Monday 15 August 2022

பெரிய குடும்பம் - முதலாம் பாகம்

அல்லி நகரம் என்கிற அழகான ஊர் அது. அந்த வீட்டுலயே பெரிய குடும்பம் வினய் அவர்களின் குடும்பம். பெரும் பணக்காரர்கள். அந்த வீட்டையே ஆளுமை பண்றது வினயின் பெரியம்மா ஷாலினி. அந்த அம்மா ஷாலினி பேச்சுக்கு ஊரும் வீடும் கட்டுப்படும். அப்படி ஒரு கம்பீரம். வினய்க்கு மூன்று தங்கச்சிங்க. முதல் தங்கச்சி ப்ரீத்தி காலேஜ் முடிச்சிட்டு அவங்க சொந்த கம்பெனி ஷாலினி குரூப்ஸ்ல மேனேஜரா இருக்கா. இரண்டாவது தங்கச்சி ஸ்ருதி காலேஜ் நான்காம் ஆண்டு படிக்குறா. கடைசி தங்கச்சி ஆர்த்தி காலேஜ் இரண்டாம் வருடம் படிக்குறா. வினய் மனைவி ஜீவிதா வயது இருபத்தி நாலு, ஹவுஸ் ஓயிப்பா இருக்காங்க. இது மாதிரி அந்த பெரிய பங்களா வீட்டுல வினய் அவன் மனைவி ஜீவிதா, மூணு தங்கச்சிங்க , பெரியம்மா ஷாலினி, வினயின் சித்தி ரேகா மற்றும் ரேகாவின் பையன் விஷ்வா என எல்லாரும் சந்தோசமா வாழ்ந்துட்டு வந்தாங்க.

 

வினய் ரொம்ப சாதுவான பையன் ஆனா விஷ்வா அப்படியே எதிர்மறையா ரொம்ப கோபக்காரன். ஆனா விஷ்வாக்கு மூணாவது தங்கச்சி ஆர்த்தி மேல மட்டும் என்னவோ தனி பாசம். அவளை எல்லா விஷயத்திலும் அப்படி கவனிச்சிப்பான். இது மாதிரி அவங்க வாழ்க்கை ரொம்ப அழகா போய்கிட்டு இருந்துச்சி. அந்த ஒரு சம்பவம் நடக்குற வரைக்கும்.

முதல் தங்கச்சி ப்ரீத்தி டெய்லி ஆபீஸ் போயிட்டு வருவா. ஒரு மேனேஜரா அவ பொறுப்பை ஒழுங்காவும் செஞ்சா. ஆனா எல்லாருக்கும் ஏதோ ஒரு இடத்துல தடுமாறும் அப்படிங்கிற மாதிரி அவளுக்கும் அவங்க அலுவலகத்துல வேலை பாக்குற ஒரு பையனுக்கும் காதல் ஏற்பட்டுச்சு. சுமார் ஒரு வருடமா இந்த விஷயம் நடந்துட்டு இருக்குற நிலையில, யாருக்குமே இத பத்தி தெரியல. ஆனா துரதிஷ்டவசமா ஆபீஸ்ல நடக்குற இந்த விஷயம் விஷ்வாவின் பி.எ வழியா விஷ்வாக்கு தெரிய வந்தது. 



அவ்வளவு தான் விஷ்வா நேரா போய் இந்த விஷயத்தை பெரியம்மா ஷாலினியிடம் சொல்லிவிட்டான். சொல்லிவிட்டு ப்ரீத்திக்கு எவ்ளோ தைரியம், நம்ம ஆபீஸ்ல வேலை செய்றவனை போய் லவ் பண்ணா கேவலமா இருக்குனு கோவமா கெளம்புனான். விஷ்வாவை ஷாலினி தடுத்து அவசரபடாதே, இதை பொறுமையா விசாரிப்போம்னு அவனை சமாதான படுத்தினாள் ஷாலினி. 

இப்போ ஷாலினிக்கு என்ன பண்றதுனே தெரியல. அந்த ஊருலயே பெரிய குடும்பம். வீட்டை மட்டும் இல்லாமல், ஊரையும் நாட்டாமை பண்ணி உத்தரவு போடுற ஷாலினி வீட்டு பொண்ணு, போயும் போயும் ஆபீஸ்ல வேலை பாக்குற ஒருத்தன காதலிக்குறானு ஊருக்கு தெரிஞ்சா அவங்க கவுரவம் மரியாதை எல்லாம் போய்டும். அதனால இதுக்கு ஒரு வழி செஞ்சே ஆகணும்னு யோசிக்க ஆரம்பிச்சாங்க. அந்த நேரம் பாத்து ஷாலினியோட அம்மா ஊருலேந்து வந்தாங்க. அவங்கல ஷாலினி அன்போடு வரவேற்று உபசரிச்சு பேசிட்டு இருந்தாலும் ஷாலினி முகத்த வச்சி ஏதோ பிரச்சனைனு கண்டு புடிச்ச அவங்க அம்மா. ஷாலினியை பார்த்து ஊரே பாத்து நடுங்குற என் பொண்ணு இப்போ எதை நெனச்சி நடுங்கிட்டு இருக்கானு கேக்குறாங்க.

ஷாலினி அம்மா இப்படி கேட்டதும் ஷாலினி அவங்ககிட்ட நடந்த எல்லா விஷயத்தையும் சொல்றாங்க. இதெல்லாம் கேட்டுட்டு ஷாலினி அம்மாக்கு அதிர்ச்சியா ஆயிடுச்சி. நா அப்போவே சொன்னனே கேட்டியா, நீ உன் வாழ்க்கையை பார்க்காமல் இந்த புள்ளைங்க தான் உலகம்னு இவங்க எல்லோரையும் நீ வளர்த்து ஆளாக்குனதுக்கு இவங்க காட்டுற நன்றியை பாரு. இந்த சொத்து பூரா உன் புருசன் சம்பாரிச்சது, ஆனா உனக்கு பசங்க இல்லன்னு அவரோட தம்பி பசங்கள உன் பிள்ளைங்களா நெனச்சி வளர்த்து எல்லாமே செஞ்சி குடுத்த, ஆனா உன்னை அசிங்க படுத்துறதுக்கு இவங்க ரெடி ஆயிட்டாங்க பாருன்னு ஷாலினிய அவங்க அம்மா திட்டுறாங்க. ஷாலினி கண்ணுல கண்ணீரோட நடந்து முடிஞ்ச விஷயங்களை இனி பேச வேண்டாம் அம்மா. இப்போ இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு சொல்லுங்க இந்த விஷயம் வெளில தெரிஞ்சி அசிங்கமாகி, இந்த குடும்பத்தோட கவுரவம் போச்சுன்னா, உன் பொண்ணு உயிரோட இருக்கமாட்டாமானு சொல்றாங்க.



இதெல்லாம் நீ அப்போயே யோசிச்சு இருக்கனும்னு திட்டுறாங்க. நடந்தது பத்தியே பேசாதிங்க அம்மா, இதுக்கு ஒரு வழி சொல்லுங்கனு கலங்குன கண்ணோடு கேக்குறாங்க. வேற வழியே இல்லமால் பாசம் கண்ணை மறச்சாலும் உன் மரியாதையை காப்பாத்திக்க, நான் சொல்றத நீ கேட்டு தான் ஆகணும்னு சொல்றாங்க. என்னமா சொல்லுனு ஷாலினி கேக்க, பேசாம நம்ம பொண்ணுக எல்லோருக்கும் மொட்டை போட்டு விடு, அப்போ தான் ஒழுங்கா வீட்ல அடங்கி கெடப்பாங்கன்னு சொல்றாங்க.



ஷாலினி அதிர்ச்சியா என்னமா வயசு பொண்ணுக்கு போய் மொட்டை போட்டு விட சொல்றிங்கனு கேக்க, நீ இப்படியே செல்லம் குடுத்துகிட்டு இரு, அப்புறம் உன்னை ஏமாத்திட்டு அவ அந்த பையன் கூட போய்டுவா, கடைசில நீ தான் அவமான பட்டு நிக்கணும்னு சொல்றாங்க. இத அங்க கேட்டுட்டு இருந்த விஷ்வா ஷாலினிகிட்ட வந்து பெரியம்மா, பாட்டி சொல்றது சரி தான் நீங்க யோசிக்காதிங்க, அந்த திமிரு புடிச்ச ப்ரீத்திக்கு மொட்டை அடிச்சி விட்டா தான் அடங்குவா, தங்கச்சினு செல்லம் குடுத்து வளர்த்தது பெரிய தப்பா போச்சு. எங்கள நீங்க கஷ்டப்பட்டு வளர்த்திங்க, அதுக்கு இப்படி ஒரு விஷயம் பண்றது சரியே இல்லை. வினய் அண்ணா பத்தி கவலை படாதீங்க, அவர் பிசினஸ் விஷயமா மும்பை போறாரு, அவர் வர்றதுக்குள்ள இவளுக்கு மொட்ட போட்டு விட்டுறலாம், யோசிக்காம அதுக்கு ஆக வேண்டியத பாருங்கன்னு சொல்லிட்டு விஷ்வா அங்கிருந்து போறான்.

ஷாலினியும் ஒரு வழியா இதுக்கு ஒத்துகிட்டாங்க. ஆனா அம்மா, லாக்டவுன்ல கோவிலெல்லாம் மூடி இருக்கே, கோயிலுல சாமிக்கு மொட்டை அடிச்சோம்னு சொல்ல முடியாதேம்மா. வெளி ஊருக்கும் லாக்டவுன்ல போக முடியாது. இந்த ஊரு பார்பர் வச்சி மொட்டை அடிச்சா ஊரு ஜனங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிடும்... என்ன பண்றதுனு குழப்பமா இருக்குனு சொல்றாங்க. அதுக்கு ஷாலினி அம்மா நீ வருத்தப்படாத ஷாலினி, இதுக்குனே ஆறுமுகம்னு ஒருத்தன் இருக்கான், யாருக்கும் தெரியாம வீடு வீடா போய் மொட்டை அடிச்சி விடறது தான் அவன் வேலையே. ஆனா என்ன யாருக்கும் தெரியாம பண்ணி தர்றதுனால கொஞ்சம் காசு கேப்பான்.


ஒரு தலையை மொட்டை அடிக்க ஆயிரம் ரூபா. இப்படி வீட்டுக்கு அடங்கமா சுத்திட்டு இருக்குற பொம்பள புள்ளைங்க வீட்டுக்கே போய் இவனை கூப்பிட்டு தான் மொட்டை போட்டு விட்டுட்டு இருக்காங்க. கச்சிதமா வேலையை வெளில யாருக்கும் தெரியாத மாதிரி முடிச்சி குடுத்துருவான். அவன கூப்புட்டே இவளுக்கு மொட்ட போடுவோம், நம்ப பக்கத்து வீட்டு சாந்தி பொண்ணு இருக்கா இல்ல, 

 ஆமா திருப்பதில கூட போன மாசம் அவ பொண்ணுக்கு வேண்டுதல்னு மொட்ட போட்டு விட்டாங்களே. நா கூட வேண்டுதலா இருந்தாலும் ஏண்டி இப்படி வயசு பொண்ணுக்கு போய் மொட்ட போட்டனு சாந்தியை திட்டுனேன்னு ஷாலினி சொல்ல.

வேண்டுதல் எல்லாம் இல்லை அந்த சாந்தி பொண்ணு எவன் கூடவோ காதலிச்சி சுத்திட்டு இருந்தா, அதான் அந்த ஆறுமுகத்தை வீட்டுக்கு வர சொல்லி மொட்டை போட்டு விட்டிருக்கான் அவளோட அண்ணன், ஆனா கேக்குறவங்க எல்லார்கிட்டயும் வேண்டுதல் மொட்டைனு சொல்லிகிட்டு இருக்காங்க. சரி அத விடு பேச வந்த விஷயத்த மறந்து பேசிட்டு இருக்கோம், அன்னிக்கு அந்த சாந்தி மகன் என் போன் வாங்கி தான் அந்த ஆறுமுகத்து கிட்ட பேசுனான், அவன் நம்பர் என்கிட்ட இருக்கு இரு போன் பண்னுவோம்னு சொல்லிட்டு ஷாலினியின் அம்மா ஆறுமுகத்துக்கு போன் பண்றாங்க.



ஆறுமுகம் போன் எடுத்து ஹலோ யாருங்க பேசுறது? என்று கேட்க,

யப்பா நீ நாசுவன் ஆறுமுகம் தான.

ஆமாம்மா, என்ன விஷயம்?

போன மாசம் அல்லி நகரத்துல வள்ளுவர் தெருவுல ஒரு வீட்டு பொண்ணுக்கு வந்து மொட்டை அடிச்சி விட்டுட்டு போனியேப்பா.

அதை பத்தி எல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க?

இல்லப்பா, எங்க வீட்டுல ஒரு மூணு பொம்பள புள்ளைங்களுக்கு மொட்டை போடணும், கொஞ்சம் நீ வந்து செஞ்சு குடுத்தா நல்லா இருக்கும்.

அதுக்கென்ன அம்மா, அது எல்லாம் பக்காவா செஞ்சிடலாம். மூணு பொண்ணுக்கு மூவாயிரம் ஆகும்மா.

காசை பத்தின கவலையை விடுப்பா, இப்போ உடனே கூட உனக்கு அனுப்பிடுறன். ஆனா இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது.

யாருக்கும் தெரிய கூடாதுன்னு தானே என்னை கூப்புடுறீங்க, இல்லேனா அங்கே உள்ள ஆளை வச்சே அடிச்சி விட்டு இருக்க மாட்டீங்களா... அதெல்லாம் கவலை படாதீங்க யாருக்கும் தெரியாம மூணு மொட்டையும் முடிச்சி குடுத்துடுறேன். அப்புறம் யாரு கேட்டாலும் கோயிலுல போட்டு விட்டோம்னு சொல்லிக்கொங்க. சரி என்னம்மா விஷயம் லவ் மேட்டரா...

ஆமாம்பா

எங்க பாத்தாலும் இந்த புள்ளைங்களுக்கு இதே ஜோலியா தான் இருக்கு... சரி அம்மா, நாளைக்கு அடிச்சிசிருவோம், உங்க விலாசத்தை மட்டும் மெசேஜ் அனுப்பி விடுங்க இந்த நம்பருக்கு...

என்னப்பா நாளைக்கு வரேன்னு சொல்ற,  இன்னிக்கே கொஞ்சம் வந்து முடிச்சி விட்டுட்டு போப்பா.

இன்னிக்கு கண்டிப்பா முடியதும்மா... இப்போ கூட பக்கத்து ஏரியா கவுன்சிலர் பொண்ணுக்கு தான் மொட்டை போட்டுகிட்டு இருக்கேன்... அதே காதல் விஷயம் தான் இங்கயும். இப்போ நீங்க போன் பண்ணதுன்னால பாதி மொட்டையோட விட்டுட்டு வந்துட்டேன் அம்மா. இங்க முடிச்சிட்டு இன்னும் நாலஞ்சு வீட்டுக்கு போய் மொட்டை அடிக்க வேண்டி இருக்கு... பொம்பள புள்ளைங்களா இருக்குறதுனால மொட்டை போட்டு முடிக்கவும் நேரம் ஆகிடுது இல்லமா... புரிஞ்சிக்கோங்க... நாளைக்கு காலைலயே வந்து முடிச்சு குடுத்துடுறேன்...

சரிப்பா கொஞ்சம் மறக்காம வந்துடு நாளைக்குன்னு சொல்லிட்டு போன் வச்சிட்டாங்க.

என்னம்மா ப்ரீத்திக்கு மட்டும் மொட்டை போட சொல்லி விடுங்கன்னு சொன்னா நீங்க மூணு மொட்டைனு சொல்றிங்க என்னம்மா இது?


எல்லாம் காரணமா தான். ஒருத்திக்கு மட்டும் மொட்டை அடிச்சிட்டு வேண்டுதல் மொட்டைனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? அதுக்கு தான் நம்ம மூணு பொண்ணுகளுக்கும்  மொட்டை அடிக்க சொல்லிட்டேன்.

என்னம்மா பேசுறீங்க நீங்க? ப்ரீத்தி பண்ணின தப்புக்கு எதுக்கு ஸ்ருதிக்கும், ஆர்த்திக்கும் தண்டனை கொடுக்கணும். இது சரியா எனக்கு படலை அம்மா... மூணு பொண்ணுக்கும் மொட்டை அடிக்க வேணாம்.

ப்ரீத்தி மட்டும் தப்பு பண்ணுவாள்னு நீ நினைச்சியா ஷாலினி,  அது மாதிரி ஸ்ருதியும், ஆர்த்தியும் தப்பே பண்ணமாட்டாங்கன்னு நீ எப்படி நெனைக்குற? நீ எதுவும் பேசாம இரு... நாளைக்கு மூணு பொண்ணுக்கும் மொட்டை போட்டு விடுறது தான் இந்த குடும்பத்துக்கு நல்லது. இப்பவாச்சும் என் பேச்சை கேளு. பேசாம போய் தூங்கு... அப்புறம் நாளைக்கு அந்த ஆறுமுகம் காலையிலேயே வந்துருவான். இவளுங்க யாரும் வெளியில போகாம பார்த்துக்கோ.

ஆனா அம்மா நாளைக்கு ஆர்த்திக்கு காலேஜ்ல ஏதோ விழா... அதுக்கு ஏழு மணிக்கே போகணும்னு சொல்லிட்டு இருந்தா. அவ மட்டும் போகட்டும்மா. மூணு பேருலயே அவ தான் எப்போதுமே என் பேச்சை தட்டுனதே இல்லை. அவ எப்பவுமே தப்பு பண்ணமாட்டாள்...

நீ இப்படியே எல்லாரையும் நம்பிக்கிட்டே இரு. அது எல்லாம் ஒண்ணும் வேணாம். ஆர்த்திக்கும் நாளைக்கு மொட்டை அடிக்கிறது அடிக்கிறது தான். எதையும் குழப்பமா இப்பாவச்சும் அம்மா பேச்சை கேளுடி. இப்படியே இவளுக மூணு பேரையும் நம்பி ஏமாந்துட்டு இருந்தேனா, ஊருக்குள்ள உனக்கு உள்ள மரியாதை உன் பொண்ணுகளாலேயே கெட்டுடும்...

இப்படி பேசிட்டு ரெண்டு பேரும் தூங்க போய் விட்டார்கள்.





No comments:

Post a Comment