Wednesday 15 February 2023

ரஸியா பேகம் - முதலாம் பாகம்

நான் ராஜா. காதலித்து கல்யாணம் செய்து, அந்த திருமணமும் ஆறு மாத காலத்தில் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு, என் அண்ணன் வீட்டுக்கு வந்து விட்டேன். என் அண்ணன் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான். அவன் சென்னைக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிறது.

என் அண்ணன் சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறான். அவன் எங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. என் அம்மா அவனை கல்யாணம் பண்ணிக் கொள்ள சொல்லியும், அவன் கல்யாணம் பண்ணவில்லை. எங்கள் வீட்டிற்கு வருவதையும் நிறுத்தி விட்டான். ஆனால் அடிக்கடி என்னுடன் போனில் பேசிக் கொள்வான். என்னுடைய காதலும், திருமணமும் கூட அவனே முன் நின்று நடத்தினான்.

 

இப்பொழுது எனக்கு விவாகரத்து ஆனதும் அவனுக்கு தெரியும். எல்லாம் முடிந்து சென்னைக்கு வந்து சில நாட்கள் இருக்கலாம் என்று அண்ணன்  சொல்ல இப்போது அவன் வீட்டுக்கு வந்துவிட்டேன். அவன் ஆபிஸ் சென்று இருக்க, செக்யூரிட்டி வீட்டு சாவியை கொடுக்க, நான் வீட்டுக்கு வந்து ஹாலில் இருந்த சோபாவில் படுத்து ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தேன்.

நான் நல்ல தூக்கத்தில் இருக்கும் போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து கதவை திறக்க, அங்கே ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். நான் என் அண்ணனை எதிர்பார்க்க, ஒரு பெண் வந்து நிற்பதை பார்த்து குழம்பி நிற்க... 


என்ன ராஜா... எப்படி இருக்க... நான் ரஸியா... ரஸியா பேகம்... உன்னோட அண்ணி... சரி வழி விடு... என்று சொன்னவள் என்னை தள்ளிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். நான் எதுவும் பேசாமல் உள்ளே வர, அவள் நேராக பெட் ரூம் சென்று பேக்கை வைத்து விட்டு, ப்ரெஷ் ஆகி வெளியே வந்தாள்.
நான் ஒன்றும் புரியாமல் குழம்பி போய் இருக்க, அவள் என் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். 

என்ன ராஜா... உன் அண்ணன் என்னை பத்தி உங்க பேமிலில சொல்லி இருக்க மாட்டார்... எனக்கும் உன் அண்ணனுக்கும் நிக்கா முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது... அவன் எங்க மதத்துக்கு மாறி என்னை நிக்கா பண்ணிட்டான். இப்போ அவன் பேரு சம்சுதீன். எனக்கு உன் அண்ணன் ரெண்டாவது ஹஸ்பண்ட்... என்னோட எக்ஸ் இப்போ துபாய்ல ஷேக்குக்கு அடியாளா இருக்கான்... அங்க இருந்தே அவன் வீடியோ கால்ல தலாக் சொல்லி என்னை விட்டுட்டு போய்ட்டான்... 

அப்போதான் உன் அண்ணன் எனக்கு ஆறுதலா இருந்தான்... அப்படியே நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்க ஆரம்பிச்சு... என் மேல லவ் வந்து என்னை நிக்கா பண்ணிட்டான்... என்று அவர்களின் முழுக் கதையையும் சொல்லி முடித்தாள்.


அதற்கு பின் தான் என் அண்ணன் கல்யாணம் பண்ண மறுத்ததின் காரணம் புரிந்தது. அன்று இரவு வெகு நேரம் கழித்து தான் என் அண்ணன் வீட்டிற்கு வந்தான். வரும் போதே கொஞ்சம் ட்ரிங்க்ஸ் வாங்கி வர, அன்று இரவு இருவரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே அடித்து முடித்தோம். ரஸியா எங்களுக்கு சைட் டிஸ் ரெடி பண்ணிக் கொடுத்து விட்டு, தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் நான் வெகு நேரம் கழித்து  தூங்கி எழ, என் அண்ணன் ஆபிஸ் போய் இருக்க... ரஸியா பேகம் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாள். நான் எழுந்ததும் காபி கொடுக்க, நான் குடித்து விட்டு, குளித்து ப்ரெஷ் ஆகி வர, டிபன் ரெடி ஆகி இருந்தது. 

என்ன ராஜா... எங்கிட்ட பேசவே மாட்ற... என்னை உனக்கு பிடிக்கலயா... 

இல்ல... அப்படி இல்ல... 

அப்போ என்ன தயக்கம்... நான் வேற மதம்னா... 

ஆமா... நான் தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டேன்... அதனால எங்கம்மா என் அண்ணனுக்காவது சொந்தத்தில் கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு... அவன் என்னடான்னா இப்படி பண்ணி இருக்கான்...


ஸாரி ராஜா... எனக்கு உன் அண்ணனை ரொம்ப பிடிக்கும்... எனக்கும் ஒரு துணை வேணும்னு அவன் மனசை புரிஞ்சுகிட்டு... நான் அவனை லவ் பண்ண ஆரம்பிச்சேன்... நாங்க நிக்கா பண்ணனும்னா அவன் என் மதத்துக்கு மாற வேண்டிய கட்டாயம்... அதான் அப்படி பண்ண வேண்டியதா போச்சு... ஆனா அதுக்கு அப்புறம் நானும் அவனுக்காக நிறைய மாறிட்டேன்... 

என்ன மாறீட்டிங்க... புர்கா போடுறது இல்லையா... என்று கோபமாக நான் கத்தி கேட்க... ரஸியா கொஞ்சம் பயந்தாள். அவள் கண்ணில் கொஞ்சம் கண்ணீர் துளிகள் எட்டி பார்க்க... அவள் வேகமாக என்னை கையை பிடித்து அவளுடைய பெட் ரூமுக்கு கூட்டி சென்று பெட் ரூமை காட்ட... அங்கே ஒரு செல்பில் சாமி படங்களுக்கு பூ வைத்து, விளக்கேற்றி பூஜை செய்து இருக்க... அதற்கு கொஞ்சம் தள்ளி என் அப்பாவின் போட்டோவுக்கும் பூ வைத்து இருந்தது.

உன் அண்ணன் என் மதத்துக்கு மாறினான்... நான் அவனுக்காக இந்துவா மாறிட்டேன்... எங்களுக்குள்ள இப்போ எந்த மதமும் இல்ல... லவ் மட்டும் தான் இருக்கு... எங்களை புரிஞ்சுக்க என்று சொல்லி அழ... எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த சில நாட்கள் அமைதியாக போக... நான் ரஸியாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக பேச ஆரம்பித்தேன்.



அவள் என்னை விட மூன்று வயது பெரியவள் என்றாலும், அவளை நான் அண்ணி என்று கூப்பிடவில்லை. எனக்காக சில விஷயங்கள் பார்த்து பார்த்து செய்தாள். சென்னையில் வெளியில் சுற்ற... சினிமா பார்க்க பணம் தந்தாள். சில சமயம் அவளுடைய ஆக்டிவா பைக்கை எடுத்து போக அனுமதித்தாள்.

ஒரு நாள் ஒரு பாரில் இருந்து வெளியே வந்து பஸ் ஸ்டாப் நோக்கி நடந்து போய்க் கொண்டு இருக்க... ரஸியா என் அருகே வந்து பைக்கை நிறுத்தினாள். 

என்ன ராஜா... இங்க என்ன பண்ற...

இல்ல... சும்மா... 

என்ன சரக்கா...

ஆமா... லைட்டா... 

சரி சரி... வீட்டுக்கா...


ஆமா....

சரி வா... பின்னாடி உட்காரு... போகலாம்...

இல்ல... நீங்க போங்க... நான் பஸ்ல வர்றேன்...

ஹேய்... வா... சும்மா பந்தா பண்ணாத... போகும் போது கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்... உன்னை ஹெல்ப் பண்ண தான் கூப்பிடுறேன்... வா... 

நான் மறுக்க முடியாமல் பைக்கில் ஏறி உட்கார... ரஸியா வண்டியை கிளப்பினாள். ரஸியா பிங்க் கலர் டாப்ஸீம், ஒயிட் கலர் லெக்கின்ஸீம் அணிந்து இருக்க... அவளது நீளமான முடி பிங்க் கலர் டாப்ஸின் பேக்கிரவுண்டில் ஒரு கருப்பு அருவி போல... தலையில் இருந்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. ரஸியா எப்போதுமே புர்கா அணிவது இல்லை. 


அவளது அழகை அன்று தான் நான் கவனிக்க ஆரம்பித்தேன்... ஒரு சூப்பர் மார்கெட்டின் முன் அவள் வண்டியை நிறுத்தி விட்டு, பர்ஸேஸ் செய்ய... நான் அவளுக்கு உதவினேன்...பர்சேஸ் முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ரஸியா ட்ரஸ் சேஞ்ச் செய்ய அவள் ரூமுக்கு செல்ல, நான் வாங்கி வந்த பேக்கை வைத்து விட்டு, சோபாவில் உட்கார்ந்து டிவியை ஆன் செய்தேன்.



அப்போது தான் ரஸியா உள்ளிருந்து வீல் என்று கத்தினாள். நான் பதறி போய் ரூம் கதவை தள்ள, அது உள்ளே லாக் செய்து இருந்தது. நான் விடாமல் தம் கட்டி தள்ளி, கதவை தள்ளி திறந்து பார்க்க, அங்கே ரஸியா பேச்சு மூச்சின்றி தரையில் விழுந்து கிடந்தாள். 








1 comment: