Sunday 13 September 2020

நானும் காயத்ரியும் நான்காம் பாகம்




இனி...  



காயு என்னடி சொல்ற? அன்னிக்கு திருப்பதில ஏதோ சூழ்நிலை உன் அக்காவுக்கு மொட்டை அடிக்க வேண்டியதா போச்சு? அதுக்காக இப்பவும் எப்படிடி?

அதான் அவளே வெட்கத்தை விட்டு கேட்குறாளே? மொட்டை அடிடா என்றாள் காயத்ரி. 

ப்ளீஸ் கொழுந்தனாரே... இந்த ஒடு தடவை மட்டும் மொட்டை அடிச்சு விடுங்க... மறுபடியும் மொட்டை அடிச்சா என் புருஷன் என்னை கொன்னே போடுவாரு....

காயு... நீ என்ன சொல்ற... உனக்கு ஓகே வா? அப்புறம் நீ என்னை கோவிச்சுக்க கூடாது....?

சரிடா.. போ... என்றாள் காயத்ரி.

நானும் காயத்ரியும் அவள் ரூமுக்குள் செல்ல, திவ்யா தன் அம்மாவிடம் சென்று தானும் இன்று மொட்டை அடிக்க போவதாக சொல்லி விட்டு திவ்யாவின் ரூமிற்க்கு வந்தாள். நான் காயத்ரியை மொட்டை அடிக்க தண்ணீர் எடுத்து வர சொல்ல, அவளும் பாத்ரூம் போக, நான் தரையில் ஒரு பிளாஸ்டிக் கவரை விரித்து விட்டு அதில் திவ்யாவை உட்கார சொன்னேன். திவ்யாவும் எதுவும் யோசிக்காமல் விரித்து இருந்த கவரின் நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

காயத்ரி தண்ணீரை எடுத்து வர, நான் அதை வாங்கி வைத்து விட்டு, திவ்யாவின் முடியை கொஞ்சமாக தண்ணீரை விட்டு மசாஜ் செய்தேன். பின் காயத்ரியை அதே போல மசாஜ் செய்ய சொல்ல, அவளும் ஆசையாக தன் அக்கா திவ்யாவின் முடியை நன்றாக இரு கைகளால் அழுத்தி தேய்த்து, ஈரத்தை பரப்பி விட்டாள்.


நான் ரேசரை எடுத்து வேறு ஒரு புதிய பிளேடு மாட்டி விட்டு திவ்யாவின் முடியை மழிக்க அவள் தலையில் முடியை ஒட்டி நெருக்கமாக ரேசரை வைத்து கொண்டு காயத்ரியை பார்க்க, அவள் என்ன என்பது போல சைகையில் கேட்டாள். நான் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த காயத்ரியிடம் சவர கத்தியை நீட்ட, அவள் குழப்பத்துடன் கத்தியை வாங்கினாள். 

நான் திவ்யாவின் முடியை மொட்டை அடிக்க சொல்லி சைகை செய்ய, காயத்ரியின் கண்ணில் ஒரு சந்தோஷத்தை பார்த்தேன். காயத்ரி ஒரு சிறு தயக்கத்துடனும், பயத்துடனும் முதல் முறையாக தன் அக்கா திவ்யாவின் தலையில் சவர கத்தியை வைத்தாள். பதட்டத்துடன் கத்தியை திவ்யாவின் தலையில் வைத்து சிரைக்க, முடி கொஞ்சம் பிசிறு பிசிறாக வந்தது. இரண்டாவது ஸ்ட்ரோக் நான் காயத்ரியின் கை மேல் என் கையை வைத்து கத்தியை பிடித்துக் கொண்டு கத்தியை இழுக்க, இந்த முறை திவ்யாவின் முடியை சரியாக சிரைத்து விட்டாள் காயத்ரி. இரண்டு முறை நான் காயத்ரிக்கு சொல்லி கொடுக்க பின் அவளே தன் அக்கா திவ்யாவின் முடியை மொட்டை அடித்தாள். 

சில நொடிகள் கழித்து தான் திவ்யா நான் மொட்டை அடிக்காமல் சும்மா உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதை கண்டு கொண்டாள் திவ்யா. தான் ஆசைப்பட்டது போல மதன் தனக்கு மொட்டை அடிக்காமல் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்க, தன் தங்கை காயத்ரி தான் அவளுக்கு மொட்டை அடிக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். 

ஹேய்...காயத்ரி நிறுத்துடி...

ஏங்க்கா....

திவ்யா வேகமாக எழுந்து கொண்டு காயத்ரியின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி கொண்டாள்.. 

ஏண்டி, மதன் கையால நான் மொட்டை அடிக்கணும்னு சொன்னா நீ எனக்கு சிரைச்சு விடுறியா... அதுக்கு தான் நான் வந்தேனா? போடி முதல்ல வெளியே... என்று காயத்ரியை பார்த்து கத்த... பதிலுக்கு அவளும் சண்டையிட... கொஞ்சம் சிரைத்த தலையுடன் இருந்த திவ்யா மொட்டை அடித்த தலையுடன் இருந்த காயத்ரியை பிடித்து ரூமை விட்டு வெளியே தள்ளி விட்டு வந்தாள்..


மதன்... இப்போ நீயும் நானும் மட்டும் தான் என்று சொல்லி விட்டு ரூமில் இருந்த சின்ன டிவியில் சன் மியூசிக்கை போட்டு சவுண்ட் அதிகமாக வைத்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டாள் திவ்யா.
இப்போது நானும் காயத்ரி எங்களுடன் இல்லை என்ற பயமில்லாமல் திவ்யாவின் முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தேன். திவ்யாவுக்கும் நாப்பது நாள்கள் மட்டுமே வளர்ந்து இருந்த முடியை சிரமம் இல்லாமல் சுலபமாக சிரைத்து விட்டேன். திவ்யாவின் முடி முழுவதும் அந்த பிளாஸ்டிக் கவரின் மேலேயே விழுந்தது. 

எங்கள் ரூமில் டிவியில் பாட்டு சத்தமாக ஓடிக் கொண்டு இருந்ததால் நாங்கள் இருவரும் ரூமில் என்ன பேசினாலும் வெளியே கேட்காது. அதற்காக தான் திவ்யா அப்படி செய்தாள் என்று நான் புரிந்து கொண்டு, திவ்யாவுக்கு மொட்டை அடித்துக் கொண்டு இருக்க, திவ்யாவின் முன்பக்கமும், வலது பக்கமும் மொழு மொழுவென மழித்து எடுத்து இருந்தேன். 

என்ன மதன், வேலையை நல்லா கத்துகிட்ட போல...

ஆமாங்க... எல்லாம் உங்க மூணு பேரை மொட்டை அடிச்சு தான் நல்லா ஷேவ் பண்ணி பழகிட்டேன்.... 

ம்ம்ம்.... அதான் தெரியுதே... அப்புறம் காயத்ரிக்கு எப்படி மொட்டை அடிச்ச மதன்... 

எப்படின்னா... இப்போ உங்களுக்கு எப்படி மொட்டை அடிக்கிறன்னோ அதே மாதிரி தான்... 

ம்ம்ம்... சரி... சீக்கிரம் முடிச்சு விடு... இன்னும் நிறைய வேலை இருக்கு... என்று திவ்யா சொல்ல நான் இப்போது திரும்பி உட்கார சொல்லி விட்டு, திவ்யாவின் பின் மண்டையில் இருந்த முடியை சிரைத்து விட ஆரம்பித்தேன்... பின் தலையில் மேல் இருந்து கீழ் நோக்கி மெதுவாக சிரைத்துக் கொண்டு வர... அவளது சிரைக்கப்பட்ட பகுதி ஒரு டார்க் கலரில் இருந்தது. அப்படியே கீழ் பகுதியில் பின் கழுத்தில் இருந்த முடியை சிரைத்துக் கொண்டு சவரக்கத்தியை கீழே இழுத்துக் கொண்டு செல்ல, அது திவ்யாவின் முதுகின் மேல் பகுதி வரை சென்றது...

என்னங்க... முதுகுல கூட உங்களுக்கு பூனை முடியா இருக்குங்க....

அப்படியா... அப்போ அதையும் எடுத்து விடு மதன்...

எடுத்துட்டுங்க... உங்க சுடில தெரியுற வரை இருந்த பூனை முடியை எடுத்து விட்டேன்... 

அதுக்கும் கீழ இருக்குமே... ஏன்னா பிளவுஸ் போட்டா பூனை முடி அசிங்கமா இருக்குன்னு தான் சுடி போட்டுட்டு இருக்கேன்... அதனால அதையும் க்ளீன் பண்ணிடு மதன்...

அது கொஞ்சம் கஷ்டம்ங்க திவ்யா.... அதுக்கு நீங்க உங்க டாப்பை எடுக்கணும்...


ம்ம்ம் புரியுது என்று சொல்லி விட்டு திவ்யா, தன்னுடைய டாப்பை தூக்கி கழட்டி பக்கதில் இருந்த கட்டிலின் மேல் வைத்து எனக்கு முதுகை காட்டிக் கொண்டு உட்கார... நான் பரந்து விரிந்து இருந்த முதுகில் இருந்த முடியை பார்த்து பார்த்து சிரைத்து விட்டேன்... 

அவ்ளோ தாங்க... முடிஞ்சது... என்று சொல்லி விட்டு நான் திவ்யாவை பார்க்க... திவ்யா தன் கைகளை தூக்கி இரு அக்குளையும் பார்க்க, அங்கு காயத்ரிக்கு இருந்த புதரை போலவே... நாப்பது நாட்களான ஒரு சிறிய கரும் புதர் வளர்ந்து இருந்தது..
திவ்யா தயக்கம் இல்லாமல் கையை காண்பிக்க, நானும் புரிந்து கொண்டு திவ்யாவின் முடியை கொஞ்சம் தண்ணீர் விட்டு தடவி விட்டு, கத்தரியால் நெருக்கமாக ட்ரிம் செய்து விட்டு, பின் போம் போட்டு ஷேவ் பண்ணி விட்டேன்... இரு கைகளுக்கும் அதே போல பண்ணிவிட, பின் திவ்யா இரு கைகளையும் ஒன்றாக தூக்கி தன் கைகளை கண்ணாடியில் பார்த்துக் சோதித்துக் கொண்டாள்.

நல்லாவே பண்ணி இருக்கே மதன்... ரொம்ப தேங்க்ஸ்... அப்புறம் எனக்கு இன்னொரு ஆசை.. பண்ண முடியுமா? 

நான் இவள் வேறு ஏதோ ஒன்று பெரியதாக கேட்க போகிறாள்.. நான் அதை செய்தால் காயத்ரிக்கு அது தெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்க...

என்ன யோசிக்கிற.. மதன்... 

இல்ல... நீங்க என்ன சொல்ல போறீங்களோன்னு யோசிச்சேன்... 

அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை மதன்.. என்னோட கெண்டை கால் பகுதியில கொஞ்சம் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கு... அது என் புருஷனுக்கு பிடிக்கல... அதை பார்க்கும் போது எல்லாம் ஒரு ஆம்பளையோட காலை பார்க்குற மாதிரி இருக்குன்னு சொல்றார்... அதான்....



ஓ.. அவ்ளோ தானா? நான் வேற ஏதாவது விவகாரமா கேட்க போறீங்களோன்னு நினைச்சேன்... 

விவகாரமான்னா? 

இல்ல இதுக்கு மேல ஏதாவது? என்று நான் இழுக்க...

அதுக்கு மேல இருக்கிறதை நானே பண்ணிப்பேன்... நீ இதை மட்டும் பண்ணி விட்டா போதும்...


சரி என்று சொல்லி விட்டு திவ்யாவை அங்கு இருந்த கட்டிலில் உட்கார சொல்லி விட்டு அவள் கால்களை ஒரு ஸ்டூலில் வைத்து விட்டு, தண்ணீரில் நனைத்து விட்டு 
கால்களில் இருந்த முடியை மெதுவாக ரேசரால் ஷேவ் செய்து விட்டேன்.. இரண்டு கால்களிலும் இருந்த முடியை எடுத்ததும் திவ்யாவின் கால்கள் பார்க்க அழகாக ஒரு நடிகையின் கால்களை போல இருந்தது.. அதன்பின் திவ்யா மொட்டை தலையில் குளிக்க போக நான் டிவியை ஆப் செய்து விட்டு வெளியே வந்தேன்.. ஹாலில் உட்கார்ந்து என்னை முறைத்தாள் காயத்ரி... 

