Monday 2 August 2021

என் முடி என் உரிமை! - நான்காம் பாகம்


அடுத்த சில நாட்கள் கழித்து அகிலாவை கூட்டிக் கொண்டு பார்கவியின் பார்லருக்கு போகலாம் என்று நினைத்த வாணி, பார்கவிக்கு போன் செய்தாள்.

ஹே மொட்டச்சி என்னடி பார்லருக்கு வந்துட்டியா?

வந்துட்டேன் மேடம், நீங்க எப்படி இருக்கீங்க? 

நல்லா இருக்கேண்டி மொட்டச்சி... பார்லர்ல கூட்டமா? ப்ரீயா?

ப்ரீதான் மேடம், ஏன் வரீங்களா?

ஆமாடி இன்னும் அரை மணி நேரத்தில வர்றேன், திருப்பதி லட்டு எடுத்து வை... 

வாங்க மேடம் என்று பார்கவி காலைக் கட் செய்ய, வாணி அகிலாவை கூட்டிக் கொண்டு பார்கவியின் பார்லருக்கு கிளம்பினாள். வாணி தன்னுடைய மொட்டைத் தலை பார்கவிக்கு சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்று மறைத்துக் கொண்டு சென்றாள். பார்கவியும் வாணி எப்போதும் போல ட்ரிம், பேசியல், த்ரெட்டிங் செய்ய வருவாள் என்று நினைத்து ரெடியாக இருந்தாள்.

பார்லருக்குள் சென்ற வாணி, பார்கவியை பார்த்தாள்.

ஹாய் மொட்டச்சி...



அவள் சொன்னதைக் கேட்டு வெட்கத்தில் சிரித்த பார்கவி, என்ன மேடம் பாப்பாவை கூட்டிட்டு வந்து இருக்கீங்க? ஹாய் குட்டி உங்க பேர் என்ன? என்று விசாரிக்க அகிலாவும் பார்கவியுடன் ப்ரெண்ட் ஆனாள்.

பின் வாணியை பார்த்தாள் பார்கவி.

என்ன மேடம், எப்படி இருக்கீங்க? என்ன தலைல துப்பட்டா போட்டு இருக்கீங்க? என்று கேட்க,

வாணி பார்கவியை பார்த்துச் சிரித்துக் கொண்டே தன் துப்பட்டாவை கழட்ட, வாணியின் அடர்த்தியான இடுப்பு கீழ் வரை தொங்கும் ஜடையை காணமால் அதிர்ச்சியில், வாணியின் மொட்டைத் தலையையே பார்த்துக் கொண்டு இருந்தாள் பார்கவி.

என்ன மேடம் மொட்டை அடிச்சு இருக்கீங்க? எனக்கு ரொம்ப ஷாக்கீங்கா இருக்கு... என்னாச்சு மேடம் என்று பார்கவி கேட்க, வாணி மொத்த கதையையும் சொன்னாள்.

நல்ல சான்ஸை நான் மிஸ் பண்ணிட்டேனே... சரி விடுங்க பார்த்துடலாம்... என்ன வெறும் 50 ரூபால வேலையை முடிச்சிட்டிங்க... நான் என் பார்லர்ல 300/ ரூபா வாங்கி இருப்பேன். 

அநியாயம்டி பார்கவி... சரி திருப்பதி போனியே லட்டு எங்க?



உங்களுக்கு இல்லாத லட்டா? தனியா எடுத்து வச்சுட்டேன் மேடம் என்று சொல்லி வாணிக்கு பேக் செய்த லட்டை எடுத்து கொடுத்தாள் பார்கவி.

அதன் பின் அகல்யாவுக்கு மொட்டை அடித்து விட்டு கிளம்பினாள் வாணி. அகல்யாவும் தன் அம்மாவை போல அடிக்கடி தன்னுடைய மொட்டை தலையை அடிக்கடி தடவிக் கொண்டே இருந்தாள். அம்மா, பொண்ணு இருவருக்கும் அது ஒரு மேனரிசம் போல இருந்தது. பிரகாஷ் இப்பொழுது வாணியின் முடி இல்லாத மொட்டை தலையை ரசிக்க கற்றுக் கொண்டான். இரவில் வாணியின் மொட்டை தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி,கொஞ்சமாக வளர்ந்து இருந்த முடியை தடவி ரசிப்பான்.

வாணியின் காலேஜிலும் பெண்கள் எல்லோரும் வாணியின் மொட்டை தலையை ரசித்தனர். அவ்வளவு நீளமான முடியை துணிச்சலாக மொட்டை அடித்தத்ற்க்கு நிறைய ஸ்டூடண்ட்ஸ் அவளை பாராட்டினர். வாணிக்கு தான் எடுத்த தீடிர் முடிவு சரியானது தான் என்ற நம்பிக்கை வந்தது.

இப்படியே ஒரு மாதம் போனது. வாணியின் முடி முள்முள்ளாக தூக்கிக் கொண்டு நிற்க, ஒரு நாள் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவியதும், படிய வாரியும் செங்குத்தாக நிற்க, அப்படி தன்னுடைய தலை முடியை பார்க்க, வாணிக்கு ஒரு மாதிரி ஆனது.

