Friday 24 April 2020

Lock Down pressure : Chennai girl removed her eyebrows

கோரொனா வைரஸ்ஸால் உலகமே  பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் லாக் டவுனால் பல பிரச்சனைகளை அரசும், மக்களும் சந்திக்கின்றனர். தினமும் இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் வெளியில் சுற்றி காவல்துறையினரிடம் பல பிரச்சினைகள் செய்கின்றனர்.






இளைஞர்கள் தான் இப்படி என்றால் பெண்களின் பிரச்சனை வேறு மாதிரி இருக்கிறது. சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னுடைய நீளமான முடியை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி இருக்கிறார்.
இடுப்பு அளவு இருந்த முடியை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி தோள்ப்பட்டை வரை குட்டையாக வெட்டி விட்டார்.




அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் தன் புருவத்தில் இருந்த முடிகளையும் சவரக்கத்தியால் ஷேவ் செய்து விட்டார்... அதன் பின் எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.





அந்த பெண்ணின் புருவ முடி நீக்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இதை போல நடிகைகள், மற்ற சில‌ பெண்கள் தங்கள் முடியை மொட்டை அடித்துக் கொண்ட புகைப்படங்களும் இண்டர்நெட்டில் பரவி வருகிறது.





1 comment: