Monday 28 September 2020

நானும், காயத்ரியும் - ஆறாம் பாகம்





என்ன மதன் அங்கேயே நின்னுட்ட... வா இங்க....

என்னங்க, பண்ணைல வேலை செய்யுற பொண்ணுனு சொன்னீங்க, ஆனா இங்க காயத்ரி உட்கார்ந்து இருக்கா?

ஆமா மதன், நீ இப்போ காயத்ரிக்கு தான் மொட்டை அடிக்கணும்... 

வேண்டாம் சார்... ப்ளீஸ் அப்போ எனக்கு உரிமை இருந்துச்சு... நான் ஆசைப்பட்டு பண்ணேன்... இப்போ வேண்டாம்...

என்னடா ரொம்ப பேசற... அப்போ உன் மனசுல நான் இல்லையா?

இப்போ என்னை கேள்வி கேட்டது காயத்ரி... நான் அவளுக்கு என்ன சொல்வது என்று தயங்க....

டேய்... எப்போவும் உன் மனசுல நான் இருப்பேன்... அதை உன்னால மறுக்க முடியாது.... 

ஆமா, காயத்ரி என்னால உன்னை மறக்க முடியல... எப்போவும் நீ என் மனசுல இருப்ப....

சரி... அப்போ உன் வாழ்க்கைய இப்படியே முடிச்சுக்க போறியா? 

பாக்கலாம்... வாழ்க்கை என்னை எங்கே கொண்டு போகுதோ... அதே வழில நான் போக போறேன்...

மதன், உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றம் வர காரணம் நான் தான்... அதனால நான் ஒரு வழி சொல்றேன்... அதை உன் மனசுல நல்ல பதிய வச்சுக்கோ... 


என்ன சார் சொல்ல போறீங்க?

மதன், உனக்கு காயத்ரிக்கிட்ட பிடிச்சது அவளோட முடிதான்.. அவளுக்கும் நீ அவ முடியை விரும்புறது பிடிக்கும்... உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பொதுவான விஷயம் காயத்ரியோட முடி... 

அதனால...

அவ முடியை நீ இப்போ மொட்டை அடிச்சு எடுத்துக்க... அந்த முடியை காயத்ரியா நினைச்சு நீ வச்சுக்க... அதுக்கு அப்புறம் நீ காயத்ரியை மறந்துட்டு ஒரு நல்லா பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோதஷமா இரு... அப்போ தான் நானும் காயத்ரியும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இருப்போம்...

என்ன சார் சொல்றீங்க... உங்க ரெண்டு பேருக்கும் என்ன குற்ற உணர்ச்சி?

நீ இப்படி தனியா இருக்க காரணம் நான் தான் டா? உன்னை நான் ஏமாத்தாம இருந்து இருந்தா உன் வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும்... அதான்... 

நான் எப்பவும் அப்படி நினைக்க மாட்டேன் காயத்ரி... 

நீ நினைக்க மாட்ட, நான் நல்லா இருக்கணும்னு நீ நினைக்கிற மாதிரி நானும் நீ நல்லா குடும்பம், குழந்தையோட இருக்கணும்னு ஆசைபடுறேண்டா...

சரி காயத்ரி... என் மனசு மாற கொஞ்சம் டைம் கொடு...

ம்ம்ம்ம்.. ஓகே... இப்போ நீ ஆசைப்பட்ட மாதிரி என் முடியை மொட்டை அடிச்சு எடுத்துக்க... இப்ப மட்டும் இல்ல, உனக்கு எப்போ வேணும்னாலும் என் முடியை நீ மொட்டை அடிக்கலாம்... சரியா மதன்... உனக்காக நான் கொடுக்க முடிஞ்ச ஒரே விஷயம் என் முடிதாண்டா!!!


அய்யோ காயத்ரி... நான் அப்படி எதுவும் எதிர்பார்க்கல காயத்ரி...

நீ எதிர்பார்க்கல... ஆனா எனக்கு இப்போ மொட்டை அடிக்கணும்... பண்ணைல வேலை செய்யுற பொண்ணுக்கு மொட்டை அடிப்ப... எனக்குன்னா அடிக்க மாட்டியாடா...

என்னை போலிக் கோபத்துடன் காயத்ரி மிரட்டுவது போல நடிக்க, நான் என்னை மீறி சிரித்துவிட்டேன்...

ஹப்பா, உன் முகத்துல இந்த சிரிப்ப பார்த்து எவ்ளோ நாளாச்சு...சரி இருடா நான் போய் தொட்டில என் தலையை நனைச்சுட்டு வர்றேன்... 

காயத்ரி தொட்டியை நோக்கி போக நான் ஆச்சரியமாக அவளை பார்த்துக் கொண்டு இருந்தேன்... ஒரு சிவப்பு கலர் சேலையில் அவ்ளோ அழகாக இருந்தாள் காயத்ரி... சென்னையில் மாடர்ன் டிரஸ்ஸில் பார்த்ததை விட இப்போது தான் இன்னும் அழகாக, அவளுடைய அழகு வெளிப்படுவதாக உணர்ந்தேன்.. என்ன தான் கவர்ச்சியாக உடைகளை அணிந்து கொண்டு தன் அங்கங்களை வெளிப்படுத்தினாலும், சேலையில் இருக்கும் அழகு வேறு ஒரு ரகம் தான்...


காயத்ரி தொட்டியில் இருந்த நீரை ஒரு பக்கெட்டில் எடுத்து தன் தலையில் ஊற்றி கொண்டு ஈரப் புடவையுடன் நடந்து வந்து ஒரு திண்டின் மேல் உட்கார்ந்து கொண்டாள்.

போ, மதன் காயத்ரிக்கு மொட்டை அடிச்சு உன் விரதத்தை முடிச்சுக்கோ... என்று காயத்ரியின் கணவன் சொல்ல நான் இன்னும் சிறிது தயக்கத்துடன் காயத்ரியின் அருகில் சென்று அவள் ஜடையை என் கைகளால் பிரித்து விட்டேன். பி நான் வைத்து இருந்த கவரில் இருந்து ஒரு சவர கத்தியை எடுத்தேன். அதை பல வருசத்துக்கு பிறகு இப்போது தான் எடுக்கிறேன். கடைசியாக காயத்ரியின் ரூமில் அவள் அக்கா திவ்யாவுக்கு மொட்டை அடிக்க பயன்படுத்தியது. அதன் பின் இப்போது தான் அந்த சவர கத்தியை எடுக்கிறேன்..

அந்த கவரில் இருந்து ஒரு பிளேடை எடுத்து பாதியாக உடைத்து ரேசரில் போட்டு விட்டு அவள் தலையை மொட்டை அடிக்க வாகாக இரு கைகளிலும் பிடித்து நிறுத்தினேன்... பின் முன் நெற்றியில் இருந்து மேல் நோக்கி மெதுவாக சிரைக்க, காயத்ரி தன் தலையை நிமிர்ந்து என் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள். காயத்ரியின் முடி ரொம்ப அடர்த்தியாக கட்டையான முடி. நானும் மொட்டை அடித்து பல நாட்கள் ஆனதாலும், எங்களுடன் காயத்ரியின் புருஷனும் இருப்பதால் எனக்கு கொஞ்சம் நெர்வஸ்ஸாக இருந்தது.

காயத்ரி, முடி உனக்கு ரொம்ப அடர்த்தியா இருக்குல....

ஆமா மாமா.... சின்ன வயசுல இருந்து அப்படி தான் இருக்கு....

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்க, நான் காயத்ரியின் நடு மண்டையை மொட்டை அடித்து, அதன் பின் இடது பக்க முடியை கீழ் நோக்கி மெதுவாக சிரைத்து விட்டேன். இப்போது என் கை கொஞ்சம் மொட்டை அடிக்க பழகி இருந்தது. காயத்ரியின் இடது காதை கொஞ்சம் மடக்கி பிடித்து கொண்டு மெதுவாக சிரைத்து விட்டேன்.. பின் அப்படியே வலது பக்கம் வந்து முடியை சிரைத்து விட்டேன்.


காயத்ரி... மொழுமொழு அழகா மழிக்கிறான் டி மதன்....

ஆமா மாமா, அவனுக்கு அது பழக்கம் தான் மாமா... அது என் முடியை அவன் ரசிச்சு ரசிச்சு மழிச்சு விடுவான் மாமா...!

ஆமா, காயத்ரி அவன் முகத்துல அது தெரியுதுடி....

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்ணாம இருங்க! நான் சீக்கிரம் என் வேலையை முடிக்க வேண்டாமா? இப்படி கிண்டல் பண்ணா எப்படி ஷேவ் பண்றது?

சரி மாமா, கொஞ்சம் பேசாம இருங்க... அவன் கவனமில்லாம ஷேவ் பண்ணி என் தலையில காயம் ஆயிட போகுது என்று சொல்ல, நானும் சிரித்துக் கொண்டே என் வேலையை செய்தேன்...

br /> br /> சில நிமிடங்களில் காயத்ரியின் பின்பக்க முடி மட்டும் அவள் தலையில் இருந்தது.. காயத்ரியை என் மேல் சாய்த்துக் கொண்டு அவளின் பின்பக்க முடியை மொட்டை அடிக்க, அவள் வெட்கத்தில் சிரித்துக் கொண்டு இருந்தாள்... பின் பக்க முடி கொத்தாக அவள் உட்கார்ந்து இருந்த திண்டின் மேல் விழ, நான் அவள் முடியை எடுத்து ஒரு பாலித்தீன் கவரில் எடுத்து வைத்துக் கொண்டேன்... பின் அவள் தலையில் இருந்த பிசிறு முடிகளை துடைத்து விட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு மீண்டும் அவள் தலையில் ரிவர்ஸ் ஷேவ் செய்து விட, காயத்ரியின் தலை நல்ல வழுக்கையாக இருந்தது...

பின் காயத்ரி பண்ணையில் இருந்த தொட்டியில் குளித்து விட்டு வர, மூவரும் வீட்டுக்கு வந்தோம்.. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மாலை நான் சென்னை கிளம்பினேன்... நான் கிளம்பும் போது  காயத்ரி என் கைகளை பிடித்துக் கொண்டாள்.

மதன்... ப்ளீஸ் டா... உனக்குனு நீ ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோ. அப்போ தான் நாங்க ரெண்டு பேரும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம இருப்போம்... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ... 

ஆமா மதன்... காயத்ரியை என்னால முடிஞ்ச அளவுக்கு நான் சந்தோஷமா வச்சுப்பேன்.. ஆனா மனசுல எந்த குறையும் இல்லாம இருக்க நீ மாறி தான் ஆகணும்....


சரிங்க.. இவ்ளோ அன்பா இருக்க உங்களுக்காக நான் மாறி தான் ஆகணும்... ஆனா கொஞ்சம் டைம் கொடுங்க... சீக்கிரமே நல்ல விஷயமா சொல்றேன்...

சொல்லி விட்டு நான் சென்னை வந்து சேர்ந்தேன்... காயத்ரி என் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக, நான் என் வேலையில் கவனமாக இருந்தேன்... அப்போது என் வீட்டில் எனக்கு பெண் பார்க்க, அம்மாவுக்கு பிடித்த மாதிரி ஒரு பெண்ணை கட்டிக் கொண்டேன்... அவளிடமும் என் முன்னால் காதலை சொல்லி விட்டு தான் திருமணம் செய்து கொண்டேன்... ஆனால் அது காயத்ரி என்று சொல்லவில்லை.. காயத்ரி தன் குடும்பத்துடன் என் கல்யாணத்துக்கு வந்தாள்..

என் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போனது. காயத்ரியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் விருந்துக்கு போனோம்... எங்கள் வாழ்க்கை சிறப்பாக இருந்தது.

உறவு  தொடருமா?


********************************************************************************
மன்னிக்கவும் நண்பர்களே! நினைத்ததை விட கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இந்த கதையில் இதுவரை வரும் சில சம்பவங்கள், வாக்கியங்கள்   என் வாழ்வில் நடந்தவை. இதில் பெரும்பாலும் கற்பனையை கலந்து இருக்கின்றேன். இனி வரப்போகும் அனைத்தும் கற்பனையே..! உங்கள் ஆதரவுக்கு நன்றி....!



3 comments:

  1. அருமையான கதை நண்பா ஒரு நிறைவான உணர்வை நான் உணர்ந்தேன் இந்தக் கதையின் தொடர்ச்சி காக நான் காத்திருக்கிறேன்

    ReplyDelete