Saturday 21 January 2023

பிரக்யாவின் நீண்ட நாள் கனவு - இரண்டாம் பாகம்

பிரக்யா வயது 23 நிலவு போன்ற போன்ற வட்டமான முகம், பொன் மேனியுடன் தோலும் பளபளக்கும். வில் போல வளைந்த புருவம், வட்ட சக்கரம் போன்ற கண்கள். 5 அடி 4 அங்குலம். அவளுடைய அழகுக்குக் குறைவிருக்கக் கூடாது என்பதற்காக, கருப்பாகவும் அடர்த்தியாகவும், அழகான முடியைக் கொடுத்திருக்கிறான் கடவுள். அதற்கு ஏற்றாற்போல் பிரக்யாவும் அவளுடைய அழகான கூந்தலைப் பார்த்துக் கொள்கிறாள். அவளது அழகான கூந்தல் அங்கும் இங்கும் ஆடும் ஒற்றைக் கரு நாகப்பாம்பு போல.



கோடை விடுமுறைக்கு பிரக்யா மும்பையில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றாள். பிரக்யாவிற்கு பல நாட்களாக தோலழற்சி உள்ளது. ஒரு மாதமாக பூட்டி இருந்த தன்னுடைய அறையை சுத்தம்  செய்து விட்டு, தன்னுடைய துணிமணிகளையும் புத்தகங்களையும் பேக் செய்ய பிரக்யாவிற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது. அன்று மாலை,  வெளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததால் பிரக்யாவுக்கு பசி எடுக்கவில்லை.  


கொஞ்ச நேரம் டி.வி. முன்னாடியே காலத்தைக் கடத்தினாள். டிவி பார்த்துவிட்டு தலைமுடியை அவிழ்த்தாள். பிரக்யாவின் முடி  "சிவன் தலையில் இருந்து கங்கை விழுவது போல" கீழே விழுந்தது. தலையை ஆட்டினாள்.

பல நாட்களாக தலைமுடிக்கு ஷாம்பூ  போடாததால் இன்று குளிக்க ரெடியானாள் பிரக்யா. பிரக்யா தன் அடர்த்தியான நாகப்பாம்பு போன்ற கூந்தலுக்கு  ஷாம்பூ போட்டு மசாஜ் செய்ய ஆரம்பித்தாள். குளித்து முடிந்ததும் தலை முழுதும் சந்தோசமாகவும் சுகமாகவும் இருக்கிறது, குளித்துவிட்டு தலையை டவலால் போர்த்திக்கொண்டு அவள் அறையில் கண்ணாடி முன் நின்று தலையில் சுற்றியிருந்த டவலை அவிழ்க்க, அது ஈரமாக இருந்தது. அந்த அழகிய தலைமுடி டவலில் இருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த டவலால் ஈரமாக இருந்த என் முடியை சிறிது நேரம் காய வைத்தேன். இன்னும் முடி முழுவதுமாக உலரவில்லை. .. பல நாட்களாக என் நெருங்கிய நண்பரை சந்திக்கவில்லையே என்று என் அலமாரியில் நான் ஒளித்து வைத்து இருந்த ஒரு சிறிய பையை எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான "ஆயுதம்" அதில் இருந்ததால் அது எனக்கு மிகவும் ஸ்பெஷல் பையாக இருந்தது. அந்த பையில் இருந்து ஒரு கருப்பு பையை எடுத்து உலகம் அறியாத என் அன்பு நண்பரை வெளியே எடுத்தேன். அதை பிடித்ததும் என்னுள் தெரியாத மந்திரம் ஒன்று எனக்குள் நிரம்ப ஆரம்பித்தது. இத்தனை நாட்கள் என் நண்பரை பார்க்காமல் இருந்ததால், ஏதோ ஒன்று காணாமல் போனதாக உணர்ந்தேன்.



அந்த பையில் இருந்து இன்னொரு சிறிய கவரை எடுத்தேன். அதிலிருந்து ஒரு சிறிய பாக்கெட்டை எடுத்தேன். அதுதான் அந்த பிளேடு பாக்கெட். அதிலிருந்து ஒரு புதிய பிளேட்டைக் கையில் எடுத்து மிகக் கவனமாகப் பார்த்தேன். பக்கத்து டேபிளில் இருந்த சவர கத்தியை பார்த்தேன். முழு பிளேடை உடைத்து பாதி என் கையில், இன்னொரு பாதியை பாதுகாப்பாக வைத்தேன்.



பாதி பிளேடை கவருக்குள்ளே வைத்து விட்டு, பாதி பிளேடை வலது கையில் எடுத்து இடது கையில் சவர கத்தியில் போட்டேன். இப்போது எனக்கு எதிரே இருந்த கண்ணாடியில் ஒரு அழகான பெண், அடர்த்தியான கருப்பு முடியுடன் ஒரு கையில் சவர கத்தியும் மறு கையில் பாதி பிளேட்டையும் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

பிரக்யாவிற்கு இதெல்லாம் எங்கிருந்து வந்தது என்று நினைக்கிறீர்கள்,  ஒரு நாள் அழகுசாதனப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றபோது, சவர கத்தி ஒன்று கண்ணில் பட்டது. ... உடனே என் இதயம் துடித்தது. அதை எடுத்து பார்த்தேன். பார்த்த உடனேயே வாங்கிவிட்டேன். அதனால் அந்த சவர கத்தி என்னுடைய நண்பராக பல நாட்களாக என்னுடன் இருக்கிறது. வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் ஜாலியாக தலையை மொட்டையடிப்பது போல் நடிப்பேன். அப்படி செய்யும் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். சமீபகாலமாக அந்த பிளேடுகளும் என் இடத்திற்கு வந்துவிட்டன.

சவர கத்தி வாங்கினேன், அதில் பிளேடு மட்டும் இதுவரை போட்டதில்லை. ஏன் தெரியுமா. வீடியோ பார்க்கும் போது தலையில் வைத்து இருக்கும் போது தற்செயலாக  ஆர்வம் தாங்க முடியாமல் தலையை ஆடிவிட்டு, அதனால் என் முடி போய் விட்டால் என்ன ஆவது  என்று நினைத்து இத்தனை நாளாக அந்த பயத்துல பிளேடு சவரகத்தியில் போட்டதே இல்லை.

ஆனால் இன்று அந்த பிளேடு பாக்கெட்டை பார்த்ததும் மனசு தாளாமல் போனது. இது தான் சரியான சூழ்நிலை போல. உடனே கையில் இருந்த பாதி பிளேடை எடுத்து மெதுவாக சவரகத்தியில் கவனமாக செருகினேன். கண்ணாடியில் பளபளக்கும் கத்தி என் கையில் பளிச்சிட்டது. அது என்னை மொட்டை அடிக்க துடித்துக் கொண்டிருந்தது. அந்த பளபளக்கும் சவரகத்தி இப்போது என் கையில் தோட்டாக்கள் ஏற்றப்பட்ட துப்பாக்கி போன்ற ஒரு "ஆயுதம்" ஆக இருந்தது.

நான் இதுவரை கத்தியை இவ்வளவு தைரியமாக பயன்படுத்தியதில்லை. பிளேடு போட்டவுடன் ஒரு பக்கம் ஏதோ தெரியாத சிறு பயமும் மறுபக்கம் "ஷ்ரிக் ஷ்ரிக்" என்ற சத்தமும் எனக்கு கேட்க தொடங்கியது. அதை தலையில் வைக்கும் தைரியம் எனக்கு இல்லை, உடனே லேப்டாப்பை ஆன் செய்தேன்... கையில் இருந்த அந்த அழகான ஆயுதத்தை டேபிளில் வைத்து விட்டு என் படுக்கையில் அமர்ந்தேன். முடியின் ஈரம் இன்னும் வறண்டு போகவில்லை, நுனியில் இருந்து நீர்த்துளிகள் மெல்ல சொட்டிக் கொண்டு இருந்தது.

லேப்டாப்பில் எனக்குப் பிடிச்ச ஒரு ஃபோல்டர் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து இருக்கிறேன். அதில் நம் எல்லாருக்கும் பிடிக்கும் மொட்டை அடிக்கும் பெண்களின் வீடியோக்கள் இருக்கிறது. நான் எப்போதும் என் வயது பெண்களின் மொட்டை வீடியோக்களை விரும்பி பார்ப்பேன். இன்று நான் இதுவரை பார்த்திராத ஒரு வீடியோவை திறக்கிறேன். .

அது என்னுடன் வேலை செய்யும் ஸ்ரீனிவாஸ் தன் மனைவியுடன்  திருமலைக்கு போன ஜோடி.... அதில் உள்ள வீடியோவை பார்க்க முடிவு செய்து திறந்து பார்க்க ஆரம்பித்தேன்.... இந்த சவரக் கத்தியை வாங்கியதில் இருந்து ஒரு புது பழக்கம் எனக்கு உருவாகியுள்ளது. கத்தியைக் கையில் எடுத்து,  வீடியோவில் நடப்பது போல் என் தலையில் சும்மாவே நகர்த்திவிட்டு, நான் என்னை ஒரு பார்பராக நினைத்து கொண்டு, என் தலையில் சவரக் கத்தியை வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்வேன். நான் விளையாட்டாக இதை செய்வேன். பிளேடு இல்லாமல் என் தலையில் சவரக்  கத்தியை வைத்து மொட்டை அடிப்பது போல  விளையாடுவேன்.

என் தலைமுடி இவ்வளவு நீளமாக இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அதை பிடித்து விளையாடினால் பரவாயில்லை... அந்த முடியை கவனமாக படுக்கையில் ஓரமாக வைத்துவிட்டு... மறுபடியும்  வீடியோவை ப்ளே செய்தேன்.... முடிதிருத்துபவனின் கையில் இருந்த பிளேடு மெதுவாக நகர்ந்து தலையில் இருந்த முடி மொட்டை அடிக்கபட்டது.


சவர கத்தி வைத்து அவள் தலையின் பின்பகுதியை ஷேவிங் செய்கிறாள்.. அவள் தலையில் உள்ள முடிகள் தலையிலிருந்து பிரிகிறது. இந்த வீடியோ முழுக்க ஸ்லோ மோஷனில் எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இப்படி ஸ்லோ மோஷனில் பார்த்தால் யாராலும் மொட்டையடிக்காமல் இருக்க முடியாது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உடனடியாக தானும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த ஸ்லோ மோஷனுடன் சேர்ந்து சவர கத்தி ஷேவிங் சேயும் போது வரும் சத்தம் பிரக்யாவின் நரம்புகளை மட்டுமல்ல, மொட்டை வீடியோ பார்க்கும் அனைவரையும் அசைக்கிறது....

"ஷ்ரிக் ஷ்ரிக் ஷ்ரிக் ஷ்ரிக்" என்ற சத்தம் கேட்டு பிரக்யா தன்னை அறியாத மயக்கத்தில் இருப்பது போல் உணர்கிறாள். ஸ்ரீனிவாஸும் அதே உணர்வில் தன் மனைவி மொட்டை அடிப்பதை   பார்க்கும்போது. அவள் தலையின் பின்புறம் மெதுவாக கருப்பு நிறமாக இருந்த முடிகள் விலகி அதிலிருந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. தலையில் இருந்து தலைமுடி பிரிந்து பின்னல் தொங்குகிறது.. அவள் கழுத்தில் சில முடிகள் விழுகின்றன....

ஸ்ரீனிவாஸ் அந்த தொங்கும் முடியை ஜூம் செய்து காட்டுகிறான். அதுவரை அவளது இடுப்பு வளர்ந்து இருந்த   தலைமுடி இப்போது உயிர் இல்லாதது போல தொங்கிக் கொண்டிருக்கிறது. அவளது தலை ஒரு பக்கம் முடி மிகவும் அடர்த்தியாகவும், பாதி மொட்டையடிக்கப்பட்ட தலையையும் பார்த்த பிரக்யா அறியாமல் அவள் கையில் சவர கத்தியை  தேட ஆரம்பித்தாள்.

ஏன் என்று உங்களுக்கும் தெரியும். நம் எல்லோருக்கும் பரிச்சயமான "சவர கத்தி" க்காக... மிக மெதுவாக அவள் கை சவர கத்தியை பிடித்தது... அதை மேலே தூக்கி மீண்டும் தலையில் சவர கத்தியை வைத்து விளையாடஆரம்பித்தாள்.... இம்முறை தன் வலது கையை மேலே தூக்கி, லேசாக எடுத்து தலையின் நடுப் பகுதியில் வைத்து முன்னோக்கி இழுக்க .ஷ்ரிக் ஷ்ரிக் ஷ்ரிக்” என்று சத்தம் கேட்டது. பிரக்யா தலையை குனிந்து கொண்டிருந்ததால், அந்த சத்தம் கேட்ட அடுத்த வினாடியில் அவளது தலையில் இருந்து ஒரு பெரிய முடி கொத்தாக பிரிந்து மிக மெதுவாக அவள் காலருகே கீழே விழுந்தது. ஸ்லோமோஷனில் அந்த முடி கொத்து  அவள் நெற்றியில் இருந்து அவள் மூக்கை தொட்டு, பின் உதடுகளை முத்தமிட்டு அவள் படுக்கை தாண்டி, முடி கொஞ்சம் கொஞ்சமாக பிரக்யாவின் காலருகே விழுந்தது. அவள் தலையில் கூச ஆரம்பித்தது. வயிற்றில் வயிற்றில் ஏதோ ஒன்று அசைவது போல் இருந்தது...


அந்த உணர்வை அனுபவித்தவர்களுக்கு அது புரியும்.  நீங்களும் அப்படி உணர்ந்தால் சொல்லுங்கள்.... அதுவரை பரவசத்தில் மூழ்கி இருந்த பிரக்யா, முடி கொத்தாக விழுந்ததும்  திடீரென்று கனவில் இருந்து மீண்டு வந்து, தரையில் இருந்த தலைமுடியையும், மீண்டும் கைக்கு வந்த சவர கத்தியையும் பார்த்தாள்.

அவள் ரூமில் ஓடிக் கொண்டிருந்த ஏசி அவள் தலையை குளிர்விக்கிறது. பிரக்யாவின் கொஞ்சமாக ஷேவ் செய்யப்பட்ட இடம் கண்ணாடியில் தெரிய அவள் முதுகில் குளிர் நடுங்க ஆரம்பித்தது போல் தோன்றியது. அவள் உடலில் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது... தனக்கு நடப்பது கனவா? நிஜமா? அது நிஜமாலுமே நடக்கிறதா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை.

பிரக்யா இனிமேலும் தாமதிக்காமல் சவர கத்தியை ஏற்கனவே ஷேவ் செய்த இடத்தில் வைத்தாள்.  அவள் இதயம் வேகமாக துடிக்க, அவளுக்கு ஒரு பக்கம் பயம் இருந்தாலும், தான் இவ்வளவு சீக்கிரம் தன் தலையை மொட்டை அடிப்பாள் என்று நினைக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் இது போல அவள் கனவில் பல தடவைகள் இருந்தாள். அவள் படுக்கையறையின் கண்ணாடி முன் அமர்ந்து, கையில் சவர கத்தியுடன் பாதி மொட்ட அடித்திருப்பதைக் கண்டாள்.

மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சவர கத்தியை தன் தலைமுடிக்கு அருகில் வைத்துக்கொண்டு பெரிய கண்ணாடி முன் நின்றாள்.  கையில் சற்றே மொட்டையடித்த ரேஸருடன் பெரிய கண்ணாடி முன் பிரக்யா நிற்க, அவளுடைய மனக்கண்ணில்  அந்த ஃபோஸில் தான் ஏதோ ஒரு சிப்பாய் துப்பாக்கியுடன் போருக்குப் போன மாதிரி அவளுக்கு தோன்ற, அதன் பிறகு திரும்பிப் போக என்ன இருக்கிறது, மீதியையும் முடித்துவிடலாம் என்று நினைத்தாள்.

பிறகு கண்ணாடி முன் ஒரு சிறிய ஸ்டூலில் அமர்ந்தாள். தலைமுடியை எல்லாப் பக்கங்களிலும் சமமாகப் போட்டுவிட்டு, இடது கையால் நெற்றியில் இருந்த முடியை விலக்கினாள். பின் சவர கத்தியை வைத்து ,மெதுவாக தான் பார்த்த வீடியோக்களை மனதில் கொண்டு வந்து தன் முடியை கொஞ்சம் கொஞ்சமாக மொட்டை அடிக்க தொடங்கினாள்.


அப்படியே இடது கையில் வெட்டப்பட்டு இருந்த முடியை எடுத்து அதை எடுத்து கீழே எறிந்தாள். முடிகள் ஸ்டூலைச் சுற்றிக் கிடந்தது. க்ளீன் ஷேவ் ஆனவுடனே அந்தக் கருங்காடு போன்ற கூந்தல் ஸ்டூலைச் சுற்றிக் விழுந்து  கிடந்தது. உடனே தன் அழகான சுத்தமான பளபளப்பான மொட்டையடித்த தலையை இரு கைகளாலும் தட்டினாள். அதன் மீது  காதலில் விழுந்தாள்.

அப்படியே தன் அழகான கூந்தலை எவ்வளவு நேரம் தடவினாள் என்று தெரியவில்லை, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அந்த உணர்வுக்கு அடிமையாகத்தான் ஆக வேண்டும்... அப்படித்தான் பிரக்யாவிற்கும். அதனால் பிரக்யா பரவசத்துடன், தன் மொட்டை தலையை தடவிக் கொண்டு இருந்தாள்.

இது ஒரு வித்தியாசமான முயற்சி. உங்களுக்கு புரிகிறதா என்று தெரியவில்லை. பிடித்திருந்தால் பாராட்டுங்கள், பிடிக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் !



1 comment:

  1. அற்புதமான கதை நண்பா நீங்கள் உங்களின் எழுத்துக்கள் மூலமாக சொல்லியிருக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும் நான் உணரும் பொழுது எனக்கு புல்லரிக்கிறது நீங்கள் அவ்வளவு அழகாக உங்களின் எழுத்துக்கள் மூலமாக எனது உணர்வை பிரதிபலிப்பது போன்று எனக்கு தோன்றுகிறது மொத்தத்தில் உங்களின் கதை அற்புதம் அற்புதம் அற்புதம் மிக மிக அற்புதமாக உள்ளது

    ReplyDelete