Wednesday 26 January 2022

மொட்டைக்காடு - பாகம் - 4

சுற்றி பார்த்து யாரும்  இல்லை என அறிந்து எழுந்து நடக்க ஆரம்பிக்க மேலே போர்த்தியிருந்த போர்வை விலகி நிராயுதமாக இருந்தாள் திடீரென்று நடக்க தடை இருந்துது.  காலில் சங்கிலி கட்டி போடப் பட்டிருக்க, முத்தம்மா கோபத்தில் கத்த ஆரம்பித்தாள். திடீரென்று கதவு திறந்தது. உள்ளே ஒரு பெண் நுழைந்து கதவை பூட்டினாள்.

அடடே... முத்தம்மா எழுந்துடியா... பராவல்லையே... சீக்கிரம் எழுந்துட்ட... 

ஏய், யாரு நீ ஒழுங்கா சங்கிலியை கழட்டி விடு... இல்லைனா பிரிச்சி மேஞ்சுருவேன்...

அட... கம்முன்னு இரு... சும்மா எப்ப பாரு இப்டி சவுண்ட் விடுறதால தான் இப்ப இங்க இப்படி முண்ட கட்டையா நிக்குற...

என்ன பத்தி தெரியாது உனக்கு

அடியே சும்மா இரு... இல்லனா  அவ்ளோதான்... சொல்லிபுட்டேன். இன்னும் ரெண்டு நாள் தான் இங்க இருக்க போற சும்மா இரு... என்றவளை சிறிது கோபம் கொண்டு பார்த்தாள் முத்தம்மா.



அந்த பெண் அருகில் வந்து இந்த தண்ணியை குடி என குவளையை நீட்ட, முத்தம்மா அவளை ஓங்கி ஒரு அரை விட்டாள். ஒரே அரையில் அந்த பெண் தூர போய் விழுந்தாள். வாங்கிய அரையில் வெல வெலத்துப் போய் எழுந்து நின்றாள் அந்த. பெண் கன்னத்தை பிடித்தபடி...

ஏய், வாடி இங்க என்று முத்தம்மா கத்த... 

அவள் பயந்து கொண்டே அருகில் வர, 

இந்த சங்கிலியை கழட்டு

நான் மாட்டேன் என்றவளின் முடியை எட்டி பிடித்த முத்தம்மா, அவளை குனிய வைத்து அவள் முதுகில் குத்த...  கழட்டுறேன் என கத்தினாள். முத்தம்மா  பிடியை கொஞ்சம் தளர்த்த தரையில் கால் பட்டதும் இடுப்பு மறைவில் இருந்த சாவியை கொண்டு சங்கிலி பிணைப்பை விடுதலை செய்தாள். அந்த பெண்ணின் சேலையை உருவினாள் முத்தம்மா.

ஜாக்கெட்டை கழட்டு என்றவளின் வார்த்தைகளுக்கு பயந்து கழட்ட அதை போட முயன்று இறுக்கமாக இருப்பதை உணர்ந்து அதை தூக்கிப் போட்டு சேலை மட்டுமே உடலில் அணிந்து கொண்டு அவளை ஏறிட்டாள். 
வெற்று உடலில் அங்கங்களை மறைக்க முயன்று கொண்டிருந்தாள். அவளின் பாவாடையும் உருவி தூக்கி போட்டு விட்டு  "இந்த இடம் யாருக்கு சொந்தம்" என விசாரிக்க தன் பக்கத்து ஊரின் தலைவர் வீடு எனதெரிந்து கொண்டாள். "எங்கே அவன்?" என கேட்டவள் "அவர் காலையில் கிளம்பி போனார், எங்கே என தெரியவில்லை?" என்றாள்.


அவளை அருகே வர சொன்னாள். வந்தவளை நோக்கி முகத்தில் குத்து விட்டாள்.  "என்கிட்டயே மரியாதை இல்லாம பேசுற," என அந்த அறையிலேயே பந்தாடினாள் முத்தம்மா.  நிர்வாணமாக உதைப்பட்டு கிடந்தாள் அப்பெண். அருகே சென்று அவளை தூக்கினாள். முடியை கொத்தாக பிடித்த படி அவளும் எழுந்து நிற்க

அவன் எங்கே போனான்னு தெரியுமா?

