Tuesday 3 January 2023

மேரியின் மொட்டை

"என்ன..திடீர் பயணம்?" சூட்கேஸைக் கட்டிக்கொண்டு பயணத்திற்குத் தயாராக இருந்த தன் தோழி கனகாவைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டாள் மேரி.

"அது...சாயங்காலம் அப்பா கால் செய்து கூப்பிட்டார்.. நாளைக்கு எல்லாரும் குடும்பமா திருப்பதிக்கு போறோம்..உடனே கிளம்பி வீட்டுக்கு வா என்றாள் சினேகா.



மேரி சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். இருவரும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

ஓ.கே..ஹேப்பி ஜர்னி என்று கனகாவை மேரி வழியனுப்ப,  கனகாவும்  “தேங்க்யூ... குட் நைட் என்றாள்.  பின் கனகா ஆட்டோவில் ஏறினாள்..



ஐந்து நாட்கள் கழித்து அறைக்கு வந்த  கனகாவை பார்த்த மேரி ஆச்சர்யத்தில் கத்தினாள். இடுப்பு வரை ஜடை போட்டுக்கொண்டு போன  கனகா, இப்போது தன் தலையை மிருதுவாக ஷேவ் செய்து மொட்டை அடித்துக் கொண்டு வந்து இருந்தாள்.

"என்னடி இது ஆச்சரியம்" என்று பார்த்தபடி கேட்டாள் மேரி.

அதெல்லாம் ஒண்ணுமில்ல... அப்பா எங்க குடும்பத்தில்  எல்லாரையும் மொட்டை அடிக்க சொன்னாங்க.. அதனால மறுக்க முடியாம மொட்டை அடிச்சிட்டேன்..”  கனகா தன்  கையை மொட்டையடித்த தலையில் தடவிக்கொண்டே சொன்னாள்.

"இவ்வளவு நீளமான முடியை மொட்டை அடித்ததில் உனக்கு வருத்தமா இல்லையா.." மேரி ஆர்வமாக கேட்டாள்..

எதுக்கு வருத்தம்?இதுல என்ன தொல்லை? முடி எப்படியும் திரும்ப வளரத்தான் போகுது... இதுக்கு ஏன் அவங்ககிட்ட வம்பு பேசி கஷ்டப்படுத்தனும்...” என்று பணிவுடன் கூறினாள் கனகா.

"ஆனா, நீங்க பெரிய தைரியசாலி தான் கனகா." என்றாள் மேரி.



அன்று இரவு  இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கனகாவிடம் மேரி பல கேள்விகள் கேட்டாள்...

“ஏன் இப்படி மொட்டை அடிக்கற... அதனால உனக்கு என்ன லாபம்...?”  "உன் தலையில் கத்தியை வைத்து உன் முடியை மொட்டை அடிக்கும் போது என்ன தோணுச்சு..." என்று கனகாவிடம் பல கேள்விகள் கேட்டாள்... அனைத்திற்கும் பொறுமையாக பதில் சொன்னாள் கனகா.

 

கனகா "அது ஒரு விவரிக்க முடியாத உணர்வு... எல்லா பாரமும் நம் தலையில் இருந்து இறங்கியது போல் இருந்தது...  எனக்கு மொட்டை அடிக்கும் போது ரொம்பவும் சுகமாக இருந்தது... ” என்றாள் கனகா. தன்னுடைய நீண்ட முடியை மொட்டை அடித்து இருந்தாலும் கனகா மிகவும் அழகாக இருக்கிறாள். ஏனென்றால் அவள் வட்டமான மொழு மொழு முகத்துடன் இருக்கிறாள்...

 

"எனக்கு உன்னுடைய மொட்டை தலையை பார்க்க பார்க்க, மீண்டும் தொட ஆசையாக இருக்கிறது" என்றாள் மேரி.

 

"அப்புறம் எதுக்கு தாமதம்..உடனே திருப்பதிக்கு கிளம்பு.." என்றாள் கனகா.

 

அங்கே எப்படி நான் தனியாக போக முடியும்? அதெல்லாம் முடியாது என்றாள் மேரி ஏமாற்றத்துடன்...

 

உண்மைதான்... சரி விடு...” என்றாள் சினேகா.

 

"பரவாயில்லை..." என்றாள் மேரி.

 

பல நாட்களுக்கு பிறகு, மேரி மீண்டும் தன்னுடைய முடியை மொட்டை அடிக்க விரும்புவதாகச் கனகாவிடம் சொன்னாள்.

 

"நிஜமாக தான் சொல்றியா?" - கனகா.

 

" ஆமாம் கனகா... நான் நிஜமாலுமே என் முடியை மொட்டை அடிக்க விரும்புகிறேன்" - மேரி.

 

"சரி விடு... பார்த்துக்கலாம்... ஏதாவது செய்வோம்"- கனகா.

 

ஒரு நாள் கனகா "உனக்கு மொட்டை அடிக்கட்டுமா.." என்று மேரியிடம் கேட்க... அவள் புரியாமல் "என்ன..."  என்று  மேரி ஆர்வமாக கேட்டாள்...



 

 "நான் உனக்கு மொட்டை அடிக்கட்டுமா.."என்று மறுபடியும் கேட்டாள் கனகா.

 

மேரிக்கு ஆச்சரியமாக இருந்தது..'நீயா... எனக்கு மொட்டை அடிக்க போறியா" என்றாள்.

 

"ஆமாம்...சத்தியமா சொல்லணும்னா எனக்கு மொட்டை பிடிக்கும்... மொட்டை அடிச்சு விடவும் பிடிக்கும்..." என்று சொன்ன கனகாவை மேரி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

 

"உன்னால ஷேவ் பண்ண முடியுமா..." என்று கேட்டாள் மேரி.

 

அட... நான் யூடியூப்ல நிறைய பார்த்திருக்கேன்... அவங்களைப் பார்க்கும்போது சொல்ல முடியாத ஒரு சந்தோஷம்... அன்னிக்கு திருப்பதியில் கூட மொட்டை அடிக்கிற ஆட்களைப் பார்த்து, அவங்க எப்படி ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிக்கிறாங்கனு பார்த்து ஓரளவு கத்துக்கிட்டேன்" என்றாள் கனகா.

 

பின்னர், கனகா யூடியூப்பை திறந்து, திருப்பதியில் பெண் நாவிதர்கள் பெண்களுக்கு மொட்டை அடிக்கும் காட்சிகளை மேரிக்கு காட்டினாள்.

 

வரும் ஞாயிறு கனகா மேரிக்கு மொட்டையடிக்க முடிவு செய்கிறாள்... இருவரும் சலூன் உபகரணங்கள் விற்கும் கடைக்கு சென்று சவர கத்தியை வாங்குகிறார்கள்...

 

அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை...

மேரி வெள்ளை நைட்டி அணிந்திருக்கிறாள்.. .நேரம் காலை பத்து மணி... மேரி கொஞ்சம் பதட்டமாக இருக்கிறாள். தன்னுடைய அடர்த்தியான முடியை  திருப்பதி கல்யாண கட்டாவில்  கட்டுவது போல இருபுறமும் முடியை கட்டிக்கொண்டு நடு அறையில் அமர்ந்திருக்கிறாள்....

 

கனகா சவர கத்தியில் அரை அரை பிளேடை உடைத்து சொருகுகிறாள். கனகா தண்ணீர் கொண்டு வந்து தலையை மேரியின் முடியில் அள்ளி தெளித்து நன்றாக மசாஜ் செய்ய, அவளுடைய தலைமுடி நன்றாக நனைந்தது....

 

மேரி கனகா முன் குனிந்து நின்றாள்... கனகா சவர கத்தியை மேரியின்  தலையில் வைத்தாள்...



 

சர்...சர்...சர்...” என்று கனகா மிகவும் அனுபவம் வாய்ந்தவள் போலமேரியின் தலையில்  கத்தியை நகர்த்திக் கொண்டிருந்தாள்...மேரியின் தலைமுடி சிறைக்கப்பட்டு அவளுடைய காலில் விழுந்து கிடக்க... கூரிய கத்தியின் ஸ்பரிசம் மேரிக்கு ஒரு கிளுகிளுப்பான உணர்வை கொடுத்தது. ... பத்து நிமிடத்தில் தலையை முழுவதுமாக மொட்டை அடித்து  மிருதுவாக்கினாள் கனகா.

 



1 comment:

  1. கதை சுவாரசியமா போடுங்க ப்ரோ சூப்பரா போடுங்க

    ReplyDelete