Saturday 14 May 2022

பவித்ராவின் முடி காணிக்கை - நான்காம் பாகம்

ஹாய் ஸ்ருதி, எப்படி இருக்க?


சொல்லுடி பவி, நான் நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க... 

நான் நல்லா இருக்கேன்... இப்போ நான் எங்கே இருக்கேன் தெரியுமா?

எங்கே இருக்க பவி?

பழனி கோவில்ல இருக்கேன்...

வாவ், சூப்பர்டி... முடி காணிக்கையா...

ஆமாம் ஸ்ருதி... இன்னும் பத்து நிமிஷத்துல மொட்டை அடிக்க போறாங்க...

சூப்பர்டி... கேட்கும் போதே எனக்கு த்ரில்லிங்கா இருக்கு‌... மொட்டை அடிச்சதும் போட்டோ சென்ட் பண்ணுடி... அப்புறம் எனக்கும் சேர்த்து சாமிகிட்ட வேண்டிக்கோ...

கண்டிப்பா ஸ்ருதி... 


சரிடி... இனிமே உன்னை நான் மொட்டச்சின்னு தான் கூப்புடுவேன்... பழனி முருகனுக்கு அரோகரா....

சரிடி... அப்படியே கூப்புட்டுக்கோ...என்று பவித்ரா ஒரு ஸ்மைலி அனுப்பினாள்.
பின் பவித்ரா யாரு மொட்டை அடிக்கிறார்கள் என்று பார்க்க, முதலில் சிவாவின் அப்பா பார்பர் முன் உட்கார்ந்தார். அவர் தலை முடியை நனைத்து விட்டு நடு உச்சியில் இருந்து மழிக்க தொடங்கினான் பார்பர். பவித்ரா முதல் முறையாக ரொம்ப அருகில் இருந்து மொட்டை அடிப்பதை பார்க்க, ஒரு விதமான உணர்வு அவளுக்குள் கிளர்ந்து எழுந்தது. சில நிமிடங்களில் சிவாவின் அப்பா  தன் மொட்டை தலையை தடவிக் கொண்டே எழ, அடுத்து சிவாவின் அம்மா பூ முடி கொடுக்க, பார்பர் முன் நிற்க, அவன் தலை முடியை சீவி விட்டு, மூன்று கொத்து கட் பண்ணி விட்டான்.

இப்பொழுது சிவா பார்பர் முன் உட்கார, பவித்ரா அவன் தலை முடி மொட்டை அடிப்பதை தன்னுடைய மொபைலில் வீடியோ எடுத்தாள். பார்பர் சிவாவின் தோள் பட்டை வரை வளர்ந்து இருந்த முடியை நனைத்து விட்டு, அடர்த்தியான முடியை உச்சியில் இருந்து மழிக்க, சிவாவின் மொட்டை முழுவதும் பவியின் மொபைலில் வீடியோவாக பதிவானது. பார்பர் சில நிமிடங்களில் சிவாவின் தலை முடியை மொட்டை அடித்து விட்டு, அவனுடைய தாடி, மீசையை மழிக்க, தண்ணீரில் நனைத்து விட்டான்.


பின் தாடி, மீசையை நன்றாக மசாஜ் செய்து விட்டு, கத்தியில் வேறு ஒரு பிளேடு மாற்றி விட்டு மழிக்க, சிவாவின் முகமே வேறு மாதிரி தெரிந்தது. சிவாவின் தாடியை ஒரு முறை ஷேவ் செய்தும், மீண்டும் ஒரு முறை தண்ணீர் தடவி விட்டு, மறுபடியும் ஷேவ் செய்து விட்டான் பார்பர்.

இப்போது சிவாவும் மொட்டை அடித்து மொழு மொழுவென்று இருக்க, அவன் நிமிர்ந்து பவியை பார்க்க, அவள் சூப்பர் என்று சைகை காட்ட, சிவா எழுந்து பவித்ராவிடம் வர, அவனை ஒரு போட்டோ எடுத்து சிவாவிடம் காட்ட, சிவாவும் பார்த்து விட்டு சிரித்தான்.

மொட்டை தலையா... நல்லா இருக்கு... என்று பவி சிவாவை கிண்டல் செய்ய...

