Tuesday 25 May 2021

வெளி நாட்டு காற்று - இரண்டாம் பாகம்

ஜோ ஒயிட்டும், அவள் கணவனும் காத்திருக்க, நான் போய் இரண்டு டோக்கன் வாங்கி வந்தேன். ஒன்றை ஜோ ஒயிட் கணவனிடம் கொடுத்து விட்டு, இன்னொன்றை ஜோ ஒயிட்டிடம் கொடுத்தேன். அவ அதை வாங்கிக் கொண்டு என் பின்னால் வர, நான் சண்முக நதி மொட்டை அடிக்கும் கட்டிடத்திற்க்குள் சென்றேன். அங்குப் பெரிய கூட்டமே இருந்தது.


அதில் ஒரு பெரிய ஹால் ஒன்றும், ஒரு பகுதியில் 10X16 அளவில் ஒரு அறையும் இருந்தது. நான் அந்தச் சிறிய அறைக்குள் இருவரையும் கூட்டிச் சென்று வேலை இல்லாமல் இருந்த பார்பர் முன் அவரை உட்கார சொல்லி விட்டு, டோக்கனை கொடுக்கச் சொல்ல, அவன் சட்டையைக் கழட்டி என்னிடம் கொடுத்து விட்டு உட்கார, பார்பர் மொட்டை அடிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் ஜோ ஒயிட் கணவனுக்கு மொட்டை அடித்து விட்டுத் தாடி, மீசையை மட்டும் எடுக்காமல் விட்டான் பார்பர். பின் ஜோ ஒயிட் அந்தப் பார்பரிடம் டோக்கனை அங்கு இருந்த மொத்த கூட்டமும் ஜோ ஒயிட்டை பார்த்தது.


அந்த அழகான வெளி நாட்டு பெண்ணும் மொட்டை அடிக்கப் போகிறாளா என்று ஆச்சர்யத்துடன் பார்த்தனர் நம் முருகனின் பக்தர்கள். ஜோ ஒயிட் தான் அணிந்து இருந்த சுடிதார் ஷாலை கழட்டி என்னிடம் கொடுக்க, நான் அதை வாங்கி வைத்துக் கொண்டேன். 

அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு கிராமத்து பெண் என்னிடம், நீ தான் அந்த வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணி இருக்கியா என்று கேட்க, நான் எதுவும் பேசாமல் அமைதியாக ஆமாம் என்று சைகையில் தலையை மட்டும் ஆட்டினேன்.

வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணி, நம்ம முருகனுக்கே முடி காணிக்கை கொடுக்க வைக்குற... ஆனா இங்க இருக்க சில சல்லி பசங்க பொங்கல் கொடுத்தா கூட வாங்க மாட்டேங்குறானுக என்றாள்.

நான் அவளிடம் பேச்சை வளர்க்காமல் ஜோ ஒயிட் மொட்டை அடிப்பதை பார்க்க ஆரம்பித்தேன். அப்போது தான் பார்பர் அவள் தலையை நனைத்து விட்டு, ரேசரை வைத்து மழிக்கப் போக, அந்தப் பெண் ஏய் இருப்பா, என்று சொல்லி விட்டு, ஜோ ஒயிட்டிடம் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று சொல்லச் சொன்னாள்.


ஜோ ஒயிட் அந்தப் பெண் சொன்னதை போல  முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று சொல்ல, அங்குக் கூடி இருந்த தமிழர்கள் அனைவரும் அரோகரா, அரோகரா என்று கரகோஷமாகச் சொல்ல, பார்பர் ஜோ ஒயிட் தலையில் ரேசரை வைத்து மழிக்க ஆரம்பித்தான். அவளின் வெள்ளை நிற முடி மழிக்கப்பட்டு, அவளுடைய மொட்டை அடித்த தலை வெளுப்பாகத் தெரிய, பார்பர் தொடர்ந்து மழித்துக் கொண்டே இருந்தான். 

சில நிமிடங்களில் ஜோ ஒயிட் தலை முடி முழுவதும் மழுமழுவென்று மொட்டை அடித்து முடித்ததும், அந்தப் பெண் ஜோ ஒயிட்டின் மொட்டைத் தலையைத் தடவி பார்க்க, பிசிறு இருந்த இடங்களில் மீண்டும் ஒரு முறை மொட்டை அடிக்கச் சொன்னாள்.


பார்பர் மீண்டும் ஒரு முறை தண்ணீரை தடவி விட்டு, ரேசரில் பிளேடு மாற்றி விட்டு ரிவர்ஸ் ஷேவிங் செய்து விட்டான். அதன்பின் ஜோ ஒயிட் எழுந்து கொள்ள, அந்தப் பெண் ஜோ ஒயிட் தலையைப் பார்த்து விட்டு, திருஷ்டி கழித்து விட, நாங்கள் மூவரும் குளிக்கும் இடத்திற்கு சென்று குளித்து விட்டு வந்தோம். ஜோ ஒயிட் மீண்டும் ஒரு ஆரஞ்சு கலர் சுடிதார் அணிந்து கொண்டு வர, அதே கிராமத்து பெண், அங்குக் குளித்து விட்டு வந்திருந்த தன்னுடைய மகனுக்குச் சந்தனம் தடவிக் கொண்டு இருந்தாள்.


ஜோ ஒயிட்டை பார்த்த அந்தப் பெண், ஜோ ஒயிட்க்கும் மொட்டை அடித்த தலையில் சந்தனம் தடவி விட்டாள். அதே போல அவள் கணவனுக்கும் சந்தனம் தடவி விட்டாள். அதன் பின் மூவரும் மலையில் நடந்தே ஏறினோம். 





மேலே ஏறிப் பொது தரிசனம் வழியாகக் கூட்டத்தில் லைனில் நின்று முருகனை தரிசித்து விட்டுக் கீழே வந்தோம். வழி எங்கும் மக்கள் ஜோ ஒயிட்டின் மொட்டைத் தலையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். சிலர் ஜோ ஒயிட்டுடன் செல்பி எடுத்துக் கொள்ள, நாங்கள் மெதுவாகக் கீழே வந்து ரூமை சென்று அடைந்தோம். அடுத்தபடியாக அப்படியே கொடைக்கானல் சென்று ஒரு நாள் இருந்து விட்டு அடுத்த சில நாட்களில் தென்னிந்தியா முழுவதும் முக்கிய இடங்களைச் சுற்றிக் காட்டினேன்.

பின் ஜோ ஒயிட் யுஎஸ் கிளம்பி செல்லும்போது எனக்கு ஒரு பெரிய கிப்டாக அவளையே ஒரு நாள் முழுவதும் கொடுத்து விட்டுச் சென்றாள். அந்த நாளில் அவளுக்கு மீண்டும் ஒரு முறை முழுவதுமாக மொட்டை அடித்துவிட்டேன்.


முற்றும்...




1 comment: