Sunday 7 March 2021

பிரகதியின் மாற்றம் - எட்டாம் பாகம்

பிரகதியின் மாற்றம் - இரண்டாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - மூன்றாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் -  நான்காம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - ஐந்தாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - ஆறாம் பாகம் 

பிரகதியின் மாற்றம் - ஏழாம் பாகம் 



நானும் பிரகதி அம்மாவும் சென்னை வந்து ஒரு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது நாங்கள் தங்கி இருந்த அப்பார்மெண்டில் என் அம்மாவுக்கு நிறைய தோழிகள் இருந்தனர். என் அம்மாவின் அழகிலும், இனிமையான பேச்சிலும், அம்மா பழகும் விதமும் அனைவருக்கும் பிடிக்க, என் அம்மாவை சுற்றி எப்போதும் நிறைய பேர் இருந்து கொண்டே இருந்தனர். 

அப்பார்ட்மெண்ட்டில் இருந்த ஒரு சிறு லேடீஸ் கிளப்பில் அம்மாவும் இப்போது முக்கிய உறுப்பினராக இருந்தாள். என் அம்மாவின் கால் முட்டி வரை நீண்டு வளர்ந்து இருந்த முடி தான் அவளது அடையாளம். சென்னையில் எந்த பெண்ணுக்கும் அவ்வளவு நீளமான முடி இருந்து யாரும் பார்த்தது இல்லை. அதனால் ஆண், பெண் வித்தியாசமின்றி என் அம்மாவின் நீளமான முடியை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அம்மா எங்கள் அப்பார்ட்மெண்டின்  செலிபிரிட்டியாக இருந்தாள்.


நான் அம்மாவை தனியாக விட்டு விட்டு வேலைக்கு செல்கிறோமே என்ற கவலையில்லாமல் இருந்தேன். அம்மாவும் தனக்கு கிடைத்த புதிய தோழிகளுடன் மகிழ்ச்சியாக் இருந்தாள்.

ஆனால் அம்மாவை சில பெண்கள் கொஞ்சம் மாடர்னாக மாற வற்புறுத்தினர். அம்மா எப்போதுமே சாதாரண உடைகள் தான் அணிவாள். அவளது லேடீஸ் கிளப் மீட்டிங்கின் போது கூட எந்த ஆடம்பரமும் இல்லாமல் தான் ஆடை அணிந்து கொண்டு செல்வாள். 
அதனால் அம்மாவின் தோழிகள் அம்மாவின் ட்ரெஸ் கோடை மாற்ற முயற்சி செய்தனர்.


ஒருநாள் மாலை நான் வேலை முடிந்து வரும் போது என் வீட்டில் நிறைய பெண்களின் பேச்சு சத்தம் கேட்டது. ஹாலில் இரண்டு பேர் அரைட்டை அடித்துக் கொண்டு இருக்க, பெட் ரூமில் இரண்டு பேர் என அம்மாவுடன் இருந்தார்கள்.

வா, மதன் எப்படி இருக்க? உன்னை பார்த்தே ரொம்ப நாளாச்சு?

நல்லா இருக்கேன் ஆண்டி.. நீங்க எப்படி இருக்கீங்க? என் அம்மா எங்கே?

பயப்படாதே.... உன் அம்மா உள்ள தான் இருக்காங்க... அவங்களுக்கு கொஞ்சம் மேக்கப் பண்ணிட்டு இருக்காங்க... அவங்க லுக்கையே நாங்க மாத்த போறோம்...

என்னது.... எங்கம்மாவை மாத்த போறீங்களா? என் அம்மாவுடைய அழகுக்கு என்ன குறைச்சல்? நீங்க எல்லாரும் என் அம்மாவை விட அழகா?

டேய், மதன் ஏன் கோப படுற? உன் அம்மா தான் எங்க எல்லாரையும் விட அழகு.. ஆனா இன்னும் கொஞ்சம் அழகு படுத்தினா என்ன? அதான் பண்ணிட்டு இருக்கோம்.. இப்பொ அவங்க வெளியே வரும் போது பாரு... நான் சொல்றது உனக்கு புரியும்...!

நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அம்மா சிறிது நேரத்தில் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே வந்தாள். ஒரு அழகான பட்டு சேலையில் ஒரு சின்ன நெக்லஸ் அணிந்து கொண்டு படிய வாரிய நீண்ட தலை முடியுடன் வந்த அம்மாவை நான் கண்கள் விரித்து பார்த்தேன்..



அம்மா அவ்வளவு அழகா என்று அப்போது தான் எனக்கே தெரிந்தது. ஆனால் அம்மா கூச்சத்துடன் நெளிந்து கொண்டே இருந்தாள். 

இப்பொ சொல்லு மதன்..உன் அம்மாவோட அழகு கூடி இருக்கா?

ஆமா ஆண்டி... ரொம்ப அழகா இருக்காங்க...  அம்மா இந்த மேக்கப்ல ரொம்ப அழகா இருக்கீங்க... சோ இனிமேல் இப்படியே நீங்க இருங்க....

சீ.. போடா இவங்க தான் இப்படி பேசறாங்கன்னா நீயும் அவங்க கூட சேர்ந்துகிட்டு....

அக்கா, மதனே சொல்லிட்டான்... சரி வாங்க... இன்னொரு ஸ்டைல் ட்ரை பண்ணலாம் என்று சொல்லி பெட் ரூம் கூட்டி சென்றனர். நானும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க, அம்மா 20 நிமிடத்தில் வெளியே வந்தாள்.  இந்த முறை ஒரு கருப்பு நிற சேலையில் தங்க சரிகை போட்ட பார்டர் வைத்த சேலையும், சிவப்பு கலர் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்ம், ஒரு வைர நெக்லஸீம், அதற்க்கு தகுந்தாற்போல ஒரு பெரிய தோடும் அணிந்து வந்தாள்.


முகத்தில் அளவான மேக்கப் இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தாள் என் பிரகதி அம்மா. நான் அம்மாவின் அழகை பார்த்து அதிசயத்து என்னை அறியாமல் எழுந்து நின்றேன்.

அம்மா... மார்வலஸ்... செம அழகிம்மா நீங்க... சூப்பர்ப் ஆண்டி... என் அம்மா இனிமே இப்படிதான் இருக்கணும்... அது உங்க எல்லோருடைய பொறுப்பு... 

அன்றிலிருந்து என் அம்மா தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாள். நானும் அடிக்கடி அம்மாவுக்கு சில ஐடியாக்கள் சொன்னேன். அம்மா அடிக்கடி தோழிகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தாள். செலவுக்கு என்னுடைய கிரெடிட் கார்டை கொடுத்து இருந்தேன். அதிகமாக தனக்கான ஆடைகளை வாங்க துவங்கினாள். எனக்கும் மாடர்னாக, ட்ரெண்டியாக வாங்கி வந்தாள். அம்மா தான் என்னை விட இன்றைய ட்ரெண்டை அறிந்து வைத்து இருந்தாள்.

அதிகமாக ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்கள் அணிய ஆரம்பித்தாள். அதனால் தன்னுடைய கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து இருப்பாள். வீட்டிலேயும் ஸ்லீவ்லெஸ் நைட்டிகள் அணிய, நான் அடிக்கடி அம்மாவின் கைகளை பார்க்கும் சூழ்நிலை உருவானது. அவளும் அதை கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை. 



மதன், என்னடா பண்ற...

சொல்லுங்கம்மா...சும்மா தான் இருக்கேன்... 

அம்மா இன்னிக்கு கொஞ்சம் வெளியே போகணும்.. உனக்கு ஏதாவது வேலை இருக்கா?

இல்லம்மா.. சொல்லுங்க...

என்னை கொஞ்சம் ட்ராப் பண்றியா? முடிஞ்சா என் கூட இருந்து என்னை கூட்டி வரணும்.. இது கொஞ்சம் பெரிய பார்ட்டி.. என்னால அங்க அதிக நேரம் இருக்க முடியாது.. அதான்...

சரிமா...

அப்புறம்.. ஒரு விஷயம்..

