Monday 23 August 2021

தேவசேனா - மூன்றாம் பாகம்

தேவசேனா கோவில் மைதானத்தில் மக்கள் முன் கோபி முகத்துடன் நின்று இருந்தாள். மக்கள் அனைவரும் பசியுடன், சோர்வுற்று இருந்தாலும், இப்போது பெண்களில் சில பேர் அவள் கோபமாக நின்று இருக்க, ஆண்கள் அனைவரும் அவள் அழகை ஆசையுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஏய், எதுக்குடி அந்த குழந்தையைத் தூக்கிட்டு வந்து இருக்க? நாங்க தான் உன் உதவியே வேண்டாம்னு சொல்லிட்டோமே...

அம்மா, தயவு செய்து நான் சொல்வதை பொறுமையாகக் கேளுங்கள்... நான் பிறந்தது என்னமோ தாசி குலத்தில் தான்... ஆனால் நான் உடலை வைத்துப் பிழைக்கும் தாசி அல்ல...



ச்சீ... பேசாதே... கோவில் நின்று கொண்டு இப்படி பொய் பேசாதே...

தேவசேனா எவ்வளவு கெஞ்சியும் எந்த பெண்ணும் அவளை நம்பவில்லை. தேவசேனா மைதானத்தில் கூடி இருந்த மக்கள் ஒவ்வொருவர் கையைப் பிடித்தும் கெஞ்சினாள். வயதில் பெரியவர்களிடம் காலில் விழுந்து கூடக் கெஞ்சினாள். 

அப்போது தான் ஒரு வயது முதிர்ந்த மருத்துவச்சி கிழவி அங்கு வந்தாள். அவள் தான் மொத்த மதுரைக்கும் வைத்தியம், பிரசவம் பார்ப்பவள். அவள் சில முறை தேவசேனாவிற்க்கும் மருத்துவம் பார்த்து உள்ளாள்.  அவளைப் பார்த்ததும் தேவசேனா ஓடிப் போய் அவள் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள்.

தாயே... எனக்கு ஒரு நீதி வேண்டும்... இந்த மக்கள் பசியாற நான் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் அத்தனையும் பயன்படுத்த நினைக்கிறேன். ஆனால் இவர்கள் என் உதவியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்...

ஏனம்ம்மா? என்ன காரணமாம்? ஏன் நீ செய்யும் உதவியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?



காரணம் நான் பிறந்த தாசி குலம் தான்... நான் ஒரு தாசி... பல ஆண்களிடம் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட தேவிடியா இந்த தேவசேனா என்பது தான் அவர்கள் என்னை வெறுக்க காரணம்...

அப்படியா?

அம்மா நீங்கள் மருத்துவச்சி தானே... நீங்களாவது எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்...காலம் முழுக்க நான் உங்களுக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன்...

என்னம்மா உதவி...? இந்த வயதான கிழவியிடம் என்ன எதிர் பார்க்கிறாய்?

அம்மா, உங்கள் மருத்துவ அறிவை பயன்படுத்தி நீங்கள் என் கன்னி தன்மையைப் பரிசோதித்து இந்த மக்களுக்கு என் நிலை என்னவென்று சொல்லுங்கள்... அப்போதாவது இவர்கள் பசியாறட்டும்...

அம்மா தேவசேனா, இது அதற்க்கு சரியான இடம் அல்ல... 

பரவாயில்லை அம்மா, நான் தான் தாசியாயிற்றே... முதலும் கடைசியுமாய் இங்கு இருக்கும் அனைவரும் இந்த தேவசேனாவின் அழகை முழுமையாகப் பார்க்கட்டும்...

சொல்லி விட்டுத் தேவசேனா கிழவியின் பதிலை எதிர்பார்க்காமல்  வேகமாகத் தன் மார்க்கச்சையை அவிழ்த்து வீசினாள். பின் கீழாடையையும் அவிழ்த்து வீச, கூடி இருந்த மக்கள் முன் தேவசேனா நிராயுதமாக நின்றாள். 

கூடி இருந்த மக்கள் அவள் அழகை அதிசயித்து பார்த்தனர். பெண்கள் கூடத் தேவசேனாவின் மாசு மருவில்லாத மேனி அழகை கண்டு பொறாமை பட்டனர். மருத்துவச்சி கிழவி தேவசேனாவின் அருகில் சென்று, கூட்டத்தைத் திரும்பி ஒரு முறை அர்த்தமாகச் சில பெண்களைப் பார்க்க, கூட்டத்தில் இருந்த தாய்மார்கள் சில பேர் ஓடிச் சென்று தேவசேனாவையும், கிழவியையும் தங்கள் சேலையை சுற்றி மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டனர். 



தேவசேனா அங்குத் தரையில் படுக்க, கிழவி தேவசேனாவின் உடலைப் பரிசோதனை செய்தாள். சுற்றி நின்ற பெண்கள் அனைவரும் கிழவியின் சோதனையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். கிழவி கடைசியாகத் தேவசேனாவின் கன்னித் தன்மையைப் பரிசோதிக்க அவள் 24 வயதிலும் இன்னும் கன்னிப் பெண்ணாக இருப்பதைக் கண்டு சுற்றி நின்ற தாய்மார்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தாய்மார்கள் அனைவரும் தேவசேனாவை பெருமையாகப் பார்த்தனர். தேவசேனாவை சுற்றி நின்று இருந்த பெண் ஒருத்தி கூட்டத்தை விட்டு விலகி, சற்று தள்ளி நின்று கொண்டு இருந்த தன் கணவனிடம் சென்று அவன் கன்னத்தில் வேகமாக ஒரு அறை விட்டாள். (ஏன் அறைந்தாள் பதில் சொல்லுங்களேன்?) பின் அந்த பெண் தேவசேனாவிடம் வந்தாள்.

அம்மா, எங்கள் அனைவரையும் மன்னித்து விடம்மா? இந்த ஆண்கள் பேசும் கட்டுக் கதைகளைக் கேட்டுப் பெண்களும் உன்னைத் தவறாக நினைத்து விட்டோம்... நீ என்னைவிட வயதில் சிறியவளாக இருந்தாலும் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று அந்த பெண் தயங்காமல் தேவசேனாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள்.

அய்யோ, அக்கா என்ன செய்கிறீர்கள்... தயவு செய்து எழுங்கள்... யாரும் இங்குத் தவறு செய்யவில்லை... என்று அந்த பெண்ணைத் தூக்க, அவளும் எழுந்து தேவசேனாவை கட்டிக் கொண்டாள்.



2020 அனுஷ்கா மர நாற்காலியில் சோர்வாக அமர்ந்து இருக்க, சற்று தள்ளி அந்த நீக்ரோ செக்யூரிட்டி இருவரும் அவளைக் கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் நீக்ரோக்கள் என்றாலும் தெளிவாகத் தமிழில் பேசினர்.

மச்சா, செம அழகு டா... இவ  ரிப்போர்ட்டர் ஆகாம நடிக்கப் போய் இருந்தா... செமயா அள்ளிருப்பா...

ஆமாண்டா... அது சரி இவ ஐயாவோட பர்சனல் ரூம்ல இருக்கும் போதே நான் இவளைப் பிடிச்சிட்டேன்... ஆனா நீ என்ன இவளை மேல போக விடாமல் பிடிச்சதா பொய் சொன்ன...

அது தெரிஞ்சிருந்தா இன்னேரம் நீயும் நானும் பொணமாகி இருப்போம்... கொஞ்சம் மூடு...



அதுவும் சரி தான்...

ஏண்டி... பர்சனல் ரூம்ல என்னடி எடுத்த.... உண்மைய சொல்லிடு... இல்லன்னா நீ உயிரோட வெளியே போக முடியாது...

அனுஷ்கா அவர்களுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவர்கள் இருவரும் கோபம் அடைந்தார்கள்.

மச்சி, இப்போ என்னடா பண்ண? இவ அழகும், திமிரும் என்னை என்னவோ பண்ணுதுடா?

அதுக்கு?

வா, மச்சி ஒரு தம் போட்டு வரலாம் என்று சொல்லி, இருவரும் அந்த அறைக்கு வெளியே நின்று தம் அடித்தனர். 

மச்சி, எப்படியும் இவளை நம்ம முதலாளி உயிரோட இந்த இடத்தை விட்டு அனுப்ப போவதில்லை... ஒரு வேளை இவளால நம்ம உயிர் கூட போகச் சான்ஸ் இருக்கு....



என்னடா சொல்ற... 

ஆமாண்டா... அமைச்சர் ரூம்ல இவ என்னமோ பண்ணி இருக்கா, ஆனா அவ எதுக்கு வந்தாலோ அதைப் பண்ணி முடிச்சிட்டு தான் இங்க உட்கார்ந்து இருக்கா... 

அப்போ என்னடா பண்றது...



வெயிட் பண்ணலாம்... எப்படியும் அமைச்சர் சவுந்திர பாண்டியன் நமக்குக் கால் பண்ணுவார்... அதுவரைக்கும் இவளை என்ன பண்ணலாம்... ஏதாவது ஐடியா சொல்லு...

இரு நீக்ரோ செக்யூரிட்டிகளும் வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்க,  அனுஷ்கா அவர்கள் சொன்னது போலவே,  எல்லா டாக்குமெண்ட்களையும், தன்னுடைய மொபைலில் ஸ்கேன் செய்து மெயில் பண்ணிவிட்டாள். அடுத்த நாள் காலையில் வெளியாகும் பேப்பரில் அமைச்சரின் ஊழல்கள் அனைத்தும் வெளியானது.

இனி என்ன ஆகப் போகிறாள் அனுஷ்கா?


1 comment:

  1. செமையான கதை நண்பா உண்மையிலேயே இந்தப் பகுதி மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது இதன் அடுத்த பகுதி எப்போது வரும் என்பதை முடிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் அதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete