Sunday 6 June 2021

அன்புக்கு அபிதா - ஐந்தாம் பாகம்

Abitha mottai

வீட்டுக்கு சென்ற அபிதா நேராக தன் ரூமுக்கு செல்ல, அவளை கவனித்த அபிதாவின் அம்மா, பின்னாலேயே சென்றாள்.

என்னடி என்னாச்சு? இவ்ளோ கோபமா வர்ற?

அய்யய்யோ... அம்மா நம்மளை கவனிச்சு இருக்காளே... என்ன சொல்லி சமாளிக்க?

என்னடி நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லாம முழிக்கிற?

அம்மா... பார்லர்ல என் முடியை ரொம்ப ஷார்ட்டா கட் பண்ணிட்டான்... இங்க பாரும்மா...

என்னடி இவ்ளோ தள்ளி வெட்டி விட்டுருக்கான்... எங்க திரும்பு... என்று அவளை திருப்பி அபிதாவின் பின் பக்கம் பார்க்க, அவள் முடி பாப் கட் போல அழகாக இருந்தது.

நல்லா தாண்டி இருக்கு... பரவாயில்லை விடு... இதுவே சூப்பரா தான் இருக்கு... நீ போடற ட்ரஸ்க்கு இந்த ஹேர் கட் தான் மேட்ச் ஆகும்... 

போம்மா... உனக்கு அறிவே இல்லை... நான் எவ்ளோ ஆசையா வளர்த்த முடியை கட் பண்ணிட்டான்னு இருக்கேன்...



ஆமாடி... நீ தான் முடியை வளர்த்த... அவ அவ  கஷ்டப்பட்டு அரப்பு, சீயக்காய், மூலிகை எண்ணெய்னு செஞ்சி கொடுத்தது நான்... நீ வளர்த்த...

இப்போ நீ என்னை தனியா விடுறியா? என்று அபிதா கத்த, அம்மா வெளியே சென்றுவிட்டாள். பின் அபிதா ட்ரஸ்ஸிங் டேபிளில் தன் முடியை பார்க்க, அழகாக தன் பின் கழுத்து சிவந்த நிறத்தில் தெரியும் படி வெட்டப்பட்டு இருக்க, அதை ரசித்து பார்த்தாள். 

குதிரை சவாரி செய்யும் போதும் நல்லா தான் வெட்டி இருக்கான் என்று அபிதா நினைக்கவும், அப்போது தான் அவள் அங்கு ஆட்டம் முடிந்து, கோபத்தில் குளிக்காமல் வந்தது நினைவு வர, வெட்கத்துடன் போய் குளித்து வந்தாள். ஷவரில் நனைந்த அவள் தலை முடியை உலர வைக்க, சில நிமிடங்களில் உலர்ந்து காய்ந்து விட்டது. அதுவும் அவளுக்கு பிடித்துவிட்டது. ஜெகனின் மேல் இருந்த கோபம் கொஞ்சம் தணிய... 
துணி மாற்றிக் கொண்டு கிட்சன் சென்று சாப்பிட்டாள்.

அடுத்த நாள் காலேஜில் அபிதா ஜெகனை பார்த்தாலும், அவனை டீஸ் செய்ய வேண்டும் என்று கண்டு கொள்ளாமல் செல்ல ஜெகன் அவளிடம் பேச பின்னாலே வர, அதற்க்குள் அவளுடைய பாப் கட் ஹேர் ஸ்டைலை பார்த்து, எல்லோரும் பாராட்ட சுற்றி வளைத்துவிட்டனர். காலேஜ் தோழிகள் அனைவரும் இந்த ஹேர் கட் நல்லா இருக்கு என்று சொல்ல, ஜெகன் மேல் இருந்த கோபம் காணமல் போனது.


அன்று மாலையும் ஜெகனை பார்க்காமல் போக அவன் மனமுடைந்துவிட்டான். அடுத்த நாள் ஜெகன் காலேஜ் வரவில்லை. அபிதாவுக்கு ஜெகன் வராததால் மதியம் கிளாஸ் கட் பண்ணி விட்டு, ரூமுக்கு செல்ல, அவன் ரூமிலும் இல்லை. பக்கத்தில் கேட்க, அவன் ஒரு மணி நேரம் முன்பு தான் பேக்குடன் கிளம்பி சென்றான் என்று தெரிய, உடனே பஸ் ஸ்டாண்ட் சென்றாள்.

ஜெகன் பஸ் ஸ்டாண்டில் சோகமாக உட்கார்ந்து இருக்க, அவன் அருகில் போய் அபிதா அமர, அவன் அவளை கவனிக்காமல் இருந்தான். 

டேய்... ஜெகா... என்னடா என்னை லவ் பண்ணி ஏமாத்திட்டு கழட்டி விட்டு போறியா?

அபி... என்ன அபி சொல்ற... நான் தான் தப்பு பண்ணிட்டேன்... என்னை முதல்ல மன்னிச்சுடு அபி... நான் அப்படி பண்ணி இருக்க கூடாது... மத்தபடி நான் உன்னை கழட்டிவிட எல்லாம் நினைக்கலை...

அப்படி நினைச்சா உன்னை தொலைச்சுடுவேன்... என்னை பத்தி தெர்யும்ல... வா இங்க என்று அவன் சட்டையை பிடித்து ஆட்கள் இல்லாமல் நின்று கொண்டு இருந்த ஒரு பஸ்க்குள் இழுத்து சென்று இரண்டு கன்னத்திலும் அறைந்தாள். அவனுக்கு வலித்தாலும் அவன் அமைதியாக நிற்க, அபிதா உடனே அவனைக் கட்டிக் கொண்டு லிப் லாக் பண்ணினாள். சில நிமிடங்கள் கழித்து இருவரும் ரூமுக்கு வந்தனர்.


டேய், காலேஜ்ல இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்குன்னு தான் எல்லாரும் சொன்னாங்க... அப்புறம் என் அம்மா இது தான் எனக்கு மேட்ச் ஆகும்னு சொன்னா.. அப்புறம் நான் கண்ணாடில பார்க்கவும் எனக்கு ரொம்ப பிடிச்சது...

அப்புறம் ஏன் என் கூட பேசாம இருந்த?

சும்மா தான்... உன்னை டீஸ் பண்ண!!!

என்னை டீஸ் பண்றியா? இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாரு என்று சொல்லி அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு போய் பெட்டில் போட்டான். அவளருகில் படுத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். இருவரும் சமாதானம் ஆகினர்.

அடுத்த சண்டே அபிதா ஒரு சிம்மியும், பிளாக் கலர் ஷார்ட்சும் போட்டுக் கொண்டு இருக்க, ஜெகன் சிக்கன் பிரியாணி சமைத்துக் கொண்டு இருந்தான். அபிதா ஜெகனின் சிக்கன் பிரியாணிக்கு வெயிட் பண்ணிக் கொண்டு இருக்க, அவன் சமைத்து விட்டு வந்து ஒரு கூப்பிட, இருவரும் சாப்பிட்டனர்.




அபிதாவின் முடி தோள்பட்டையில் இருந்து கொஞ்சமே கீழே வளர்ந்து இருந்தது. இருவரும் டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட, அப்போது கொடிவீரன் படத்தில் பூர்ணா மொட்டை அடிக்கும் காட்சி வர, அபிதாவுடன் பேசுவதை விட்டு விட்டு அதை மெய் மறந்து கவனிக்க ஆரம்பித்தான் ஜெகன். அதை அவளும் கவனித்தாள்.

டேய்... என்னடா எனக்கு அதே மாதிரி மொட்டை அடிக்க போறியா?

ச்சே... ச்சே...அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அபி... 

நீ பார்க்கிறதை பார்த்தா பண்ணாலும் பண்ணிடுவ... 

இல்ல... அபி... சும்மா பார்த்தேன்... இது தேவையில்லாத சீன்... அந்த பொண்ணை ப்ரெய்ன் வாஷ் பண்ணி மொட்டை அடிக்க வச்சுட்டாங்க...

நல்ல அமவுண்ட் கொடுத்து இருப்பாங்க... மயிர் தானே மொட்டை அடிச்சு ஒரு மாசத்துல வந்துடும்னு  அடிச்சிருப்பா... பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

அபி... நீ சொன்ன மாதிரி உனக்கும் இந்த முடியை மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்? அதுவும் கோவில்ல ஒரு பார்பர் கையால மொட்டை அடிக்கிறதை பார்க்கணும்னு ஆசையா இருக்கு...

இருக்கும்... இருக்கும்... அப்படியே ஒண்ணு போட்டன்னா...

நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் உனக்கு மொட்டை அடிக்கணும்...

போடா நாயே... 

அன்று முழுவதும் அபிதாவுக்கு ஜெகன் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டு இருக்க, கனவிலும் அபிதா ஒரு கோவிலில் மொட்டை அடிப்பது போல கனவு வர... திடுக்கிட்டு எழுந்தாள்.


என்ன இது... இப்படி எல்லாம் கனவு வருது... நிஜமாலுமே நம்ம மொட்டை அடிப்போமோ... எல்லாம் இந்த ஜெகனால வந்தது... என்று அவனை திட்டி விட்டு, தண்ணீர் குடித்து விட்டு தூங்கினாள். அடுத்த நாள் அபிதா காலேஜில் தன் கனவுப் பற்றி ஜெகனிடம் சொல்ல, ஜெகன் ஆச்சர்யப்பட்டான்.   

அபிதாவின் மனதிலும் தான் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வர ஆரம்பிக்க, ஜெகன் சொன்னது போல ஏதாவது ஒரு கோவிலில் மொட்டை போட்டுக்கலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் அம்மா, அப்பா மற்றவர்கள் கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தாள்.

 

நம்மில் பலரிடம் இருக்கும் பெரிய பிரச்சனை இது தான். ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் மற்றவர்கள் என்னை நினைப்பார்கள் என்று நினைத்து, நாம் ஆசைப்பட்டதை நிராகரித்து விடுகிறோம். ஆனால் உண்மை என்னவெனில் அந்த மற்றவர்களுக்கு நம்மை பற்றி யோசிக்கக் கூட நேரமிருக்காது.

இப்படியே நாட்கள் செல்ல, அபிதா, ஜெகன் இருவரின் காதல் அபிதாவின் அப்பாவுக்கு தெரிய, அவர் அபிதாவை கண்டித்தார். ஆனால் அபிதா தன் அப்பாவிடம் ஜெகனுடன் ப்ரெண்ட்லியாக பழகுவதாக கூறி சமாளித்தாள். அடுத்த சில நாட்களில் அபிதாவும், ஜெகனும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.


5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thayavu senju kovil la motta podara maara story pannirathinga ji romentic ah physical relationship la irukum pothu sampavam pantra maara plsssssss ji...

    ReplyDelete
    Replies
    1. கதை முழுவதும் எழுதி முடிச்சாச்சு, இனி மாத்த முடியாது...

      Delete
  3. அருமையான பதிவு நண்பா என் மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது நாளை இந்தக் கதையின் இறுதி கட்டத்தை காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete