Tuesday 15 February 2022

நடிகை த்ரிஷாவின் ஜாதக தோஷம் - இரண்டாம் பாகம்

இந்த சமயத்தில் தான் ஒரு பிரபல டைரக்டரின் அஸிஸ்டெண்ட் த்ரிஷாவை ஒரு பார்ட்டியில் மீட் பண்ணினான். அது ஒரு வெட்டிங் ரிஷப்ஷன் என்பதால் த்ரிஷா தழைய, தழைய புடவை கட்டிக் கொண்டு சென்று இருந்தாள். அவன் பெயர் திரு. அவனிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அதை சொல்ல அவளிடம் அப்பாயிண்மெண்ட் கேட்க, த்ரிஷா அடுத்த நாள் மதியம் வீட்டுக்கு வர சொல்ல, திருவும் அடுத்த நாள் மதியம் த்ரிஷாவின் வீட்டுக்கு வர, அங்கு உமாவும், த்ரிஷாவும் இருந்தார்கள்.


அம்மா, இவர் தான் திரு... நியூ புரொஜக்ட்... ஒரு நல்ல கதை இருக்குன்னு சொன்னார்...

வாங்க தம்பி... 

வணக்கம் மேடம்... நான் சொல்ற கதை கொஞ்சம் ஹிஸ்டரி கலந்து இருக்கும்... அண்ட் த்ரிஷ் இந்த மாதிரி ஒரு கேரக்டர் பண்ணியே இருக்க மாட்டாங்க...

எல்லாம் இப்படி தான்  சொல்றாங்க... நீங்க கதையை சொல்லுங்க... என்று உமா சொல்ல... திரு கதை சொல்ல தொடங்கினான். இருவரும் அமைதியாக கதையை கேட்க, திரு சீன் பை சீன் பொறுமையாக இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்தான். 

வாவ்... சூப்பர்ப்... நல்ல ஸ்டோரி... என்று த்ரிஷா சொல்ல... 

ஆனா கிளைமேக்ஸ் என்னன்னு சொல்லலியே என்று உமா கேட்க... 

திரு கொஞ்சம் தயக்கத்துடன்... மேடம் அங்க தான் பிரச்சனை...



என்ன சொல்லு...

கதைப்படி த்ரிஷா இந்த கிளைமேக்ஸ்ல அவங்க முடியை மொட்டை அடிக்கணும்... அதான் நான் கிளைமேக்ஸா வச்சு இருக்கேன்... என்று சொல்ல, த்ரிஷா, உமா இருவரும் ஷாக் ஆக, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

என்ன சொல்றீங்க... மொட்டை அடிக்கணுமா...

ஆமா த்ரிஷா...  ஒரு பொண்ணா நீங்க உங்க கடமையை செய்ய, அந்த நேரத்தில் மொட்டை அடிப்பது தான் சரியான தீர்வா இருக்கும்...

ஓகே திரு... நான் கொஞ்சம் யோசிக்கணும்... ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க... நான் சொல்லிடறேன்... என்று த்ரிஷா சொல்ல... திரு கிளம்பினான். த்ரிஷா தன் அம்மாவை பார்க்க...

என்னடி இது... குருஜி சொன்ன மாதிரி உன் முடியை மொட்டை அடிக்கத் தான் வேணுமா... ஒண்ணும் புரியலயே...



அம்மா... நான் ஒண்ணும் கன்னி பொண்ணு இல்ல... 39 வயசு ஆச்சு... கல்யாணம் கூட ஒரு பிரச்சனை இல்ல...  ஆனா இந்த பிஸினஸ், அன்ட் மத்த பிராப்ளம் சால்வ் ஆகணும்னா நான் குருஜி சொன்ன மாதிரி என் முடியை மொட்டை அடிப்பது தான் சரி... 

என்னடி சொல்ற...

ஆமா அம்மா... திரு கதை சொல்லும் போதே எனக்கு கிளைமேக்ஸ் அந்த மாதிரி தான் வரும்னு தோணுச்சு... இந்த படம் நானே பண்ணலாம்னு இருக்கேன்... நீ என்ன சொல்ற...

சரிடி... பண்ணு... அப்புறம் அந்த பையங்கிட்ட எல்லாம் தெளிவா பேசிடு... என்று உமா சொல்ல, த்ரிஷாவும் இரு நாட்கள் கழித்து திருவிடம் பேச... அவன் புரொடியூசர் தேடுவதாக சொல்ல, த்ரிஷாவே அவளுக்கு தெரிந்த புரொடியூசர் கிட்ட பேச... அவரும் ஓகே சொல்ல... படம் பூஜை போடப்பட்டது... படத்திற்கான விளம்பரமாக த்ரிஷாவும், திருவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படத்தை பற்றி திரு பேசியதும், த்ரிஷா படத்தை பற்றி சில நிமிடங்கள் பேசினாள்.





நான் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு... இப்ப வரைக்கும் ஒரு முன்ணணி நடிகையா இருப்பது எனக்கு பெருமை... அதுக்கு முக்கிய காரணம்... என்னுடைய ரசிகர்கள் தான்... அவங்களும் இந்த தமிழ் மக்களும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம்... இந்த படத்தை பற்றி சொல்லணும்னா நான் என்னோட நாப்பது வயசுல... இந்த படத்துக்காக நான் முதல் முறையா என்னோட முடியை மொட்டை போட இருக்கேன்...

என்ன மேடம் சொல்றீங்க... நிஜமாவா...

ஆமா... இன்னும் எத்தனை நாள் தான் ஹீரோ கூட டான்ஸ் ஆடிட்டு இருக்க முடியும்... 

சூப்பர் மேடம்... உங்க படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்... என்று சொல்லி பிரஸ் மீட் முடிய... படத்தின் வேலைகள் படபடவென நடந்தது. உமா இடையில் ஒரு நாள் குருஜியை போய் பார்த்தாள். 

குருஜி, என் பொண்ணுக்கு இப்ப ஒரு படம் புக் ஆகி இருக்கு... அந்த படத்தோட கதைப்படி அவ கிளைமேக்ஸ்ல மொட்டை அடிக்கணும். நீங்க சொன்ன மாதிரியே நடக்குது... குருஜி... இப்ப என்ன பண்ணலாம்...



எல்லாம்‌ நல்ல விஷயம் தான் உமா... நீங்க ஷூட்டிங் ஆரம்பிக்கும்‌ முன்னாடி உங்க பொண்ணுக்கு நான் சொல்ற மாதிரி ஒரு பூஜை பண்ணிடுங்க... அப்புறம்‌ மொட்டை அடிக்க சொல்லுங்க...

அது போலவே ஷூட்டிங் அன்று உமா அங்கேயே குருஜியின் சிஷ்யனை வைத்து ஒரு பூஜை பண்ண, அங்கு த்ரிஷாவின் ஜாதக தோஷத்தை பற்றி சொல்லாமல்‌, நல்லபடியாக படம் வெற்றிபெற வேண்டும் என்ற காரணத்திற்காக பூஜை பண்ணுவதாக பொய் சொன்னாள் உமா.

த்ரிஷாவும் பூஜையை முடித்து விட்டு கேரவனில் போய் மஞ்சள் நீரில் குளித்து ரெடியாகி வர, த்ரிஷாவை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு, திரு லைட்டிங், கேமரா எல்லாம் செட் செய்தான். அதன் பின் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவரை அழைத்து த்ரிஷாவுக்கு மொட்டை அடிப்பதை தெளிவாக விளக்கினான். அவரும் த்ரிஷா அருகில் சென்று உட்கார, த்ரிஷா அவரை பார்த்தாள்.

அவர் கும்கி படத்தில் வரும் ஊர் தலைவர் போல சொட்டை தலையுடன், தாடி வைத்துக் கொண்டு இருக்க, அவருடைய அருகில் இருப்பதே த்ரிஷாவுக்கு சிரமமாக இருந்தது. 

மேடம், நான் உங்களோட பெரிய பேன் மேடம், உங்க எல்லா படமும் நான் பார்த்துருவேன்... சாமி படத்துல எப்படி இருந்தீங்களோ... அதே மாதிரி இப்பவும் இருக்கீங்க... செம பிட்னஸ் மேடம்...



அப்படியா, ரொம்ப தேங்க்ஸ்...

இப்படி மொட்டை அடிக்க எல்லாம்‌ பெரிய தைரியம்‌ வேணும் மேடம்... கண்டிப்பா உங்களுக்கு நிறைய அவார்ட்ஸ் இந்த படம் மூலமா இருக்கும்...

அவார்டா? அது யாருக்கு வேணும்... இன்னும் நாலு படம்‌ புக் ஆனா போதும்...

அதெல்லாம் வரும் மேடம்... இன்னும் அஞ்சு வருஷம் நீங்க பீக்ல இருப்பீங்க... 

அது சரி... இப்பொ நீங்க உங்க வேலையை சரியா பண்ணுங்க... காயம்‌ ஆகிட போகுது...

சரி மேடம்... 

ஆமா இதுக்கு முன்னாடி யாருக்கும் மொட்டை அடிச்சு எக்ஸ்பிரியன்ஸ் இருக்கா...

இல்..‌ இருக்கு மேடம்... ஊர்ல சில சமயம் கோவில் திருவிழால மொட்டை அடிச்சு இருக்கேன்...

நீங்க சொல்றதை‌ பார்த்தா நம்பற மாதிரி இல்ல...

அப்போது திரு எல்லாம்‌ செட் செய்து விட்டு, மைக்கில் ரெடி என்று கமெண்ட் குடுக்க, இருவரும் அவர்களின் பொஷிஷனுக்கு வர, திரு ஆக்‌ஷன் என்று சொல்ல, த்ரிஷா தன்னுடைய ஜடை பின்னி‌ இருந்த முடியை அள்ளி எடுத்து பிரிக்க, இடையில் கட் என்று திரு சொல்ல, மறுபடியும் ரீடேக் என்று த்ரிஷா ஜடையை பிரிக்கவே சில டேக் வாங்கினாள். 



===========================================================

நண்பர்களே அடுத்த பாகமும் ஏறக்குறைய எழுதி முடித்து விட்டேன். தயவு செய்து கதையின் போக்கை மாற்ற சொல்ல வேண்டாம். அடுத்த சில கதைகள் பேஸ்புக்கில் இருந்து எடுக்கும் கதைகளை கொஞ்சம் மாற்றத்துடன் போடலாம் என்று இருக்கிறேன். நன்றி!

No comments:

Post a Comment