Friday 12 May 2023

திஷாவின் திருமலை மொட்டை - முதலாம் பாகம்

இந்தியாவில் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த நீளமான முடி கொண்ட ஒரே பெண் நான்தான். என் பெயர் திஷா. நான் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய இன்ஸ்டாகிராம்  கேசசுந்தரி என்ற பெயரில் இருப்பதால் என்னை எல்லோரும் கேசசுந்தரி என்றும் அழைப்பர். என் தலைமுடியை வைத்துதான் பெரும்பாலானோர் என்னை அடையாளம் கன்டு கொள்வார்கள். என் அம்மா சிறுவயதில் இருந்தே எனக்கு அழகாக ஜடை பின்னி விடுவாள்.  அம்மாவுக்கு என்னை விட என் தலைமுடி பிடிக்கும்.

வாரத்திற்கு மூன்று முறை கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய் எண்ணெயில் என் தலைமுடிக்கு மசாஜ் செய்து, என் கேசத்தைப் பராமரித்து வருகிறாள். காலேஜ்ல கூட என் தலைமுடிக்கு அதிக பேன்ஸ் (fans) இருந்தார்கள். எல்லா பையன்களும் என் தலைமுடியைப் பார்த்து என்னுடன் பேச ஆர்வம் காட்டினார்கள்.

 

என் தலைமுடியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஓவ்வொன்றும் என்னுடைய பொக்கிஷங்கள். என் தலைமுடி கொண்டையில் இருந்து கீழே அருவி போல விழுவதை  நிறைய நாட்களில் "பன் டிராப்" வீடியோக்கள் மற்றும் ஸ்லோ மோஷன் வீடியோக்களாக  இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற, அந்த வீடியோக்களை நிறைய பேர் விரும்பி பார்த்து என் தலைமுடியைப் பற்றி எனக்கு மெசேஜ் அனுப்பி என் தலைமுடியைப் பாராட்டி வருகின்றனர். இன்ஸ்டா லைவ்ல வரும்போது கமெண்ட்ஸ் எல்லாம் என் கூந்தலைப் பற்றியதுதான்... எனக்கு ரொம்பப் பிடிச்சது, "பட்டு புடவையில் முடியைக் லூஸ் ஹேர் விட்டு கொண்டு, தலையில் மல்லிகைப் பூவைக் தொங்க வீட்டுக் கொண்டு இருப்பது தான்". அந்த வீடியோ தான் என்னை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் உணர வைக்கிறது.

 

இப்படி இருக்கும் போது ஒரு நாள் அம்மா திருப்பதி கோவிலுக்கு போக வேண்டும் என்பது பற்றி கூறினாள். அதைக் கேட்டதும் நான்  மிகவும் த்ரில்லாக உணர்ந்தேன். சிறுவயதில் இருந்தே திருமலை திருப்பதி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அங்கு சென்றதில்லை. முதன்முறையாக திருமலைக்குப் பயணம் செய்து, அங்கே "பெண்கள் மொட்டை" அடித்துக் கொள்வதை பற்றி அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது என் தோழி ஒருத்தி திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துக் வந்தாள்.

என் வாழ்நாளில் ஒரு வயது வந்த பெண்ணின் மொட்டை தலையை பார்ப்பது அதுவே முதல் முறை, அவளுடைய மொட்டை தலையை என் கையால் தடவி, தேய்த்து சிறிது கரடுமுரடாக உணர்ந்த தருணத்தில், என் முதுகுத்தண்டில் இனம் புரியாத, தெரியாத நடுக்கம் ஒன்று  என் உச்சி மண்டை வரை ஏறியது. ரொம்ப நாளாக ஞாபகம் இல்லை, ஆனால் அம்மா திருப்பதி என்று சொன்னவுடனேயே நடுக்கம் வந்தது.

 

நாங்கள் திருப்பதிக்கு பயணிக்கும் நாளும் வந்தது. நானும், அம்மாவும், என்னுடைய மூன்று சகோதரர்களும் திருப்பதிக்கு பயணத்தைத் தொடங்கினோம். திருப்பதியை அடைந்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியபோது எங்களுக்கு முன்னால் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து கல்லூரிக்கு செல்லும் பெண் ஒருத்தி, அவள் தலையில் தாவணியை கொண்டு மூடி இருக்கிறாள். ஏன் அப்படி தாவணியை கொண்டு மூடி இருக்கிறாள் என்று எனக்கு புரியவில்லை. ஓரிரு நிமிடங்கள் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், அம்மா என்னையும் என் சகோதரனையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு கழிப்பறைக்குச் சென்றாள்.





அம்மா அவளுடன் என்னையும் வர, ஆனால் நான் போகவில்லை. நான் அந்த பெண்ணையே கவனித்துக் கொண்டு இருந்தேன். ஏன் அந்த பெண் தாவணி அணிந்திருக்கிறாள் என்று யோசித்துக்கொண்டு அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவன் வந்து அந்த பெண்ணின் தாவணியை பிடித்து இழுத்து விளையாட, அப்போது அந்த பெண்ணின் மொட்டை தலை மிகவும் வெண்மையாக வெளிப்பட்டது.  அந்த பெண்ணின் முகம் மொட்டை அடித்து இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறது. அந்த மொட்டையடித்த பெண்ணுக்கு அழகான நிலவு போன்ற முகம்.

 

பின் என் அம்மா வந்தவுடன் நாங்கள் அங்கிருந்து செல்ல நேர்ந்தது. அங்கிருந்து ஜீப்பில் மலை உச்சிக்கு சென்றோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு சாப்பிட சென்றோம். வழியில் பல பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டு இயல்பாக நடந்து கொண்டு இருப்பதை பார்த்து வியந்தேன். ஆனால் நான் எங்கள் ஊரில் பெண்களை மொட்டை தலையை அதிகம் பார்த்தது இல்லை. ஆனால் இங்கே எல்லோரும் ஒரே வயதுடையவர்கள் அல்ல. மொட்டை தலையில் அனைத்து வயதிலும் பெண்களை நான் திருப்பதியில் பார்த்துக் கொண்டு இருந்தேன். நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பிச் சென்றதும் அம்மா, “போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம், அப்புறம் நாம எல்லாரும் கல்யாணகட்டாக்கு போய் அண்ணனுக்கு மொட்டை அடித்து விட்டு, நான் பூ முடி கொடுத்து விட்டு வரலாம்" என்றாள்.

 

கல்யாணகட்டா என்று சொன்னவுடன் எனக்கு புரியவில்லை, ஆனால் அங்கு போனதும் அங்கிருந்த பலகைகளைப் பார்த்ததும் "மொட்டை அடிக்கும் இடம்" என்று பல மொழிகளும் எழுதி இருந்ததை பார்த்ததும் தான் புரிந்தது.

நான் மகிழ்ச்சியுடன் சரி என்றேன். நான் அறைக்கு சென்றதும், அம்மாவும், என் தம்பியும் கொஞ்ச நேரம் தூங்க. என்னால் தூங்க முடியவில்லை. சரி, இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணி பார்த்துக் கொண்டு இருக்கும் போது திடீர்னு "பால்ட் பியூட்டி வேர்ல்ட்"னு ஒரு கணக்கு வந்தது. அதைத் திறந்து பார்த்தால் “பால்ட் என்று எழுதப்பட்டிருப்பதால், அதில் எல்லாப் பெண்களும் மொட்டையடித்திருக்கிறார்கள். நான் அதை பார்த்ததும் ஒருமுறை அதிர்ந்து போனேன். அதில் நிறைய பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டு தங்களின் அழகான போட்டோவை  போட்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் சலூன்கடையிலும், சிலர் அழகு நிலையத்திலும் மொட்டையடித்துக்கொண்டனர். அப்போது என் சிந்தனையில்   "ஆமாம்!!! மொட்டை தலையில் நான் எப்படி இருப்பேன்" என்று நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது,



உடனே ஒரு யோசனை தோன்றியது. நான் எழுந்து பாத்ரூம் சென்று முடி இல்லாமல் எப்படி இருப்பேன் என்று பார்க்க, ஒரு டவலை எடுத்து என் தலையில் சுற்றிக்கொண்டேன். அப்போது தூங்கி கொண்டு இருந்த என் அம்மா எழுந்து வந்தாள். நான் டவலை போர்த்திக்கொண்டிருப்பதைப் பார்த்து, "நீ இப்போ குளிச்சிட்டியா? ஏன் உடை மாற்றவில்லை?" என்று கேட்க...

 

"அம்மா. நான் தலைக்கு குளிக்கவில்லை. அப்படியே சும்மா போர்த்திக் கொண்டேன்" என்று சொல்ல,

 

"சரி அப்புறம் கிளம்பும் போது குளித்துக் கொள்ளலாம்" என்று சொல்லி விட்டு நகர,

 

அம்மா, அம்மா,

 

"என்னவென்று சொல்லு"

 

"இல்லை அம்மா. நானும் தம்பி கூட மொட்டை போட்டுக்கவா"

 

"என்னடி இப்போ சொல்ற"

 

"அய்யோ அம்மா. எனக்கு இப்போ தான் அப்படி தோணுது.. இத்தனை நாள் "கேச சுந்தரி" மாதிரி இருந்தேன். சில நாட்கள் "மொட்டை சுந்தரி" மாதிரி இருக்கணும்னு எனக்கு ஆசை. இந்த ஒரு முறை மட்டும் அம்மா!

என் அம்மாவும் சம்மதிக்க, "சரி, உனக்கு ஓகேன்னா எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை, கிளம்பு, கல்யாண கட்டா போகலாம், தம்பி எழுந்திரு, கிளம்பு. நான் முகம் கழுவிவிட்டு சீக்கிரம் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அம்மா பாத்ரூமுக்குள் சென்றாள். நான் போய் தம்பியை எழுப்பினேன்.

 

அம்மா வந்ததும் கடைசியாக என் தலைமுடியை நன்றாக சீவினாள். எனக்கும் இது மிகவும் த்ரில்லாக இருக்கிறது. அம்மா ஒரு சரம்  மல்லிகைப் பூக்களை எடுத்து என் தலையில் வைத்துவிட்டு, "கடைசியாக உன் கூந்தலில் இந்த மல்லிகைப் பூ. இன்னும் இரண்டு வருடத்திற்கு உனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது."  என்று சொல்லி சிரித்தாள்.

 

நானும், அண்ணனும், அம்மாவும் சேர்ந்து கல்யாணகட்டாவுக்கு கிளம்பினோம். எனக்கு இதுவரை மொட்டை அடித்த அனுபவம் இல்லை என்பதால் பயத்தில் ஆரம்பித்தது பரபரப்பு. ஆனால் எனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் நான் என்னுடைய நீளமான முடியை மொட்டை அடிப்பதை தெரிந்திருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து, உடனே இன்ஸ்டாகிராம் லைவ் ஓபன் செய்து ரெடியானேன். மாதவ நிலையத்தில் உள்ள கல்யாணகட்டாவுக்கு கூட்டம் குறைவாக இருந்தபோது சென்றோம். ஒரு சிறிய வரிசையில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம், நான் முன்புறம், என் தம்பி எனக்குப் பின்னால், என் அம்மா கடைசியில்.

சற்றே தளர்வான என் தலைமுடியைப் பிடித்து, விரல்களால் இழுத்துச் சுழற்றிக் கொண்டிருந்தான் தம்பி. நான் மொட்டையடிப்பதைப் பற்றி நான் என் அம்மாவிடம் பேசுவதை அவனும் கேட்க, பின் அவன் என்னைப் பார்த்து “அக்கா நீயும் மொட்டை அடிக்கிறீயா?” என்று கேட்டான். நானும் ஆமாம் என்று சொல்ல, அப்போது உனக்கு எப்படி மொட்டை அடிப்பாங்கனு தெரியுமா?

 




அவன் கேட்ட கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை. நான் மொட்டை அடிப்பதை பார்த்ததே இல்லை. அதனால் அதைப் பற்றி எனக்கு பெரிய யோசனை இல்லை. கொஞ்சம் பயந்த  முகத்துடன் "தெரியாது" என்றேன். அம்மா எங்களுடன் எதுவும் பேசுவதற்குள் நாங்கள் ஒரு சிறிய வாயிலை அடைந்தோம். அங்கே ஒரு சின்ன கவுண்டர் போல இருக்க, அதனுள் இருந்த ஒருவர், "மொட்டையா, பூ முடியா?" என்று கேட்டார்.

 

வெட்கத்துடன் தலையை மெதுவாகத் தாழ்த்தி “மூன்று மொட்டை  டோக்கன் கொடு என்றேன். அவர் என்னிடம் மூன்று டோக்கன்களையும், மூன்று பிளேடுகளையும் கொடுத்தார். அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக முன்னே நடந்தேன். அப்போது அந்த டோக்கன்களை தருபவர் அருகில் இருந்தவரிடம் பேசியதை  நான் பக்கத்தில் இருந்து கேட்டேன்.

 

"இந்த பொண்ணுக்கு முடி ரொம்ப நீளமா இருக்கு. இப்போ மொட்டை அடிப்பாளா? இல்ல அங்க பிரச்னை பண்ணுவாளா?"

 

என் அம்மா மெதுவாக திரும்பி சிறு புன்னகையுடன் அவர்களுக்கு பதில் சொன்னாள்.

 

நிஜமா மொட்டை தான் போட போறா?

 

கையில் இருந்த டோக்கன்களில் இருந்த எண்ணைப் பார்த்தேன். மெதுவாக உள்ளே சென்றோம். ஒரு பெரிய கூடம். தரை மற்றும் சுவர்கள் அனைத்தும் வெள்ளை பளிங்கு. சுவரில் சாய்ந்து நாவிதர்கள் உட்கார்ந்து இருக்க, அவர்களுக்கு எதிரில் ஒரு சிறிய கால்வாய் போல் தெரிகிறது. நாவிதர்கள் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களின் தலைக்கு மேல் எண்கள் எழுதப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் நான் புரிந்து கொண்டேன். அந்த டோக்கனில் நாவிதர்களின் எண் உள்ளது.

உடனே என்னையறியாமல் என் கண்கள் எங்கள் டோக்கன் நம்பரை தேட,மெதுவாகத் தேடி சென்றோம். நான்கு பக்கங்களிலும் உள்ள நாவிதர்களில், ஒரு பக்கம் மட்டும் பெண் நாவிதர்களுக்கு விடப்பட்டு இருக்க, நான் பெண் நாவிதர்ககளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பெண்களும் இங்கு  நாவிதர் வேலை செய்ய இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் எங்களுக்கு கொடுத்த டோக்கன் எண்ணைப் பார்த்தேன்.

 

உடனே அவள் இருக்கும் இடத்திற்கு சென்றோம். என்  செயல்களைப் பார்த்து அம்மாவும் தம்பியும் சிரிக்கிறார்கள். நான் பெண் நாவிதரிடம் சென்று நின்றேன். ஒரு சிறு குழந்தை அவள் முன் அமர்ந்து, மனம் இல்லாமல் மொட்டை அடித்துக் கொள்கிறது. அந்த பெண் என்னை  பார்த்ததும் வாஷ்ரூம் போய் முடியை நனைத்து விட்டு வர சொல்ல, உள்ளே பார்த்தால் எல்லா பெண்களும் கொஞ்சம் தளர்வான முடியுடன் தலை முடியை நனைத்து கொண்டிருக்கிறார்கள்.


சில வயதான ஆன்ட்டிகள் மொட்டையடித்து விட்டு கழுத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த முடியை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சரி என்று சொல்லிவிட்டு பக்கத்து பாத்ரூம் சென்று கதவை திறந்தேன். என் வயது பெண் ஒருத்தி என் எதிரில் நிற்பதை பார்த்தேன். சுத்தமான மொட்டையடித்த தலை பளபளக்க, நான்  அவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

ஆனால் அவளுடைய மொட்டை தலை மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கு அவளுடைய மொட்டை தலையை பார்த்தும், இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே என்று என் மனதிற்குள் தோன்றியது. அப்போது பக்கத்தில் இருந்து அவளது குடும்பத்தினர் வர, அந்த பெண் வெட்கத்துடன் அவர்களுடன் சென்றாள்.


இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அடுத்த பகுதிக்கு காத்திருங்கள்.




2 comments: