Sunday 16 April 2023

மூன்று பெண்களின் மொட்டை - முதலாம் பாகம்

மாலை ஏழு மணி. டீ குடித்துக்கொண்டே பக்கத்து கடையில் இருந்த பார்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"என்னப்பா, உன் கடைக்கு நிறைய ஆள் வருவாங்கனு சொன்ன? ஒருத்தரையும் காணோம்?"

 



அதற்கு அவன் "ஆமாம் நண்பா... நான் செய்யுற வேலை எல்லாருக்கும் பிடிக்கும்... அதனால நிறைய பெண்கள் கூட வருவாங்க... ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பேராவது என் கடைக்கு வருவாங்க... இன்னிக்கு இன்னும் என் நேரம் தொடங்கவில்லை..." என்றான்.

 

அந்த வார்த்தையைக் கேட்டதும் என் உள்ளத்தில் இனம் தெரியாத கலக்கம். எனக்கு பெண்களின் முடி என்றால் மிகவும் பிடிக்கும். யாரேனும் பெண்கள் தங்களின்  முடியை மொட்டை போட்டுக் கொள்வதை நான் அருகில் இருந்து பார்க்க விரும்புகிறேன். உடனே நான் அவனிடம் "உன் கடையில் பெண்களும் ஹேர் கட் பண்ண வருவார்களா?

 

அதற்கு அவன், "ஓ, வருவாங்க... சில பெண்களுக்கு மொட்டை கூட போட்டு இருக்கேன்" என்றான்.

 

மெதுவாக தேநீர் அருந்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் வரவில்லை. ஒரே ஒரு பெண்ணாவது வந்து தன்னுடைய தலையை மிருதுவாக ஷேவ் செய்து கொண்டு சலூனில் இருந்து வெளியே வந்தால் நன்றாக இருக்கும். என் நண்பன் தன் சலூன் கடையின் முன் சுத்தமாக மொட்டை அடித்தபெண்ணின் புகைப்படத்தை வெளியில் வைத்திருந்தான். நான்  சிறிது நேரம் அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டே  டீ குடித்தேன்.

இதற்கிடையில், பக்கத்து கட்டிடத்தில் இருந்து இரு பெண்கள் சலூன் முன்பு இருந்த புகைப்படத்தை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு சலூனுக்கு வந்தனர். அதில் ஒரு பெண்ணின்  தலைமுடி இப்போதுதான் குளித்தது போல் இருந்தது. அவளுடைய அழகான சுருட்டை முடிகள் அனைத்தும் தளர்வாக விடப்பட்டு, அவளது நடுமுதுகு வரை வெட்டப்பட்டு இருந்தது. டீக்கடைக்காரனிடம் காசு கொடுத்துவிட்டு நான் அவர்களையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றேன்.



 

அப்போது பெண்களில் ஒருத்தி பார்பரிடம், “அண்ணா குழந்தைக்கு தலையை மொட்டையடிக்க முடியுமா?” என்று அவள் கேட்டாள்.

 

பார்பர்  "ஓ, அதுக்கு என்ன? ரொம்ப அழகா பண்ணி விடுறேன்" என்றான்.

 

அந்த வார்த்தையைக் கேட்டதும் என் இதயத்தில் ரயில்கள் ஓடியது. எனக்கும் எனக்கே தெரியாத ஏக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஒருமுறை, இது உண்மையான கனவா என்று சந்தேகப்பட்டு என்னையே நான் கிள்ளி பார்த்தேன். நிஜமாகவே வலித்தது.

 

இது உண்மை என்று உறுதி செய்து கொண்ட பிறகு, அப்போது பார்பர்,  "உங்களுக்கா மொட்டை போடணும்?"

 

இல்லை இல்லை இதோ இவளுக்கு  தான் என்று அருகில் இருந்தவளை காட்டினாள்.

அந்த பெண் வெட்கத்துடன் தலையை தாழ்த்தி, “ஐயோ இங்க வெளியே நின்னுட்டு கேட்கணுமா என்றாள் திவ்யா என்ற அந்த பெண்.

 

"ஏன் திவ்யா இப்படி வெட்கப்படுகிறாய்?" என்று மேலும் கேலி செய்தாள் ரம்யா.

 

திவ்யா, "ரம்யா, இங்கயே முடிச்சிடலாம், இதுக்கு எதுக்கு தூரமா இருக்க பார்லருக்கு போகணும்னு சொல்றீங்க? பக்கத்துலதான் ரூம் இருக்கு." என்றாள்.

 

ரம்யா “ஏய் சரி எனக்கு என்ன, எல்லாம் உன் இஷ்டம் தான் என்றாள்.

 

திவ்யாவிற்கு நீல நிற ஜீன்ஸ் மற்றும் சாம்பல் நிற டி-ஷர்ட் அணிந்திருந்தாள். அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

 

உள்ளே வா பார்பர் அழைக்க திவ்யா முதன்முறையாக சலூன் கடைக்குள் செல்கிறாள். கடையின் நடுவில் பார்பர் சேர் இரண்டு இருக்க, அதன் பின்னே இரு மர பெஞ்சுகள் போடப்பட்டு இருந்தது. திவ்யாவுடன் மது, ரம்யா இருவரும் உள்ளே சென்று பின்னால் இருந்த பெஞ்சில் உட்கார, இருவருக்குமே இடுப்பு வரை நல்ல ஜடை. மது திவ்யாவை உட்காரச் சொன்னாள். திவ்யா மெதுவாக சென்று  நாற்காலியில் அமர்ந்தாள்.

 

என்னால் என் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. உடனே நான் சலூன் கடைக்குள் நுழைந்தேன். எப்படியிருந்தாலும், இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். திவ்யா திரும்பி என்னைப் பார்க்க, பார்பர் உடனே "என்ன?" என்று திவ்யாவிடம் கேட்டுக் கொண்டே அவர் நான் மொட்டை அடிப்பதை பார்க்க வந்திருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டார். நான் உடனே "ஷேவ் செய்ய வேண்டும்" என்றேன். ஆனால் அவர், "முதலில் அந்த பெண்ணுக்கு வேலை முடிந்ததும் அப்புறம் பண்ணலாம்" என்றான்.

 

திவ்யா என்னைப் பார்த்து உடனே “அவருக்கு முதலில் பண்ணுங்க... நான் கொஞ்ச நேரம் காத்திருருக்கேன்" என்றாள்.

 

நான் இப்போது வேறு வழியில்லாமல் நாற்காலியில் அமர ரம்யா, மது இருவரும் என்னையே பார்க்கிறார்கள்.

 

பார்பர் என்னை சுற்றி ஒரு துணி கட்டிக்கொண்டு தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தான். அவன் என் தலைமுடியை மெதுவாக வருடுகிறான். நான்  நாற்காலியில் அமைதியாக அமர்ந்து இருந்தேன்.

 

பின்னால் இருந்து ஒரு பெண் என்னிடம் "ஏன் உங்கள் தலையை மொட்டை அடிக்கிறீங்க?" என்றாள்.

 

நான் யார் என்று கண்ணாடியில் பார்த்தேன். என்னிடம் கேள்வி கேட்டது அவர்கள் மூவரில் சற்று பொன்னிறமாகவும் குண்டாகவும் இருந்தவள். அவள் பெயர் மது, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடனே என்ன சொல்வதென்று என்று யோசித்தவன், “ ரொம்ப வளர்ந்து இருக்கு, அதான் இப்படி ஷேவிங் பண்றேன் என்றேன். அதற்கு மதுவும் "ஓ சரி" என்றாள்.

இதற்கிடையில், பார்பர் என் ஈரமான தலைமுடியை சீப்பால் சீவுகிறார். திவ்யா மிகவும் ஆச்சரியத்துடன் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். பார்பர் என்ன செய்கிறார் என்பதை அவள் உன்னிப்பாக கவனிக்கிறாள்.

 

கண்ணாடி வழியாக நான் மதுவிடம் "நீ ஏன் வந்தாய்"  என்று கேட்டேன்,

 

மது "தோழிக்கு மொட்டை அடிக்க வந்தோம்." என்று சொல்ல பார்பர் ரேசரின் பிளேடை மாற்றி மேசையில் வைத்தான். மூவரும் உட்கார நாற்காலி இல்லையென்றாலும், மூவரும் அங்கேயே அமர்ந்தனர். இன்னொரு நாற்காலியை எடுத்து வர பார்பர் வெளியில் சென்றார். "நீ மொட்டை அடிக்க போறியா" என்று நான் நினைக்காத வார்த்தைகளைச் என் வாய் மதுவிடம் கேட்டது.



 

ஆனால் பதில் சொன்னது ரம்யா - "உம்ம்!! நாங்க மூணு பேரும் தான்" என்றாள்.

 

நான் - "அப்படியா எதுக்காக இந்த மொட்டை" என்று திவ்யாவிடம்  கேட்டேன்.

அதற்கு மூவரும் எதுவும் பேசவில்லை.

 

"இது ஒரு பேஷன்... இல்லையா, அதனால் தான் நான் கூட ரொம்ப வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக மொட்டை அடிக்கிறேன்" என்றேன்.

 

திவ்யா என்னை வினோதமாக பார்த்தாள் "முதல் தடவையா??" திவ்யா கேட்டாள்

 

- "ஹா ஆமாம்" என்றேன் சிறிய குரலில்.

 

பார்பர்  மேலும் இரண்டு நாற்காலிகளை வெளியில் இருந்து கொண்டு வந்தான். அவர்களை உட்காரச் சொன்னான். அந்த நாற்காலியில் மூவர் அமர்ந்தனர்.

 

பார்பர் சவர கத்தியை கையில் எடுத்து என் தலையை குனிய வைத்து சிரைக்க  ஆரம்பித்தான். Ger grrrrr grrrrrrr சத்தம் கேட்கிறது. முடி மெதுவாக விழுகிறது. மூவரும் பின்னால் இருந்து என் மொட்டையை வினோதமாகப் பார்க்கிறார்கள். ஆனால் நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்.