காயத்ரி எழுந்து ரூமுக்குள் செல்ல, அங்கு திவ்யா ஒரு டவலை கட்டிக் கொண்டு, தன் மழு மழுவென்று இருந்த மொட்டை தலையை தடவி கொண்டு இருக்க, அவள் கைகளும் மொழு மொழுவென மழித்து இருப்பதை காயத்ரி கவனித்தாள். அடுத்த சில நாட்கள் காயத்ரி என்னுடன் பேசாமல் கோபித்துக் கொள்ள நான் அவளை மிகவும் கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினேன்.

அதன் பின் நாங்கள் இருவரும் எங்கள் வேலையில் கவனமாக இருந்தோம். ஆபிஸில் வேலை கொஞ்சம் பிஸியாக இருக்க, நாங்களும் எங்கள் புரோமோஷன், ஆன்சைட் போவதில் கவனத்தை வைத்தோம்.. சில மாதங்களுக்கு பிறகு எங்கள் டீமில் எனக்கு மட்டும் ஒரு வருடம் யுஎஸ் செல்ல ஆன்சைட் வாய்ப்பு கிடைக்க எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆன்சைட் போய் வந்ததும் மேரேஜ் பண்ணிக் கொள்ள முடிவு செய்தோம்...

அதன் பின் விசா எல்லாம் எடுத்து விட்டு நான் யுஎஸ் செல்ல, காயத்ரி சென்னையில் இருந்து வேலை பார்த்தாள். தினமும் வாட்ஸப், ஸ்கைப்பில் வீடியோ சாட்டில் பார்த்து பேசிக் கொண்டு இருக்க, சில மாதங்கள் இப்படியே போனது. ஒரு நாள் காயத்ரி தீடிரென்று தன் வேலையை விட்டு நின்று விட்டாள் என்று மெயில் வந்தது. என்ன என்று விசாரிக்க காயத்ரிக்கு போன் செய்தால் அவள் செல்லுக்கு போன் செய்ய அவள் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காயத்ரிக்கு என்ன பிரச்சனை என்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யுஎஸ்ஸில் இருந்து உடனடியாக கிளம்பி வரவும் முடியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு காயத்ரியின் அக்கா திவ்யாவின் போன் நம்பரை பிடித்து அவளுக்கு கால் செய்து விசாரித்தேன்...

காயத்ரியின் பாட்டி உடல் நலம் சரியில்லாமல் இறக்கும் நிலையில் இருக்கும் போது.. அவளை தன் தாய்மாமன் மகனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஆசைப்பட, அதனால் காயத்ரியின் குடும்பம் கிராமத்தில் இருக்கும் காயத்ரியின் தாய்மாமன் மகனுடன் கல்யாணம் செய்து விட்டார்கள் என்று சொன்னாள் திவ்யா... 


நான் என்ன செய்வது என்று புரியாமல் என்னுடைய ஆன்சைட் வேலையை இன்னும் ஒரு வருடம் எக்ஸ்டெண்ட் செய்து அங்கேயே இருந்து வேலை செய்தேன். அதன் பின் இரண்டு  வருடங்கள் கழித்து தான் சென்னை வந்து சேர்ந்தேன்... காயத்ரியை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. என்ன இருந்தாலும் காயத்ரி இப்போது வேறு ஒருவரின் மனைவி என்றும் அவளை மறந்து வாழவும் பழகிக் கொண்டேன்...



ஆனால் விதி யாரை விட்டது...?






4 comments:

  1. ஏன் இப்படி பண்ணி நீங்க ஒரு நல்ல பகுதியில் வந்த கதையை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களே மதன் நிலையை நினைத்தால் எனக்கு சிறிது வருத்தமாகத்தான் உள்ளது தயவுசெய்து கேட்கிறேன் இந்தக் கதையின் அடுத்த பகுதியை மிக விரைவாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. நானும் ரசிகன் அவர்கள் சொன்ன கமெண்ட் ஐ வரவேற்கிறேன் மிக விரைவில் அடுத்த பாகத்தை பதிவிடுங்கள் நண்பா..எங்களால் அடுத்து என்ன நடக்க போகிறது என்று வியுகிக்க முடியவில்லை ..

    ReplyDelete
  3. உங்கள் இந்த கதையின் தொடர்ச்சி பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete