Tuesday 11 May 2021

Hair Care: பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான் தவிர்க்காம படியுங்க…

 மீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதைத் தடவினால் போதும்!

ஒரு சிலருக்கு மீசை தாடி அதிகமாக வளராது. அது அவர்களுக்கு ஒரு குறை போலவே தோன்றிக் கொண்டிருக்கும்.இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் மீசை தாடி வைப்பது மிகவும் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.


ஹார்மோன் இன்பேலன்ஸால் சரியாக முடி வளர்ச்சி இல்லாதவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் உங்கள் மீசையும், தாடியும் வளர்வதை காணலாம்.




தேவையான பொருட்கள்:

1.கருவேப்பில்லை வெயிலில் உலர்த்தியது.

2. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்

3. ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்.


செய்முறை:

1. கருவேப்பிலையை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.

2. பின்னர் அந்தப் பொடியுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

3. அதனுடன் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை ஊற்றவும்.

மூன்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். நன்றாக ஒரு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளவும்.


இந்த முறையை நீங்கள் பயன்படுத்தும்பொழுது ஒரு வாரம் முழுவதும் நீங்கள் உங்கள் தாடி மீசையை ஷேவ் செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் தாடி மற்றும் மீசையை சேவ் செய்ய வேண்டும். ஏனெனில் ஏற்கனவே மலர்ந்த பூனை முடிகள் மற்றும் மெல்லிய முடிகள் புதிதாக முடி வளர்வதை தடுக்கும் என்பதனால் தாடி மீசையை எடுத்து விடவும்.


ஸ்டீம் பாத் எடுக்க வேண்டும். ஸ்டீம் பாத் எடுக்கும்பொழுது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் வியர்வைள் எல்லாம் வெளியேறி முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி விடுகிறது.


அதற்குப் பின் அந்தப் பேஸ்டை தாடி மீசை பகுதிகளில் பூசி இரவு முழுவதும் விட்டுவிடலாம். ஒருமணி நேரம் கழித்து கழுவி விடலாம்.


இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வரப் புதிதாக முடிகள் மிகவும் வளரும். மேலும் வெள்ளை முடிகள் வருவதைத் தடுத்து கருமையான முடிகள் வளரும்.


கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு மிகவும் அதிகமாக உதவுகிறது.மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் முடியை மறுபடியும் புத்துணர்வு பெற்று வளரச் செய்கிறது. ஆமணக்கு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள் உள்ளதால் அது முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.


இதைப் பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் உங்களை மீசை மற்றும் தாடி முடிகள் வளர்வதை கண்கூடாகக் காணலாம்.

கூந்தலுக்கு எண்ணெய் இருப்பது போன்று தாடி வளர்வதற்கும் எண்ணெய்கள் கிடைக்கின்றது. கெமிக்கல் கலந்த எண்ணெய் பயன்படுத்தாமல் இயற்கை எண்ணெய் சுத்தமான தேங்காயெண்ணெய், ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் போன்றவற்றையே பயன்படுத்தலாம். அடர்த்தி அதிகரிக்க ஜோஜோபா ஆயில் பயன்படுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள் தாடி வடிவமைப்பாளர்கள்.

என்ணெய் பயன்படுத்துவதன் மூலம் தாடிக்கு ஊட்டம் கிடைக்கும். அந்த இடத்தில் வறட்சி இருக்காது. ஈரப்பதம் இருக்கும். தாடியில் அழுக்குகள் பிசுபிசுப்பு முடி வறட்சி போன்ற பிரச்சனையும் இருக்காது. இவையெல்லாமே நீங்கும்போது முடி வளார்ச்சி குறை இல்லாமல் வளரும். அளவுக்கதிகமாகவும் பயன்படுத்த வேண்டாம்.

ட்ரிம் செய்வதும் முக்கியம்

தாடிக்கு ஆயில் மசாஜ் போன்று தாடியை ட்ரிம் செய்வதும் மிகவும் முக்கியம். முதல் முறை அனுபவமிக்க நிபுணர்களிடம் சென்று வடிவமைத்துகொண்டு இரண்டு வார இடைவெளியில் முடியின் வளர்ச்சிக்கேற்ப நீங்களே ட்ரிம் செய்து கொள்ளுங்கள். ட்ரிம் செய்யும்போது குளித்து வந்தவுடன் செய்யக் கூடாது. இவை ட்ரிம் செய்யும்போது தவறாகச் செய்துவிட கூடும்.

ஷாம்பு போடலாமா

கூந்தலின் அழுக்கை அகற்றவும் மிருதுத்தன்மைக்கும் ஷாம்புக்களை பயன்படுத்துவது போலவே தாடியின் வளர்ச்சிக்கும், பொலிவுக்கும் ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தலாம். அதிக கெமிக்கல் இல்லாத தரமான ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் தாடி தனி களையைப் பெறும்.

கூந்தலை போன்றே முதலில் ஷாம்பு பயன்படுத்தி தாடியை அலசிப் பிறகு கண்டிஷனர் தேய்த்து 2 நிமிடங்கள் கழித்து தாடியை அலசுங்கள். உணவில் கவனம் செலுத்துங்கள்



முடி வளர்சியை ஊக்குவிக்கும் சத்துகளும் அவசியம் தேவை. சத்துமிகுந்த உணவை எடுத்துகொள்வதை ஆண்கள் தவறிவிடுகிறார்கள். தாமிரம், மெக்னீஷியம். வைட்டமின் பி, டி. இ, பி6, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை.

இந்தச் சத்துகள் நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் தாடியை அழகாய் வடிவமைத்துகொள்ளலாம்.

இரும்பு தாதுச் சத்துக் குறைபாடு.
கீரைவகைகள்
பீட்ரூட்
வேர்க்கடலை
பேரீச்சை
கறிவேப்பிலை
முருங்கை
ஆட்டு கால் சூப்
ஈரல்
முட்டை
பால்
பதாம்
பிஸ்தா
முந்திரி
கூடவே அயர்ன் டேப்லட்




No comments:

Post a Comment