"காலையில பக்கத்து ஊரு சந்தைக்கு போவது வழக்கம்மா அவரு கூட உங்களை தூக்கி வந்தவர்களும் போயிருக்காங்க"  சொன்னவளை கோபத்துடன் சேலையை முட்டிக்கு மேல் தூக்கி ஒரு உதை விட்டாள். அந்த அறையின் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்து விழுந்தாள் அப்பெண்.
சத்தம் கேட்டு தோட்டக்காரன், வேலையாள், என சகிதமாக அங்கே வர முத்தம்மா உடைந்த கதவு மேல் கால் வைத்து முன் வந்தவளை பார்த்து அனைவரும் வெலவெலத்து போயினர். 

ஒருவன் மட்டும் பிடித்திருந்த கடப்பாரையை ஓங்கி கொண்டு அவள் அருகே வர அங்கே ரீபிஸ் கட்டை ஒன்றை எடுத்து அவன் தலையில் ஒரே போடாக போட கட்டை பிளந்தது. அவனும் சரிந்தான். மற்றவர்கள் தெறித்து ஓடினர். முத்தம்மா அங்கே நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி அருகே சென்றாள். அதை எருது பூட்டி ஏறி உட்கார்ந்து அவைகளை விரட்டினாள். மயிலை காளைகள் மயில்களை போல பறக்க ஆரம்பித்தது.

சந்தையில் ஒரு சில கட்டப் பஞ்சாயத்துகளை முடித்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் தலைவர். வரும் வழியில்

"டேய் இன்னைக்கு முத்தம்மாவை அனுபவிக்க போறேன்.  நாட்டு கட்டையை இந்த தேக்கு கட்டை அணைக்க போகுது."

"தலைவரே பெரிய ஆள் நீங்க, முத்தமாவையே அனுபவிக்க போறீங்க, இந்த தகவல் நம்ம ஊருக்கு தெரிஞ்சா போதும், இனி இந்த எட்டு ஊரு ஜில்லாக்கும் நீங்க தான் தலைவர்"


"ஐயா அவள நீங்க கல்யாணம் பண்ண போறீங்களா"

"அட யார்ரா இவன், அவள போய் எவன் கல்யாணம் பண்ணுவான். டேய் நான் அனுபவிச்சுட்டு வந்த, அப்றம் அவ உங்களுக்குதான்டா"

"ஐயா அங்க பாருங்க நம்ம வண்டி கொடை சாஞ்சு கிடக்குது"

"அந்த வண்டியை யார்ரா எடுத்து வந்தது, போய் பாருங்கடா"

ஒருவன் இறங்கி ஓட தலைவர் வந்த வண்டி நின்றது. இன்னொருவன் இறங்கி நிற்க இன்னொரு வண்டியில் வந்த ஆட்களும் குதித்து நின்றனர். 
ஓடியவன் வண்டி அருகே சென்றதும் அலறிக் கொண்டு பறந்து வந்து விழுந்தான்.  எல்லோரும் திகைக்க பின்னால் வந்த ஆட்கள் இப்போது ஓடினர்.

இரவு நடந்த சண்டையில் முத்தம்மாவின்  ஜாக்கெட்டை கிழித்தவன் முதல் ஆளாக ஓட அருகே வந்ததும். அவனை அடித்து புரட்டி அலேக்காக தூக்கி கொண்டு வண்டி முன் வந்தாள் முத்தம்மா. ஓடி வந்த ஆட்களும் பயந்து நிற்க வேடிக்கை பார்த்த தலைவரும் வெலவெலத்து போனார்.


"டேய், அவளை இப்பவே வெட்டுங்கடா" 

அனைவரும் பாய தூக்கி கொண்டு  இருந்தவனை தூர வீசி விட்டு  வந்தவர்களை பந்தாடினாள். சண்டை வலுப் பெற்றது. இரண்டு மூன்று குத்துக்கள் முத்தம்மாவுக்கு கைகளிலும் முகத்திலும் விழுந்தது. ஒருவனுக்கு கை துண்டாகி துடித்தான். கைக்கு வசமாக அரிவாள் கிடைத்தும் வந்தவர்களை கிழித்து போட்டாள். வயிற்றில் கத்தியால் குத்தியவனை மட்டும் நிற்க வைத்து அவன் தலையை துண்டாக்கினாள். 

பார்த்து கொண்டிருந்த தலைவர் பின்னங்கால் பிடரியில் ஓடினார். முத்தம்மாவும்  அவனை துரத்த தலைவர் ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்றார்.
அங்கே விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள் இவரை பார்க்க அவரோ இவர்களை பார்த்து காப்பற்றுங்கள் என்றார். அங்கே இருந்தவர்கள் என்ன ஏதென்று விசாரிக்க முற்படுகையில் முத்தம்மா அங்கே வந்தாள்.
முத்தம்மா அங்கே ஆங்கார கோபத்தில் வந்ததை பார்த்து அனைவரும் பயந்து ஒதுங்கினர்.

முத்தம்மா என்னைய விட்ரு, எனக்கு எந்த பதவியும் வேணாம்.

டேய், என்னைய கொல்ல ஆள் அனுப்புற,  என்னைய அனுபவிக்க சங்கிலி போட்டு வேக்குற. உன் தலைய சீவாம விடமாட்டேன் என சொல்லிக் கொண்டு அவனை நெருங்க அவன் ஓட முற்பட்டான். அவன் முதுகில் வெட்டினாள். கத்தி அவன் முதுகில் பொத்தி நிற்க அவன் மெல்ல கீழே விழுந்தான். 

ஆவேசமாய் வந்த முத்தம்மா அவன் முதுகில் கால் வைத்து கத்தியை பிடுங்கி பலங்கொண்டு வீச கத்தி கழுத்தை வெண்ணயை அறுப்பது போல அறுத்து விட்டு பறந்து ஒரு மரத்தில் குத்திட்டு நின்றது.
முத்தம்மா அவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு அவன் தலையை பிய்த்து கையில் எடுத்தாள்.  அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர்.



முத்தம்மா அவன் தலையை தூர எரிந்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.
அதன் பின் போலீஸ் வந்து அவளை கைது செய்து ஐந்து வருடம் தண்டனை முடிந்து வெளியே வந்தாள். ஊரில் இவள் வரப் போவதை அறிந்து எல்லோரும் ஊர் திடலில் காத்திருந்தனர். முத்தம்மா வந்து சேர்ந்தாள். அங்கிருந்த ஊர் பெரியவர்கள்  முத்தம்மாவின் முன் வந்து பவ்யமாக நின்றனர், கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் வந்து இருந்தாலும், முத்தம்மா பழைய கம்பீரத்துடன் தான் வந்து நின்றாள்.

நீங்க இல்லாம இந்த கிராமமே வெறிச்சோடி போச்சு, மக்களோட நிம்மதி கேட்டு போச்சு, தடி எடுத்தவன் எல்லாம் நாட்டாமை பண்ண ஆரம்பிச்சுட்டான்மா,

முத்தம்மாவை பார்த்த இளவட்டங்கள் எல்லாம், பயத்துடன் பதுங்கி கொண்டு நிற்க, 

எவண்டா அவன், நான் இல்லன்னு ஊருக்குள்ள நாட்டாமை பண்ணது? என் முன்னாடி வந்து பேசுங்கடா.... என்று கத்த, யாரும் அவள் முன் வரவில்லை. 

அஞ்சு வருஷத்துக்கு முன்ன எப்படி ஒருத்தன் தலையை எடுத்துட்டு ஜெயிலுக்கு போனேனோ, அதே மாதிரி பழைய முத்தம்மாவா தான் திரும்பி வந்து இருக்கேன்!!! இனி ஊர் என் கட்டுப்பாட்டுல தான் இருக்கணும், மீறி நடக்கணும்னு நினச்சா, அவன் உடம்பில தலை இருக்காது... என்று கூட்டத்தை பார்த்து கத்தினாள் முத்தம்மா!

இனி இந்த எட்டு ஜில்லாக்கும் நீங்க தான் தலைவர்

யோவ் கிழவா எப்பவும் நான் தான் தலைவர். என்ன யாரும் ஒன்னும் செய்ய முடியாது...