இன்னும் கொஞ்ச நேரம் தான்... அப்புறம் நானும் உன்னை அப்படி தான் கூப்பிடுவேன் என்று சொல்ல, பவி வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.

அடுத்து பவியின் அம்மா பார்பர் முன் உட்கார, பவித்ரா ஏற்கனவே தன் அம்மா மொட்டை அடிப்பதை பார்த்து இருந்ததால், அவள் அதை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தன் அம்மாவின் அருகில் இருந்த ஒரு ஆள் மொட்டை அடித்து முடிந்ததும், தன் கைகளை தூக்கி காட்ட, பார்பர் அங்கும் சவரம் செய்வதை ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாள் பவித்ரா.


இங்கு பவியின் அம்மாவின் பாதி முடியை மொட்டை அடித்து இருந்தான் பார்பர். அடுத்த சில நிமிடங்களில் பவியின் அம்மா தன் முடியை எல்லாம் உதறி விட்டு எழ, இப்போது அடுத்து பவித்ரா தான் மொட்டை அடிக்க வேண்டும்...

பவித்ரா சிவாவிடம் தன் மொபைலை கொடுத்து தனக்கு மொட்டை அடிப்பதை வீடியோ எடுக்க சொல்லி விட்டு பார்பர் முன் உட்கார்ந்து கொண்டாள்.

பவியின் அம்மா பவித்ராவிடம் அந்த பழனி முருகனை வேண்டிகிட்டு முடியை காணிக்கையா குடு பவித்ரா... இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சொல்ல, பவித்ராவும் தன் கையை கூப்பி, மனதார பழனி முருகனை நினைத்து சாமி கும்பிட, பார்பர் பவித்ராவின் முடியை இரண்டாக பிரித்து, இரு பக்கமும் கொத்தாக ஜடை போட்டு விட்டு... பார்பர் தண்ணீரை அள்ளி இரு கைகளிலும் அவள் முடியில் மசாஜ் செய்து விட்டு, கத்தியில் பிளேடு மாட்ட, அந்த கேப்பில் பவித்ரா நிமிர்ந்து சிவாவை பார்க்க, அவன் பவியின் மொட்டையை வீடியோ எடுத்து கொண்டு இருந்தான்.

பவித்ரா பார்பரின் மசாஜை ரசித்து அனுபவித்தாள். பவித்ரா மனதில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். இத்தனை வருடங்களாக அவள் ஆசைப்பட்டது சில நிமிடங்களில் நடக்க போகிறது... தன் முடியை மொட்டை அடிக்க போவதை அனுபவிக்க போகிறோம் என்ற உணர்வே அவளுக்கு புதுமையாக இருந்தது.

ஆனால் அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர, பார்பர் கத்தியில் பிளேடு மாற்றி விட்டு, பவியின் தலையை பிடித்து குனிய வைத்து, நடு உச்சியில் இருந்து வலது பக்கமாக சிரைக்க தொடங்கினான்.

பவித்ரா தலையில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழ, பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தாள் பவித்ரா. பார்பர் பவித்ராவின் தலையை அமுக்கி பிடித்து கொண்டு, முடியை மழிக்க... பவிக்கு அந்த பீல் ஏனோ ரொம்ப வித்தியாசமாக, சந்தோஷமாக, வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல பீல் பண்ணினாள்.அவளுடைய முதுகு தண்டில் சிலிர்க்க அது அவள் உடல் முழுவதும் பரவியது.பார்பர் கொஞ்சம் கொஞ்சமாக மழிக்க, அவளுடைய முடி எல்லாம் அவள் மடியிலும், கைகளிலும் விழுந்தது. பவியின் இரு பக்க கன்னத்திலும் கூட முடி ஒட்டிக் கொண்டு இருந்தது.

தலையின் உச்சி பகுதியில் சிரைத்ததும், அப்படியே வலதுபக்கம் சிரைக்க, முடி எல்லாம் ஒரே பக்கமாக பவியின் கன்னத்திலேயே வழிந்தது.


அண்ணா, கன்னத்துல இருக்க முடியை எடுத்துருங்க... என்று பவி சொல்ல, பார்பர் வலது பக்க காதோரமாக கீழ் நோக்கி ஒரு முறை ஷேவ் செய்து விட்டார். 