"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, இப்படி மூணு பொண்ணுக  முன்னாடி என் தலையை மொட்டை அடிப்பது ஒரு புது அனுபவமாகா இருக்கிறது"

மெதுவாக, "ஷேவிங் பண்றது ரொம்ப நல்லா இருக்கு திவ்யா. முடி போனாலும் ரொம்ப சௌகரியமா இருக்கும். உங்க முடியை பத்தி வருத்தப்படாதீங்க. நீங்க ஏன் மொட்டை அடிக்கிறீங்கன்னு இப்ப தான் புரியது". என்றேன்.

 

திவ்யா மதுவிடம், "என்ன பைத்தியக்காரன் மாதிரி அதிகமா பேசுறான்?" கிசுகிசுக்க உடனே மூவரும் சிரிக்கிறார்கள்.

 

பார்பர் என் முடியை மொட்டை அடிக்க நான் மூவரையும் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருக்கிறேன். பார்பர் ஏற்கனவே என் தலை முழுவதையும் சொறிந்துவிட்டான்.

 

திவ்யா முடியை கைகளில் எடுத்து பார்க்கிறாள். மது சிரித்துக்கொண்டே தலையில் விரலை வைத்து சைகை காட்டி, ``ஷ்ரிக் ஷ்ரீக் ஷ்ரீக்'' என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நான் எப்படியும் சலூனில் இருந்து வெளியேற விரும்பவில்லை. அதனால், எப்படி அங்கேயே இருக்க வேண்டும் என்று யோசித்து, உடனே பார்பரிடம், “எனது தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள் என்றேன்.

பார்பர் பக்கத்து பையனை கூப்பிட்டு, “ஏய் தம்பி, இந்த அண்ணாக்கு  நல்லா மசாஜ் பண்ணு என்றான். பின் பார்பர் திவ்யாவைப் பார்த்து, “அம்மா, நீ வந்து இப்படி உட்காரு என்றான்.

 

திவ்யா எழுந்து இரண்டாவது முடிதிருத்தும் நாற்காலியில் அமர்ந்தாள். ரம்யாவும் எழுந்து திவ்யாவிடம் சென்று நின்றாள். மது பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்து என் மொட்டையடித்த தலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அதை கவனித்து சிரித்தேன். உடனே மது அங்கிருந்து எழுந்து திவ்யாவை நோக்கி சென்றாள். ஆனால் மதுவுக்கு என் மொட்டை தலை மிகவும் பிடிக்கும் என்று புரிந்தது. ஆனால் பிடிக்காதது போல் எழுந்து வருகிறாள். அப்போது பார்பர் திவ்யாவை ஒரு துணியால் மூடிவிட்டு அவளுடைய அனைத்து முடிகளையும் நாற்காலிக்குப் பின்னால் தொங்க விட...

 

நான் அந்த முடியின் நீளத்தை பார்க்கிறேன். பார்பர் கிளிப்பை எடுத்து ரம்யாவிடம் கொடுத்தான்.

 

ரம்யா கிளிப்பை கையில் வைத்துக் கொண்டு திவ்யாவிடம் அதை காட்டி... “இன்னும் ஆறு மாசத்துக்கு உனக்கு இது தேவைப்படாது" என்று சொல்ல, திவ்யா ஒரு சின்ன கோப பார்வை பார்த்தாள். ரம்யா அமைதியாகி சிரித்தாள்.

 

பார்பர் ஸ்ப்ரே பாட்டிலை எடுத்துக்கொண்டு திவ்யாவின் பின்னால் வந்தான். அவன் திவ்யாவின் தலைமுடியை வருட ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்கள் ஸ்ப்ரே பாட்டிலை வைத்து தண்ணீர் தெளிக்கப்பட்டது. நீண்ட முடி இல்லையா? நன்றாக  தண்ணீர்



 தெளித்ததால் கன்னங்கள் முழுவதும் தண்ணீர் வழிகிறது. அவர் ஒரு சீப்பை எடுத்து அனைத்து முடிகளையும் சீவினான். நெற்றியிலிருந்து முதுகு வரை மெதுவாக சீவினான். முடியின் முனைகள் பின்னால் சுருண்டிருந்தன. அவர் அவற்றை நேராக சீவுகிறான். சீப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சவர கத்தியை கையில் எடுத்தான்.


திவ்யா பார்த்துக் கொண்டிருக்கிறாள், என் தலைமுடியை மென்மையாக ஷேவ் செய்து கொண்டிருந்த பிளேடை எடுத்து பக்கத்திலிருந்த குப்பையில் வீசினான். என் ஷேவிங்கிற்கு உடைந்த பிளேட்டின் இரண்டாம் பாதியை எடுத்து அந்த சவர கத்தியில் போட்டான். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பாதி ஷேவ் என்னுடையது, இன்னொரு பாதி ஷேவிங் நீளமான முடி உள்ள ஒரு பெண்ணிற்க்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு என் மசாஜை அனுபவித்து மகிழ்கிறேன்.




No comments:

Post a Comment