ஒரு கிழவி ஒருத்தி முத்தம்மாவின்  எதிரே வந்து "ஊர் பொம்பளைங்க வெளியே போயிட்டு வந்தா, மொட்டை அடிச்சுட்டு தான் உள்ள வரணும்னு சடங்கு இருக்கு முத்தம்மா, இப்ப நீயும் வெளியே போயிட்டு, அஞ்சு வருஷம் கழிச்சு தானே வந்துருக்க, என்ன பண்ண போற?

கடைசியா நான் முன்னாடி நின்னு செஞ்சதால, அநியாயமா மூணு உசுரு போக காரணமா நானே ஆயிட்டேன்... அந்த மூணு ஊசுருக்கிட்ட மன்னிப்பு கேட்கவும், நான் அஞ்சு வருஷம் இந்த மொட்டை காடு ஊரை விட்டு வெளியே இருந்துட்டு வந்ததாலயும், நான் இந்த ஊரு மக்கள் முன்னாடி நின்னு மன்னிப்பு கேட்டுக்கிறேன், ஆனா இனிமேல் இந்த ஊருல நான் சாகுற வரை இந்த சடங்கு எந்த பொண்ணுக்கும் நடக்க நான் விடமாட்டேன்... ஊரு முன்னாடி நிராயுதமா மொட்டை அடிச்சிக்கிற கடைசி ஆளா நானே இருக்கணும்... என்று சொல்ல,

சில பெண்கள் முத்தம்மாவின் மேல் இருந்த மரியாதையிலும், அவள் மேல் தப்பில்லை என்று புரிந்ததாலும் அவளை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டாம் என்று வறுபுறுத்த, முத்தம்மா கண்டிப்பாக அவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டாள்.

டேய், மாரிசாமி எங்கடா இருக்க வெளியே வாடா. நான் தான் இந்த ஊருல கடைசி மொட்டை... எந்த பொண்ணும் இந்த ஊரை விட்டு வெளியே போய்ட்டு வந்தா, தண்டனையா மொட்டை அடிச்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.. 
என சொல்ல, ஊர் பெண்கள் எல்லோரும், சந்தோஷமாக முத்தம்மாவை சூழ்ந்து கொண்டு அவள் கையை உரிமையாக பிடித்து கொண்டு நன்றி சொன்னார்கள். 


என்னடா மாரி, பார்த்துட்டே நிக்குற... இனி உனக்கு வேலை இருக்காது... வா என் தலையை கடைசியா மொட்டை அடிச்சு விடு... என்று சொல்லி விட்டு, தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து வீச, காற்றில் பறந்து மரத்தில் சிக்கிக் கொண்டது. பின் ஒவ்வொன்றாக அவிழ்த்து வீசி விட்டு, நிராயுதமாக நின்று கொண்டு எல்லோரையும் ஒரு முறை பார்த்தாள். 

இது நாள் வரை, இப்படி ஊர் மத்தியில நின்னு மொட்டை அடிச்சிக்கிட்ட எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க... என் தன்னுடைய உடலின் முன் பகுதி முழுவதும் மண் தரையில் படுமாறு சாஷ்டாங்கமாக விழுந்து முத்தம்மா மன்னிப்பு கேட்டாள். அவள் செய்ததை பார்த்து மக்கள் எல்லோரும் பதறி போக, பெண்கள் சில பேர் கண்ணீர் விட்டு அழுது கொண்டே அவளிடம் வர, முத்தம்மா அமைதியாக அப்படியே சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு, மாரிசாமியை பார்க்க, அவனும் அழுது கொண்டே முத்தம்மாவின் தலையில் சவரக் கத்தியை வைத்தான்.

அவள் இறக்கும் வரை அங்கே யாரும் மொட்டை போட்டுக் கொள்ளவில்லை. அவள் இறந்த பின்பு வருடாவருடம் அவள் நினைவாக அந்த கிராமமே மொட்டை தலையோடு காட்சியளிக்கும்...

முற்றும்......











அவசரப்படாதீங்க... கதை இன்னும் முடியல... அடுத்த பக்கத்தில் நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில் தொடரும்... காத்திருங்கள்.

No comments:

Post a Comment