எதுக்கு சொல்ற... பார்லர் போ... செலவை நான் பாத்துக்குறேன்...

அதெல்லாம் வேண்டாம் டா...

எனக்கு வேணும்டி சத்யா.. எனக்காக பண்ண மாட்டியா...

ஏண்டா இப்படி பண்ற... உனக்கு என்னமோ ஆயிடுச்சு...

ஆமா... உன் முடி மேல எனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு... அது எனக்கு வேணும்...

அதான் இவ்ளோ நேரம் ஆசை தீரும் அளவுக்கு பண்ணிட்டியே...

ஆசைக்கு எப்பவும் அளவு இல்லடி சத்யா...

இப்போ என்ன பண்ணனும் சொல்லு...

ஜஸ்ட்.. உன் முடியை கொஞ்சம் ட்ரிம் மட்டும் பண்ணிக்கவா

என்னது...

ஆமாடி... கொஞ்சமா உன் எட்ஜ்ல இருக்க முடியை ட்ரிம் மட்டும் பண்ணிக்கலாம்டி...

இப்போ எப்படிடா?

இதோ.. மால்ல எல்லாம் வாங்கிட்டேன்.

ராஸ்கல், அப்போ எல்லாம் பிளான் பண்ணிட்ட... நாயே..

ஆமாடி...தியேட்டர்ல தான் பிளான் பண்ணேன்...

ம்ம்ம்..சரி கட் பண்ணிக்கோ...

சத்யா சொன்னதும் நான் வாங்கி வந்து இருந்த கவரை பிரித்து சீப்பு, கத்தரி, அப்புறம் ஒரு பழைய மாடல் ரேசரை எடுக்கவும், சத்யா பயந்துவிட்டாள்.

டேய்.. அந்த ஷேவிங் செட் எதுக்குடா... என்னடா உன் பிளான்.. அது ஷேவிங் பண்றது தானே... 

ம்ம்ம் ஆமா சத்யா.. சொல்லி விட்டு அவளின் கலைந்து கிடந்த முடியை சீப்பால் சீவினேன். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, நான் சத்யாவின் முடியை சீவி நுனியை ஒழுங்கு படுத்தி விட்டு கத்தரியை எடுத்து நுனியில் நேர்கோடாக வெட்டினேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக U ஷேப்பில் இரண்டு பக்கமும் பெண்டாக வெட்டிவிட்டேன்.

பின் சத்யாவின் முடியை அவளுக்கு காண்பிக்க அவளுக்கு நான் வெட்டியது ரொம்பவே பிடித்து இருந்தது. சத்யாவின் அடர்த்தியான கூந்தல் U ஷேப்பில் ரொம்பவே அழகாக இருந்தது.


சூப்பர்டா.. ரொம்ப அழகா இருக்கு.. இதுக்கு முன்னாடி இந்த வேலை எல்லாம் பண்ணி இருக்கியா என்ன?

என்னடி கிண்டலா?  நான் என்ன பார்பரா? ஏதோ என் வருங்கால பொண்டாட்டி அழகா இருக்கணும்னு பண்ணா கிண்டல் பண்றியா?

சும்மா சொன்னேண்டா... சூப்பரா இருக்கு... ச்ச்சோ ஸ்வீட்... 

ம்ம்ம்... ஓகே.. நெக்ஸ்ட் அந்த பூனை முடியை எடுத்துடலாம்... 

டேய், வேணாண்டா, அம்மா பார்த்தா திட்டுவாங்க... ப்ளீஸ்டா...

ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. ப்ரெண்ட் ஒருத்தி பண்ணுனா, அவளுக்கு நல்லா இருந்துச்சு.. அதான் நானும் பண்ணேன்னு சொல்லு... 

அதுக்கு பணம் ஏதுன்னு கேட்டா...

அவங்க வீட்ல பண்ணேன்னு சொல்லு... இந்த பொய் கூட சொல்ல தெரியாம ஏண்டி லவ் பண்ற...

என்ன பண்றது என் நேரம்.. நீ பேசுவ... நான் ஒண்ணும் பொய் பேசல.. நீயும் எனக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம்... போடா...

செல்லக்குட்டி.. கோச்சுக்காத... எப்படியாவது என் அத்தையை சமாளிச்சுக்கோ... எனக்காக இது கூட பண்ண மாட்டியா...?

இப்படி சொல்லியே என்னை கவுத்திடு... பண்ணித் தொலை.. எப்படியோ எங்க அம்மாகிட்ட பொய் சொல்லிக்கிறேன்...


சதிஷ் சந்தோஷமாக ஷேவிங் செட்டை எடுத்து ப்ளேட் போட்டு விட்டு காரில் இருந்த வாட்டர் பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சத்யாவின் பின் கழுத்தில் தடவி விட்டு அவள் முடியை சீவி, ஒழுங்கு படுத்தி விட்டு, ஒரு பார்ட் பிரித்து, கீழ் பகுதியில் இருந்த பூனை முடியை மெதுவாக சிரைக்க... முடி கீழே விழுந்து அவளுடைய அழகான, அப்பழுக்கில்லாத பொன் நிற கழுத்து வெளிப்பட, அதை பார்த்து கொண்டு மீதம் உள்ள முடிகளை எல்லாம் சிரைத்து விட்டான் சதிஷ்... பின் மெதுவாக கையால் அவள் கழுத்தை தடவி பார்க்க, சத்யா கூச்சத்தில் நெளிய, சதிஷ் அவள் கழுத்தில் தன் உதட்டை பதித்தான். 


சத்யாவும் உணர்வு மிகுதியால் திரும்பி அவனை கட்டிக் கொள்ள சதிஷ் சத்யாவின் மெல்லிய இதழில் தன் இதழ் பதித்து மெதுவாக முத்தமிட, சத்யாவும் அவனுக்கு ஒத்துழைக்க, சதிஷ் கொஞ்சம் ஆவேசமாக அவளின் உயிர் நீரை உறிஞ்சி எடுத்தான். இரண்டு நிமிடங்கள் நீண்ட மூச்சு முட்ட முத்தமிட்டு பிரிந்தனர். 

ச்சீய்... நாயே லிமிட் தாண்ட கூடாதுன்னு சொன்னேன்ல.. என்று அவனை செல்லமாக அடிக்க, அவனும் அவள் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடினான்.

இப்ப ரொம்ப அழகா இருக்குடி பாரு...
என்று செல்போனில் போட்டோ எடுத்து காட்ட, அவள் தன் கழுத்தின் அழகை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.

நல்லா இருக்குடா... இனிமே இப்படியே மெயின்டெயின் பண்ணனும்...

ம்ம்ம்ம்.. பண்ணிக்கலாம் நான் ரெடி.. 

ம்ம்ம்.. இது எங்க போய் முடியபோகுதோ... என் தலை முடியை மொட்டை அடிக்காம இருந்தா சரி...

அது நம்ம கல்யாணத்துக்கு அப்பிறம் பார்த்துக்கலாம் சத்யா...

டேய்.. என்னடா சொல்ற... அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்... என்று அவனை அடிக்க.. காதலர்களை வேடிக்கை பார்க்காமல் அவர்களை தனிமையில் விடுங்கப்பா... போங்க போய் வேலையை பாருங்க...

முற்றும்...


********************************************************************



ஹாய்,  நான் இந்த கதையை யோசித்து இரண்டு நாட்கள் தான் ஆனது. பிப்ரவரி 14 ல் போஸ்ட் பண்ண வேண்டும் என்று நினைத்து வேகமாக எழுதினேன். ஆனாலும் இந்த கதையை எழுதிய விதம் எனக்கு ரொம்பவே திருப்தியாக இருக்கிறது. கதை நான் நினைத்ததை விட ரொம்பவே பெரியதாக போய் விட்டது. அதனால் இந்த கதையை இரண்டு பாகம் போடுவது தான் என் வழக்கம், ஆனால் நான் முன்பே சொன்னது போல் இது காதலர் தின சிறப்பு பதிவிற்காக இருப்பதால் ஒரே பாகமாக போஸ்ட் பண்ணி இருக்கிறேன். படித்து விட்டு கமெண்ட் சொல்லுங்கள். மற்றபடி கபடி கபடி கதையின் ஆறாம் பாகத்துடன்  முடிந்தது.  யாரும் கமெண்ட் பண்ணவில்லை. கதை பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. நன்றி.










4 comments:

  1. really rmba nalla iruku brother, headshave story mattum illama intha mathiri storyla variety kaatuna super... really super super.

    ReplyDelete
  2. Story nala eruku
    But ethu konjam new ah eruku. Without mottai and hsircut also simple ah. But super. Keep it up bro

    ReplyDelete
  3. அருமையான கதை நண்பா சத்தியமா நல்லா இருந்துச்சி கடைசியாக உங்களின் பஞ்சுடைலக் சூப்பர் நண்பா உங்களின் அடுத்த கதை எப்பொழுது வரும் முடிந்தால் அதை கொஞ்சம் சொல்லுங்க

    ReplyDelete