Wednesday 29 April 2020

கனகாம்பர பூச்சடை கிராமத்து பொண்ணு


நம்ம வீட்டு தோட்டத்துல வளர்ந்த பூவை பறித்து, சரம் போல கட்டி கோர்த்து, அதை தன் தலையில் சூடிக் கொண்டு வெளியில் செல்லும் போது கிடைக்கும் இன்பம் அளவு இல்லாதது நம் கிராமத்து பெண்களுக்கு...










ஊர் திருவிழாக்கு அழகா எண்ணெய் தேய்த்து சீவி, சிங்காரிச்சு வீட்டுல பூத்த கனகாம்பர பூவை கோர்த்து 
தலையில் வச்சு போனேன். மொத்த 
பசங்களும் என்னை தான் பாப்பாங்கன்னு பார்த்தா என் முடியை பாக்குறானுக...







பக்கத்து வீட்டு அக்கா அதோ அங்க நிக்கிறாங்க பாருங்க, ரெட் கலர் ஜன்னல் வச்ச டிசைன் ஜாக்கெட் போட்டு, பாய்கட் ஹேர் ஸ்டைல் வச்சுட்டு, அந்த அக்கா என்கிட்ட பூ கேக்குறாங்க... அவங்களும் வைக்கணுமாம்... போங்க அக்கா விளையாடாதீங்கன்னு சொன்னேன்... ஆனா அவங்க நான் பூ கொடுக்கலன்னு கோவிச்சிகிட்டு அங்க போய் நிக்குறாங்க...

நான் சொன்னது சரி தானே...







No comments:

Post a Comment