Saturday 25 September 2021

திவ்யாவின் மொட்டை - நான்காம் பாகம்

Divya 4 

மணி காலை 9.30 ஆகி இருக்க, திவ்யாவும், நந்தினியும் குமாரின் வீட்டுக்கு சென்றனர்.இருவரும் பேசிக் கொண்டே சென்றனர். 

அக்கா, நீ போன தடவை மொட்டை அடிக்கும் போது பயமா இல்லையா?

என்னடி பயம்!

இல்ல, நம்ம வீட்லயே உனக்கு தான் ரொம்ப நீளமான முடி, அதை மொட்டை அடிக்கும் போது எப்படி இருந்துச்சு?



ஆமாடி, அப்போ எனக்கு ரொம்ப பயமாவும், நெர்வஸாவும் இருந்துச்சு... ஆனா அந்த பையன் எனக்கு ரொம்ப ஈஸியா மொட்டை அடிச்சு விட்டான், சில்லுனு அந்த ஃபீல் உணர்ந்தப்ப பயம் போய் மொட்டையை ரசிக்க ஆரம்பிச்சேன்... அப்புறம் அடிக்கடி என் மொட்டை தலையை தடவி பார்ப்பேன்... ஆனா எல்லோரும் என்னை மொட்டை, மொட்டச்சினு கிண்டல் பண்ணதுதான் பிடிக்கல...

இருவரும் பேசிக் கொண்டே குமாரின் வீட்டுக்கு வர, குமாரின் அம்மா தான் வீட்டில் இருக்க, குமாரின் அப்பா பக்கத்து டவுனுக்கு போய் இருப்பதாகவும், வர மதியம் மேல் ஆகிவிடும் என்றாள்.



அம்மா, உங்க மகன் குமார் எனக்கு தெரியும், அவர் இல்லையா?

அவன் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான் என்று சொல்ல, திவ்யா அவனுக்கு கால் செய்து பேசினாள்.

திவ்யா விஷயத்தை சொல்ல, குமார் சவரக் கத்தி வீட்டில் தான் இருக்கும், அதை வாங்கிக் கொண்டு போய் உங்களுடன் வந்திருக்கும் யாரையாவது மொட்டை அடித்து விட சொல்லுங்க என்று குமார் திவ்யாவிடம் சொல்ல, அதற்க்கு திவ்யா அவர்கள் பெண்கள் மட்டும் தான் வந்திருக்கிறோம் என்று சொல்ல, அப்போது அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த நந்தினி திவ்யாவிடம் இருந்து போனை பிடுங்கி பேசினாள்.

அண்ணா, நீங்க கத்தி மட்டும் கொடுக்க சொல்லுங்க, நாங்க மொட்டை அடிக்கிற ஆளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்...என்று சொன்னாள். திவ்யா அவளை குழப்பமாக பார்க்க, நந்தினி குமாரின் அம்மாவிடம் கத்தியை வாங்கிக் கொண்டு வர, இருவரும் கோவிலுக்கு சென்றனர்.

ஹே, நந்தினி என்னடி கத்தியை வாங்கிட்டு வந்துட்ட? யாரு மொட்டை அடிப்பாங்க?

வேற யாருக்கா? நான் தான் இன்னிக்கு உனக்கு மொட்டை அடிக்க போறேன்...

என்னடி சொல்ற?

நான் தான் பியூட்டிஷியன் கோர்ஸ் பண்ணிட்டு இருக்கேன்ல, அதில போன வாரம் தான் ஹேர் ரிமூவல் பத்தி சொல்லி கொடுத்தாங்க! அப்போ நான் ஒரு தடவை ட்ரை பண்ணும் போது கொஞ்சம் பயமாவும், ஷேவ் பண்ணும் போது வரும் சவுண்டும் ஒரு வித்தியாசமான ஃபீலிங்கை கொடுத்துச்சு... அதான்...

அதான்னா... மேல சொல்லுடி...

அதான் இன்னிக்கு உனக்கு மொட்டை அடிச்சி மறுபடியும் அந்த ஃபீலை அனுபவிச்சு பார்த்துடணும்னு தோணுது... 

நான் மொட்டை அடித்துக் கொள்ளும் ஹேர் பெடிஷ்ன்னா, இவள் அடுத்தவர்களை மொட்டை அடித்து பார்க்கும் ஹேர் பெடிஷ் போல என்று திவ்யா மனதிற்க்குள் நினைத்துக் கொண்டாள். 

ஏய், என் தலையை காயம் பண்ணிடாதடி, எனக்கு பயமா இருக்கு என்று திவ்யா சொல்ல, 

அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதே திவ்யா அக்கா, நான் இருக்கேன்... 

எனக்கு பயமே நீ இருக்கிறது தாண்டி... உன்னை நம்பி எப்படிடி என் தலையை கொடுக்கிறது?



பயப்படாதே திவ்யா அக்கா, காயம் ஆகாமல் உனக்கு மொட்டை அடிச்சு விடுறேன்... அப்படி ஒரு கீறல் விழுந்தாலும் நானும் அப்போவே மொட்டை அடிச்சுக்கிறேன் என்று நந்தினி சொன்னாள்.

திவ்யாவின் அக்கா சரியான சமயத்தில் பொங்கல் வைத்து விட்டு, அருகில் இருந்த மர நிழலில் இவர்களுக்காக காத்துக் கொண்டு இருக்க, இருவரும் வந்து நடந்ததை சொல்ல, அவளுடைய அக்கா திவ்யா உட்கார துணி, மொட்டை அடிக்க தண்ணீர் எல்லாம் ரெடி பண்ணிக் கொடுத்தாள்.

திவ்யா மனதை தைரியப் படுத்திக் கொண்டு, அவள் தலையில் இருந்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து விட்டு, ஹேர் பின்னை கழட்டி, தன் முடியை விரித்து முன்னால் போட்டுக் கொண்டு உட்கார, நந்தினி தன் அக்காவின் முன் வந்து உட்கார்ந்தாள்.

அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், திவ்யாவின் தலையை குனிய வைத்து, அவள் தலையில் தண்ணீரை அள்ளி தெளித்து அடர்ந்த முடிகளை மசாஜ் செய்தாள். திவ்யாவின் உச்சந்தலை முழுவதும் நல்ல அரக்கி தேய்த்து விட, திவ்யாவுக்கு நந்தினி செய்வது சுகமாக இருக்க, அவள் சூப்பரா மசாஜ் பண்றடி நந்து, இன்னும் கொஞ்சம் நேரம் பண்ணுடி என்றாள். திவ்யாவின் அக்கா அவள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தாள்.



மசாஜ் பண்ணிட்டு இருந்தா நல்ல நேரம் முடிஞ்சிடும், மொட்டை அடிச்சிட்டு மொட்டை மண்டைல மசாஜ் பண்ணிக்கடி என்று அக்கா அதட்ட, நந்தினி சவரக் கத்தியை எடுத்து கழுவி சுத்தம் செய்து விட்டு பிளேடு ஒன்றை மாட்டினாள். முதல் முறை என்பதால் நந்தினி திணற, அதை பார்த்த திவ்யா அதை வாங்கி டக்கென்று சில நொடிகளில் பிளேடை மாட்டிக் கொடுத்தாள்.

எப்படி திவ்யா அக்கா? 

அதெல்லாம் அப்படி தான்... நீ மொட்டை அடி என்று திவ்யா சொல்ல, திவ்யா தன்னுடைய முடியை எல்லாம் முன்னால் போட்டு விட்டு குனிய, நந்தினி தன் அக்காவின் நீளமான அடர்த்தியான முடியை ஆசையுடன் பார்த்தாள். ஆனால் திவ்யாவுக்கோ மனதிற்க்குள் அளவில்லாத சந்தோஷம். தன்னுடைய நீண்ட நாள் ஆசையான மொட்டை அடிப்பது இன்னும் சில நொடிகளில் நிறைவேற போகிறது என்று எண்ணி மகிழ்ந்தாலும், அதை அவர்கள் முன் வெளிக்காட்ட முடியவில்லை.

அதனால் திவ்யா நந்தினிக்கு கோ ஆபரேட் பண்ண, நந்தினி திவ்யாவின் தலையில் சவரக் கத்தியை வைத்து முதல் ஸ்ட்ரோக் போட்டாள். திவ்யாவின் உச்சந்தலையில் சிரைத்து விட, திவ்யாவும் தன் தலையில் கத்தி பட்டதை உணர்ந்தாள்.கண்ணை மூடி தன்னுடைய மொட்டையை ரசிக்க ஆரம்பித்தாள் திவ்யா.


நந்தினி தொடர்ந்து சவரக் கத்தியை வைத்து மொட்டை அடிக்க, சில நிமிடங்களில் நந்தினியின் பதட்டம் மறைந்து, சிரைப்பது எளிதாக இருக்க, திவ்யாவின் மடியில் அவள் முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விழ, அவள் மண்டையில் முடியின் அடர்த்தி குறைய தொடங்கியது.திவ்யாவின் வெள்ளை தோல் தெரிய,மொட்டை அடிக்கப்பட்ட இடத்தில் ஈரமாக இருக்கும் போது அந்த இடத்தில் காற்று படவும், அப்போது திவ்யா ஒரு சுகமான உணர்வை உணர்ந்தாள். நந்தினி திவ்யாவின் பின்பக்கம் முடியை கழுத்து வரை சிரைக்க, அவளுக்கு அந்த இடத்தில் கத்தி படும் போது கூசியது.இப்போது திவ்யாவின் பின் பக்கம் முழுவதும் மொட்டை அடித்து இருக்க, நந்தினி திவ்யாவை நிமிர்ந்து உட்கார சொன்னாள். திவ்யா இப்போது நிமிர்ந்து உட்கார, நந்தினி சவரக் கத்தியில் பிளேடை மாற்றினாள். கிடைத்த சில நொடிகளில் திவ்யா தன் மொட்டை அடிக்க பட்ட பகுதியை தடவி பார்த்தாள்.நந்தினி திவ்யாவின் தலையை பிடித்து குனிய வைத்து மீண்டும் உச்சியில் இருந்து கீழ் நோக்கி சிரைக்க, கொத்து கொத்தாக முடிகள் திவ்யாவின் மடியில் விழுந்தது.

நந்தினி திவ்யாவின் நெற்றி வகிட்டில் சிரைக்க, அப்போது திவ்யாவுக்கு தன் முடியை சீவும் போது வகிடு எடுக்கும் நினைவு வர, இன்னும் சில மாதங்களுக்கு, திவ்யா தலை சீவ முடியாது என்று நினைத்துக் கொண்டாள்.நந்தினி திவ்யாவின் நெற்றி வரை மழித்து விட்டு திவ்யாவின் முன் பக்கம் முழுவதும் வழுக்கை தலை போல பளபளவென மழித்து விட்டாள் நந்தினி. முடித்து விட்டு நந்தினி மறுபடியும் பிளேடு மாற்றினாள்.

ஏண்டி எத்தனை தடவை பிளேடு மாத்துவ?

உன்னோட அடர்த்தியான முடியை மொட்டை அடிக்க அடிக்கடி பிளேடு மாத்திதான் ஆகணும்... இல்லேன்னா காயம் ஆகிவிடும்... அப்புறம் உனக்கு துணைக்கு நானும் என் தலையை  அடிக்கணும்... அதான் உஷாரா பிளேடு மாத்துறேன் என்றாள் நந்தினி.



திவ்யா அவள்  சொன்னதைக் கேட்டு சிரிக்க, திவ்யாவின் அக்கா, அவளின் இரு பக்கமும் தொங்கும் முடியை பார்த்து விட்டு, ஏண்டி திவ்யா ஆம்பளைகளுக்கு மண்டையில சொட்டை விழுந்த மாதிரி இருக்குடி என்று கேலி செய்ய, மூவரும் சிரித்தார்கள்.நந்தினி திவ்யாவின் இடது பக்கம் கொஞ்சம்  தண்ணீர் விட்டு, மொட்டை அடிக்க, முடிகள் மளமளவென கீழே விழுந்தது. திவ்யாவின் காது ஓரங்களில் சிரைக்க, நந்தினி சிரைக்க, அந்த சத்தம் கேட்டு திவ்யாவின் உடலெங்கும் புல்லரிக்க, அவள் உடம்பில் உள்ள பூனை முடிகள் சிலிர்த்து எழுந்தன.

==================================


நண்பர்களே!  நேரமின்மை காரணமாக தொடர்ந்து இந்த பதிவை முடிக்க இயலவில்லை. அதனால் இந்த பதிவின் தொடர்ச்சி அடுத்த பாகத்திலும் இருக்கும். நன்றி. அடுத்து நண்பர் ஒருவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். நான் முன்பு சொன்னது போல சிந்தித்து எழுதக் கூடிய நல்ல  மனநிலையில் நான் இல்லை. அந்த பிரச்சினையினால் தான் இன்னொருவரின்  கதையை எனது நடையில் ரீமேக்கிக் கொண்டு இருக்கிறேன். நண்பரின் ஆர்வத்துக்கு நன்றி!


3 comments:

  1. நண்பா மிக அற்புதமான கதை உங்களின் இந்த கதையின் ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் பொழுது அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது நண்பா ஒரு சின்ன கேள்வி இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை உங்கள் கதைகள் ஏதாவது வருமா முடிந்தால் எனது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

    ReplyDelete