Saturday 28 January 2023

ரமா - முதலாம் பாகம்

ரமாவின் அறை தோழிகள் அனைவரும் விடுமுறைக்கு வீட்டிற்குச் கிளம்பி கொண்டு இருக்க, அந்த அறையில் ரமா மட்டும் தனியாக இருந்தாள். அவளும் நம்மை போல மொட்டை விரும்பி ரமா அவளுடைய சிறுவயதில் இருந்தே மொட்டை வீடியோக்களை விரும்பி பார்ப்பாள்.  அப்படியொரு வாய்ப்பு நம்மை போன்றவர்களுக்கு வந்தால் அது ஒரு திருவிழாதான். ரமா மட்டும் தனியாக இருக்கும் போது, அவளுடைய முடியை  ஷேவ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி அவளுக்கு வருவது ஏன்? அவளுடைய இடுப்பளவு முடியை எப்படி, எங்கு ஷேவ் செய்வது என்று ரமாவுக்கு குழப்பமாக இருந்தது.



இந்த ரூமின் கதவு தட்டப்பட லேப்டாப்பை வைத்துவிட்டு,  இந்த நேரத்தில், யாரென்று யோசித்தபடி கதவைத் திறந்தாள். வெளியே ஒரு பெண் மொட்டை தலையுடன் பட்டு  சேலையில் ஒரு பெண் நின்று கொண்டு இருப்பதை பார்த்து ரமா அதிர்ச்சியடைந்தாள்.


ரமா அதிர்ச்சியில் அவளுடைய மொட்டை தலையை பார்த்து கொண்டிருந்தாள். அவள் வாய் திறப்பதற்குள், "என்ன ரமா, என்னை அப்படிப் பார்க்கிற?" என்று அந்த பெண் கேட்க, ரமா அதிர்ச்சியில் இருந்து மீண்டாள். அந்த பெண் வேறு யாரும் இல்லை. அவளுடைய கல்லூரி தோழி கீதா தான்.  கீதா அருகில் உள்ள இன்னொரு ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள்.

“ஏன் எதுவும் பேசாமல் இப்படி நிற்கிறாய்?” என்று கீதா ரமாவை குனிந்து பார்த்தாள்.

இல்லை... உன்னை மொட்டை தலையில் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிடுச்சு... சரி சொல்லு... என்ன போன் கூட பண்ணாம இப்படி வந்து நிக்கிற...

நான் உனக்கு ஒரு மணி நேரமாக கால் பண்ணி முயற்சி செய்தும் லைன்  கிடைக்கவில்லை. அதனால் உன்னை நேராக பார்த்துவிடலாம்னு வந்தேன்...

பின் ரமா கீதாவை ரூமுக்குள் அழைத்து விட்டு தொடர்ந்து பேசினாள்.

சரி... என்ன தீடிர்னு மொட்டை...

நானும் என் குடும்பமும்  கீதாவும் திருப்பதி சென்றோம். என்று கீதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்ட ரமா...

அப்போ அங்கே மொட்டை அடித்தாயா கீதா?"

"ஆமாம், ரமா. நான் இந்த மொட்டையில் எப்படி இருக்கிறேன்?" என்று வெட்கத்துடன் கேட்டாள் கீதா.

அதற்கு ரமா, "ரொம்ப அழகா இருக்க... உன் மொட்டை தலை மொழுமொழுன்னு சூப்பரா இருக்கு..." என்று சொல்லிக் கொண்டே, டீ எடுக்க கிச்சனுக்குள் சென்றாள்.



இதற்கிடையில் கீதா ரமாவின்  லேப்டாப் முன் அமர்ந்து அதிலிருந்த மொட்டை வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருக்க... ரமா டீயுடன் வரும்போது இருவரும் லேப்டாப்பை வினோதமாகப் பார்க்கிறார்கள். ரமா நாக்கைக் கடித்தாள். ரமா மனதிற்குள் “ஐயோ.. இவளிடம் மாட்டிக் கொண்டேனே? என்று எண்ணினாள்.

இந்த ஷேவிங் வீடியோக்கள் எதற்கு பார்க்கிறாய்? என்று கீதா ரமாவை பார்த்து கேட்க...

ரமா எதையாவது சொல்லி இப்போது சமாளிக்க வேண்டும் என்று நினைத்தாள்.


அது வந்து கீதா, இப்போ சில மாதங்களா என்னுடைய முடி நிறைய கொட்டுது...  நான் அதற்காக வைத்தியம் எதுவும் முயற்சி செய்யவில்லை. என் தோழியின் அம்மா தான் என் முடியை  சுத்தமாக ஷேவ் செய்யச் சொன்னாள். அப்படி மொட்டை அடித்தால் முடி உதிர்வது குறையும், முடி கூட அடர்த்தியாக வளரும்" என்று சொன்னாள்.

ஆனால் நான் அவள் சொன்னதை நம்பவில்லை. என்னை பற்றி உனக்கு தான் தெரியுமே.நான் யார் சொல்வதையும் நம்பமாட்டேன்.  கூகுளில் தேடிப்பார்ப்பேன். அதனால் தான் நான் தேடியதும் இந்த மாதிரி மொட்டை  வீடியோக்கள் வந்தது. என்று சொல்லி சமாளித்தாள்.

ஆனால் உண்மையில், இருவருக்கும் ஷேவிங் செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுடைய விருப்பங்களை மறைத்துக் கொண்டு இருந்தனர்.

ரமாவின் பேச்சைக் கேட்ட கீதா, "எனக்கும் மொட்டை அடிக்கும் யோசனை இல்லை. திருப்பதி போகும் போது, என் அம்மா சொன்னதும் நானும் மொட்டை அடித்து கொண்டேன். எனக்கும் முடி உதிரும் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன் ரமா. அதனால் தான் கல்யாணகட்டா போனதும் மொட்டை அடிக்க முடிவு செய்தேன்" என்று சொன்னாள்.

ரமா அவள் சொல்வதை கேட்டு விட்டு... அப்புறம் தரிசனம் எல்லாம் நல்லா இருந்ததா? என்று கேட்டாள்.

கீதாவும் "ஆமாம், ரமா.. நான்  நினைத்ததை விட முன்னதாகவே தரிசனம் முடிந்தது. தரிசனம் முடிந்ததும் எனக்கு களைப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் நேரம் ரூமில் ரெஸ்ட் எடுத்து விட்டு கிளம்பி வந்தோம் என்றாள்.

ரமா கொஞ்சம் தயக்கத்துடன் கீதாவின் மொட்டை தலையை என் கையால் தொட்டு தடவி பார்த்தாள். 


என்ன ரமா... எப்படி இருக்கிறது என் மொட்டை...  மொட்டை தலையை தடவுவது போன்ற இன்பம் வேறு எதுவும் இல்லை. சுகமாக இருக்கிறதா? என்று கீதா தன் கண்களை மூடி சுகத்தில் மூழ்கினாள்.

ஆனால் ரமாவின் மனம் தன்னுடைய அவ்வளவு நீளமான முடியை மொட்டையடிப்பதை ஏற்கவில்லை. மேலும், மொட்டை அடித்த பின் என் தலைமுடி இவ்வளவு நீளமாக வளர எவ்வளவு நாட்கள் ஆகும்? என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.

கீதா ரமாவின் முகம் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை பார்த்ததும்  "வாழ்த்துக்கள் ரமா" என்றாள்.



கீதா ஏன் வாழ்த்து சொன்னாள் என்று ரமாவிற்கு புரியவில்லை. "என்னை ஏன்  வாழ்த்துகிறாய்?" என்று கேள்விக் குறியுடன் கீதாவிடம் கேட்டாள் ரமா.

கீதா "உன் எதிர்கால மொட்டைக்கு. ஆனா, இப்போ நீ மொட்டை அடிக்காவிட்டால் முடியெல்லாம் உதிர்ந்து உன் அழகு போவது உறுதி... அதனால் பயப்படாமல் என்னை போல மொட்டை அடிச்சுக்கோ, உனக்கு "ஆல் தி பெஸ்ட்" என்றாள் கீதா.

ரமா உள்ளுக்குள் பயந்தாலும் கீதாவின் மொட்டையை மீண்டும் தொட வேண்டும் என்று உணர்ந்து கீதாவின் மொட்டை தலையில் கையை வைத்து தடவிக் கொண்டிருந்தாள். அப்போது ரமா  கண்களை மூடிக்கொண்டு தடவும் போது கீதாவின் தலையில் சிறு சிறு பிசிறுகள் இருப்பதை உணர்ந்தாள். கீதாவின் அடர்த்தியான முடியை ஷேவ் செய்வது சற்று கடினமானது. ரமா உடனே கண்களைத் திறந்து, "கீதா உன் தலை க்ளீன் ஷேவ் ஆகவில்லை. திருப்பதியில் சுத்தமாக ஷேவ் செய்யவில்லை என்றாள்.

கீதா "ஆமாம் ராமா. இந்த மொட்டைக்காக ஒன்றரை மணி நேரம் நான் கியூவில் நின்று இருக்கிறேன். ஆனால் அவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மொட்டை அடித்து அனுப்பி விடுவார்கள். அவ்வளவு அவசரத்தில் நான் சரியாகப் பார்க்கவில்லை. ஆனால் நான் ரூமுக்கு வந்து பார்த்தபோது, தலையில் இன்னும் முடிகள் இருப்பதையும், ஷேவ் கூட சீராக இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்றாள் கீதா.

மேலும் தொடர்ந்த கீதா "இனி இந்த பிசிறுகளை எப்படி ஷேவிங் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பார்லர்களுக்குப் போய் ஷேவிங் செய்வது எனக்கு தயக்கமாக இருக்கு... என்று சொன்னாள்.

ரமா கொஞ்சம் யோசித்துவிட்டு "சரி விடு கீதா... ஒரு ஐடியா இருக்கு... உன் மொட்டை தலையை இன்னும் அழகாக மொட்டை அடிக்கலாம் " என்று  சொன்னாள்.

கீதா உடனே "அது எப்படி?" ஆர்வமாக கேட்டாள்.

ரமா, "என் ரூம் மேட் ஒருத்தி பியூட்டி கோர்ஸ் படிக்கிற பொண்ணு. அவ கிட்ல ஒரு ரேசர் இருக்கு. அதை நான் வாங்கிட்டு வந்து உனக்கு மொட்டை அடிக்கிறேன். என்ன சொல்ற?" என்று கீதாவை கேட்டாள்.


கீதா யோசித்தாள். ரமாவும் கீதா என்ன சொல்ல போகிறாள் என்று அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறாள்.

கீதா மெதுவாக  "சரி... பண்ணலாம்... நீ அந்த சவரகத்தியை வாங்கிட்டு வா" என்றாள்.

கீதா சொன்ன அந்த வார்த்தை ரமாவின் மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு  மொட்டையடிக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்குமா என்று நினைத்து ஏங்கி இருக்கிறாள் ரமா. அந்த வாய்ப்பை ஏன் விட்டுவிட வேண்டும் என்று நினைத்தாள் ரமா. ஆனால் கீதாவுக்கோ மொட்டை அடிக்கும் வாய்ப்பு மறுபடியும் அவளுக்கு கிடைத்தாலும், மொட்டை அடித்தால் என்ன ஆகுமோ என்று மனதில் ஏதோ தெரியாத பயம்.




No comments:

Post a Comment