பின் பார்பர் பின்பக்க முடியையும் எடுத்து  விட, பவியின் தன் ஆசையை அடக்க முடியாமல் ஷேவ் செய்த இடத்தை தன் கைகளால் தடவி பார்க்க, முதல் முறையாக அவளுடைய முடி ஷேவ் செய்து இருந்ததால், நல்ல சொரசொரப்புடன் காணப்பட்டது. அது பவித்ராவுக்கு ஒரு மாதிரி இருக்க, பவித்ரா தன் தலை இன்னும் நல்ல வழுவழுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அண்ணா, முடி எல்லாம் குத்துது அண்ணா, என்று பவி தடவி பார்த்துக் கொண்டே சொல்ல,

அட, இரும்மா... இப்போ தானே முதல் தட மொட்டை அடிக்கிற... அதனால அப்படி தான் இருக்கும்... நான் இன்னொரு முறை ஷேவ் பண்ணியதும் பாரு என்று பார்பர் சொல்லி விட்டு, 


மறுபடியும் தண்ணீர் அள்ளி எடுத்து, பவித்ராவின் மொட்டை மண்டை, பின் கழுத்து, கன்னம் என்று தடவி மசாஜ் செய்து விட்டு, பின் மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் செய்து விட்டான். முதலில் மொட்டை மண்டை, பின் கழுத்து பகுதி வரை ஷேவ் செய்து விட்டு, அடுத்து நெற்றியில் இருந்து கீழ் நோக்கி சிரைத்து, அப்படியே வலது கன்னம், தாடை வரை ஷேவ் செய்த பார்பர், அவளுடைய உதட்டை பிடித்து கொண்டு வலது, இடது கன்னங்களில் இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்து விட்டான்.

பின் மீண்டும் ஒரு முறை தன் கையால் அவள் முகம், மொட்டை மண்டையில் ஒட்டி இருந்த முடியை தடவி எடுத்து விட, பின் பவித்ரா தன் மேல் இருந்த முடியை உதறி விட்டு எழுந்தாள். பார்பருக்கு பவியின் அம்மா பணம் கொடுக்க, பவி வேகமாக வந்து சிவாவின் கையில் இருந்த தன்னுடைய போனை பிடுங்கினாள்.



பவி தன்னை ஒரு செல்பி எடுத்து பார்க்க, நிறைய அடர்த்தியான முடியுடன் இருக்கும் பவித்ராவின் தலை, மொட்டை அடித்த பின், எதுவும் இல்லாமல் மொழு மொழுவென்று லைட்டாக இருந்தது. பவி தன் அம்மாவை பார்த்து வெட்கத்தில் சிரிக்க, 

மொட்டை தலையிலயும் அழகா தாண்டி இருக்க என்று அவள் அம்மா திருஷ்டி கழிக்க, பின் பவித்ரா சிவாவை பார்க்க

அழகா இருக்கீங்க மொட்டை பவித்ரா என்று சிவா சொல்ல, அவளுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பவியின் அம்மா அவளுடைய தலைக்கு சந்தனத்தை குழைத்து தடவி விட, எல்லோரும் மலை ஏறினார்கள்.


பவித்ரா தன் மொட்டை தலையுடன் ஒவ்வொரு இடமாக போட்டோ எடுத்து பேஸ்புக்கில் அப்டேட் பண்ணிக் கொண்டாள். பின் சாமி தரிசனம் முடித்து எல்லோரும் வீட்டுக்கு வந்தார்கள். 

பவித்ராவின் பேஸ்புக் லைக், கமெண்ட்களால் நிரம்பி வழிய, பேஸ்புக் நண்பர்களிடம் மொட்டை பற்றி திரும்ப திரும்ப பேசி, தன் ஆசையை தீர்த்துக் கொண்டாள். 

********************************************************************************


அடுத்த பாகம் நீங்கள் எதிர்பாராததை எதிர்பாருங்கள்... யாரும் கற்பனை செய்ய முடியாத ஒரு கோணத்தில் கதை செல்லும். காத்திருங்கள். உங்கள் கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள்.







No comments:

Post a Comment