பிரகாஷ், இங்க வாங்களேன்...

என்னடி?

இந்த முடி என்ன இப்படி குத்திட்டு நிக்கு? 



அது கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும்... 

இது எனக்கு பிடிக்கலை... நல்ல படிய வாருனா மாதிரி இருக்கணும்... 

அவன் ஏதோ சொல்ல, இவளுக்கு பிடிக்கவில்லை. பின் இருவரும் வேலைக்கு கிளம்ப, அகல்யாவை தன் அம்மா வீட்டில் விட்டு விட்டு காலேஜ் சென்றாள் வாணி. மாலை காலேஜ் முடிந்து வரும் போது, வழியில் பார்கவியை பார்க்க, அவளுடன் பேசிக் கொண்டே பார்லருக்கு சென்றாள். 

என்னடி மொட்டச்சி... உன் முடி நல்ல இருக்கு, பட் எனக்கு முள் முள்ளா தூக்கிட்டு நிக்கு, 

ஹஹஹா... மேடம் நீங்க ரஜினி ஸ்டைல்ல உங்க மொட்டை தலையை தடவிட்டே இருந்தா அப்படி தான் ஆகும்...

ஒ... அப்படியா... எனக்கு அது தெரியாம போச்சே... எதாவது பண்ணி விடு பார்கவி... 

மேடம், இதுக்கு மேல முடியை வெட்ட முடியாது... ஒரே வழி மறுபடி இன்னொரு மொட்டை தான்... என்ன என் பார்லர்ல என் கையால மொட்டை அடிச்சிக்கலாமா?



சரிடி... பண்ணு... வாணி எந்த பிகு பண்ணாமல் மொட்டை அடிக்க சம்மதம் சொல்ல, பார்கவி ரொம்பவும் உற்கசாகமாக வாணியை சேரில் உட்கார வைத்து, அவளுடைய சின்னசின்ன முடிகளை புத்தம் புதிய ரேசரில் மொட்டை அடித்தாள். பார்கவிக்கு வாணியின் நீளமான முடியை ட்ரிம் செய்யும் போதெல்லாம், அந்த முடியை ரசித்து ரசித்து மொட்டை அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அந்த ஆசை நிராசை ஆனாலும், ஏதோ ஒரு வகையில் வாணியின் முடியை மொட்டை அடிப்பதை ரசித்து செய்தாள். வாணியின் முடி சிறியதாக இருந்தாலும், பெண்களுக்கே  உண்டான நல்ல அடர்த்தியான முடியாக இருந்ததால், அவளுடையை தலை சற்று சொரசொரப்பாக இருந்தது.

ஒரு முறை முழுவதும் மொட்டை அடித்து விட்டு, வாணியை எதுவும் கேட்காமல் மீண்டும் ஒரு முறை ஷேவிங் க்ரீம் போட்டு, முழுமையாக ஷேவ் செய்தாள் பார்கவி. வாணி பார்கவியின் வேலைக்கு எந்த இடையூரும் இல்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மேடம், இப்போ எப்படி இருக்கு?

வாணி அவள் தலையை தடவி, பார்க்க இப்போது நல்ல மொழுகி விட்ட டைல்ஸ் தரை போல இருந்தது.

சூப்பர்டி மொட்டச்சி...

இந்த வாய் தானே ஆகாது... இப்போ நீங்க தான் மொட்டச்சி... இந்த மொட்டச்சியை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தலாமா?

என்னடி பண்ண போற?



என் இஷ்டம் போல உங்களை மாத்த போறேன்... நீங்க இப்போ வரை எப்படி அமைதியா இருந்தீங்களோ, அப்படியே அமைதியா இருங்க...

சொல்லி விட்டு பார்கவி, வாணியை சேரை ஒட்டி தள்ளி உட்கார வைத்து, அவள் முகத்தை தடவி பார்த்தாள். 

உங்க முகத்தை இன்னும் கொஞ்சம் ஷைன் பண்ணலாமா?

என்னடி ஷேவிங்கா?

ஓ... உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா?

ஏன் தெரியாது... அதான் என் புருஷன் வீட்ல பண்றாரே? 

என்னது...? என்ன மேடம் சொல்றீங்க?

லூசு... அவரு ஷேவிங் பண்ணும் போது பார்த்து இருக்கேன்...

அதானே... இப்போ அதையே தான் உங்க முகத்துக்கு பண்ண போறேன்...

ஏய்.. வேணாண்டி பார்கவி, சொன்னாக் கேளு...

மேடம், நான் சொல்றவரை கொஞ்சம் அமைதியா உட்காருங்க... பார்கவி சொன்னதும் வாணி சின்ன வெட்கத்துடன் உட்கார்ந்து கொள்ள, பார்கவி வாணியின் முகத்தை தண்ணீரால் கழுவி விட்டு, ஷேவிங் க்ரீமை நுரை பொங்க முகமெங்கும் பூசி விட்டாள். ரேசரை எடுத்து பிளேடு மாற்றி விட்டு, வாணியின் நெற்றியில் இருந்து கீழ் நோக்கி மழிக்க, வாணியின் முகத்தில் முதல் முறை பிளேடு படும் கூச்சத்தில் உடல் சிலிர்க்க, தன் உணர்ச்சியை அடக்கிக் கொண்டு இருந்தாள்.


பார்கவி வாணியின் முகத்தை மெதுவாக பட்டும் படாமல் மழிக்க, அவள் முகத்தில் இருந்த மெல்லிய பூனை முடிகள் ஓட்டிக் கொண்டு வந்தது. வாணியின் கன்னம், கிருதா, இடங்களில் மழித்து விட்டு, தாடையை மழித்தாள். கடைசியாக உதட்டின் மேல் பகுதி மட்டும் இருக்க, அதை மழிக்கும் போது மெதுவாக, வாணியின் மெல்லிய ரோஜாப்பூ இதழ்களை அழுத்திக் கொண்டு மழித்தாள். பின் மீண்டும் ஒரு முறை வாணியின் முகத்தை மழித்து விட்டாள்.

இப்போ எப்படி இருக்கு மேடம்? என்று பார்கவி கேட்க, வாணி தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க, முன்பு இருந்ததைவிட அவள் முகம் பளபளப்பாக இருந்ததை உணர்ந்தாள். 

சரி வாங்க மேடம், இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு, என்று சொல்லி ஒரு பிரைவேட் ரூமுக்கு கூட்டி சென்று, மேடம் இந்த கவுனை போட்டு வெயிட் பண்ணுங்க சொல்லி விட்டு பார்கவி வெளியே வர, வாணி அவள் கொடுத்த கவுனை போட்டு விட்டு அங்கு இருந்த ஒரு சின்ன பெட்டில் இருக்க, பார்கவி சின்ன பாக்ஸுடன் வந்தாள். 

அதில் வாக்ஸிங் பண்ண தேவையான எல்லா ஸ்ட்ரிப், கம் என எல்லாமும் இருந்தது. வாணி ஒரு ஸ்லீவ்லெஸ் கவுனை போட்டு இருக்க, பார்கவி வாணியின் அக்குளில் இருந்த முடியை தடவி பார்த்தாள். இருவருக்கும் எந்த ஒரு பேச்சும் இல்லாமல் இருக்க, வாணி பார்கவி இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தாள்.



பார்கவி வாணியின் அந்த முடியை வாக்ஸிங் பண்ண, வலியை பொறுத்து கொண்டு படுத்து இருந்தாள் வாணி. இரு பக்கமும் முடித்து விட்டு, வாணியின் கைகள், கெண்டை கால்கள், தொடை, வயிற்றுப் பகுதி என ஒவ்வொரு பாகமாக வாக்ஸிங் பண்ண வாணி அவள் உடலின் பளபளப்பு ஏறுவதை பார்த்து கொண்டு இருந்தாள்.

மேடம், இன்னும் ஒரு இடம் தான் இருக்கு? அதையும் பண்ணிடலாம்... 

அங்க எல்லாம் வேணாம்டி பார்கவி... அது பிரகாஷ்க்கு மட்டும் தான்...



இன்னிக்கு ஒரு நாள் மட்டும் எனக்கு கொஞ்சம் குடுங்க... எப்படி அழகுபடுத்தேறுன்னு பாருங்க... சொல்லி விட்டு பார்கவி அவள் கால்களை அகட்டி வைத்து விட்டு தன்னுடைய தொழில் திறமையை காட்ட, வாணியின் முகம் வெட்கத்தில் சிவக்க, பார்கவி வாணியின் வெட்கத்தை பார்த்து விட்டு, சொட்டு சொட்டாக வடியும் கள்ளையும் குடிக்க, தன் வாய் திறமையை காட்டினாள் பார்கவி.

அதன் பின் உற்சாகமாக வீடு வந்த வாணி, அன்று இரவு மீண்டும் மொட்டை அடித்த தலையை பிரகாஷ்க்கு முழுமையாக காட்ட, பூசிவிட்ட மெழுகு சிலை போல இருந்த வாணியின் அழகை கண்டு ரசித்தான் பிரகாஷ்...

புரிஞ்சவங்க புரிஞ்சுகோங்க... புரியாதவங்க இன்னொரு முறை படியுங்க... நன்றி...!






2 comments:

  1. சத்தியமா சொல்றேன் நண்பா உன் கிட்ட இருந்து இப்படி ஒரு நாளாவது பதிவு நான் எதிர்பார்க்கவே இல்லை அவ்வளவு அழகா இருந்தது குறிப்பாக மொட்டச்சி என்று சொல்லி கிண்டல் செய்யும் அந்த வார்த்தையை உங்களின் இந்த பதிவில் மிக அற்புதமாக இருந்தது முடிந்தால் உங்களின் அடுத்தடுத்த பதிவுகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தி உங்களின் அற்புதமான கதைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete