Monday 31 October 2022

சித்ரா- இரண்டாம் பாகம் draft

அடுத்த நாள் காலை 8:30 மணிக்கு திவ்யா காலேஜ் போக ரெடி ஆக, அவளுடைய முடியை மட்டும் ஜடை பின்ன வேண்டிய வேலை இருந்தது. திவ்யா சித்ராவுக்காக காத்து இருக்க... 

அம்மா சீக்கிரம் வாம்மா... டைம் ஆயிடுச்சி...

கொஞ்சம் வெயிட் பண்ண மாட்டியா... உன் முடிய நீயே சீவ வேண்டியது தானே?

அம்மா எனக்கு தான் ஒழுங்க முடியை சீவ தெரியாதே... 

உன்னை மாறி பொண்ணை யாரும் பார்த்து இருக்கமாட்டாங்க... 

லாங் ஹேர் மட்டும் வேணும்... ஆனால் அதை பின்னக்கூட தெரியாது... என்னடி இது? இன்னும் சிக்கு கூட எடுக்காம இருக்க?

என்ன பண்ண நேரம் இல்ல?

அப்போ நான் மட்டும் என்ன? சிக்கு கூட எடுக்க தெரியாத உனக்கு எதுக்குடி நீளமான முடி... பேசாம மொட்டை அடிச்சுக்க....]

நீ எல்லாம் ஒரு அம்மாவா? உன் பொண்ணை இப்படி தான் பார்த்துப்பியா? இப்படி தான் பேசுவியா?

வேற எப்படி பேசுவாங்க? ஒழுங்கா தலையை காட்டுடி...  


அம்மா.. எனக்கு ஒரு ஆசை?

என்னடி???

மூக்கு குத்திக்க ஆசையா இருக்கும்மா... காலேஜ் ,முடிஞ்சு வந்து கடைக்கு போலாமா?

மூக்கு குத்திக்க போறியா? என்ன சொல்றடி? அது எல்லாம் வேணாம்...

அதான் ஏன்  அம்மா? எனக்கு இன்னும் காது கூட குத்தல?

உங்க அப்பாவும்,நானும் வீட்டை விட்டு ஓடி வந்து லவ் மேரேஜ் பண்ணிட்டோம்...  அதனால நாங்க உனக்கு சின்ன வயசுல மொட்டை அடிச்சு காது குத்த முடியலை...

சரி சின்ன வயசுல பண்ணலன்னா இப்போ பண்ணலாமே? 

இப்போ காலேஜ் போகும் போது மொட்டை அடிச்சு காது குத்துணுமா உனக்கு... 

மொட்டையா... நான் காது மட்டும் குத்தலாம்னு சொல்றேன்... சொல்றா

ஏய் அப்படி எல்லாம் பண்ண முடியாது சாமி குத்தம் ஆயிடும்...

முடியது... நான் கண்டிப்பா காது குத்தி, ஜிமிக்கி, கம்மல் போடணும்,  எத்தனை நாளுக்கு இப்படி டூப்ளிகேட் கம்மல் போடா...

என்னடி எதிர்த்து  பேசுற? இருவரும் சண்டை போட அந்த சத்தம் லட்சுமியின் போர்ஷன் வரை கேட்டது.

லட்சுமி இவர்களின் சண்டையை கேட்டுவிட்டு வந்தாள்.  

என்ன சத்தம் அம்மா, பொண்ணு ரெண்டு பேரும் இப்படி சண்டை பிடிக்கிறீங்க...

திவ்யா அப்போது கண் கலங்கி வழிய நிற்க... லட்சுமி "ஏய் என்ன ஆச்சு... ஏன் அழற திவ்யா... என்று லட்சுமி கேட்க... திவ்யா கண்டு கொள்ளாமல் போனாள். அதனால்  லட்சுமி தன் மனதிற்குள் " ரெண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையா இருக்கும் போலயே" என்று நினைத்துக் கொண்டு, சித்ராவிடம் கேட்டாள் லட்சுமி.

"என்ன பிரச்சனை... என்ன ஆச்சு.. என் அழுதுட்டே போறா? 

அது ஒண்ணும் இல்ல, காது, மூக்கு குத்தணுமாம்... அதுக்கு போய் என் கூட சண்டை போட்டுட்டு போறா" 

என்ன சித்ரா சொல்ற? இன்னும் திவ்யாக்கு காது குத்தலையா? ஏன் குத்தலை?

அது ஒரு பெரிய கதை லட்சுமி அக்கா, என் புருஷன் தமிழ், நான் கேரளா, வேலை பார்க்க எங்க ஊருக்கு வந்தாரு... அங்க எங்க ரெண்டு பேருக்கும் பழக்கமாகி, லவ் பண்ணோம்... இது எங்க வீட்டுக்கு தெரிய, என் அப்பா ஒத்துக்கல... நான் அவரை நம்பி இங்க தமிழ் நாட்டுக்கு வந்துட்டேன்... இவள் பிறந்ததும் அவரு வெளிநாட்டுக்கு சம்பாதிக்க போனார்... 


அங்கேயே ஒரு விபத்தில் இறந்துட்டார். எனக்கு இங்க உதவிக்கு யாரும் இல்ல. அவரு வீட்டு சொந்தம் யாரும் வர்றது இல்லை... அதனால இவளுக்கு மொட்டை அடிச்சி காது குத்தலை... அப்படியே வருஷம் ஓடிடுச்சு... எனக்கு இப்போதான் இங்க இருக்க பழக்க, வழக்கம் புரியுது...

சரி, சித்ரா அவளுக்கு சின்ன வயசுல பண்ணல... ஆனா இப்போ அவளே வாய் விட்டு கேட்குறா... பண்ணித் தானே ஆகணும்... 

எனக்கு என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம்... சாயங்காலம் காது குத்த ஏற்பாடு பண்ணனும் லட்சுமி அக்கா...

என்னம்மா சொல்ற? குல தெய்வத்துக்கு மொட்டை அடிக்காமல் காது குத்தினா பெரிய தெய்வம் குத்தம் ஆயிடும்...

என்ன அக்கா பேசுறீங்க... வயசு பொண்ணு... அவளுக்கு மொட்டை அடிக்கிறதா... இது எல்லாம் நல்லா இருக்காது அக்கா. ஒரு வேலை அவளே மொட்டை அடிக்க ஒத்துக்க மாட்டா அக்கா...



அது இல்ல சித்ரா... சாமி குத்தம் ஆயிட்டா ஏதாவது... இடையில் குறுக்கிட்ட சித்ரா...

அக்கா சும்மா சாமி சாமின்னு சொல்றிங்களே... நான் இப்படி கஷ்டத்துல இருக்க காரணமே அந்த சாமி தான்...

சரி சரி கூல்... டென்சன் ஆகாதே...

சரி அக்கா, உங்களுக்கு காது குத்துறவங்க யாரையாவது தெரியுமா?

நீ என்ன இன்னும் பழைய ஆளு மாதிரி இருக்க... அது எல்லாம் இந்த ஸ்டைலிஸ்ட் பார்த்துப்பாங்க... ஆனா காது குத்த மட்டும் வர சொல்ல போறியா?

ஆமா அக்கா, அதுக்கு மட்டும் தான்... வேற எதுக்கு சொல்றீங்க

ஸ்டைலிஸ்ட் வர சொல்லி காது மட்டும் குத்துறதுக்கு, ஒரு பேசியல்...  சின்னதா ஒரு ஹேர்கட் திவ்யாவுக்கு பண்ண சொல்லலாம்... பேக்கேஜ் பெருசா இருந்தா ரேட் கம்மியாகும்... அதான் சொல்றேன்...

பேசியல் சரி... ஹேர்கட் தான் இடிக்குது...  திவ்யா அவ முடியை ட்ரிம் கூட பண்ண மாட்டா... ரொம்ப ஷார்ட் கட் பண்ணிட்டா என்ன பண்றது?


அது ஒண்ணும் ஆகாது... நம்ம சொல்ற மாதிரி தான் பண்ணுவாங்க... அதுக்கு பயப்படாதே... அப்றோம் ஒண்ணும் கேக்கணும்...  நீ ஏன் எப்பவுமே கொண்டை போட்டு, ரொம்ப பழைய சேலை, நைட்டியவே போட்டுட்டு இருக்க... பார்க்க என்னை விட வயசு அதிகமா தெரியுற...

அது ஒண்ணும் இல்ல அக்கா, அவரு போனதுல இருந்து நான் இந்த ஜடை போட்டு பூ வைக்கிறதையே விட்டுட்டேன் என்றாள் சித்ரா... அன்று மாலை சித்ரா மார்க்கெட் கிளம்பியதும் திவ்யா காலேஜ் முடிந்து வந்தாள். லட்சுமி திவ்யாவின் நீளமான முடியை பார்த்தவுடன் அதை எப்படியாவது முழுமையாக மொட்டை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டாள்.

என்ன செய்வது என்று யோசித்த லட்சுமி, தன் ஏரியாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு ஏரியாவுக்கு சென்று நல்ல சலூனை தேடினாள். அந்த ஏரியாவில் ஒரு பெரிய சலூன் ஒன்று இருக்க, அதற்க்குள் சென்றாள் லட்சுமி. 

வாங்க மேடம்... சொல்லுங்க... நான் தான் இங்க ஸ்டைலிஸ்ட்... என் பேரு ராமு... என்ன பண்ணனும்... சொல்லுங்க...

எனக்கு எதுவும் பண்ண வேண்டாம்... நாளைக்கு என் பொண்ணுக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்... நீங்க பண்ண முடியுமா?

என்ன மேடம்... மொட்டை போட்டு காது குத்தறது எல்லாம் கோவில்ல தானே பண்ணுவாங்க...



ஆமாங்க... ஆனா என் பொண்ணு இப்ப காலேஜ் படிக்கிறா... அவளோட சின்ன வயசுல பண்ண முடியாத சூழ்நிலை... அதான் இப்போ பண்றோம்... 

சரி மேடம்... பண்ணிடலாம்... நானே ஹேர்கட், நோஸ் பியர்சிங் எல்லாம் பண்ணிடுவேன்... அப்புறம் ஹோம் சர்வீஸ் அப்படின்னா...

நீ எவ்ளோ வேணும்னாலும் வாங்கிக்கோ... என்று லட்சுமி தன் வீட்டு முகவரியை கொடுக்க... ராமு அமவுண்ட் சொல்லி அட்வான்ஸ் அமவுண்டும் வாங்கி கொண்டான். 

அப்புறம் மேடம்... மொட்டை அடிச்சதும் முடியை எனக்கு கொடுத்தா இந்த அமவுண்ட்ல இருந்து கொஞ்சம் டிஸ்கவுண்ட் தர்றேன்...

அதெல்லாம் முடியாதுப்பா... அந்த முடியை நான் கோவில்ல கொண்டு போய் கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்... என்று சொல்லி விட்டு அந்த பேச்சை முடித்துக் கொண்டாள் லட்சுமி. அவளும் திவ்யாவின் நீளமான முடியை கண் வைத்து இருக்கிறாள் அல்லவா?

ராமுவும் லேசுப்பட்ட ஆள் அல்ல... தன் பார்லருக்கு ஹேர்கட் பண்ண வரும் பெண்களின் முடியை ரசித்து ரசித்து வெட்டுவான். அவர்கள் சொன்னதை விட... நீளம் அதிகமாக வெட்டி அவர்களுடைய முடியை அதிக விலைக்கு வெளியில் விற்றுவிடுவான்.


இப்படிப்பட்ட இருவரில் யாருக்கு திவ்யா மற்றும் அவள் அம்மா சித்ராவின் முடி கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.

அடுத்த நாள் திவ்யா காலேஜ் கிளம்பியதும், சித்ராவும் வேலை தேட வெளியே கிளம்பினாள். லட்சுமி கொஞ்சம் பதட்டத்தில் இருந்தாள். எப்படியாவது திவ்யாவின் நீளமான முடியை ராமு மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.

அன்று மாலை திவ்யா காலேஜ் முடிந்து வர... லட்சுமி திவ்யாவிடம் அவளுடைய அம்மா சித்ரா அவளுக்கு ஹேர்கட் பண்ணிவிட்டு காது குத்த ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டை வர சொல்லி இருப்பதாக சொல்லி விட்டு அவளை போய் சீக்கிரம் ப்ரெஷ்-அப் ஆகுமாறு சொல்லி விட்டு சென்றாள். திவ்யாவும் தனக்கு காது குத்த போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் ரெடியானாள்.

சில நிமிடங்களில் ராமு வர, லட்சுமி அவன் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள... லட்சுமி சொன்ன அடையாளங்களை வைத்து ராமு மாடியில் இருந்த சித்ராவின் வீட்டிற்கு சென்றான்.

என்னங்க... வீட்ல யாரு... நான் ஸ்டைலிஸ்ட்... இங்க ஒரு பொண்ணுக்கு காது குத்தணும்னு சொல்லி இருக்கீங்க...

திவ்யா வெளியில் வந்து... ஆமா... எனக்கு தான்... என் அம்மா தான் சொல்லி இருக்காங்க... வாங்க உட்காருங்க... இதோ வந்துடறேன்... என்ற திவ்யா உள் அறைக்குள் சென்றாள். ப்ரெஷ் அப் ஆகிவிட்டு வந்த திவ்யா, ஜடை பின்னி இருந்த தன் முடியை அவிழ்த்து கொண்டே வர, ராமு அவளின் அடர்த்தியான முடியை பார்த்து வியந்தான். 

ராமு ஒரு சேரை எடுத்து போட்டு அதில் திவ்யாவை உட்கார சொல்லி விட்டு, அவள் முடியை கோதி விட்டு, அதன் அடர்த்தியை சோதித்தான். ராமு திவ்யாவின் நீளமான முடியை தன் இரு கைகளால் ஆசையாக தடவினான். இந்த மொத்த முடியையும் மொட்டை அடித்து, தனக்கு மொத்தமாக கிடைத்தால் நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று நினைத்தான்.



3 comments: