Tuesday 8 June 2021

அன்புக்கு அபிதா - ஆறாம் பாகம்

அபிதா ஜெகனுக்காக தன் வாழ்க்கையையே அவனை நம்பி பணயம் வைக்க முடிவு செய்தாள். ஜெகனால் இதுவரை கூடல் சுகத்தை மட்டும் தான் பெற்றாள். அவன் இதுவரை அவளுக்கு ஒரு ரோஜாப்பூ கூட வாங்கி தந்தது இல்லை. ஆனால் அபிதா அவனுக்கு பார்த்து பார்த்து எல்லாமும் செய்தாள்.உனக்கு

ஜெகன் வசதி இல்லாதவனாக இருந்தாலும், அபிதாவின் மேல் உண்மையான காதலைக் கொண்டு இருந்தான். ஆனால் கல்யாண வாழ்க்கைக்கு காதலை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?

ஒரு நல்ல சுபமூகூர்த்த நாளில் ஜெகன், அபிதா இருவர் மட்டும் கோவிலில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தனர். அந்த நாள் அபிதா ஒரு மாடர்ன் ட்ரெஸ் அணியாமல், ஒரு ரெட் கலர் சுடிதாரும், க்ரீன் கலர் ஷாலும் அணிந்து கொண்டு கிளம்பினாள்.

ஜெகன் அவளுக்காக கோவிலில் காத்து இருக்க, அபிதா கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தாள்.

என்னடா, சீக்கிரமா வந்துட்டியா?

நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு.

ம்ம்ம்... சரி, கோவில் குருக்கள் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிட்டியா?


ம்ம்ம்... பண்ணியாச்சு அபி, ஆனா எனக்குத் தான் மனசு கஷ்டமா இருக்கு...

என்ன கஷ்டம்?

இல்ல, உன் அப்பா, அம்மாகிட்ட சொல்லி அவங்களை சம்மதிக்க வச்சு இருக்கலாம்...

ம்ம்ம்ம்... ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டு தான் மறுவேலை பாப்பார் என் அப்பா... 

இல்ல.. அபி நான் சொல்றது என்னன்னா?

டேய் பேசாம வா... இல்ல பிச்சுடுவேன்...

சரி விடு... 

வா போகலாம் என்ற அபிதா அவன் கையை பிடித்து கூட்டிக் கொண்டு போனாள். கோவில் பக்கத்தில் ட்ரஸ் சேஞ்ச் பண்ண ஒரு சின்ன மண்டபம் போன்ற ரூமுக்கு அவர்கள் இருவரும் சென்றனர். அபிதாவும், ஜெகனும் அந்த ரூமிற்க்குள் சென்றதும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். 

அது மண்டபம் இல்லை. முடி காணிக்கை கொடுக்கும் இடம். அந்த இடத்தை தாண்டி தான் மண்டபம் இருக்கிறது. இருவரும் மாறி வந்து விட்டு, அங்கு மொட்டை அடித்துக் கொண்டு இருந்தவர்களை பார்த்து, சிரித்துக் கொண்டனர். 

இங்க உனக்கு மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்? என்றான் ஜெகன்.

டேய் இருக்கிறது கொஞ்சுண்டு முடி... அதையும் விட மாட்டியா?

இல்ல அபி சும்மா கேட்டேன்... 

பரவாயில்லை... கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட இந்த ஆசையை மட்டும் விடுவானேன்... போ.. போய் டோக்கன் வாங்கிட்டு வா!



ஜெகன் அவள் சொன்னதைக் கேட்டு மந்திரித்து விட்டவன் போல போய் டோக்கன் வாங்கி வந்தான். அங்கு ஒரு வயதான பார்பர் மட்டும் வேலை இல்லாமல் இருக்க, அவரிடம் டோக்கனை கொடுத்தான் ஜெகன். அவர் இருந்த சின்ன ஸ்டூலில் அபிதா உட்கார்ந்தாள். அருகில் ஒரு குடும்பம் தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க, அபிதா ரெடியானாள்.

பார்பர் பாப்கட் போல இருந்த முடிக்கு தன் கையில் தண்ணீர் அள்ளித் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்துவிட்டார். சிறு வயது பெண்ணின் குடுமி போல இருபக்கமும் கட்டிவிட்டு, பார்பர் அபிதாவின் பின்னந்தலையில் இருந்து முன்னோக்கி சிரைத்துக் கொண்டு வர, அருகில் இருந்த குடும்பமும் அபிதாவின் முடியை மொட்டை அடிப்பதை பார்க்க, ஜெகன் அபிதாவின் மொட்டையை வீடியோ எடுத்தான்.

ஜெகன் வீடியோ எடுப்பதை கவனித்த அபிதாவின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகையுடன் தலையை குனிந்து கொண்டாள்.


என்னம்மா, ஹேர் கட் பண்ணீங்களா? பார்பர் கேட்க,

ஆமான்னா... என்று அபி சொல்ல,

அப்புறம் ஏன்மா மொட்டை போடறீங்க?

அது அண்ணா, இந்த ஹேர் கட் எனக்கு பிடிக்கல... பாக்குறவங்க எல்லாம் நல்லா இல்லன்னு சொன்னாங்க... அதான் சாமிக்கு கோவில்ல மொட்டை அடிச்சு காணிக்கையா கொடுத்துரலாம்னு...

கட் பண்ண முடி எங்கம்மா?

அந்த முடியை எல்லாம் அங்கேயே விட்டுடோம்னா?

எங்கம்மா?

பியூட்டி பார்லர்ல...

ஏம்மா அப்படி முடி வெட்டி விட்டாங்க...  
நான் தான் நியூ ட்ரெண்ட்ல ஹேர் கட் பண்ண சொன்னேன்... ஆனா அவங்க அப்டி பண்ணிட்டாங்க...

அப்படியா?!!

பார்பர் அபிதாவுடன் பேசிக் கொண்டே அவள் முடியை மொட்டை அடிக்க, ஜெகன் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். அபிதாவின் நிறத்துக்கு தகுந்த மாதிரி அவளுடைய மொட்டை அடித்த இடமும் நல்ல வெளுப்பாக இருந்தது. பார்பர் தண்ணீர் சொட்ட சொட்ட, முடியை மழுங்க சிரைத்துக் கொண்டு இருந்தார். 

அபிதாவின் மொட்டை அடிக்க பட்ட முடி, முழுவதும் அவள் மடியிலேயே விழுந்தது. அவள் கன்னம், நெற்றியில் ஈரமான முடிகள் ஒட்டிக் கொண்டு இருக்க, அபிதா வெட்கச் சிரிப்புடன் குனிந்து கொண்டு இருந்தாள்.

மூன்று பக்கமும் மழுங்க சிரைத்து முடித்த பார்பர், அபிதாவின் பின்பக்க முடியை மழிக்க திரும்பி உட்கார சொல்ல, அவளும் திரும்பி உட்கார, பின் பக்கம் மட்டும் முடி கொத்தாக இருந்தது. பின்பக்கம் இருந்த முடியை மேலிருந்து கீழாக சிரைத்துக் கொண்டு வந்த பார்பர், அபிதாவின் பின்னங்கழுத்தையும் மழுமழுவென சிரைத்துவிட்டார்.
அபிதா ஏழே நிமிடங்களில் முழு மொட்டையாக மாறினாள்.


அபிதாவை ஆசைப்பட்டபடி கோவிலில் மொட்டை அடித்த ஜெகன் அவளை பக்கத்தில் இருந்த மண்டபத்திற்க்கு கூட்டிச் சென்றான். அங்கு குளித்து முடித்து விட்டு கல்யாணத்திற்க்கு கூரை புடைவையுடன் வந்த அபிதாவை ஆச்சர்யமாக பார்த்தார் பார்பர்.

இருவரும் கல்யாணம் முடிந்து அபிதாவின் வீட்டுக்கு செல்ல, அவளுடைய அப்பா ஜெகனை அடித்து மிதித்து வெளியே தள்ள, அபிதாவும் அவனுடன் சென்றாள். 


அவர்கள் இருவரின் வாழ்க்கை நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுவோம்.
முற்றும்.


***************

நண்பர் ரசிகனுக்காக இந்த கதை எழுத தொடங்கி... அவருடைய எண்ணம் போல இந்த கதை இருக்கிறதா என்று தெரியவில்லை. 
மற்ற நண்பர்களும் கதையை பற்றிய கருத்தை சொல்லுங்கள்...

 


5 comments:

  1. கதை உண்மையின் அற்புதமாக இருந்தது நண்பா நான் நினைத்ததை விட அற்புதமாக நீங்கள் கொடுத்து உள்ளீர்கள்

    ReplyDelete
  2. அருமையான கதை broo....but please bro next story koncho romentic ah haircut and head shave rentum Oru fitesh eh rasuchu pantra maara onnu eluthunga bro pls...

    ReplyDelete
  3. Simple ah sollanum na Oru short film story keta maara simple ah irunthuchu bro superrrrr......

    ReplyDelete
  4. Story super sir nice and fantastic

    ReplyDelete
  5. Super story bro. Postmore stories

    ReplyDelete