சொல்லும்மா...

இல்ல.... எனக்கு உன்னோட ரேசர் யூஸ் பண்ணனும். யூஸ் பண்ணாத. ரேசர் வச்சு இருக்கியா மதன்.. 



இருக்கும்மா.. பட் அது உங்களுக்கு யூஸ் பண்ண தெரியாது.. கொஞ்சம் பிசகினாலும் காயம் ஆகிடும்... 

அய்யோ.. அப்போ என்ன பண்றது..?

எங்கயாவது பார்லர்ல பண்ணிக்கோங்க...

டேய், இன்னும் அரை மணி நேரத்தில் நான் கிளம்பணும்... நீ போய் கடைல க்ரீம் வாங்கிட்டு வா... 

அதுக்கும் அரை மணி நேரம் ஆகும்மா..

இப்பொ என்னடா பண்ண? சரி விடு நான் வேற பிளவுஸ் போட்டுக்குறேன்...

ஏன் கோவபடுறீங்க..  அன்னிக்கு மாதிரி நானே உங்களுக்கு பண்ணி விடுறேன்... போய் வேற ஸ்லீவ்லெஸ் நைட்டி போட்டு வாங்க....

அம்மா எதுவும் பேசாமல், போய் நான் சொன்ன மாதிரி வர, நான் போய் என்னுடைய இம்போர்ட்டட் ரேசரை எடுத்து வந்து, அம்மாவின் கைகளை தூக்கி, முடி எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க, ஒரு பெரிய கருப்பு காடே இருக்க, அதை சிஸரால் நெருக்கமாக வெட்டி விட்டு, கொஞ்சமாக பவுடர் போட்டு, வியர்வை ஈரத்தை துடைத்து விட்டு, பின்னர் ரேசரால் முடியை எடுத்து விட்டேன்.. 

தேங்க்ஸ்டா மதன், அம்மா வேகமாக போய் குளித்து விட்டு, ரெடியாகி வர, நான் அவளை பார்த்து அதியசித்தேன்.  


பின் பார்ட்டி முடிந்து வரும் போது அம்மா அவள் புஜத்தில் ஒரு டாட்டூ குத்தி இருந்தாள். அது பார்க்க மிக அழகாக இருந்தது. அது எல்லோருக்கும் தெரியும் படி இருக்க வேண்டும் என்றால் இனிமேல் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் தான் போட வேண்டும். அதனால் அந்த மாடலில் வித விதமாக பல பிளவுஸ்கள் தேய்த்து அணிய ஆரம்பித்தாள்.

எத்தனை விதமாக என் அம்மா தன்னை அலங்கரித்தாலும், என் அம்மா அழகாகவே இருந்தாள். ஆனால் அம்மாவின் நீண்ட அடர்த்தியான முடி மட்டும் எதற்க்கும் மேட்ச் ஆகாமல் தனித்து தெரிய, அவளின் தோழிகள் நிறைய பேர் அதை ஒரு குறையாக சொல்லிக் கொண்டே இருந்தனர். நானும் அதை அடிக்கடி சொன்னேன்..

அதன் பின் ஒரு நாள் அம்மா தன் முடியை வெட்ட ஒத்துக் கொண்டாள். என் அம்மாவின் முடியை  வெட்டுவதை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நான் இருக்க, அம்மா செய்த செயல் என்னை ஆச்சர்யப்படுத்தியது.



தான் முடியை வெட்டுவதை யாரும் பார்க்கக் கூடாது என்று நினைத்தவள், தன்னுடைய புதிய லுக்கை எல்லோரும் ஒரே நேரத்தில் பார்த்து ஆச்சர்யபட வேண்டும் என்று நினைத்தாள். அதனால் ஒரு சண்டே காலை தூங்கிக் கொண்டு இருந்த  எழுப்பினாள்.

என்னம்மா, இன்னிக்கி லீவ் தான், இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேன்மா... ப்ளீஸ்...

டேய், மதன் எழுந்திரு.. ஒரு முக்கியமான வேலை உனக்கு இருக்கு... வா...

ம்ம்ம்மா ப்ளீஸ் மா...

டேய் எனக்கு ஹேர் கட் பண்ணி விடுடா... வாடா மதன்...

என்னம்மா சொல்றீங்க... என்று அதிர்ச்சியில் எழுந்து ஹாலுக்கு வர, அம்மா எல்லாம் தயாராக எடுத்து வைத்து இருந்தாள். அம்மா ஸ்டூலில் உட்கார்ந்து கொள்ள, அவளே தன் முடியை எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்று ரப்பர் பேண்ட் போட்டு இருந்தாள். பின் கத்தரியை எடுத்து என்னிடம் கொடுத்து எப்பட் வெட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்து என்னை வெட்ட சொன்னாள்.


ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் முதல் முறை என் ஆசை நிறைவேறுவதை எண்ணி கொஞ்சம் பதட்டம் என கலவையான உணர்ச்சியில் அவள் முடியை வெட்டி முடித்தேன். அந்த வெட்டப்பட்ட முடியை ஒரு கவரில் போட்டு பத்திரப்படுத்தி என் ரூமில் வைத்துக் கொண்டு, அன்றும் அம்மாவிற்க்கு கையில் வளர்ந்து இருந்த முடியை ஷேவ் செய்து விட்டேன்... அம்மா இப்போது சென்னை வாழ்க்கைக்கு பழகி, ரொம்பவே மாடர்னாக மாறிவிட்டாள்.




இப்படியே நாட்கள் செல்ல, ஒரு நாள் நான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வர, அம்மா ஹாலில் சோகமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.

என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க?

இல்லடா.. மதன் எனக்கு கீதா அத்தை போன் பண்ணினா... அவை போன் பண்ணதுல இருந்து மனசு ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு...

என்னம்மா சொன்னாங்க கீதா அத்தை... அங்க எல்லோரும் நல்லா இருக்காங்களா...

ம்ம்ம்ம் நல்லா இருக்காங்க?

அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.. என்ன பிரச்சனை...?

கீதா அத்தையோட பொண்ணு வைஷ்ணவிக்கு கேன்சராம் டா.. இன்னிக்கு டெஸ்ட் ரிசல்ட் வந்துச்சாம், உடனே லேசர் ட்ரீட்மெண்ட் பண்ணனும்னு டாக்டர்ஸ் சொல்ல, வைஷூ வேண்டாம்னு சொல்றாளாம்....

ஏண்ம்மா வேண்டாம்னு சொல்றா?


அது ரொம்ப கஷ்டமான்னா ட்ரீட்மெண்ட், அதை பண்ணா சைடு எபெக்ட்ல வெயிட் லாஸ், ஹேர் லாஸ்ன்னு நிறைய பிரச்சனைகள் இருக்கு... சின்ன பொண்ணு எப்படி தாங்குவா? நினைச்சாலே பயமா இருக்கு...

சரிம்மா, எல்லாம் நல்ல படியா நடக்கும்... நாம நாளைக்கே கோவை கிளம்பலாம்... போய் வைஷூகிட்ட நீங்க பேசுங்க... அவ நீங்க சொன்னா கேட்பா....

ஆமா மதன்... நாம கண்டிப்பா கோவைக்கு கிளம்பணும்.. காலைலே நேரத்தில் கிளம்பலாம்.

ஓகேம்மா....


******************************************************

ப்ரெண்ட்ஸ்... இந்த கதையை  என்று நினைத்தாலும் நீண்டு கொண்டே போகிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி கதை இருக்கிறதா என்று கமெண்டில் சொல்லுங்கள். ஆனாலும் நம் கதையை நிறைய பேர் படித்தாலும் ஒரு சிலர் மட்டுமே கமெண்டில் நம்மை ஊக்கப்படுத்துகிறீர்கள்... படிக்கும் நண்பர்கள் முடிந்த அளவு தங்கள் கருத்துக்களை சொன்னால் மிக்க மகிழ்ச்சி. நன்றி..








1 comment:

  1. Yes, it's bit long but no wry to read this lengthy story. Pragathi ku mottai adikama vida matinga Pola!

    ReplyDelete