Friday 14 April 2023

மாமியாருக்கு ஏத்த மருமகள்

அடேய்... என்னடா நீ... நான் உனக்கு எப்பேர்ப்பட்ட பொண்ணு பாக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்... நீ லவ் பண்றன்னு சொல்ற...

அம்மா... நீ மட்டும் அவளை பாரும்மா... அவளை உனக்கு ரொம்ப பிடிக்கும்...

எனக்கு பிடிக்கிறது இருக்கட்டும்... நம்ம பழக்க வழக்கம் எல்லாம் சொல்லி புரிய வைக்கணும்... அதுக்கு அவ ஒத்துக்கணும்...





அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் அம்மா... நீ முதல்ல அவளை பாரு...

அது முடியாதுடா... அவ எப்படி இருந்தாலும் முதல்ல நம்ம வழக்கபடி எல்லா சம்பிரதாயமும் பண்ண ஒத்துக்கணும்... அப்புறம் தான் நான் ஒத்துக்குவேன்...

சரிம்மா... நீ அவ கூட பேசு... இன்னிக்கு சாயந்தரம் டவுனுக்கு வர சொல்றேன்... அவகிட்ட நீயே பேசிக்கோ... அப்புறம் சொல்லு... பொண்ணு எப்படின்னு...




என்னடா... இவளா நீ காதலிக்கிற பொண்ணு... இவ்வளவு அழகா இருக்கா... உன்னை போய் விரும்பி இருக்கா...

அம்மா... என்னம்மா இப்படி சொல்ற...




Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream

சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா... ஆனா பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...

நான் சொன்னேன்ல அம்மா... அவளை பார்த்தா உனக்கும் பிடிக்கும்னு...






அதெல்லாம் சரிடா... இவ்ளோ அழகா இருக்க இவ எப்படிடா நம்ம சடங்குக்கு ஒத்துக்குவா... இவ சரின்னு சொன்னாலும் அவங்க குடும்பத்தில ஒத்துக்கணுமே...

அம்மா... அவங்க அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க... அவளோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாரு... அவளோட சித்தி இவளை கல்யாணம் பண்ணி கொடுத்தா போதும்னு நினைக்கிறாரு... 



பாவம்டா... அம்மா இல்லாத பொண்ணா... இனி அவளை நான் என் பொண்ணு மாதிரி பாத்துக்குறேன்... ஆனா என் கண்டிஷனுக்கு அவ ஒத்துக்கணும்...

சரிம்மா அவகிட்ட பேசு... ஆனா கொஞ்சம் பொறுமையா பேசும்மா... நம்ம குடும்ப பழக்க வழக்கம் எல்லாம் சொல்லி அப்புறம் கடைசியா நம்ம குல தெய்வ சடங்கை சொல்லு... என்ன சரியா...



நல்லா தாண்டா பிளான் பண்ணி இருக்க... சரி அப்படியே பண்ணிடலாம்...

அத்தை... நான் உங்க மகன் மேல உசிரையே வச்சு இருக்கேன்... என்னை உங்க மருமகளா நீங்க பெரிய மனசு பண்ணி ஏத்துக்கணும்... 

அதெல்லாம் சரிம்மா... அதுக்கு முன்னால நீ எங்க குடும்ப பழக்கமெல்லாம் தெரிஞ்சுக்கணும்...



சொல்லுங்க அத்தை... நான் என்ன செய்யணும்...

உன்னை எனக்கு பார்த்தவுடனே ரொம்ப பிடிச்சு போச்சு... நீ தான் என் மகனுக்கு ஏத்த பொண்ணு... ஆனா நீ உங்க கல்யாணத்துக்கு முன்னால எங்க குல தெய்வ கோவில்ல ரெண்டு பேரும் மொட்டை போட்டுக்கணும்... அடுத்த நாள் தான் அவன் உன் கழுத்துல தாலி கட்டணும்...



அதுக்கு என்னங்க அத்தை பண்ணிக்கலாம்... 

என்னடி சொல்ற... நிஜமா மொட்டை அடிச்சிக்குவியா... உன்னைவிட சுமாரான பொண்ணுக கூட மொட்டை அடிக்கணும்னா வேண்டாம்னு சொல்லிட்டாங்க...

அத்தை நான் உங்க மகனுக்காக உசிரையே கொடுப்பேன்... என்னோட மசிரை கொடுக்க மாட்டேனா... மொட்டை தானே அத்தை... நான் எத்தனை தடவை வேணாலும் போட்டுக்குறேன்...




ரொம்ப சந்தோஷம்டி கண்ணு... ஒரு தடவை மட்டும் எங்க குல சாமிக்காக உன் முடியை காணிக்கையா குடு... எனக்கு அது போதும்... அப்புறம் உனக்கு நான் அம்மாவா இருந்து என் பொண்ணு மாதிரி உன்னை பார்த்துக்குறேன்...

ரொம்ப நன்றி அத்தை... எனக்கும் உங்களை பார்த்தா என் அம்மாவை பாக்குற மாதிரியே இருக்கு...

என்னடா நடக்குது இங்க... ஒரு மாமியார் மருமகள்னா ஒரு சின்ன சண்டையாவது வேணாம்மா...?


No comments:

Post a Comment